Jump to content

திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி ஒரு யூ டியூப் சேனல்


Recommended Posts

திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி ஒரு யூ டியூப் சேனல்

 

இணையத்தில் பல யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இது கொஞ்சம் வித்தியாசமான யு டியூப் சேனல். ஏனெனில், இந்த சேனலை எழுதி, இயக்கி வழங்குவது திருநங்கைகள்.

திருநங்கைகளுக்கான தனி யூடியூப் சானல். Image captionதிருநங்கைகளுக்கான தனி யூடியூப் சானல்.

திருநங்கைகளைப் பற்றி பல கற்பிதங்கள், தவறான தகவல்கள் இந்தியாவில் நிலவுகின்றன என்று சொல்லும் ஹைதராபாத்தைச் சேர்ந்த திருநங்கைகள் குழு ஒன்று, இவற்றை மாற்றி உண்மைத் தகவல்களைப் பறிமாறிக்கொள்வதற்காக இந்தச் சேனலைத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறது.

மூன்று மொழிகளில்...

தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது மொழிகளில் இந்த யூ டியூப் சானல்கள் தொடங்கப்பட்டுள்ளன.

திருநங்கைகளின் பிரச்சினைகள் பற்றிய அடிப்படைத் தகவல்களை இந்த யூடியூப் சானல்கள் தருவதால், இவை அந்தந்த மொழியின் அகரவரிசை எழுத்துகளைக் கொண்ட பெயரில் தொடக்கப்பட்டுள்ளன.

தெலுங்கில் 'அ, ஆ அஞ்சலி', கன்னடத்தில் 'அக்ஷர ஜான்வி', உருதில் 'அலிஃப் சோனியா' என்ற பெயர்களில் இவை நடத்தப்படுகின்றன.

ஏற்கெனவே, தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய மொழிகளில் இரண்டு டீசர்கள் வெளியாகியுள்ளன. திருநங்கைகளே எழுதி, இயக்கி அளிக்கும் உள்ளூர் மொழியில் வெளியாகும் திருநங்கைகள் பற்றிய ஒரே யூடியூப் சேனல் இதுதான்.

இச் சேனல்களின் எழுத்தாளரும், இயக்குநருமான ரச்சனா முத்ரபோய்னா இது பற்றிக் கூறுகையில், நான் திருநங்கைகள் பற்றிய பல யூடியூப் சேனல்களைப் பார்த்தேன். அவற்றில் பல தவறான தகவல்களைக் கூறுகிறவையாக இருந்தன. சில சேனல்கள் மூடநம்பிக்கைகளையும் பரப்புகின்றன.

எனவே, திருநங்கைகள் பற்றி சரியான தகவல்களைத் தருவது என் கடமை என்று நான் நினைத்தேன் என்றார்.

கேள்விகளுக்கு பதில்கள்

திருநங்கைகள் எனப்படுகிறவர் யார்? ஏன் அவர்கள் திருநங்கைகளாக இருக்கிறார்கள்? அவர்களோடு நாம் என்ன பேசலாம்? என்ன கேள்விகள் அவர்களை கவலை கொள்ளச்செய்யும்? அவர்களுக்கு என்னவிதமான சட்டப்பாதுகாப்புகள் கிடைக்கின்றன? இந்துமதப் புனித நூல்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுகின்றன? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் தங்கள் யூ டியூப் சேனல்களில் கிடைக்கின்றன என்கிறார் ரச்சனா.

ரச்சனா. Image captionரச்சனா

இவர் இரண்டு பட்டமேற்படிப்பு படித்துள்ளார், பல அரசு சாரா அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.

பல அரசு சாரா தொண்டு அமைப்புகளும் திருநங்களைகள் குறித்த அணுகுமுறையில் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை. இதற்கு முன்பு அவர் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தின் மேலதிகாரியுடன் அவருக்குப் பிரச்சனை ஏற்பட்டு அதன் விளைவாக அவர் பணியில் இருந்து விலக நேர்ந்தது.

ஆய்வுத் திட்டங்கள், பொது உரைகள் போன்றவற்றின் மூலம் ஈட்டியதைக் கொண்டே தம் வாழ்வை அவர் நடத்திவந்தார்.

திருநங்கைகள் அமைக்கும் குடும்பங்கள் குறித்து தற்போது அவர் ஓர் ஆய்வு செய்துவருகிறார். படித்துக்கொண்டே வேலை செய்வது என்பது ஒரு திருநங்கைக்கு சவால் நிறைந்ததாக உள்ளது என்கிறார் ரச்சனா.

திரைப்பட இயக்குநர் மோசஸ், மனித உரிமை செயற்பாட்டாளர் பாவனா ஆகியோர் இந்த சேனலை இயக்க ரச்சனாவுக்கு உதவுகிறார்கள்.

"ஒவ்வொரு எபிசோடையும் தயாரிக்க ரூ.12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை செலவாகிறது. இதுவரை எங்கள் பணத்தைக் கொண்டு சமாளித்தோம். நாங்கள் வேலையற்றவர்கள்.

பிரசாரம்.

எனவே, தயாரிப்பில் எங்களுக்கு மோசஸ் உதவுகிறார். க்ரவுட் சோர்சிங் முறையில் நிதி திரட்டினோம்".

போதிய பணம் வந்தது...

"மூன்று வாரங்களில் ரூ.4.5 லட்சம் சேர்ந்தது. நாங்கள் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பணம் சேர்ந்துவிட்டது. இப்போது தயாரிப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன" என்கிறார் ரச்சனா.

உள்ளூர் மொழியில் மட்டுமே இந்த சேனல் ஒளிபரப்புகள் இருக்கும். பிரச்சினைகளை தாய்மொழியில் பேசும்போது வீச்சு அதிகம் என்கிறார் மோசஸ்.

ஹைதராபாத் போன்ற ஒரு நகரில் இரண்டு நாளுக்கு ஒரு முறை திருநங்கைகள் மீதான ஒரு வன்செயல் கவனத்துக்கு வருகிறது என்கிறார்கள் திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பினர்.

ஆசிட் வீச்சு, உடைந்த பீர் பாட்டிலால் தாக்குவது, கண்ணில் மிளகாய்ப் பொடி தூவுவது போன்ற வடிவங்களில் இந்த தாக்குதல்கள் இருக்கின்றன. இந்த மாதிரியான முறையற்ற நடத்தைக்கான காரணங்கள் தெரிவதில்லை.

ஆனால், திருநங்கைகள் பற்றிய சமூகத்தின் எண்ணம்தான் இத்தாக்குதல்களுக்குக் காரணம் என்று கூறும் ரச்சனா, எனவே சரியான தகவல்களை பரப்புவது நிலைமையை மாற்ற உதவும் என்கிறார்.

http://www.bbc.com/tamil/india-41504445

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.