Jump to content

அம்பாந்தோட்டையில் பதற்றம்;என்றுமில்லாதவாறு பொலிஸார் குவிப்பு


Recommended Posts

அம்பாந்தோட்டையில் பதற்றம்;என்றுமில்லாதவாறு பொலிஸார் குவிப்பு

 

அம்பாந்தோட்டையில் பதற்றம்;என்றுமில்லாதவாறு பொலிஸார் குவிப்பு

அம்பாந்தோட்டை நகரில் என்றும் இல்லாதவாறு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதால் பெரும் பதற்றநிலை உருவாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்றைய தினம் அம்பாந்தோட்டையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலையில் அமைதியின்மை ஏற்படாமல் இருப்பதற்காக பொலிஸார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/police-crowd-in-hambantota

 

 

மத்தள விமான நிலைய விவகாரத்துக்கு எதிராக அம்பாந்தோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம்

 

 

மத்­தள விமான நிலை­யத்தை அர­சாங்கம் இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு எடுத்­தி­ருக்கும் தீர்­மா­னத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று அம்­பாந்­தோட்டை மத்­த­ளயில் பாரிய ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு ­செய்­துள்­ளது.குறித்த ஆர்ப்­பாட்டம் இன்று காலை ஒன்­பது மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

 prottest.jpg

அவ் ஆர்ப்­பாட்­டத்தில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் மற்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் முன்னாள் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொள்­ளவுள்ளனர். மேலும் தொழிற்­சங்­கங்கள், இளைஞர் அமைப்­புகள், பெண்கள் அமைப்­புகள் உட்­பட பெருந்­தி­ர­ளானோர் ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்டு மத்­தள விமான நிலையம் இந்­தி­யா­விற்கு வழங்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக தமது எதிர்ப்­பினைத் தெரி­விக்­க­வுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

குறித்த ஆர்ப்­பாட்டம் தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழகப்பெரும தெரி­விக்­கையில்,

அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக நாட்டு வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்து வரு­கி­றது. அதன் வரி­சையில் மத்­தள விமான நிலை­யத்­தையும் இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்தே நாளை (இன்று) அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு ­செய்­துள்ளோம்.

மத்­தள விமான நிலையம் உள்­ளிட்ட முக்­கி­யத்­துவம் வாய்ந்த நிலை­யான அபி­வி­ருத்­தி­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நாட்டில் மேற்­கொண்­டி­ருந்தார். எனினும் கடந்த அர­சாங்­கத்தின் மீதுள்ள கோபம் கார­ண­மாக நல்­லாட்சி அர­சாங்கம் மத்­தள விமான நிலை­யத்தில் நெல்லை களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் தற்­போது அவ்­வி­மான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

 உல­கி­லுள்ள மிகவும் பெரிய விமா­னங்கள் தரை­யி­றங்கும் வச­தி­கொண்ட விமான நிலை­யங்கள் தென்­னா­சி­யாவில் இரண்டு அல்­லது மூன்றே உள்­ளன. அவற்றில் மத்­தள விமான நிலை­யமும் ஒன்­றாகும். மேலும் மத்­தள விமான நிலையம் 4942 ஏக்­க­ருக்கும் அதி­க­மான நிலப்­ப­ரப்பைக் கொண்­ட­தாகும். 

அத்­துடன் விமான ஓடு­பாதை 3500 மீற்றர் தூரத்­தையும் 75 மீற்றர் அக­லத்­தையும் கொண்­டது. எனவே குறித்த விமான நிலையம் நாட்­டிற்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

அம்­பாந்­­தோட்டை துறை­முகம் சீனா­விற்கு விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது. ஆகவே இந்­தி­யாவை சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். 

மேலும் 205 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கே குறித்த விமான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்­ப­தாக அறி­ய­மு­டி­கி­றது. எனினும் விமான நிலை­யத்தை அமைப்­ப­தற்கு ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் 209 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செல­வி­டப்­பட்­டது.

எனினும் தற்­போது விமான நிலையம், அதற்­கான காணி, தொழில் அபி­வி­ருத்தி வல­யத்­திற்கு உட்­பட்ட காணிகள் உள்­ள­டங்­க­லாக பெரும்­ப­ரப்­புக்­கொண்ட காணி­யி­னையும் 205 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை இவ் ஆர்ப்­பாட்டம் தொடர்பில் அம்­பாந்­தோட்டை நீதிவான் நீதி­மன்றம் தடை­யுத்­த­ர­வொன்றைப் பிறப்­பித்­துள்­ளது. குறித்த ஆர்ப்­பாட்டம் தொடர்பில் அம்­பாந்­தோட்டை பொலிஸார் நீதி­மன்­றிற்கு அறிக்கை சமர்ப்­பித்­ததைத் தொடர்ந்தே குறித்த தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே அவ் ­ஆர்ப்­பட்­டத்தின் பிர­தான ஏற்­பாட்­டா­ளர்­க­ளான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாமல் ராஜபக் ஷ, டி.வி.சானக உள்ளிட்டோர் நீதிமன்ற அதிகாரப் பிரதேசத்தில் பாதைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புற துறைமுகம் உட்பட பிரதான வீதிகளின் நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தலை தவிர்க்குமாறும் குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/25372

Link to comment
Share on other sites

ஹம்பாந்தோட்டையில் பதற்றம் ; கூட்டு எதிரணியினர் மீது நீர்த்தாரை பிரயோகம்

ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

namal-raja.jpg

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டம் மீதே பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாம் நீதிமன்ற உத்தரவை மதிப்பதுடன் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஹம்பாந்ததோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிணைந்த எதிரணியினரால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25391

 

Link to comment
Share on other sites

ஹம்பாந்தோட்டையில் பதற்றம் ; 3 பொலிஸார் காயம், 26 பேர் கைது

ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் 26 ஆர்ப்பாட்டக்கார்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 prot.jpg

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

இதன்போது 3 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 26 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

http://www.virakesari.lk/article/25393

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

இந்திய தூதரக காரியாலயம்,

உவையின்ட காரியாலயங்கள் எத்தனை சிறிலங்காவில் இருக்கு?

Link to comment
Share on other sites

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்..

 

 

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்..

 

 
மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிடிக்கப்பட்ட படங்களே இவை..

http://tamil.adaderana.lk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

உவையின்ட காரியாலயங்கள் எத்தனை சிறிலங்காவில் இருக்கு?

ஒரு சிறிய நாட்டில், இந்தியா பல காரியாலங்களை வைத்து... உளவு பார்க்கின்றது போலுள்ளது.
சீனாவுடன்....  இலங்கை நெருக்கமாக உள்ளதால்,  நெஞ்சு.... திக்கு, திக்கு... என்று தானே அடிக்கும் புத்தன். :grin:

Link to comment
Share on other sites

ஐபிசி கமராவில் பதிவான அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின் சுவாரஷ்ய காட்சிகள்-

 

நாமல் ராஜபக்ஸ தலைமையிலான ஆர்ப்பாட்டம் - 26 பேர் அதிரடியாக கைது-

Link to comment
Share on other sites

பொது எதிரணியின் பேரணி கலைப்பு

 

நீதிமன்ற தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 28 பேர் கைது

களேபரத்தினால் நான்கு பொலிஸாருக்கும் காயம்

(எம்.சி.நஜிமுதீன்) 

மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கு வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை பொலிஸார் கண்ணீர்புகை குண்டு பிரயோகம் மேற்கொண்டும் தண்ணீர் பாய்ச்சிய டித்தும் கலைத்துள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட 28 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆர்ப்பாட்டப் பேரணியின்போது இடம்பெற்ற இழுபறி நிலை காரணமாக நான்கு பொலிஸார் காயமுற்றுள்ளனர்.

மத்தள விமான நிலையத்தை அரசாங்கம் இந்தியா விற்கு வழங்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று காலை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. காலை 10.30 மணியளவில் அம் பாந்தோட்டை கடற்கரையோர பூங்காவிற்கு அருகில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த பெருமளவானோர் ஒன்று கூடினர்.  

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக் ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக் ஷ, டலஸ் அழகப் பெரும,செஹான் சேமசிங்க, காஞ்சன விஜயசேகர, பிரசன்ன ரணவீர, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இளைஞர், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தேரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பேரணி

இங்கு ஒன்றுகூடிய பொது எதிரணியினர் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்வதற்கு முயற்சித்தனர். இந்த பேரணியில் கலந்துகொண்ட கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்தைக் கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பாகைகளையும் தாங்கியிருந்தனர்.

“நல்லாட்சி அரசே தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யாதே”, “இந்திய காலணித்துவம் எமக்கு வேண்டாம்”, “சீன காலணித்துவம் எமக்கு வேண்டாம்”, “எங்கள் காணிகளை எமக்கே வழங்கு”, “செயற்திறனற்ற அரசே பதவி விலகு” போன்ற சோகஷங்களை இவர்கள் எழுப்பியவாறு முன் சென்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் அம்பாந்தோட்டைப் பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்ததற்கமைவாக அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவொன்றையும் பிறப்பித்திருந்தது. மேலும் நீதிமன்ற அதிகாரப் பிரதேசத்தில் வீதிகளின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தல், இந்திய கொன்சியூலர் அலுவலகம், மாகம்புற துறைமுகம் உட்பட பிரதான வீதிகளின் நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துதல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை தவிர்க்குமாறு குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவையடுத்து நேற்று குறித்த பிரதேசத்தில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் இந்திய கொன்சியூலர் அலுவலகம், மத்தள விமான நிலையம் உட்பட குறித்த இடங்களில் நீர்பாச்சியடிக்கும் வாகனங்கள், கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்கள் என்பனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 

இதேவேளை பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்திய கொன்சியூலர் அலுலகத்தை அண்மித்தபோது அங்கு பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து இவர்களை இந்திய கொன்சியூலர் காரியாலய வளாகத்திற்குள் நுழைய முடியாத வகையில் தடுத்தனர்.  

மகஜர் கையளிப்பு 

பேரணியில் கலந்துகொண்ட பத்தேகம சமித தேரர் உள்ளிட்ட சிலர் இந்திய கொன்சியூலர் காரியாலத்திற்குச் செல்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்பட்டத. எனவே குறித்த பிரதிநிதிகள் அங்கு சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அதிகாரிகளிடம் கையளித்தனர்.

இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் நடு வீதியில் நின்று கடுமையான எதிர்பினைத் தெரிவித்தனர். மேலும் பொலிஸார் ஏற்படுத்தியிருந்த வீதித்தடைகளுக்கு அருகில் அம்பாந்தோட்டை மாவட்ட ஆளும் கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள் சிலரின் கொடும்பாவைகளையும் எரித்தனர். 

இரு தரப்புக்கிடையில் வாக்கவாதம் 

கொடும்பாவிகளை எரித்ததுடன் தொடர்ந்தும் அங்கு தீ மூட்டும் நடவடிக்கைகளிலும் சிலர் ஈடுபட்டனர். எனவே வீதித் தடைகளின் உயரத்திற்கு தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதமும் ஏற்பட்டது. பொலிஸார் தீ மூட்டும் நடவடிக்கையினை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்தே அங்கு வாக்குவாதம் வலுத்தது.

களேபரம் 

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளைத் தகர்த்துக்கொண்டு முன்னேறுவதற்கு எத்தனித்த வேளை அங்கு நிலைமை மோசமானது. விதித்தடைகளை சீர்செய்து ஆர்பாட்டக்காரர்கள் உள்நுழைவதை தடுக்க பொலிஸார் முயன்றபோதும் அது முடியாமல் போனது.

எனவே கலகம் அடக்கும் பொலிஸார் களத்தில் இறங்கியதுடன் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் மூலம் தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பகுதியினர் அதற்கும் ஈடுகொடுத்துக்கொண்டு அங்கு நின்றுகொண்டிருந்தனர். ஆகவே கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டு அவர்களையும் கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். 

மேலும் நீதிமன்றின் உத்தரவை மீறி குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலலிஸார் 28 பேரை கைதுசெய்துள்ளனர். அத்துடன் குறித்த அமைதியின்மையின்போது பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-07#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

ஒரு சிறிய நாட்டில், இந்தியா பல காரியாலங்களை வைத்து... உளவு பார்க்கின்றது போலுள்ளது.
சீனாவுடன்....  இலங்கை நெருக்கமாக உள்ளதால்,  நெஞ்சு.... திக்கு, திக்கு... என்று தானே அடிக்கும் புத்தன். :grin:

இனி ஈழத்தமிழன் சும்மா இருக்க வேண்டியது தான்.... சிங்களவனும் இந்தியாவும் பட்ட பாடு எண்டு போட்டு....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.