Jump to content

இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை


Recommended Posts

இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

 
இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

இந்தியாவும், சீனாவும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மட்டுமல்ல, அண்டை நாடுகளும்கூட.

இரு நாடுகளுக்கு இடையில் எல்லை தொடர்பான சர்ச்சை தொடர்கிறது. உதாரணமாக டோக்லாமை கூறலாம்.

ஆனால், இந்திய-சீன எல்லையில் இருக்கும் இந்த இடத்தின் வழியாக சீன ராணுவத்தினர் இந்தியப் பகுதிக்கும், இந்தியர்கள் சீனப்பகுதிக்கும் சென்று வருவதை பார்க்க முடியும்.

இதுபற்றி விரிவாக தெரிந்துகொள்வதற்காக அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றோம்.

விடுதியோ தங்குவதற்கு சத்திரமோ இல்லை

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

அசாம் மாநிலத் தலைநகர் கெளஹாத்தியிலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து திப்ருகர் வழியாக தின்சுக்கியாவை அடைந்தோம்.

அருணாச்சல பிரதேசத்தின் எல்லை இங்கிருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவில் உள்ளது. இங்கேயே மலைப்பகுதிகள் தொடங்கிவிடுகின்றன. அருணாச்சல பிரதேசத்தின் எந்த பகுதிக்கும் அனுமதி இல்லாமல் செல்லமுடியாது.

மலையுச்சியில் இருக்கும் ஹாயோலாங் நகரை அடைவதற்கு பத்து மணி நேரம் ஆனது. இங்கு தங்கும் விடுதிகளோ, சத்திரங்களோ எதுவுமே இல்லை. பல இடங்களில் அலைந்த பிறகு, அரசினர் விடுதியில் தங்க இடம் கிடைத்தது.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

ஆபத்தான மலையேற்றம்

"நீங்கள் மலைப்பாதை வழியாக சீன எல்லைக்கு செல்லப்போகிறீர்களா? இது நிலச்சரிவு அடிக்கடி ஏற்படும் பகுதி" என்று அங்கிருந்த வழிகாட்டி சொன்னார்.

மனதில் பலவிதமான கேள்விகளை சுமந்துகொண்டு கரடுமுரடான பாதையில் மலையில் ஏறத் தொடங்கினோம். மலையேற்றம் அச்சமளிப்பதாக இருந்தது. ஒருபக்கம் விண்ணை முட்டும் மலைமுகடு என்றால், மறுபுறமோ அதல பாதாளம் வரை தென்படும் பள்ளத்தாக்கு.

பலமணி நேர பயணித்திற்கு பிறகு, ஒரு சில மனிதர்களை பார்த்தோம், அவர்கள் எங்களை விசித்திரமாக பார்த்தார்கள்.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

சீனா செல்வது எளிது

சீன எல்லையில் அமைந்திருக்கும் இந்தியாவின் கடைசி கிராமத்தை சென்றடைந்தோம். சஹல்காமில் வசிக்கும் ஐம்பது குடும்பங்களில் அல்லிம் டேஹாவின் குடும்பமும் ஒன்று.

இங்கு வசிக்கும் மக்களின் வருவாய்க்கு ஏலக்காய் விவசாயம் கைகொடுத்தாலும், இங்கு வசிப்பவர்கள் நாட்டின் பிற பகுதிகளை தொடர்பு கொள்வது மிகவும் சிரமம். உணவுப்பொருட்களை வாங்குவதற்காக ஐந்து மணி நேரம் பயணம் செய்யவேண்டும்!

இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் உறவினர்கள் சீனாவிலும், இந்தியாவிலும் வசிக்கின்றனர்.

சீனாவில் இருக்கும் உறவினர்களின் வீட்டிற்கு இந்த இந்திய கிராமத்தினர் சுலபமாக செல்லமுடியும் என்கிறார் அல்லிம் டேஹா.

அவர் சொல்கிறார், "மிஷ்மி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் குடும்பத்தில் பலர் சீன எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள், வனங்களில் மூலிகைகளை பறிக்கச் செல்லும்போது, அந்தப்புறத்தில் இருக்கும் எங்கள் உறவினர்களையும் சந்தித்து வருவோம். இங்கிருந்து ஒன்று அல்லது இரண்டு மணி நேர பயணத்தில் அங்குள்ள உறவினர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்வோம்".

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

கிராமத்தில் இந்திய ராணுவத்தின் ஒரு முகாம் இருக்கிறது. அங்கு புகைப்பிடித்துக் கொண்டிருந்த சில சிப்பாய்களை பார்த்தோம்.

ஜம்முவை சேர்ந்த ஒரு சிப்பாய் சொல்கிறர், "உங்களை இங்கு பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மொபைல், டி.வி எதுவுமே இங்கு கிடையாது. மலையில் ஏறிவிட்டால் அவ்வளவுதான். இங்கு வானிலை எப்படி இருக்கிறது பாருங்கள்."

சஹல்காம் மற்றும் அதன் அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் மக்களில் பலர், ராணுவத்தினருக்கு வழிகாட்டிகளாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் பணிபுரிகின்றனர். வழிகாட்டியாக பணிபுரிந்த 24 வயது ஆயண்ட்யோ சோம்பேபோ இப்போது வேலை தேடி வருகிறார்.

சீன வீரர்கள் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்

எல்லை தாண்டும்போது மட்டுமல்ல, வேறு பல சமயங்களிலும் சீனப் படையினர் இவர்களை தாக்குகின்றனர்.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை Image captionஆயண்ட்யோ சோம்பேபோ

ஆயண்ட்யோ சோம்பேபோ சொல்கிறார், "அன்று மதியம், நான் எல்லைக்கு மிக நெருக்கமாக நடந்து கொண்டிருந்தேன். எல்லைக்குள் நூறு மீட்டர் தொலைவிற்குள் என்னை பிடித்துவிட்டார்கள். என்னை பிடித்து வைத்துக் கொண்ட அவர்கள், கிராமத்தில் எத்தனை இந்திய வீரர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டார்கள். எங்கள் ராணுவத்தில் 300 வீரர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று சொன்னேன். சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்."

இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் சீன எல்லையை கடந்து சென்றுள்ளனர். மெக்கிக்கேம் டெஹாவின் கருத்துப்படி, "அங்கு வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கிறது, மூன்று அடுக்கு மாடி கட்டடங்களையும் சிறப்பான சாலைகளையும் அங்கு பார்க்கமுடிகிறது. இந்தியாவில் அங்கிருக்கும் வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிகூட ஏற்படவில்லை".

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை தொடர்பான முரண்பாடுகளும், சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. எல்லை பிரச்சனையில் 1962ஆம் ஆண்டில் இருநாடுகளும் போரில் ஈடுபட்டன.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக மோதல் போக்கு சில மாதங்கள் தொடர்ந்தது. இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் உள்ள கிராம எல்லைகள் சீனாவை ஒட்டியிருக்கின்றன.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

நிலையான எல்லை இல்லை

ஆனால், சிக்கிமைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை.

இந்த பிரச்சினையை நேர்மறையான சிந்தனையுடன் அணுகினால் தீர்க்கப்பட முடியும் என இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் வி.பி. மாலிக் கருதுகிறார்.

அவர் கூறுகிறார், " எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி என்று இந்திய தரப்பு ஒப்புக்கொள்ளும் அல்லது சீனா ஒப்புக்கொள்ளும் பகுதிகளில் ஏதாவது ஒன்றையாவது குறிக்கவேண்டும். அப்படி எல்லை குறிக்கப்பட்டால், குறைந்தபட்சம் நாம் எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்பதை ஜி.பி.எஸ் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். சீனா இதுவரை எல்லைக் கோட்டை குறிக்க அனுமதிக்கவில்லை. எனவே சீன வீரர்கள் அவ்வப்போது இந்தியப் பகுதிக்குள் வந்து செல்கின்றனர்".

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை Image captionஜெனரல் வி.பி. மாலிக்

இரண்டு சக்திமிக்க அண்டை நாடுகளுக்கு இடையிலான அரசியல் முரண்பாடுகளால் எல்லை விவகாரம் அந்தரத்தில் ஊசலாடுகிறது.

ஆனால், இந்திய எல்லையில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு எல்லை என்பது பெயரளவில்தான்.

சஹல்காமில் தனது வீட்டின் திண்ணையில் அமர்ந்திருக்கும் அல்லிம் டேஹா உதிக்கும் சூரியனை பார்த்துக்கொண்டே கூறுகிறார், "நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம், ஆனால் எங்களுக்கு நலனை விரும்புவது யார் என்றே தெரியவில்லை."

http://www.bbc.com/tamil/global-41492314

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.