Jump to content

கணேஷின் முட்டைக் கணக்கு, விஜய்யின் பதில், ‘பிக்பாஸ் ஃபேமிலி'யின் வாட்ஸ்அப் குரூப்! வையாபுரி ஷேரிங் #VikatanExclusive


Recommended Posts

கணேஷின் முட்டைக் கணக்கு, விஜய்யின் பதில், ‘பிக்பாஸ் ஃபேமிலி'யின் வாட்ஸ்அப் குரூப்! வையாபுரி ஷேரிங் #VikatanExclusive

 
 

வையாபுரி

“பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்புவரை நான் சும்மாதான் இருந்தேன். படத்தில் நடிக்க வாய்ப்புகளை தேடி வாங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபிறகு வாய்ப்புகள் என்னைத்தேடி வருகின்றன. 'கலகலப்பு 2', 'சாமி 2'  படங்களில் இப்போது கமிட் ஆகியிருக்கின்றேன். இதுதவிர பிரபு சாலமன், மிஷ்கின் சார் படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.” - ‘நான் வீட்டுக்கு போகணும்’ என்று அழுதுகொண்டு இருந்த வையாபுரியின் வாழ்க்கை இப்போது ‘ஹாய் படி... ஹேப்பி படி’ என்று மகிழ்ச்சியாக போய்க்கொண்டு இருக்கிறது. 

 

“பிக் பாஸ் என்னால் மறக்க முடியாத அனுபவம். அந்த வீட்டுக்குள் செல்லும்வரை என்னுடன் போட்டியாளராக இருக்கப்போவது யார்யார் என்ற விவரம் எனக்கு தெரியவே தெரியாது. பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றபிறகுதான் அங்கே இருந்தவர்களை சந்தித்தேன். கஞ்சா கருப்பு உடன் படமெல்லாம் பண்ணியிருக்கிறேன். ஆனால், அதிகமாகப் பேசிப்பழகியதில்லை. ஷக்தி, காயத்ரி, நமீதா... இவர்களை தெரியும். ஆனால் பெரிய அறிமுகம் இல்லை. இவர்கள் அனைவருடனும் வீட்டுக்குள் இருக்கும்போதுதான் பழகி நட்பானேன்.”

“பிக் பாஸ் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?”

நடிகர் ஷாம்ஸ், ‘விஜய் டி.வி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களை தேர்வு செய்கிறார்கள். நீ முயற்சி பண்றீயா’ என்று என்னிடம் கேட்டார். அப்போதுகூட அவரிடம், ‘நாம கோபக்காரன்ங்க. நம்மள எல்லாம் வீட்டுக்குள்ளயே விடமாட்டாங்க’ என்று சொன்னேன்.  அப்போது அவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வர முயற்சி பண்ணினார். இப்படி நிறையபேரை பிக் பாஸ் போட்டியாளராக சேனல் தரப்பிலிருந்து செலக்ட் பண்ணி வைத்திருந்தார்கள். அப்படித்தான் என்னையும் ஒரு போட்டியாளராக தேர்வு செய்தனர். விஜய் டி.வி-எண்டமால் இருதரப்பும்  ஒன்றாக அமர்ந்து என்னிடம் பேசினார்கள். நிகழ்ச்சியின் விதிமுறைகள் பற்றி என்னிடம் சொன்னார்கள். நான் பொதுவாகவே செல்போன் அதிகமாக பயன்படுத்த மாட்டேன். அது மட்டுமில்லாமல் அந்த நேரத்தில் எனக்கு படங்கள் குறைவாகவே இருந்தன. தவிர கமல்சார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இது, அதனால் நமக்கு நல்ல ரீச் கிடைக்கும் என்பதால் அவர்கள் சொன்ன அனைத்து கண்டிஷன்களுக்கும் நான் சம்மதம் தெரிவித்தேன். இந்த நிகழ்ச்சி நான் எதிர்பார்த்ததைவிட எனக்கு மிகப் பெரிய பிரேக்காக அமைந்து இருந்தது.”

“இதற்கு முன் இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை  பார்த்து இருக்கிறீர்களா?”

“இதற்கு முன் எந்த பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நான் பார்த்தது இல்லை. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும்கூட நான் பங்கேற்ற பிக் பாஸ் எபிசோட் எதையும் இன்றுவரை பார்க்கவில்லை. எனக்குப் போடப்பட்ட அக்ரீமென்ட்டில்கூட என்ன இருந்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது. இங்கிலீஷில் இருந்ததால் எனக்குப் படிக்க தெரியவில்லை. ஆனால், கையெழுத்து மட்டும் போட்டேன். முக்கியமாக பிக் பாஸ் வீட்டில் அதிகமாகச் சொல்லப்பட்ட 'டாஸ்க்' என்கிற வார்த்தையே இதற்குமுன் நான் கேள்விப்பட்டதே இல்லை. முதலில் டாஸ்க் என்கிற விஷயம் எனக்கு கஷ்டமாக இருந்தது. பிறகு பழகிவிட்டது. பல இங்கிலீஷ் வார்த்தைகளை அங்கேதான் கற்றுக்கொண்டேன். 'டிரிக்கர்', 'ஹாய் படி' இவையேல்லாம் அங்கே போன பிறகுதான் தெரியும். வெளியுலகமே தெரியாமல் இருந்த எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தது பிக் பாஸ்தான்.”

“ஏண்டா இந்த நிகழ்ச்சிக்கு சென்றோம் என்று வருத்தப்பட்டது உண்டா?”

“கண்டிப்பாக இல்லை. நானூறு படங்களுக்கு மேலாக நடித்து விட்டேன். அதிகமாக யாருக்கும் என்னைப் பற்றி தெரியாது. ஆனால், இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமாக மூன்று வயதுக் குழந்தைகூட என் பெயரை சொல்கிறது. அதனால்தான்  பிக் பாஸ் வீட்டைவிட்டு  வரும் போதுகூட 'தெரியாதவர்களுக்கும் தெரிய வைத்த' ரொம்ப அழகான ஒரு வரியை எழுதிவிட்டு வந்தேன்.”

“பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்பு கமல்ஹாசனைப் பார்த்து பேசினீர்களா?”

“இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது கமல் சாரை அவரது ஆபிஸில் போய் பார்த்து பேசிவிட்டு வருவேன். ஆனால், இந்த நிகழ்ச்சிக்குப் போவதற்கு முன்பு அவரை நான் சந்திக்கவில்லை. முதல் நாள் மேடையில்தான் பார்த்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக எனக்குக் கிடைத்தது எல்லாம் பாஸிட்டிவ் ரிசல்ட்தான். ஹவுஸ் மேஸ்ட்ஸும் சரி, வெளியே மக்களும் சரி என்னைப் பற்றி யாரும் தப்பாக பேசவில்லை.”

“பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக என்னவெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்?”

“நன்றி சொல்ல, பாராட்டு தெரிவிக்க, மன்னிப்பு கேட்க... என்று நிறைய கற்றுக்கொண்டேன். அங்கிருந்தவர்களில் அதிகமாக கோபப் படக்கூடிய கேரக்டர் நான்தான. ஆனால் இந்த நிகழ்ச்சி என்னை முழுவதுமாக மாற்றிவிட்டது. இதே விஜய் டி.வி.-யில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, ‘உங்க இஷ்டத்துக்கு லேட் ஆக்கினீங்கன்னா நான் கிளம்பிப் போயிட்டே இருப்பேன்’ என்று சொன்னேன். அப்படி சொன்ன எனக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய பொறுமையை கற்றுக்கொடுத்தது. நான் வெளியே வரும்போது எனக்குப்போட்டுக்காட்டிய  குறும்படத்தில் என்னைப் பார்க்கும்போது எனக்கே பிரம்மிக்காகயிருந்தது. அதைப் பார்க்கும்போது அழுகையே வந்து விட்டது.

எனக்காக ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது. ‘ஜான்பூரி’னு என்ற பெயரில் ஒரு  அக்கவுன்ட்டையே ரசிகர்கள் ஓப்பன் செய்து அதில் ஐந்து லட்சம் பேர் ஃபாலோவர்ஸ் லிஸ்டில் இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் என்ன நன்றிக்கடன் செய்யப்போகிறேன் என்றே தெரியவில்லை. அதில் எனக்கு வந்திருக்கும் கமெண்ட்ஸ், மீம்ஸ் எல்லாம் என் பையன் என்னிடம் காட்டினான். பார்க்கும்போது மகிழ்ச்சியாகயிருந்தது.”

 

வையாபுரி

“பிக் பாஸ் வீட்டுக்குள் அதிக நாள்கள் இருப்போம் என்று நினைத்தீர்களா?”

“சத்தியமாக இல்லை. 84 நாள்கள் இருந்துவிட்டேன். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஐம்பது நாள்கள் தாண்டின பிறகுதான், ‘நூறு நாள்களை முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எனக்குள் தோன்றியது. ஒரு வேலை நம்மை எலிமினேட் செய்தாலும் வெளியே இருக்கும் கார்டனில் பாய் விரித்தாவது படுத்துவிட வேண்டும் என்றெல்லாம் நினைத்தேன். அந்த அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாகி விட்டேன். 'யாராவது சண்டை போட்டால்கூட உள்ளே போகாமல் அவர் பாட்டுக்கு இருக்காரு' என்று கணேஷை எல்லோரும் சொல்வார்கள்.  நானும் அப்படித்தான். முக்கியமாக பெண்கள்  சண்டை போட்டுக்கொள்ளும் போது இடையில் போகவே மாட்டேன். யார் எது சொன்னாலும் 'ஆமா' போட்டுக்குவேன். ஏனென்றால், அவர்கள் காலையில் அடித்துக் கொள்வார்கள், மாலையில் சேர்ந்து கொள்வார்கள். சமாதானப்படுத்தியவர்கள் தனியாக நிற்பார்கள். காலையில் பொழுது விடிந்தால் பதினைந்து பேரும் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்துத்தானே ஆகவேண்டும்.‘’

“ஓவியா-ஆரவ் இருவருக்குமான பிரச்னையில் நீங்கள் தலையிட்டீர்கள். அதற்கு காரணம் என்ன?”

“ஆரவ், ஓவியாவை ஓரங்கட்டும்போது கஷ்டமாகயிருந்தது. அதனால்தான், 'பேசினால் எல்லாப் பெண்கள் கூடவும் பேசங்கள். இல்லையேன்றால் யாரிடமும் பேசமால் இருந்து விடுங்கள்' என்று  ஆரவ்விடம் சொன்னேன். ஏனென்றால் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.”

“ஓவியாவுக்கு இவ்வளவு ரசிகர்கள் பிக்பாஸ் மூலம் கிடைப்பார்கள் என்று நினைத்தீர்களா?”

“ஓவியாவுக்கு இருக்கும் ரசிகர்களை பார்க்கும்போது அதிர்ச்சியாகவும், மிரட்சியாகவும் இருக்கிறது. ஏனென்றால் 84 நாள்கள் இருந்திருக்கிறேன். நான் வெளியே வந்ததற்கு பல பேர் ஃபீல் பண்ணினார்கள். ஆனால், எனக்கு ஓவியா அளவுக்கு ரசிகர்கள் இல்லை. பெண்களுக்கு எப்போதும் ஒரு கிரேஸ் இருக்கும். அதில் பாதியாவது எனக்குக் கிடைத்திருக்கலாம் என்று தோன்றியது. ஒரு ஆசையிருந்தது, ‘அந்தக் கடைசி நாளில்கூட என்னைக் கூப்பிட்டு அங்கீகாரம் பண்ணியிருக்கலாம்’ என்று தோன்றியது. ஏனென்றால் பிக் பாஸ் காட்பாதர், எண்டர்டெயின்டர், பிக் பாஸ் அண்ணன், பாசமலர் என்றெல்லாம் மக்கள் சமூக வலைத்தளங்களில்  என்னை குறிப்பிட்டிருந்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப பெருமையாகியிருக்கிறது.

வெளியே இருக்கும் இவர்களே இவ்வளவு யோசித்திருக்கிறார்களே, பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனமும் நம்மை கூப்பிட்டு ஏதாவது பண்ணியிருக்கலாமே என்று தோன்றியது. வருத்தம்கூடம் இருந்தது. அப்புறம் நானே நினைத்தேன். பதினைந்து பேரில் நம்மை மட்டும் கூப்பிட்டு கெளரவப்படுத்தினால் நன்றாகயிருக்காது. எல்லோரும் கஷ்டப்பட்டு இருக்கோம்என்று  மனசை நானே தேற்றிக்கொண்டேன். .அங்கிருந்தவர்களில் அதிக படங்களில் நடித்தவன், அதுமட்டுமில்லாமல் சீனியரும்கூட. அதனால் ஒரு நிமிடம் அந்த எண்ணம் வந்தது. 

அப்புறம் அந்த எண்ணம் என்னை விட்டுப் போய்விட்டது. இதுவே பழைய வையாபுரியாக இருந்திருந்தால் ஸ்டேஜிலேயே சண்டை போட்டு இருப்பேன். ஆனால், இப்போது இருப்பது புதிய வையாபுரி. இதை ஏற்றுக் கொள்ளும் பருவம் வந்துவிட்டதால், இதுவும் கடந்து போகுமென்று கடந்துவிட்டேன். எதிர்பார்ப்பது தவறுஎன்று எண்ணிக் கொண்டேன். அந்தவகையில் ஓவியாவுக்கு இருக்கும் மாஸ் பார்க்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.”

“ஆரவ் பிக் பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா?”

“நான் வெளியே வந்த 12 ஆவது வாரம், ‘ஆரவ், கணேஷ், சினேகன்... இந்த மூவரில் யாருக்கு டைட்டில் கிடைத்தாலும் சந்தோஷம்’ என்று  தான் சொல்லிவிட்டு வந்தேன். ஏனெனில் மூவரும் கடுமையான உழைப்பாளிகள், குறிப்பாக டாஸ்க் விஷயத்தில். அதிலும் கணேஷ் ஜென்டில்மேன். கவிஞர், யார் வெளியே போனாலும் ஃபீல் பண்ணுவார். நல்லா சமைச்சு போட்டிருக்கார். நல்ல உழைப்பாளி. எல்லார் விஷயத்திலும் அக்கறை கொண்டவர். ஆரவ்வும் நல்ல உழைப்பாளி. ஆரவ் பண்ணியது ஒரே ஒரு தவறுதான்.  கவிஞர் பற்றிய குறும்படத்தில் பேசியது. அதையும் அப்பவே கவிஞரிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். அதன்பிறகு இருவரும் நட்புடன் பேசிவிட்டார்கள். அதனால் மூன்று பேரும் தகுதியானவர்கள்தான் என்று நினைத்தேன்.”

“நீங்கள், ஆரவ், பிந்து மாதவி, ஹரீஸ் நால்வரும் பிறகு உங்கள் வீட்டில் சந்தித்தது பற்றி...”

“பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் வாட்ஸ் ப்பில் ஒரு குரூப் ஆரம்பித்து இருக்கிறோம். அதில் சில பேருடைய நம்பர்ஸ் மிஸ் ஆகியிருக்கிறது. அதனால் எல்லோரையும் எங்கள் வீட்டுக்கு அழைக்க முடியவில்லை. இவர்கள் மூன்று பேரும் என் வீட்டில் மதிய உணவுக்கு வந்தார்கள். கவிஞர் வெளியூர் போய் விட்டார். அதனால், அவர் வரமுடியவில்லை. இனிவரும் நாள்களில் அனைவரது வீட்டுக்கும் செல்ல திட்டமிட்டுயிருக்கிறோம். என் வீட்டில் கொலு வைத்தேன். அப்போதே எல்லோருக்கும் மெசேஜ் அனுப்பினேன்.”

 

வையாபுரி

“பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த சிலருக்கு நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்ததே?”

“ ‘பாராட்டக் கூடிய பெண்களும் இருந்தார்கள். திட்டக்கூடிய பெண்களும் இருந்தார்கள்’ என்று காயத்ரி என்னிடம் சொன்னார். எல்லாம் போகப்போக சரியாகிவிடும்.”

“கணேஷ் முட்டை சாப்பிடுவது பற்றி ரொம்ப புகார் செய்தீர்களே?”

“கணேஷ் விஷயத்தில் நான் மிகப்பெரிய பாவியாகி விட்டேன். என்னாலேயே அவர் முட்டை சாப்பிடுவதை நிறுத்தினார். ஒரு கிண்டலுக்காகத்தான் நானும் கஞ்சா கருப்பும் கணேஷை அப்படி பேசினோம். அவர் ஜிம், யோகா எல்லாம் செய்வார். இதெல்லாம் செய்யும்போது ரொம்ப பசிக்கும். அதனால் ஜூஸ், முட்டை, புரோட்டின் இதையேல்லாம் நிறையச் சாப்பிட வேண்டும். பாவம் இப்போது அவர் பாதி உடம்பாகி விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் முட்டைகளை எண்ணித்தான் கொடுப்பார்கள். அதனால், கிண்டலுக்காகத்தான் ''என்னப்பா இப்படி முட்டை சாப்பிட்டால், என்னாவது'' என்று பேச ஆரம்பித்தது. ‘சாப்பாடு விஷயத்தில் போய் இப்படி அவரைப் பேசிவிட்டோமே’ என்று ரொம்ப ஃபீல் பண்ணினேன். அதனால், கணேஷைக் கூப்பிட்டு 'தயவுசெய்து மன்னித்து விடுங்கள் சாப்பாட்டு விஷயத்தில் நான் இப்படிப் பேசியிருக்க கூடாது என்று மன்னிப்பு கேட்டேன்.

அவர்  ‘அண்ணா விடுங்க. நான் தப்பா நினைக்கவே இல்லை.  நீங்கள் கிண்டல் பண்ணலைனா ஹியூமரே இல்லாம இருந்திருக்கும். நீங்கதான் எங்க டைம்பாஸ்’ என்றார். ''மற்றவர்கள் மனதை புண்படுத்தாதபடி கிண்டல் செய்வது தப்பில்லை'' என்று கமல் சாரே சொன்னார். ‘உங்களை யாராவது இப்படிப் பேசியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்’  என்று என்  மனைவிகூட கேட்டார். ரொம்ப கஷ்டமாகயிருந்தது. கணேஷ் விஷயத்தில் நான் தப்பு செய்துவிட்டேன். கணேஷ் ஒரு ஜென்டில்மேன்.”

“பிந்து மாதவி மேல் மட்டும் எதற்காக இவ்வளவு பாசம்?”

“பிந்து 63 நாள்கள் உள்ளே இருந்தார்கள். ஒருநாள்கூட யாரையும் பற்றி புறம் பேசியது இல்லை. ஓவியாவும் அப்படித்தான். பிந்து உள்ளே வரும்போது ஓவராக கிண்டல் செய்திருக்கின்றேன். அதன்பிறகு அவருடன் நட்பாகி விட்டேன். முதலில் டீ சாப்பிட மாட்டேன் என்று சொன்னார். அடுத்த நாள் காலையில் வந்து ''டீ கிடைக்குமா'' என்றார்? டீ போட்டுக் கொடுத்தேன். அது பிந்துவுக்கு பிடித்துவிட்டது. அப்போதுதான் பேச ஆரம்பித்தேன். ரொம்ப தனிமையாக ஃபீல் பண்ணினார். என்னைப் பொறுத்தவரை பெண்கள் என்றாலே பொட்டு வைக்கவேண்டும், சேலை கட்டவேண்டும், பூ வைக்கவேண்டும் என்று ஆசைப்படுவேன். விநாயகர் சதுர்த்தி நடக்கும் போதேல்லாம் பிந்துவிடம், சேலை கட்டச் சொல்வேன். அதையெல்லாம் பிந்து கேட்பார். 'சரிங்கண்ணா'' என்பார். ரொம்ப வெகுளியான பெண்.”

“பிக் பாஸ் நடப்பது எல்லாம் ஸ்க்ரிப்ட் என்று பேச்சுயிருக்கிறதே?”

“ ''ஒரு டையலாக் எழுதிக் கொடுத்தால், அதற்குக் கவுண்டர் கொடுக்க அவன் என்ன திணறு திணறுவான், எப்படி சண்டையெல்லாம் ஸ்க்ரிப்டாக நடக்க முடியும்’ என்று கமல் சார் அழகாக சொல்லியிருந்தார், ஸ்க்ரிப்டாக இருந்திருந்தால் கோபப்படாமல், கடைசி வரை காயத்ரியை அன்பாக காட்யிடியிருந்திருக்கலாம். அங்கே நடந்த அழுகை, சிரிப்பு, கோபம் எல்லாம் உண்மை. அங்கே இருந்தவர்களின் உணர்ச்சிகளும், வெளிப்பாடுகளும் உண்மைதான். சின்ன சத்தம் ஏற்பட்டால்கூட இயற்கையாகத்தான் நடந்தது.”

 

வையாபுரி

“பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் யார்யார் உங்களுக்குப் போன் பண்ணி பேசினார்கள்?”

 

நான் வெளியே வந்த எபிசோட் டி.வி-யில் காட்டியவுடன் பிரபு சார் எனக்குப் போன் பண்ணி இருபது நிமிடம் பேசினார். ‘உன் குறும்படம் பார்த்துவிட்டு அழுதுட்டேன்டா. எங்க வீட்டில் எல்லோரும் நிகழ்ச்சியைப் பார்த்தோம். இதைவிடப் பெரிய கிரெடிட் உனக்குக் கிடைக்காது. நீ பேசினதே பார்த்துவிட்டு வீட்டில் எல்லோரும் அழுதுவிட்டோம்’ என்றார். கமலே சாரே என்னை வெளியே அனுப்பும் போது, ‘வையாபுரியாக வந்த உங்களை ஸ்டாராக அனுப்புகிறோம்'' என்று சொன்னார். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’க்கு அப்புறம் இரண்டாவது பாலத்தை கமல் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார். வெளியே வந்தவுடன் நடிகர் விஜய்க்குதான் 'வணக்கம்' என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் அதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. வெளியூரில் இருப்பதாகச் சொன்னார்கள். அவர் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.”

http://cinema.vikatan.com/tamil-cinema/104047-actor-vaiyapuri-speaks-about-his-experience-in-bigg-boss.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.