Jump to content

பாகிஸ்தான் எதிர் இலங்கை ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

மலிங்கவுக்கு வாய்ப்பு இல்லை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் மலிங்கவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

11_Malinga.JPG

மேற்படி போட்டித் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர்ப் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை சற்று முன் வெளியிட்டது. அதில், மலிங்கவின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பெரிதும் சோபிக்காத லஹிரு திரிமான்னே மற்றும் கௌஷல் சில்வா ஆகியோருக்குப் பதிலாக, ரோஷன் சில்வா அல்லது சதீர சமரவிக்கிரம இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்களாகக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளியன்று ஆரம்பமாகும் இந்த டெஸ்ட் போட்டி இலங்கை கலந்துகொள்ளும் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.

http://www.virakesari.lk/article/25316

Link to comment
Share on other sites

இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் ஒருநாள் குழாம் அறிவிப்பு

cri-1-696x464.jpg
 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தெரிவுக் குழுவின் தலைவர் இன்சமாம் உல் ஹக், அவ்வணியின் பயிற்சியாளர் மிக்கி ஆதர் மற்றும் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், அனுபவமிக்க வீரருமான அசார் அலிக்கு ஓய்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த சில தினங்களான உபாதையினால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அசார் அலி, மீண்டும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரின் பிறகு அணித் தலைமையிலிருந்து அசார் அலி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட அசார் அலி, சம்பியன் கிண்ணத் தொடரில் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார்.

அத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அசார் அலி, இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் அரைச்சதம் குவித்து பாகிஸ்தான் அணிக்கு முதற்தடவையாக சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார். எனினும், தெரிவுக்குழுத் தலைவராக இன்சமாம் உல் ஹக் தொடர்ந்து அசார் அலியை அணியிலிருந்து நீக்கி வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அசார் அலிக்குப் பதிலாக, பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 21 வயதான இளம் வீரர் இமாம் உல் ஹக் முதற்தடவையாக பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இடது கை துடுப்பாட்ட வீரரான இமாம், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட ஜாம்பாவானும், தற்போதைய தெரிவுக் குழுவின் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ள இமாம் உல் ஹக், நடப்பாண்டு உள்ளூர் போட்டிகளில் இரட்டைச் சதம் மற்றும் 3 சதங்கள் உள்ளடங்கலாக 49.88 என்ற சராசரியுடன் 848 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன் இதுவரை 31 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இமாம், 4 சதங்கள் உள்ளடங்கலாக 1,744 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும், அண்மைக்காலமாக டெஸ்ட் அணியில் இடம்பெறாத அனுபவமிக்க வீரரான மொஹமட் ஹபீஸ் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பியன்ஸ் கிண்ணத்தில் இடம்பெற்ற வஹாப் றியாஸுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜுனைத் கான் பாகிஸ்தான் அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் அணித் தேர்வு குறித்து பாகிஸ்தான் தெரிவுக்குழுவின் தலைவர் இன்சமாம் உல் ஹக் கருத்து வெளியிடுகையில், சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற அசார் அலிக்கு உபாதை காரணமாக ஓய்வினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் காரணமாக உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இளம் வீரரொருவருக்கு பாகிஸ்தான் ஒரு நாள் அணியில் வாய்ப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, 21 வயதுடைய இமாம் உல் ஹக் முதற்தடவையாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். கணுக்கால் காயம் காரணமாக வஹாப் ரியாஸிற்கு ஓய்வினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் ஒரு நாள் குழாம்

சர்பராஸ் அஹமட் (அணித் தலைவர்), அஹமட் ஷேசாத், பக்கர் ஷமான், மொஹமட் ஹபீஸ், பாபர் அசாம், சொஹைப் மலிக், இமாத் வசீம், சதாப் கான், பாஹிம் அஷ்ரப், ஹஸன் அலி, மொஹமட் ஆமிர், ரும்மான் ரயிஸ், ஜுனைத் கான், ஹரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் நாளை

 
இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் நாளை
 
 

இலங்கை – பாகிஸ்­தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஒரு­நாள் தொட­ரின் முத­லா­வது ஆட்­டம் நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்கை அணி ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது.

முடி­வ­டைந்த டெஸ்ட் தொடரை 2:0 என்ற அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி பிர­மிக்க வைத்­தது இலங்கை.

ஒரு­நாள் தொட­ரின் முத­லா­வது ஆட்­டம் நாளை நடை­பெ­ற­வுள்­ளது. இலங்கை நேரப்­படி மாலை 4.30 மணிக்கு இந்த ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

ஏனைய நான்கு ஆட்­டங்­க­ளும் முறையே எதிர்­வ­ரும் 16, 18, 20, 23 ஆகிய திக­தி­க­ளில் நடை­பெ­ற­வுள்­ளன.

http://newuthayan.com/story/36253.html

Link to comment
Share on other sites

இலங்கை எதிர் பாகிஸ்தான் ஒ.நா.ச.போ தொடர் நாளை
 

image_c0b4f239f1.jpgimage_ae265934aa.jpg

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் டுபாயில், இலங்கை நேரப்படி, நாளை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

2010ஆம் ஆண்டிலிருந்து, பாகிஸ்தான் அணியின் சொந்த மண் போன்று ஆன ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானை விழுத்திய உற்சாகத்தில் இலங்கை அணி ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் களமிறங்குகிறது.

மறுபக்கம், எதிர்வுகூற முடியாத அணியாக இருக்கும் பாகிஸ்தான், கடந்த ஓராண்டாக டெஸ்ட் போட்டிகளில் சொல்லிக் கொள்ளும்படியாக செயற்படாதபோதும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் சம்பியனான உற்சாகத்துடன் பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டி காணப்படுகின்றது.

இலங்கைக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில், பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட்டின் தலைமைத்துவ முடிவுகள் கேள்விகளுக்குட்பட்டிருந்த நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை சிறப்பாகவே சப்ராஸ் அஹமட் சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

மறுபக்கம், டெஸ்ட் போட்டிகளில், தினேஷ் சந்திமால், இலங்கையணியை சிறப்பாக வழிநடத்தியிருந்த நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், இலங்கை அணியின் தலைவரான உபுல் தரங்க, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் கவனஞ் செலுத்தும் பொருட்டு, டெஸ்ட் போட்டிகளில் ஆறு மாத விடுப்பொன்றை எடுத்துக் கொண்ட நிலையில், இப்போட்டிகளில் பிரகாசிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.

அடுத்து, சிரேஷ்ட வீரர் லசித் மலிங்க நீக்கப்பட்ட குழாமாக காணப்படும் இலங்கையின் வேகப்பந்து வீச்சுக் குழாம் பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. இல்லாவிடின் விரும்பியோ விரும்பாமலோ லசித் மலிங்கவிடமே இலங்கையணி அடைக்கலத்தை தேடும். துடுப்பாட்ட பக்கம் சகலதுறை வீரர்கள் அஞ்சலோ மத்தியூஸ், அசேலக குணரட்ன இல்லாத நிலையில், உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல மீதே அதிக பொறுப்பு காணப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில், காயம் காரணமாக மொஹமட் ஆமிர் இடம்பெறாதபோது, ஹஸன் அலி, ஜூனைட் கான் எனப் பலமானதாகவே பந்துவீச்சு வரிசை காணப்படுகிறது. ஓட்டங்களைப் பெறுவதற்கு, இளம் வீரர் பாபர் அஸாம், சிரேஷ்ட வீரர் ஷோய்ப் மலிக் ஆகியோரையே தங்கியுள்ளது.

அடுத்து இந்தத் தொடர், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. இத்தொடரை, 5-0 என்று இலங்கை அணி கைப்பற்றினால் மட்டும் தற்போதுள்ள எட்டாமிடத்திலிருந்து ஏழாமிடத்துக்கு முன்னேறலாம். மறுபக்கம், பாகிஸ்தான் இத்தொடரை 5-0 என்று வென்றாலும் தரவரிசையில் ஆறாமிடத்திலேயே காணப்படும்.  

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இலங்கை-எதிர்-பாகிஸ்தான்-ஒ-நா-ச-போ-தொடர்-நாளை/44-205465

Link to comment
Share on other sites

இலங்கைக்கு 293 ஓட்டங்கள் இலக்கு!

 

இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் போட்டியில், இலங்கை அணிக்கு 293 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

9_Pakistan.jpg

ஐம்பது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட்களை இழந்த பாகிஸ்தான் அணி 292 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இரண்டாவது விக்கட்டுக்காகக் களமிறங்கிய பாபர் அஸாம் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் இரண்டு விக்கட்களையும், லஹிரு, அகில, திசர, ஜெஃப்ரி ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் பெற்றனர்.

http://www.virakesari.lk/article/25739

31/1 (4.1/50 ov, target 293)
Link to comment
Share on other sites

முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

 

முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

 

 
 
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாட டுபாய் சென்றுள்ளது.

முதலில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற் முதல் ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தொடங்கியது.

பாகிஸ்தான் அணியின் சார்பாக சிறப்பாக விளையாடிய அஸாம் 103 ஓட்டங்களை பெற்றார்.

50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்களை குவித்தது.

தொடர்ந்து 293 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=96433

Link to comment
Share on other sites

பாகிஸ்­தா­னுக்கு பதி­லடி கொடுக்கும் முனைப்­புடன் இலங்கை இன்று களத்தில் இழு­ப­றியில் கடைசி இரு­ப­துக்கு 20 போட்டி

 

 

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வது ஒருநாள் போட்டி இன்று அபு­தாபி சேக் சைட் சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. ஏற்­க­னவே டுபாய் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் இலங்கை அணி 83 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

இந்த தோல்­வி­யி­லி­ருந்து மீண்­டெ­ழுந்து இன்­றைய போட்­டியில் இலங்கை அணி வெற்­றியைப் பதிவு செய்­யுமா என்­ப­துதான் இலங்கை கிரிக்கெட் ரசி­கர்கள் அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாக உள்­ள­து.

பாகிஸ்­தா­னு­ட­னான மூன்று வகை­யான போட்டித் தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ்­ஸுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி ஏற்­க­னவே இங்கு நடை­பெற்ற பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரை முழு­மை­யாக வென்று வெள்­ளை­ய­டி­­த்­தது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான்–இலங்கை அணிகள் மோதும் ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்­டியில் இலங்கை அணி தோல்­வி­ய­டைந்து ஏமாற்­ற­ம­ளித்­தது.

இந்தத் தோல்­விக்கு இலங்கை அணி வீரர்­களின் இட­மாற்­றமே முக்­கிய காரணம் என குமார் சங்­கக்­கார குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார். இலங்கை அணியின் முக்­கிய ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான குசல் ஜனித் பெரேரா மற்றும் தனுஷ்க குண­தி­லக ஆகிய இரு­வரும் அணியில் இல்­லாமல் போனது இலங்கை அணியின் துடுப்­பாட்ட வரி­சைக்கு பெரும் பின்­ன­டை­வாக அமைந்­து­விட்­டது. 

அதே­வேளை குசல் மெண்­டிஸை ஐந்­தா­வ­தாக களமிறக்கி சந்­தி­மாலை ஆரம்­பத்­தி­லேயே அனுப்பி அணியின் சீரற்ற தன்­மையை ஆரம்­பத்­தி­லேயே உரு­வாக்­கி­விட்­டதும் ஒரு­வேளை துடுப்­பாட்­டத்தில் பின்­ன­டைவைக்காண கார­ண­மாக அமைந்­தி­ருக்­கலாம்.

எது எப்­ப­டியோ இன்­றைய போட்­டியில் இந்த குறை­பா­டுகள் அனைத்­தையும் இலங்கை நிவர்த்தி செய்து பாகிஸ்­தா­னுக்கு பதி­லடி கொடுக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதே­வேளை ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்­த­வுடன் 3 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் மோத­வுள்ளது இலங்கை. 

இரு­ப­துக்கு 20 போட்டித் தொடரின் கடைசிப் போட்டி மட்டும் பாகிஸ்­தானின் லாகூரில் நடத்­து­வ­தற்கு முடி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலையில் பாகிஸ்­தா­னுக்கு சென்று விளை­யாட இலங்கை வீரர்கள் தயங்­கு­கி­றார்கள். அணியில் இடம் பெற்­றுள்ள வீரர்கள் மற்றும் ஒப்­பந்­தத்தில் இருக்கும் வீரர்கள் கையெ­ழுத்­திட்டு ஒரு கடி­தத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு கைய­ளித்­துள்­ளனர். அதில் பாகிஸ்­தா­னுக்கு சென்று விளை­யாட விரும்­ப­வில்லை என்றும், லாகூர் போட்­டியை வேறு நாட்­டுக்கு மாற்­று­வது குறித்து பரி­சீ­லிக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இதனால் இந்த ஆட்­டமும் ஐக்­கிய அரபு எமி­ரே­ட்ஸிலேயே நடத்­தப்­படும் என்று தெரி­கி­றது.

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்­தானில் விளை­யா­டிய போது, அவர்கள் சென்ற பஸ் மீது பயங்­க­ர­வா­திகள் துப்­பாக்கிச்சூடு நடத்­தி­யதும் அதன் பிறகு பெரிய அணிகள் பாகிஸ்­தா­னுக்கு செல்ல மறுப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

கடைசி போட்­டியை பாகிஸ்­தானில் நடத்­து­வது குறித்து ஆரம்­பத்தில் கருத்து தெரி­வித்­தி­ருந்த இலக்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஆஸ்லி டீ சில்வா, வீரர்­களின் பாது­காப்­புத்தான் எமக்கு முக்­கியம். அவர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­திய பின்பே நாம் அங்கு சென்று விளையாடுவோம் என்று தெரிவித்திருந்தார்.

அதேவேளை பாகிஸ்தான் தரப்பிலும் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இது குறித்து இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/25844

Link to comment
Share on other sites

பாபர் அசாமின் சதத்தோடு சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்

Untitled-collage-29-696x464.jpg
 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியில் தமது துடுப்பாட்டத்தை முதலில் நிறைவு செய்திருக்கும் பாகிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 50 ஓவர்களில் 220 ஓட்டங்களை நிர்ணயம் செய்துள்ளது.

முன்னதாக அபுதாபி நகரின் ஷேக் செய்யத் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து கொண்டார்.

தாம் விளையாடிய இறுதி எட்டு ஒரு நாள் போட்டிகளிலும் தொடர் தோல்விகளைத் தழுவியிருந்த இலங்கை அணியும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் பாகிஸ்தான் அணியும் நல்ல முடிவுகளைத் தேடி இன்றைய போட்டியில் கடந்த போட்டி போன்று தத்தமது அணிகளில் எவ்வித மாற்றங்களுமின்றி களமிறங்கியிருந்தன.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக தமது துடுப்பாட்டத்தை பாகிஸ்தான் ஆரம்பித்தது. மெதுவான முறையிலேயே பாகிஸ்தான் வீரர்கள் ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கியிருந்தனர்.

போட்டியின் நான்காவது ஓவரை வீசிய லஹிரு கமகே பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தியதுடன் 17 ஓட்டங்களுக்குள் எதிரணியின் ஆரம்ப இணைப்பாட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார். குசல் மெண்டிசின் அருமையான பிடியெடுப்பினால் பாகிஸ்தா அணியின் முதல் விக்கெட்டாக பக்கர் சமான் வெறும் 11 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து சிறிது நேரத்தில் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹ்மத் ஷேசாத் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் சுரங்க லக்மாலினால் வீழ்த்தப்பட நல்லதொரு ஆரம்பத்தை இலங்கை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பாக அடுத்தடுத்து மைதானம் நுழைந்த பாகிஸ்தானின் மத்திய வரிசை வீரர்களான மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக் மற்றும் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் ஆகியோர் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் தந்த இன்னலினால் வந்த வேகத்திலேயே ஓய்வறை திரும்பினர்.

 

 

இதனால் அழுத்தங்களுக்கு உள்ளாகிய பாகிஸ்தான் மந்த கதியிலேயே ஓட்டங்களை சேர்க்கத் தொடங்கியது. இவ்வாறனதொரு நிலையில் போட்டியின் 28 ஆவது ஓவரை வீசிய சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்சேய் மூன்றாவது நடுவரின் உதவியோடு LBW முறையில் மேலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் 101 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி மிகவும் தடுமாறியது.

தமது அணியின் இக்கட்டான நிலையை உணர்ந்து களத்தில் நின்ற பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களான பாபர் அசாம் மற்றும் சதாப் கான் ஆகியோர் மிகவும் பொறுப்பான முறையில் ஆடத்தொடங்கினர். இவர்களின் போராட்டத்தினால் பாகிஸ்தான் 7ஆவது விக்கெட்டுக்காக 109 ஓட்டங்கள் என்கிற நல்லதொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பிக் கொண்டது.

இந்த இணைப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

பாகிஸ்தான் அணிக்கு நங்கூரமாக செயற்பட்ட வெறும் 23 வயதேயான பாபர் அசாம் தனது 7ஆவது ஒரு நாள் சதத்தையும், இத்தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான சதத்தையும் பூர்த்தி செய்து 6 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 133 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவித்திருந்தார், இவரின் ஜோடியாக செயற்பட்ட சதாப் கான் தனது கன்னி ஒரு நாள் அரைச்சதத்துடன் மொத்தமாக 52 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட லஹிரு கமகே 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், திசர பெரேரா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

முதல் இன்னிங்ஸ் சுருக்கம்

பாகிஸ்தான் – 219/9 (50)பாபர் அசாம் 101(133),  சதாப் கான் 52*(68), லஹிரு கமகே 57/4(10), திசர பெரேரா 34/2(10)

http://www.thepapare.com

30/2

Link to comment
Share on other sites

தரங்கவின் போராட்டம் வீண்; இரண்டாவது ஒரு நாள் போட்டியும் பாகிஸ்தான் வசம்

2ndod-696x464.jpg
 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியுள்ளதோடு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என முன்னேறியுள்ளது.

முன்னதாக அபுதாபி நகரின் ஷேக் செய்யத் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்து கொண்டார்.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக தமது துடுப்பாட்டத்தை பாகிஸ்தான் ஆரம்பித்தது. மெதுவான முறையிலேயே பாகிஸ்தான் வீரர்கள் ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கியிருந்தனர்.

போட்டியின் நான்காவது ஓவரை வீசிய லஹிரு கமகே பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தியதுடன் 17 ஓட்டங்களுக்குள் எதிரணியின் ஆரம்ப இணைப்பாட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார். குசல் மெண்டிசின் அருமையான பிடியெடுப்பினால் பாகிஸ்தா அணியின் முதல் விக்கெட்டாக பக்கர் சமான் வெறும் 11 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து சிறிது நேரத்தில் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹ்மத் ஷேசாத் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் சுரங்க லக்மாலினால் வீழ்த்தப்பட நல்லதொரு ஆரம்பத்தை இலங்கை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பாக அடுத்தடுத்து மைதானம் நுழைந்த பாகிஸ்தானின் மத்திய வரிசை வீரர்களான மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக் மற்றும் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் ஆகியோர் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் தந்த இன்னலினால் வந்த வேகத்திலேயே ஓய்வறை திரும்பினர்.

இதனால் அழுத்தங்களுக்கு உள்ளாகிய பாகிஸ்தான் மந்த கதியிலேயே ஓட்டங்களை சேர்க்கத் தொடங்கியது. இவ்வாறனதொரு நிலையில் போட்டியின் 28 ஆவது ஓவரை வீசிய சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்சேய் மூன்றாவது நடுவரின் உதவியோடு LBW முறையில் மேலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் 101 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி மிகவும் தடுமாறியது.

தமது அணியின் இக்கட்டான நிலையை உணர்ந்து களத்தில் நின்ற பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களான பாபர் அசாம் மற்றும் சதாப் கான் ஆகியோர் மிகவும் பொறுப்பான முறையில் ஆடத்தொடங்கினர். இவர்களின் போராட்டத்தினால் பாகிஸ்தான் 7ஆவது விக்கெட்டுக்காக 109 ஓட்டங்கள் என்கிற நல்லதொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பிக் கொண்டது.

அத்தோடு இது இலங்கை அணிக்கெதிராக பாகிஸ்தான் அணியினால் 7ஆவது விக்கெட்டுக்காக பதியப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த இணைப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பாகிஸ்தான் அணிக்கு நங்கூரமாக செயற்பட்ட வெறும் 23 வயதேயான பாபர் அசாம் தனது 7ஆவது ஒரு நாள் சதத்தையும், இத்தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான சதத்தையும் பூர்த்தி செய்து 6 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 133 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவித்திருந்தார், இவரின் ஜோடியாக செயற்பட்ட சதாப் கான் தனது கன்னி ஒரு நாள் அரைச்சதத்துடன் மொத்தமாக 52 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட லஹிரு கமகே 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், திசர பெரேரா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 220 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு இலங்கை வீரர்கள் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தனர். இலங்கை அணி தமது இலக்கு தொடும் பயணத்தில் 10 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. ஜுனைத் கான் மூலம் நிரோஷன் திக்வெல்ல இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக வீழ்த்தப்பட்டிருந்தார்.

நிரோஷன் திக்வெல்லவை அடுத்து களம் நுழைந்த குசல் மெண்டிசும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் தடுமாற்றத்தை உணர்ந்த இலங்கை அணிக்கு பாகிஸ்தானுக்கு கிடைத்த சில வாய்ப்புக்கள் மூலம் மேலும் அழுத்தங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பமும் அமைந்திருந்தது. அவற்றிலிருந்து அதிர்ஷ்டத்தின் மூலம் தப்பித்த இலங்கைக்கு அணித்தலைவர் உபுல் தரங்க மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சற்று நிதானமாக ஆடி ஒரு நல்ல இணைப்பாட்டத்துக்கு வித்திட முனைந்தனர். சொஹைப் மலிக்கின் சுழலினால் இலங்கை வீரர்களின் இந்த முயற்சி 40 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டாக லஹிரு திரிமான்ன 12 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

திரிமான்னவின் விக்கெட்டைத் தொடர்ந்து இலங்கையின் மத்திய துடுப்பாட்ட வரிசை பாகிஸ்தான் சுழல் வீரர்களை எதிர்கொள்ள மிகவும் தடுமாறியது. இதனால் அடுத்தடுத்து தமது துடுப்பாட்ட வீரர்களை ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் பறிகொடுத்தது. இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 93 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான  நிலைக்கு ஆளாகியிருந்தது.

எனினும் இந்நிலையில் ஜோடி சேர்ந்த ஜெப்ரி வன்டர்சேய் மற்றும் அணித்தலைவர் உபுல் தரங்க ஆகியோர் 76 ஓட்டங்களை எட்டாம் விக்கெட்டுக்காக பகிர்ந்து போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

 

இவர்களது இணைப்பாட்டம் தகர்க்கப்பட முடிவில் 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இலங்கை அணி 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது. இலங்கை அணிக்கு ஒரு நாள் போட்டிகளில் இது 9ஆவது தொடர்ச்சியான தோல்வியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சார்பான துடுப்பாட்டத்தில் உபுல் தரங்க அதிகபட்சமாக 144 பந்துகளில் 14 பவுண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களைக் குவித்து போராட்டத்தை காண்பித்திருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இலங்கைக்கு நெருக்கடி தந்த சதாப் கான் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் முன்னர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட சதாப் கானுக்கே வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 219/9 (50) – பாபர் அசாம் 101(133),  சதாப் கான் 52*(68), லஹிரு கமகே 57/4(10), திசர பெரேரா 34/2(10)

இலங்கை – 187 (48)உபுல் தரங்க 112*(144), ஜெப்ரி வன்டர்சேய் 22(55), சதாப் கான் 47/3(9), ஹசன் அலி 32/1(10)

முடிவு பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் வெற்றி

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

இன்­றைய போட்­டியை வென்றே ஆக­வேண்டும் : அசங்க குரு­சிங்க

 

 

இன்று நடை­பெ­ற­வுள்ள பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான மூன்­றா­வது ஒருநாள் போட்­டியில் இலங்கை அணி கட்­டாயம் வெற்­றி­பெ­ற­வேண்டும். ஏற்­க­னவே இரண்டு போட்­டி­களில் தோல்­வியைத் தழு­வி­யுள்­ளதால் இன்று நடை­பெ­ற­வுள்ள போட்­டியில் தோல்­வியைத் தழு­வினால் ஒருநாள் தொடரை இலங்கை அணி இழக்கும்.

ashanga.jpg

பாகிஸ்தான் அணிக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற இரண்­டா­வது ஒருநாள் போட்­டியில் உபுல் தரங்­க­வுக்கு துணை­நின்று ஆட ஒரு­வரும் இல்­லாமல் போனது கவ­லை­ய­ளிக்­கி­றது.

30 ஓவர்­க­ளுக்குள் 7 விக்­கெட்­டுக்­களை இழந்த பின் ஒரு போட்­டியை வெற்­றி­கொள்­வது அவ்­வ­ளவு எளி­தல்ல என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகா­மை­யா­ளரும் முன்னாள் வீர­ரு­மான அசங்க குரு­சிங்க தெரி­வித்தார்.

இலங்கை–பாகிஸ்தான் அணிகள் மோதி­வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்­டா­வது போட்டி நேற்று முன்­தினம் அபு­தா­பியில் நடை­பெற்­றது. இந்தப் போட்­டியில்  முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணி 219 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.  இதை­ய­டுத்து 220 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்­குடன் இலங்கை அணி கள­மி­றங்­கி­யது. இலங்கை அணியின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக நிரோஷன் திக்­வெல்­லவும், உபுல் தரங்­கவும் கள­மி­றங்­கினர். 

பாகிஸ்தான் அணி­யி­னரின் பந்­து­வீச்­சுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் இலங்கை அணி வீரர்கள் அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழந்­தனர். இலங்கை அணி 28.1 ஓவர்­களில் 93 ஓட்­டங்­க­ளுக்கு 7 விக்­கெட்­டுக்­களை இழந்து திண­றி­யது. இருப்­பினும் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க நிலைத்­து ­நின்று ஆடினார். அவ­ருடன் ஜெஃப்ரி வண்­டர்சே ஜோடி சேர்ந்து அணியை சரி­வி­லி­ருந்து மீட்க போரா­டினார். ஆனாலும் இலங்கை அணியால் தோல்­வி­யி­லி­ருந்து மீள முடி­ய­வில்லை. சிறப்­பாக விளை­யா­டிய தரங்க சதம் அடித்தார். அவர் அணியை வெற்றி பெற செய்ய தனி ஆளாக போரா­டினார். இருப்­பினும் மற்ற வீரர்கள் சரி­யாக விளை­யா­டா­ததால் இலங்கை அணி 187 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்­கெட்­டுக்க­ளையும் இழந்­தது. இதனால் பாகிஸ்தான் அணி 32 ஓட்­ட­ங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது. தரங்க 112 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­காமல் இருந்தார். 

இந்தப் போட்டி குறித்து அசங்க குரு­சிங்­க­விடம் கேட்­ட­போது, உபுல் தரங்க தனது பணியை சிறப்­பா­கவே செய்தார். இலங்கை அணியின் ஏனைய துடுப்­பாட்ட வீரர்கள் சரி­யாக ஆட­வில்லை. அகில தனஞ்­சய, ஜெப்­ரியை நாம் குற்றம் சொல்ல முடி­யாது. 30 ஓவர்­க­ளுக்குள் 7 விக்­கெட்­டுக்­களை இழந்த பின்னர் ஒரு போட்­டியில் வெற்­றி­பெ­று­வது இல­கு­வா­ன­தல்ல. நாம் இப்­போது இரண்டு போட்­டிகளில் தோற்­று­விட்டோம். அதனால் மூன்­றாவது போட்­டியில் நிச்­சயம் வெற்­றி­பெ­ற­வேண்டும். வேறு எமக்கு வாய்ப்பு இல்லை என்றார். அணியில் ஏதும் மாற்றம் செய்­யப்­ப­டுமா என்று கேட்­ட­தற்கு, இப்­போ­தைக்கு சொல்ல முடி­யாது ஆனால் ஏதா­வது மாற்றம் வரலாம் என்று நான் எதிர்­பார்க்கிறேன் என்றார்.

http://www.virakesari.lk/article/25946

Link to comment
Share on other sites

இலகு வெற்றியுடன் இலங்கையுடனான ஒரு நாள் தொடர் பாகிஸ்தான் வசம்
Imam.jpg

இலகு வெற்றியுடன் இலங்கையுடனான ஒரு நாள் தொடர் பாகிஸ்தான் வசம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியிருக்கும் பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரையும் 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக அபுதாபியில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தார்.

இறுதியாக தாம் விளையாடிய ஒன்பது ஒரு நாள் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியிருந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் பாகிஸ்தான் 2-0 என முன்னிலை வகிப்பதால் தொடரில் உயிர்ப்பாக இருக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இலங்கை களமிறங்கியிருந்தது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் இருந்து குசல் மெண்டிஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்ததோடு அவர்களுக்கு பதிலாக சாமர கப்புகெதர மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

மறுமுனையில் பாகிஸ்தான் அணியில் அஹ்மட் ஷேசாத், இமாத் வஸீம் ஆகியோருக்கு பதிலாக பாஹிம் அஷ்ரப் மற்றும் அறிமுக வீரர் இமாம் உல் ஹக் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் துடுப்பாட்டத்தை அணித் தலைவர் உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருடன் இலங்கை ஆரம்பம் செய்திருந்தது. இலங்கை அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை திக்வெல்ல மற்றும் தரங்க ஆகியோர் பெற்றுத் தந்தனர்.

இலங்கை அணி 59 ஓட்டங்களை குவித்திருந்த வேளையில் நிரோஷன் திக்வெல்ல முதல் விக்கெட்டாக 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனையடுத்து களம் நுழைந்த தினேஷ் சந்திமால் அணித் தலைவர் உபுல் தரங்க ஆகியோர் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்காக மந்த கதியில் இணைப்பாட்டம் ஒன்றைக் கட்டியெழுப்பினர். 43 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் சந்திமாலின் விக்கெட்டுடன் முடிவுக்கு வந்தது. சதாப் கானின் சுழலினால் வீழ்த்தப்பட்ட சந்திமால் 49 பந்துகளை முகம் கொடுத்து வெறும் 19 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான இன்னிங்ஸ் ஒன்றை இத்தொடரில் மீண்டும் வெளிப்படுத்தியிருந்தார்.

 

இதனையடுத்து அரைச்சதம் கடந்து இலங்கையை பலப்படுத்தி களத்தில் நின்ற அணித் தலைவர் உபுல் தரங்கவும் சதாப் கானினால் வீழ்த்தப்பட்டார். ஆட்டமிழந்த தரங்க தனது 35 ஆவது ஒரு நாள் அரைச் சதத்துடன் மொத்தமாக 80 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 61 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

தரங்கவைத் தொடர்ந்து இலங்கையின் மத்திய வரிசை வீரர்களில் லஹிரு திரிமான்ன (28) தவிர்ந்த ஏனையோர் எதிர்பார்த்த ஆட்டத்தை காட்டியிருக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் 166 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து இலங்கை அணி தடுமாறியது.

எனினும் போராட்டத்தைக் காட்டிய திசர பெரேராவினால் 48.2 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக பின்வரிசையில் சிறப்பாக செயற்பட்ட திசர பெரேரா 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 38 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில், ஹசன் அலி மொத்தமாக 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருந்தார். அத்தோடு சதாப் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கான 209 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணியில் பொறுப்பாக ஆடிய அறிமுக வீரர் இமாம் உல் ஹக் தனது கன்னி ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்து தனது தரப்பினை வலுப்படுத்தினார்.

இவரின் இந்த சதத்தின் உதவியோடு பாகிஸ்தான் வெற்றி இலக்கை 42.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களை அடைந்தது.

பாகிஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடாத்திய வெறும் 21 வயதேயான இமாம் உல் ஹக் 125 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அத்தோடு இவருக்கு உதவியாக இருந்த மொஹமட் ஹபீஸ் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.

 

இந்த வருடத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்து ஒரு நாள் போட்டிகளிலும் தமது தொடர்ச்சியான பத்தாவது தோல்வியையும் பதிவு செய்திருக்கும் இலங்கை அணியின் பந்துவீச்சில் திசர பெரேரா, ஜெப்ரி வன்டர்சேய் மற்றும் லஹிரு கமகே ஆகிய வீரர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது தனது கன்னிப் போட்டியில் சதம் கடந்த இமாம் உல் ஹக்குக்கு வழங்கப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை (20) சார்ஜா நகரில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 208 (48.2) – உபுல் தரங்க 61(80), திசர பெரேரா 38(37), லஹிரு திரிமான்ன 28(45), ஹசன் அலி 34/5(10), சதாப் கான் 37/2(10)

பாகிஸ்தான் – 209/3 (42.3) – இமாம் உல் ஹக் 100(125), மொஹமட் ஹபீஸ் 34*(51), ஜெப்ரி வன்டர்சேய் 43/1(9.3)

போட்டி முடிவு – பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளால் வெற்றி

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

நாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றி ; பாகிஸ்தான் களத்தடுப்பு

பாகிஸ்தான் அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

 

அந்தவகையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 3  போட்டிகளில் வெற்றிபெற்று 3-0 என முன்னிலைபெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் இன்று 4 ஆவது ஒருநாள் போட்டி ஐக்கிய இராச்சியத்தின் சார்ஜாவில் இடம்பெறுகின்றது.

இரு அணிகளிலும் இன்று புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியில் உஷ்மான் கானும் இலங்கை அணியில் சதீர சமரவிக்கிரமவும் புதுமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/26069

Link to comment
Share on other sites

சரித்திரத்தில் மற்றுமொரு மோசமான நிலையில் இலங்கை

Malik-Azam-696x463.jpg
 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியை, 7 விக்கெட்டுகளால் இலங்கை அணியை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளதுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் 4-0 என முன்னிலை அடைந்துள்ளது.  

அதிக ஒரு நாள் போட்டிகள் விளையாடப்பட்ட மைதானமாக கிண்ணஸ் சாதனையை பதிவு செய்திருக்கும் சார்ஜாஹ் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இலங்கை அணியில் இன்றைய போட்டியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சாமர கப்புகெதர, ஜெப்ரி வன்டர்சேய், துஷ்மந்த சமீர ஆகியோருக்குப் பதிலாக அறிமுக வீரர் சதீர சமரவிக்ரம, சீக்குகே பிரசன்ன, சுரங்க லக்மால் ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

சர்பராஸ் அஹ்மட் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. ருமான் ரயீஸ், பாஹிம் அஷ்ரப் ஆகியோருக்குப் பதிலாக இமாத் வஸீம் மற்றும் அறிமுக வீரராக உஸ்மான் கான் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இலங்கை தமது துடுப்பாட்டத்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் அணித் தலைவர் உபுல் தரங்க ஆகியோருடன் தொடங்கியது.

இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்காக அறிமுகமாகிய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான உஸ்மான் கான் ஒரு நாள் போட்டிகளில் தான் வீசிய முதல் ஓவரில் விக்கெட்டைக் கைப்பற்றி இலங்கைக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தார். இலங்கையின் முதல் விக்கெட்டாக உஸ்மானினால் போல்ட் செய்யப்பட்ட அணித் தலைவர் உபுல் தரங்க ஓட்டமேதுமின்றி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

எனினும் மறுமுனையில் அதிரடியாக துடுப்பாடிய நிரோஷன் திக்வெல்ல அணியின் ஓட்ட எண்ணிக்கையை விரைவாக உயர்த்தினார். எனினும் ஜூனைத் கானின் சிறந்த பந்து வீச்சினால் அது நீடிக்கவில்லை. இதனால் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக 16 பந்துகளில் 22 ஓட்டங்களைக் குவித்த திக்வெல்ல ஓய்வறை திரும்ப வேண்டி ஏற்பட்டது.

தொடர்ந்து லஹிரு திரிமான்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இணைந்து ஒரு நல்ல இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளமிட முனைந்தனர். எனினும் அது தினேஷ் சந்திமாலின் ரன் அவுட் காரணமாக சரியாக அமையவில்லை. சந்திமால் 16 ஓட்டங்களுடன் இந்தப் போட்டியிலும் ஏமாற்றமான இன்னிங்சை வெளிக்காட்டியிருந்தார்.

சந்திமாலின் விக்கெட்டை அடுத்து இன்றைய போட்டியில் இலங்கை அணிக்காக அறிமுகமாகிய சதீர சமரவிக்ரமவும் ஓட்டமேதுமின்றி போல்ட் செய்யப்பட்டார். இவரின் விக்கெட்டை அடுத்து மிலிந்த சிறிவர்தன சிறிது நேரம் களத்தில் நின்ற லஹிரு திரிமான்ன உடன் இணைந்து போராடியிருந்தார். எனினும் மைதானத்தில் சிறிவர்தனவினால் நீண்ட நேரம் (13) நீடிக்க முடியாமல் போனது.

சிறிவர்தனவின் விக்கெட்டை அடுத்து மேலும் இரண்டு விக்கெட்டுகளை துரிதகதியில் பறிகொடுத்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் 99 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையை அடைந்தது.

இத்தருணத்தில் களம் நுழைந்த அகில தனஞ்சய லஹிரு திரிமான்ன ஆகியோர் சேர்ந்து 8ஆவது விக்கெட்டுக்காக 43 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர். இந்த இணைப்பாட்டத்துடனும் பின்வரிசையில் துடுப்பாட வந்த சுரங்க லக்மாலின் 23 ஓட்டங்களின் துணையுடனும் 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இலங்கை அணி 173 ஓட்டங்களைக் குவித்து இத்தொடரில் அதி குறைவான ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு திரிமான்ன அதிகபட்சமாக தனது 20ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 4 பவுண்டரிகள் அடங்கலாக 94 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹசன் அலி 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சதாப் கான் மற்றும் இமாத் வஸீம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 174 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி தமது முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மூவரை குறைந்த ஓட்டங்களுக்கு இழந்து சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிக்காட்டிய போதிலும், நான்காம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சொஹைப் மலிக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் மதிநுட்பமான முறையில் ஆடி 119 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு பாகிஸ்தான் வெற்றி இலக்கை 39 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்தது.

இறுதிவரை களத்தில் ஆட்டமிழக்காது நின்ற பாபர் அசாம் மற்றும் சொஹைப் மலிக் ஆகியோர் தலா 69 ஓட்டங்கள் வீதம் பெற்று பாகிஸ்தானுக்கு ஒரு நாள் போட்டிகளில் 8ஆவது தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்ய உதவியிருந்தனர்.

தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டிகளில் 11ஆவது தோல்வியை சந்தித்த இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு கமகே, அகில தனஞ்சய மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் திங்கட்கிழமை (23) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 173 (43.4)லஹிரு திரிமான்ன 62(94), சுரங்க லக்மால் 23*(30), நிரோஷன் திக்வெல்ல 22(16), ஹசன் அலி 37/3(8.4), இமாத் வஸீம் 13/2(7), சதாப் கான் 29/2(8)

பாகிஸ்தான் – 177/3 (39)சொஹைப் மலிக் 69*(81), பாபர் அசாம் 69*(101), அகில தனஞ்ச 29/1(8)

முடிவு பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளால் வெற்றி

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

"எமது திட்­டங்கள் பொய்த்துப்போனது" திரி­மான்ன

 

 

(ஷார்­ஜா­வி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத்)

பாகிஸ்தான் அணிக்­கெ­தி­ரான ஒருநாள் போட்­டியில் நாம் தீட்­டிய திட்­டங்கள் அனைத்தும் பொய்த்­துப் போய்­விட்­டன. இந்தத் தோல்­வி­க­ளுக்கு ஒரு வீரரை மட்டும் கைநீட்டி நாம் குறை­கூற முடி­யாது. ஒட்­டு­மொத்த அணியும் இந்தத் தோல்­விக்கு பொறுப்­பேற்க வேண்டும் என்று இலங்கை அணி வீரர் லஹிரு திரி­மான்ன தெரி­வித்தார்.

 

அத்­தோடு இன்று நடை­பெ­ற­வுள்ள கடைசி போட்­டியில் நாம் எப்­ப­டி­யா­வது வெற்­றி­பெ­றவே முனைவோம் என்றும் அவர் தெரி­வித்தார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமி­ரேட்ஸின் ஷார்ஜா மற்றும் அபு­தா­பியில் நடை­பெற்று வரு­கி­றது. இந்தப் போட்டித் தொடரில் இது­வரை நடை­பெற்­றுள்ள நான்கு போட்­டி­க­ளிலும் இலங்கை அணி படு­தோல்­வியை சந்­தித்து ஒருநாள் தொட­ரையும் இழ­ந்­துள்ள நிலையில் இன்று ஷார்­ஜாவில் ஐந்­தா­வதும் கடை­சி­யு­மான ஒருநாள் போட்டி நடை­பெ­ற­வுள்­ளது.

இன்று நடை­பெ­ற­வுள்ள கடைசி ஒருநாள் போட்டி குறித்தும் நான்­கா­வது போட்­டியில் ஏற்­பட்ட தோல்வி குறித்­தும் இலங்கை அணி வீரர் லஹிரு திரி­மான்ன கருத்து வெளி­யிட்டார். அந்த சந்­திப்பில் அவர் பேசு­கையில்,

தற்­போது பாகிஸ்­தா­னுடன் விளை­யாடி வரும் இலங்கை அணி ஒரு சிறந்த அணிதான். ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக தொடர் தோல்­வியை சந்­தித்து வரு­கி­றது. அதற்­காக அணி பல­வீ­ன­மான அணி என்று சொல்­லிவிட முடி­யாது.

பாகிஸ்தான் அணிக்கு எதி­ராக நாம் தீட்­டிய திட்­டங்கள் அனைத்தும் பொய்த்­துப்­போய்­விட்­டன. அது­மட்­டு­மன்றி எமது துடுப்­பாட்ட வீரர்­களும் சரி­யான முறையில் ஓட்­டங்­களைக் குவிக்­க­வில்லை. நான் உட்­பட அனைத்து அணி வீரர்­களும் இந்தத் தோல்­விக்கு கார­ண­மாக அமைந்­து­விட்­டோம். அதனால் ஒவ்­வொரு போட்­டியின் போதும் தனி ஒரு வீர­ரை கைநீட்டி குற்றம் சொல்­லி­விட முடி­யாது.

சிறந்த பந்­து­வீச்சு அணியை எதிர்த்து எமது வீரர்கள் ஓட்­டங்­களைக் குவிக்க திண­று­கின்­றமை உண்­மைதான். ஆனால் அதை நியா­யப்­ப­டுத்த மாட்டேன். 6 துடுப்­பாட்ட வீரர்கள் குறைந்­தது நான்கு வீரர்கள் சரி ஓட்­டங்­களைக் குவித்­தி­ருக்க வேண்டும். ஆனாலும் 30 ஓவர்­க­ளுக்குள் இலங்கை அணி முக்­கிய விக்­கெட்­டுக்­களை இழந்­து­விட்­ட­மையே அணிக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­விட்­டது.

இந்தத் தோல்­வி­களை ஓரம்­கட்­டி­விட்டு அடுத்த போட்­டிக்கு கவனம் செலுத்­துவோம் என்று கூறி கடந்து சென்று விட முடி­யாது. இந்தத் தோல்­வி­க­ளி­லி­ருந்து விழித்தெழுந்து நாம் அடுத்த போட்­டிக்கு தயா­ரா­க­வேண்டும். இன்று நடை­பெ­ற­வுள்ள கடைசிப் போட்­டியில் நாம் நிச்­சயம் வெற்­றி­பெ­றவே முனைவோம் என்று திரி­மான்ன தெரி­வித்தார்.

http://www.virakesari.lk/article/26164

Link to comment
Share on other sites

ஐந்தாவது போட்டியில் தடுமாறி வரும் இலங்கை

 

Sri-Lanka-Pakistan-1.jpg
(வைப்பக படம்)
 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் சாஜாவில் இடம்பெற்று வரும் ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.
 
ஏற்கனவே இடம்பெற்ற நான்கு போட்டிகளிலும் தோல்வியுற்று துடுப்பாட்டத்தில் தடுமாறி வரும் இலங்கை அணியில், இன்றைய போட்டிக்கு விஷ்வ பெனாண்டோ, துஷ்மந்த சமீர, ஜெப்ரி வந்தர்சே ஆகிய பந்துவீச்சாளர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளதோடு, அகில தனஞ்சய, லஹிரு கமகே, சுரங்க லக்மால் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
 
இன்றைய (23) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
அதன் அடிப்படையில் ஆடுகளம் நுழைந்த இலங்கை அணி, 6.3 ஓவர்கள் முடிவில் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.
 
பந்துவீச்சில் உஸ்மான் கான் 5 ஓவர்கள் பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 
ஆடுகளத்தில்
லஹிரு திரிமான்ன
சீக்குகே பிரசன்ன ஆகியோர் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
 
உஸ்மான் கான் 5/24
 

http://www.thinakaran.lk/

43/5

Link to comment
Share on other sites

இலங்கையுடனான 5 ஆவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி

இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

இதன் மூலம் ஐந்துபோட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் 5 – 0 விகிதத்தில் வென்றது.

Pakistan-beat-Sri-Lanka-5th-ODI.jpg

ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 103 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது, திசர பெரேரா 25 ஓட்டங்களைப்பெற்றார்.

உஸ்மான் கான் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றது.

பக்கார் ஸமான் 47 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பெற்றார. இமாம் உல் ஹக் 45 ஓட்டங்களுடனும் பாஹிம் அஷ்ரப் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

http://metronews.lk/?p=16090

Link to comment
Share on other sites

இலங்கையை வெள்ளையடிப்புச் செய்து பழிதீர்த்தது பாகிஸ்தான்

 

இலங்கைக்கு எதிரான 5 ஆவது போட்டியில் 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி வெள்ளயைடிப்புச் செய்தது.

pak.jpg

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரு அணிகளுக்குமிடையிலான 3 வகையான கிரிக்கெட் தொடர்கள் இடம்பெற்று வருகின்றன. 

அதில் இலங்கை அணி 2-0 என பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வெள்ளையடிப்புச் செய்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி வெள்ளையடிப்புச் செய்து பழிதீர்த்துள்ளது.

269221.jpg

இன்றைய தோல்வி இலங்கை அணிக்கு 12 ஆவது தொடர் தோல்வியென்பதுடன் இந்தவருடத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் இன்றுவரை இலங்கை அணி பங்குபற்றி விளையாடிய 3 ஒருநாள் தொடர்கள் வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளன. 

DM0gSHBW4AEoQ-t.jpg

தென்னாபிரிக்கா , இந்திய அணிகள் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிரான தொடர்களை வெள்ளையடிப்புச் செய்திருந்த நிலையில், இன்றைய வெற்றியுடன் பாகிஸ்தான் அணியும் இலங்கைக்கு எதிரான தொடரை வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

இதேவேளை, கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி தனக்கு எதிராக விளையாடிய அணியை 5-0 என வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

269218.jpg

2017 ஆம் ஆண்டில் 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 21 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதில் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

269219.jpg

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகளை பாகிஸ்தானிய பந்துவீச்சாளர் பதம் பார்த்தனர். 

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது தட்டுத்தடுமாறிய இலங்கை அணி வீரர்கள் 103 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.

ஒரு ஓட்டத்தை பெற்றிருந்த வேளை இலங்கை அணியின் 2 விக்கெட்டுகள் சரிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் 20 ஓட்டங்களைப்பெற்ற வேளை 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா மாத்திரம் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய உஷ்மான் கான் 37 ஓட்டங்களைக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு 104 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 எனக் கைப்பற்றி வெள்ளையடிப்புச் செய்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இமாம் உல் ஹக் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பர்ஹான் சமன் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் உஷ்மன் கானும் தொடர் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் ஹசன் அலியும் தெரிவுசெய்யப்பட்டனர்.

http://www.virakesari.lk/article/26193

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.