Jump to content

முதற்தர சத்திரசிகிற்சை நிபுணர் ம. கணேசரட்ணம் அவர்களுக்கு அஞ்சலி


Recommended Posts

முதற்தர சத்திரசிகிற்சை நிபுணர்  ம. கணேசரட்ணம் அவர்களுக்கு அஞ்சலி

நேற்று காலை சுகவீனம் காரணமாக காலமான முதல் தர சத்திர சிகிச்சை நிபுணர் கணேசரட்ணம் அவர்களுக்கு அஞ்சலி

அமரர் தமிழ் தேசிய தளத்தில் அர்ப்பணிப்பு நிறைந்த சேவையாற்றியவர். ஆகாய கடல் வெளி சமரின் போது (ஆனையிறவு மீதான முதல் முற்றுகை சமர்) காயமடைந்த போராளிகளிற்கு தேவையான அறுவை சிகிச்சைகளை இரவு பகல் என்று பாராது தூக்கமின்றி செய்தவர், பொது மக்களை இலக்கு வைத்து மேற்கொண்ட நவாலி தேவாயலத்தின் மீதான இலங்கை அரசின் கொடூர தாக்குதலில் காயப்பட்ட பலரை காப்பாற்ற பல நாட்கள் தொடர்ந்து பணியாற்றியவர், சமாதான படை என்று சொல்லி அனுப்பட்ட இந்திய இராணுவம் தமிழ் மக்களை கொன்றழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் துணிச்சலுடன் சேவையாற்றியவர், யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக இருந்ததுடன் மருத்துவ பீடத்தை மூட விடாது காத்தவர்களில் ஒருவர் ஆவர்.

இலங்கை மருத்துவ துறையில் முன்னோடியாக இருந்து பல தமிழ் மருத்துவ மாணவர்கள் அறுவை சிகிச்சை பக்கம் வருவதற்கு காரணமாக இருந்தவர் கணேசரட்ணம் அவர்கள். இலங்கை தமிழர்களின் குடும்பத்தில் ஒருவராவது அமரரிடம் சிகிச்சை பெற்று இருப்பர். அந்தளவுக்கு தமிழ் மக்களின் வாழ்வுடன் பிணைந்தவர்.

அமரருக்கு எம் கண்ணீர் அஞ்சலி

Dr.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்காலத்தில்.... தாய் நாட்டுக்கு, சேவை செய்வதற்காகவே... 
மக்களுடன் நின்று, பணியாற்றிய  சத்திர சிகிச்சை  நிபுணர் டாக்டர்  கணேசரட்ணம் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலவோட்டத்தில் துயர் நீங்க ஆறுதல்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.