Jump to content

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்


Recommended Posts

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

 

ஐக்கிய நாடுகள் சபையினால் அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு தம்மை மற்றுமொரு நாட்டில் குடியேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் வேறு நாடுகளில் குடியேற்றப்படாது தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 

இதனால் இறுதி கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகள் இன்றி உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக இந்தோனேசிய அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். 

இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்ற நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

இதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடானில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமில் 300ற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களால் மீண்டும் ஸ்ரீலங்கா திரும்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தி அவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்த்து பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் உறுதிப்படுத்தியும் உள்ளது.

எனினும் தாம் தமிழர் என்ற காரணத்திற்காக அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட தம்மை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க இந்தோனேசிய அரசாங்கம் மறுப்பதாக ஈழத் தமிழ் அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால் தம்மைப் போன்று தஞ்சம்கோரி படகுப் பயணத்தை மேற்கொண்ட நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட ஏனைய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அகதிகளை விரைவாக இந்தோனேசிய அரசாங்கம் வெளி நாடுகளில் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஈழத் தமிழ் அகதிகள் சுட்டிக்காட்டுகின்றார்.

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

அதேவேளை. 5 ஆறு வருடங்களாக அனாதரவான நிலையில் தாம் நிர்கதியாகியுள்ளமையினால் தமது குடும்பங்கள் சிதைவடைந்துள்ளதாகவும் ஈழத் தமிழ் அகதிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

 இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகாயமடைந்த பலரும் இந்தோனேசிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருக்கின்றனர்.

அரசியல் தஞ்சம் கோரி பல வருடங்களுக்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேறிய தமக்கு அகதி அந்தஸ்த்து ஏற்றுக்கொள்ளப்பட்டும் தம்மை வேறு நாடுகளில் குடியேற்றாததன் காரணமாக உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாததால் தமது எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் இறுதிக்கட்ட போரின் போது காயமடைந்த ஈழத் தமிழ் அகதியான அசோகராசா ரஞ்சித் தெரிவிக்கின்றார்.

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

இதேவேளை இறுதிக்கட்ட போரின் போது படுகாயமடைந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறி அரசியல் தஞசம் கோரும் நோக்கில் ஆபத்தானப் படகுப் பயணத்தை மேற்கொண்ட நிலையில் இந்தோனேஸிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதியொருவர் உரிய சிகிச்சைகள் இன்றி கடந்த இரண்டாம் திகதி உயிரிழந்திருந்தார்.

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவிலுள்ள அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியின் முன்னாள் போராளியான சந்தியா என்றழைக்கப்படும் ரமணன் சியாமலா என்பவரே உரிய சிகிச்சைகள் இன்றி பரிதாபகரமாக உயிரிழந்திருந்தார்.

உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்

இந்த நிலை இறுதிக்கட்ட போரின் போது படுகாயமடைந்து உரிய சிகிச்சைகள் இன்றி இந்தோனேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய ஈழத் தமிழ் அகதிகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ள ஈழத் தமிழ் அகதிகள், ஐ.நா வினால் அகதி அந்தஸ்த்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தம்மை வேறு நாடுகளுக்கு உடனடியாக மாற்றி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

https://news.ibctamil.com/ta/politics/Eelam-refugees-life-expectancy-in-Indonesia

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்- உதவி வழக்குமாறு அவலக் குரல்

 

ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்தினால், இந்தோனிஷியாவின் மிலான் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக ஐ.பி.சி.தமிழ் செய்திகளிடம் அழுது புலம்பியுள்ளனர்.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான உதவிகள் இல்லாமலும் கவனிப்பார் இன்றியும் தமது பிள்ளைகளுடன் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டதாகவும் அவர்கள் கண்ணீர்மல்க கூறுகின்றனர். நோய்கள் ஏற்பட்டால் சிகிச்சைகள் கூட மறுக்கப்படுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்- உதவி வழக்குமாறு அவலக் குரல்

ஏனைய நாடுகளைச் சேர்ந்த அகதிகள், மேற்குலக நாடுகளில், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளினால் குடியமர்த்தப்படுகின்றனர். ஆனால் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக தங்களை தொடர்ந்தும் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் முறையிட்டுள்ளனர்.

பலர் தாயகத்தில் தங்கள் குடும்பங்களை விட்டு தனியாக வந்துள்ளனர். அவர்கள் எந்தவிதமான தொடர்புகளும் இன்றி தவிக்கின்றனர். தங்களில் பலருக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வேறு சிலர் நடைப்பிணமாக திரிவதாகவும் கூறி அவர்கள் அழுது புலம்புகின்றனர்.

முதல் இரண்டு வருடங்கள் கைதிளுடன் சேர்த்து, விசேட முகாம் ஒன்றில் அடைத்து வைத்திருக்கப்பட்டதாகவும் பின்னர் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டு வெளியில் உள்ள சிறப்பு முகாம் ஒன்றில் முன்று ஆண்டுகள் தங்கவைக்கப்பட்டு சித்தரவதைக்கு உள்ளாகுவதாகவும் அவாகள் கண்ணீர்மல்க கூறுகின்றனர்.

இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்- உதவி வழக்குமாறு அவலக் குரல்

ஈழத் தமிழர்களில் பலருக்கு ஐ.நா அதிகாரிகளினால் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் சிகிச்சைகள் கூட மறுக்கப்படுகின்றன. பலர் காயங்களுடன் எந்தவிதமான சிகிச்சைகளும் இன்றி அவதிப்படுகின்றனர்.
அவர்கள் தாயகத்துக்குக் கூட திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

தங்களுக்கு அகதி அந்தஸ்த்து வழங்குமாறு வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியபோது, மாற்று நடவடிக்கை எடுப்பதாக ஐ.நா அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால் இதுவரையும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்- உதவி வழக்குமாறு அவலக் குரல்

குறிப்பாக அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டவர்களுக்கு வேறு நாடுகளில் தஞ்சமளிக்க வேண்டும் எனவும் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் வேறு நாடுகளில் குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் ஐ.பி.சி.தமிழ் செய்திகளிடம் தெரிவித்துள்ளனர்.

தங்களின் அவல வாழக்கை தொடர்பாக கவணம் செலுத்தி, தங்கள் எதிர்கால வாழ்க்கையில் ஒளியேற்றுமாறு அவர்கள் புலம்பெயர் தமிழர்களிடமும் உருக்கமான வேண்டு கோள் விடுத்துள்ளனர். சேறு சகதிகள் நிறைந்த, மலசல கூட வசதிகள் அழுக்காக உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் ஐ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு வேதனைடன் கூறுகின்றனர்.

மனித சமூகம் இருக்க முடியாத இடத்தில், சுமார் ஐந்து ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகள் தாயகத்தில் இருந்து படகுகள் மூலம் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்- உதவி வழக்குமாறு அவலக் குரல்

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tamil-refugees-in-Indonesia-srilanka

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.