Jump to content

டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர்


Recommended Posts

டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர்

r
jaffna-bb-696x464.jpg
 

 

jaffna-bb-696x464.jpg
 

டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றன. இப்போட்டித் தொடரானது 22 வயதிற்குட்பட்டோர் மற்றும் திறந்த பிரிவு என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தன.

 

தொடரின் காலிறுதிப் போட்டிகள் 03 செற்களைக் கொண்டதாகவும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 05 செற்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தன.

22 வயதிற்குட்பட்டோர் பிரிவு

முதல் அரையிறுதி

முதலாவது அரையிறுதிப் போட்டியில் கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வெற்றியாளராகி, நடப்புச் சம்பியன்களாகத் திகழ்ந்த இளவாலை மத்தி அணியினரை காலிறுப் போட்டியில் 02:01 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்ற புத்தூர் சென்றல் ஸ்ரார் அணியும், மட்டுவில் மோகனதாஸ் அணியுடனான போட்டியில் 02:01 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்றிருந்த கெருடாவில் அண்ணா அணியும் போட்டியிட்டிருந்தன.

போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக அமையும் என்ற இரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக, 25:13, 25:12, 25:12 என இலகுவாக தொடர்ச்சியாக மூன்று செற்களிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர் கெருடாவில் அண்ணா அணியினர்.

இரண்டாவது அரையிறுதி

புத்தூர் வளர்மதி மற்றும் ஆவரங்கால் இந்து இளைஞர் அணிகள் மோதியிருந்த மூன்றாவது காலிறுதிப் போட்டியில், முதல் செற்றினை இந்து இளைஞர் அணியினர் கைப்பற்றியிருந்த போதும் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு செற்களிலும் வெற்றிபெற்று 2:1 என்ற செற்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றனர் புத்தூர் வளர்மதி அணியினர்.

அதேபோன்று, நான்காவது காலிறுப் போட்டியில் சிறுப்பிட்டி ஜனசக்தி அணிக்கெதிராக தொடர்ச்சியாக இரண்டு செற்களையும் இலகுவாகக் கைப்பற்றிய அம்பாள் அணியினர் அரையிறுதிக்குத் தகுதிபெற்றனர்.  

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 25:20, 25:13, 25:21 என மூன்று செற்களையும் தொடர்ச்சியாகக் கைப்பற்றிய வளர்மதி அணி 3:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இரண்டாவது அணியாக தம்மைப் பதிவு செய்துகொண்டனர்.

இறுதிப் போட்டி

புத்தூர் வளர்மதி மற்றும் கெருடாவில் அண்ணா அணியினர் மோதியிருந்த இந்த இறுதிப் போட்டியில் 25:20, 25:14, 25,21 என தொடர்ச்சியாக முதல் மூன்று செற்களையும் கைப்பற்றி 3:0 என்ற நேர் செற் கணக்கில் இலகு வெற்றி பெற்ற வளர்மதி அணியினர் யாழ் மாவட்ட சம்பியன்காளாகியதுடன் தேசிய ரீதியிலான சுற்றுப் போட்டிக்கும் தெரிவாகினர்

 

திறந்த பிரிவு

திறந்த பிரிவில் நடப்பு சம்பியன்களான இந்து இளைஞர் அணியினர் நீர்வேலி ஐக்கியம் அணிக்கெதிரான முதலாவது காலிறுதிப் போட்டியில் 25:20 என இலகுவாகக் கைப்பற்றினர். இரண்டாவது செற்றில் ஜக்கிய அணியினர் பலத்த அழுத்தத்தினைக் கொடுத்தபோதும் 31:29 என்ற புள்ளிகளடிப்படையில் அந்த செற்றினையும் கைப்பற்றி 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இளவாலை மத்திய விளையாட்டுக் கழகம், நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக் கழகம் ஆகியன போட்டிக்கு சமூகம் தராததன் காரணமாக இந்து இளைஞர் அணி மீண்டுமொரு முறை இறுதிப் போட்டியில் தடம் பதித்தது.

மறுபக்கத்தில் தற்போதைய தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் அணியான ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி காலிறுதிப் போட்டியில் 2-0 என்ற செற் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றது.

மற்றைய காலிறுதியாட்டத்தில் KMV கரிஷ் அணியினை 2:0 என்ற நேர் செற் கணக்கில்  வீழ்த்திய கலைமதி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்காக ஆவரங்கால் மத்தி மற்றும் புத்தூர் கலைமதி அணிகள் போட்டியிட்டிருந்தன. முதலாவது செற்றினை 25:14 என மத்திய விளையாட்டுக் கழக அணி கைப்பற்றியது. இரண்டாவது செற்றினை 24:26 என போராடிக் கைப்பற்றியது கலைமதி. அதனையடுத்து வந்த இரண்டு செற்களையும் ஆவரங்கால் மத்தி அணியினர் 25:18, 25:20 என்ற புள்ளிகளடிப்படையில் கைப்பற்றினர்.

இதன் காரணமாக, இறுதியாக 3:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்ற ஆவரங்கால் மத்திய அணியினர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்

 

இறுதிப் போட்டி

நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றிருந்த இறுதிப் போட்டியில் முதலாவது செற்றினை 25:15 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றது இந்து இளைஞர் அணி. அடுத்த செற்றினை 25;14 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது மத்தி அணி.

போட்டி மிகவும் விறுவிறுப்படைய இந்துவின் பக்கத்தில் ஜனகனின்  நேர்த்தியான அறைதல்கள், மறுபக்கம் சொறுபனின் மீள்வருகை, நேர்த்தியான தடுப்பாட்டம் என இருக்கையில், பரபரப்பான மூன்றாவது செற்றினை 25:23 என இந்து இளைஞர் அணி போராடிக் கைப்பற்றியது.

தொடர்ச்சியாக நான்காவது செற்றினையும் 25:18 எனக் கைப்பற்றிய இந்து இளைஞர் அணி 3:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று யாழ் மாவட்ட சம்பியன்களாக மாறியதுடன், அவ்வணியினர் நடப்பாண்டிற்கான  தேசிய மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகினர்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.