Jump to content

சினிமா விமர்சனம்: விக்டோரியா அண்ட் அப்துல்


Recommended Posts

சினிமா விமர்சனம்: விக்டோரியா அண்ட் அப்துல்

2011ஆம் ஆண்டில் ஷ்ரபானி பாசு எழுதி வெளிவந்த Victoria & Abdul: The True Story of the Queen's Closest Confidant என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் இது. பேரரசி விக்டோரியாவுக்கும் அவரது பணியாளராக இருந்த, இந்தியாவைச் சேர்ந்த அப்துல் கரீமிற்கும் இடையிலான உறவைச் சொல்கிறது படம்.

சினிமா விமர்சனம்: விக்டோரியா அண்ட் அப்துல்

1887ஆம் ஆண்டு. விக்டோரியா மகாராணி, அரச பதவியேற்ற ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் நிகழ்வில் பணியாற்ற, இந்தியாவிலிருந்து இரு பணியாளர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஆக்ராவைச் சேர்ந்த 24 வயது அப்துல் கரீம். அப்துல் கரீமின் சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் மகாராணிக்குப் பிடித்துப்போய்விட, அப்துலை பணியாளர் என்ற நிலையிலிருந்து 'முன்ஷி' (ஆசிரியர்) என்ற நிலைக்கு உயர்த்துகிறார் விக்டோரியா. அப்துலிடமிருந்து உருது கற்றுக்கொள்ளவும் ஆரம்பிக்கிறார்.

   
திரைப்படம் விக்டோரியா அண்ட் அப்துல்
   
நடிகர்கள் ஜூடி டென்ச், அலி ஃபஸல், டிம் ஸ்மித், எடி இஸார்ட்
   
இசை தாமஸ் நியூமேன்
   
கதை, திரைக்கதை லீ ஹால், ஷ்ரபானி பாசு
   
இயக்கம் ஸ்டீஃபன் ஃப்ரேர்ஸ்

மகாராணி, அப்துலுடன் பழகுவது அரச குடும்பத்திலும் இங்கிலாந்து அரசிலும் பெரும் புகைச்சலை ஏற்படுத்துகிறது. இருந்தும், விருதுகள், பட்டங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் அப்துலுக்கு வழங்கப்படுகின்றன. அவரது மனைவியை, குடும்பத்தினரை இந்தியாவிலிருந்து அழைத்துவந்து, தனி வீட்டிலும் தங்கவைக்கிறார் மகாராணி. 1901ல் மகாராணி இறந்தவுடன், இருவருக்கும் இடையிலான கடிதங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, எரிக்கப்படுகின்றன. அப்துல் குறித்து மகாராணி எழுதிய குறிப்புகளும் அழிக்கப்படுகின்றன. இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார் அப்துல்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் 'எம்' ஆக வரும் ஜூடி டென்ச் மகாராணி விக்டோரியாவாக நடித்திருக்கிறார். ஏற்கனவே Mrs Brown படத்திலும் அவர் விக்டோரியா மகாராணியாக நடித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவும் இந்தப் படத்தைப் பார்க்க முடியும். அப்துலாக நடித்திருக்கும் அலி ஃபஸல் பெரிதும் வசீகரிக்கிறார்.

சினிமா விமர்சனம்: விக்டோரியா அண்ட் அப்துல்

கடிதங்கள், நாட்குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தை திரைக்கதையாக்கும்போது பல சிரமங்கள் வரக்கூடும். சில காலகட்டங்களில் என்ன நடந்திருக்கும் என்பது தெரியாது. ஆனால், படமாகப் பார்க்கும்போது, அந்த உணர்வே ஏற்படாமல் ஒரு முழுமையான திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. தவிர, எந்த இடத்திலும் தொய்வே ஏற்படுத்தாத திரைக்கதையும் வசனங்களும் சிறந்த திரைப்பட அனுபவத்தைத் தருகின்றன.

சினிமா விமர்சனம்: விக்டோரியா அண்ட் அப்துல்

19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தை கண்முன் நிறுத்தும் இந்தப் படத்தில் ஒரே உறுத்தல், படத்தின் துவக்கத்தில் வரும் ஆக்ரா நகரக் காட்சிகள். தற்போதைய வீடுகளின் மத்தியில் படமாக்கப்பட்டிருப்பதால், படத்தோடு ஒட்டவேயில்லை.

பிரிட்டிஷ் வரலாற்றில் ஆர்வமுடையவர்கள் ரொம்பவுமே ரசிக்கத்தக்க திரைப்படம்.

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-41484273

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.