Jump to content

லாஸ் வேகஸ் தாக்குதல் சந்தேகதாரி: சூதாட்ட பிரியர் மற்றும் உளவியல் பாதிப்பு கொண்டவர்?


Recommended Posts

லாஸ் வேகஸ் தாக்குதல் சந்தேகதாரி: சூதாட்ட பிரியர் மற்றும் உளவியல் பாதிப்பு கொண்டவர்?

லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 58 கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக், வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர் என்று தெரிய வந்துள்ளது.

ஸ்டீஃபன் பேடக்படத்தின் காப்புரிமைUNDATED IMAGE Image captionஸ்டீஃபன் பேடக்

தனது பணியில் இருந்து ஓய்வுபெற்று அமைதியான முறையில் அவர் வாழ்ந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேவாடாவில் உள்ள மெஸ்கியூட் பகுதியை சேர்ந்த 64 வயதான ஸ்டீஃபன் பேடக் விமான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார். அவர் மீது இதற்கு முன்பு எந்த குற்றப்பின்னணியும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், லாஸ் வேகஸ் தாக்குதலுடன் தொடர்புடையவராக கருதப்படும் இந்த சந்தேகதாரி ஒரு தீவிர சூதாட்ட பிரியர் மற்றும் வினோதமான நடவடிக்கைகள் கொண்டவர் என்று அவரது வீட்டுக்கு அருகே முன்பு குடியிருந்த ஒருவர் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக உளவியல் பிரச்சினைகளால் ஸ்டீஃபன் பேடக் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்று ஒரு அமெரிக்க அதிகாரி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

லாஸ் வேகஸில் 58 பேரை கொன்ற துப்பாக்கிதாரி யார்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

லாஸ் வேகஸில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கும், பேடக்கின் இரண்டு அறை கொண்ட வீட்டினை விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

போலீஸார் பேடக்கின் அறையை நெருங்கும் நேரத்தில், அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொன்றதாக ஷெரீப் தெரிவித்தார்.

"அவரது மத கோட்பாடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை" எனவும் ஷெரீப் கூறியுள்ளார்.

இத்தாக்குதலுக்கும், தீவிரவாத செயலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஏதேனும் ஆதாரம் கிடைத்துள்ளதா? என ஷெரீப்பிடம் கேட்கப்பட்டது.

"இல்லை. தற்போது எதுவும் இல்லை" என அவர் கூறினார்.

உடனிருந்த தாக்குதல்தாரியின் தோழி?

பேடக் அறையில் தங்கியிருந்த, மரிலோவ் டான்லீயை கண்டுபிடிக்க உதவுமாறு முன்னதாக அதிகாரிகள் கோரியிருந்தனர்.

ஆனால், அவர் விசாரிக்கப்பட்டதாக பின்னர் அதிகாரிகள் கூறினர்.

மரிலோவ் டான்லீபடத்தின் காப்புரிமைPOLICE HANDOUT

மாண்டலே பே ஹோட்டலில் அறை பதிவு செய்து பேடக் தங்கியபோது, 62 வயதான மரிலோவ் டான்லீ அவருடன் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மரிலோவ் டான்லீயின் சில அடையாளங்களை, பேடக் பயன்படுத்தியாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

"அப்பெண் பேடக்கின் தோழி" என சந்தேக நபரான பேடக்கின் சகோதரர் எரிக் பேடக் கூறுகிறார்.

" எனது சகோதரர் ஏன் இப்படி செய்தார் என்பது விளங்கவில்லை" எனவும் எரிக் கூறுகிறார்.

``அவருக்கு எவ்வித தீவிரவாத பின்புலமும் இல்லை. மெஸ்க்வைட்டில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். லாஸ் வேகஸுக்கு சென்று சூதாட்டம் ஆடுவார்`` எனவும் அவர் கூறுகிறார்.

சிறிய விமானங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த பேடக், இரண்டு விமானங்களை வைத்திருந்ததாக எம் பி சி கூறுகிறது.

http://www.bbc.com/tamil/global-41479436

Link to comment
Share on other sites

59 பேரைக் கொன்று, 527 பேரை காயப்படுத்திய சூத்திரதாரி யார் தெரியுமா?

 

 

லாஸ் வெகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தி குறைந்தது 59 பேர் உயிரிழப்பதற்கும் 527 பேர் வரை காயமடைவதற்கும் காரணமான துப்பாக்கிதாரியான சூத்திரதாரி ஸ்டீஃபன் பேடக் என்பவர் வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

article-4942856-44FA7A3F00000578-342_964

தனது பணியில் இருந்து ஓய்வுபெற்று அமைதியான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

 

நேவாடாவில் உள்ள மெஸ்கியூட் பகுதியை சேர்ந்த 64 வயதான ஸ்டீஃபன் பேடக் விமான ஓட்டுநர் உரிமத்தையும் வைத்துள்ளார். அவர் மீது இதற்கு முன்னர் எவ்வித குற்றப்பின்னணியும் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், லாஸ் வெகஸ் தாக்குதலுடன் தொடர்புடையவராக கருதப்படும் இந்த சூத்தரதாரி ஒரு தீவிரமான சூதாட்டப் பிரியர் மற்றும் வினோதமான நடவடிக்கைகள் கொண்டவர் என்று அவரது வீட்டுக்கு அருகில் முன்னர் குடியிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

44F8E51100000578-4942856-image-a-47_1506

ஸ்டீஃபன் பேடக், நீண்ட காலமாக உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

44F8A3E900000578-4939872-image-a-13_1506

லாஸ் வெகஸில் இருந்து ஒரு மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும், பேடக்கின் இரு அறை கொண்ட வீட்டினை அமெரிக்க அதிகாரிகள் தேடுதல் மேற்கொண்டனர்.

பொலிஸார் குறித்த சூத்திரதாரியான பேடக்கின் வீட்டினுள் நுழைந்து அறையை நெருங்கும் போது, அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

44F4BA3500000578-0-Mystery_Paddock_above

அவரது மதக் கோட்பாடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை எனவும் இத்தாக்குதலுக்கும், தீவிரவாத செயலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கவில்லையெனவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேடக் அறையில் தங்கியிருந்த, அவரது பெண் தோழியென நம்பப்படும் மரிலோவ் டென்லீயிடம் பேடக்கை கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகள் கோரியிருந்தனர்.

இந்நிலையில், மாண்டலே பே ஹோட்டலில் அறையை பதிவு செய்து பேடக் தங்கியபோது, 62 வயதான மரிலோவ் டென்லீ அவருடன் இருந்திருக்கவில்லையெ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரிலோவ் டென்லீயின் சில அடையாளங்களை, பேடக் பயன்படுத்தியாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதுதேவேளை, குறித்த பெண் பேடக்கின் தோழி எனவும் தனது சகோதரர் ஏன் இப்படி செய்தார் என்பது விளங்கவில்லை எனவும் அவருக்கு எவ்வித தீவிரவாத பின்புலமும் இல்லை. மெஸ்க்வைட்டில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். லாஸ் வெகஸுக்கு சென்று சூதாட்டம் ஆடுவார் எனவும் சிறிய விமானங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த பேடக், இரண்டு விமானங்களை வைத்திருந்ததாகவும் சந்தேக நபரான பேடக்கின் சகோதரர் எரிக் பேடக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25252

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, வாதவூரான் said:

வெள்ளை என்பதால் மனநிலை சரியில்லாதவர்

அமெரிக்க மனநோய் வைத்தியசாலையில் இருப்பவர்களில் 90 வீதமானவர்கள் கிரிமினல்கள்.

ஒன்றில் கொலை செய்வதற்காக முன் கூட்டியே மண்டைப் பிழையாக நடிப்பார்கள்.

அல்லது குற்றங்களை வெற்றிகரமாக நடாத்திவிட்டு எதுவுமே தெரியாத அப்பாவியாக இருந்து சிகிச்சை பெறுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க மனநோய் வைத்தியசாலையில் இருப்பவர்களில் 90 வீதமானவர்கள் கிரிமினல்கள்.

ஒன்றில் கொலை செய்வதற்காக முன் கூட்டியே மண்டைப் பிழையாக நடிப்பார்கள்.

அல்லது குற்றங்களை வெற்றிகரமாக நடாத்திவிட்டு எதுவுமே தெரியாத அப்பாவியாக இருந்து சிகிச்சை பெறுவார்கள்.

இதுதான் இஞ்சை ஜேர்மனியிலையும் நடக்குது......மனநோய் சம்பந்தமாய் குளிசை எடுக்கிறதாய் ஒரு அத்தாட்சி துண்டும் கையோடை கொண்டு திரியுதுகள்

எல்லாம் அறப்படிச்ச லோயர்மாரின்ரை ஐடியாக்கள்.tw_angry:

Link to comment
Share on other sites

10 சூட்கேஸ்களில் 17 துப்பாக்கிகள்...: லாஸ் வேகாஸ் ஹோட்டலின் 32-வது மாடியில் மறைந்திருந்த கொலையாளி

 
 
04CHSKOLAS

கொலையாளி ஸ்டீபன் படாக் மறைந்திருந்த மண்டாலே பே ஹோட்டல்   -  AFP

கொலையாளி ஸ்டீபன் படாக்குக்கு 64 வயதாகிறது. நெவடாவில் கோல்ஃப், டென்னிஸ் கோர்ட் என அனைத்து வசதிகளும் கொண்ட குடியிருப்பில் இருந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவர் மிகப் பெரிய பணக்காரர். சமீபத்தில் தனது 90 வயதான தாய்க்கு வாக்கர் பரிசளித்துள்ளார். சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் அளவுக்கு அதிகமாக பணம் வைத்து சூதாட்டம் ஆடுவது இவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

மாண்டாலே பே ஹோட்டலின் 32-வது மாடியில் 17 துப்பாக்கிகளோடு இவர் ஏன் தங்கினார், திடீரென ஏன் துப்பாக்கியால் சுட்டார் என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. இதுவரை இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்கிறார்கள் போலீஸ் தரப்பில். ஆனால், 10 சூட்கேஸ்களில் துப்பாக்கிகளை மறைத்து, 32-வது மாடிக்கு எடுத்துச் சென்றதைப் பார்த்தால், பல நாட்களாகவே இதுபோன்ற தாக்குதலுக்குத் திட்டமிட்டிருக்கலாம் என்கிறார்கள் போலீஸார்.

என்னால் இதை நம்பவே முடியவில்லை என்கிறார் ஸ்டீபனின் தம்பி எரிக். ஸ்டீபன் யாரோடும் நெருங்கி பழக மாட்டார். எந்த மதமும் கிடையாது. அரசியலிலும் அவருக்கு ஈடுபாடு கிடையாது. ஆனால் பணம் ஏகத்துக்கும் அவரிடம் இருந்தது. சொகுசு படகுகளில் உல்லாசப் பயணம் போவார். சூதாட்டம் ஆடுவார். அவரிடம் பேசியே 2 மாதம் ஆகிறது என்கிறார் எரிக்.

கடைசியாக 2 வாரம் முன்பு, தனது தாய்க்கு வாக்கர் தேவைப்படுவதாக அறிந்ததும், அதை வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார் ஸ்டீபன். ஒரு முறை, சூதாட்டத்தில் 40 ஆயிரம் டாலர் பரிசு வென்றதாக எனக்கு குறுந்தகவல் அனுப்பினார். தோற்கும்போது அதைப் பற்றி தகவல் எதுவும் சொல்வதில்லை. ஆனால் கடன் இருப்பதாகத் தெரியவில்லை. பல கோடிக்கு அதிபதி ஸ்டீபன். ரியல் எஸ்டேட் தொழிலில் நன்றாக சம்பாதித்தார். சில சொத்துகள் இருவர் பெயரிலும் இருக்கின்றன.

மெஸ்கியூட்டில் உள்ள ஸ்டீபனின் வீட்டை போலீஸார் சோதனையிட்டனர். அவர் அங்கு தனது 62 வயது தோழியுடன் தங்கியிருந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது, தோழி வெளிநாட்டுக்குப் போயிருந்தார். இதுவரை நடந்த சோதனையில், விசாரணையில் ஸ்டீபன் கொடூரமான கொலையாளி போல் தெரியவில்லை. அவர் மனஉளைச்சலில் இருந்ததாகவும் தெரியவில்லை. 64 வயதில் இப்படிப்பட்ட கொடூரமான கொலைகளை செய்வார்களா? ஆனால் பல நாட்கள் திட்டமிட்டு இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்கிறார் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரி கிளின்ட் வான் ஷாண்ட்.

துப்பாக்கிகளில் சிலவற்றில் டெலஸ்கோப் பொருத்தப்பட்டு இருந்தது. செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளில் மாற்றம் செய்யப்பட்டு அவை முழு ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளாக மாற்றப்பட்டிருந்தன. செமி துப்பாக்கிகளில் ஒவ்வொரு முறையும் டிரிக்கரை அழுத்த வேண்டும். ஆனால் முழு ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளில் ஒரு முறை டிரிக்கரை அழுத்தினால் போதும் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருக்கும்.

தான் என்ன செய்யப்போகிறோம் என்பது ஸ்டீபனுக்கு தெரிந்திருக்கிறது. எப்படி செய்யப் போகிறோம் என்பதும் தெரியும். எல்லாம் செய்துவிட்டு தப்பிச் செல்லும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை என்கிறார் வான் ஷாண்ட்.

ஸ்டீபன் மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை. ஆனால் அவர் தந்தை மீது வங்கியை கொள்ளையடித்த புகார் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர். வங்கிக் கொள்ளைக்காக தந்தை பெஞ்சமின் கைது செய்யப்பட்ட போது, ஸ்டீபனுக்கு வயது 7 தான். அது 1960-ம் ஆண்டு. எஃப்பிஐ ஏஜெண்டுகள் வீட்டை சோதனை செய்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் ஸ்டீபனை வெளியே அழைத்துச் சென்று விட்டார்.

இதனால் தன் தந்தை கொள்ளைக்காரன் என்பது பல நாள் ஸ்டீபனுக்குத் தெரியாது. அவன் அப்பாதான் அப்படி. ஸ்டீபன் மிகவும் நல்ல பையன்தான் என்கிறார் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஈவா பிரைஸ்.

சிறையில் இருந்தபோது காவலாளிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார் பெஞ்சமின். ஒரேகானில் போலி பெயரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பிறகு அவரைக் கண்டுபிடித்த போலீஸார் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். 1998-ல் அவர் மரணமடைந்தார்.

ஸ்டீபனுக்கு சொந்தமாக 3 வீடுகள் உள்ளன. இரண்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். இரண்டு முறை விவாகரத்து செய்திருக்கிறார். 1980-ல் ஒருமுறை, 1990-ல் ஒருமுறை. முன்னாள் மனைவிகளில் ஒருவர் தெற்கு கலிபோர்னியாவில் இருக்கிறார். அவர் வீடு முன்பும் நிருபர்கள் குவிந்துள்ளனர். ஆனால் அவர்களிடம் பேச அவர் மறுத்துவிட்டார்.

துப்பாக்கிச் சூடு நடந்தது எப்படி..?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரம். திங்கள்கிழமை இரவு பாடகர் ஜாசன் அல்டீன் கிடார் இசையை ரசித்துக் கொண்டிருந்தது கூட்டம். 22 ஆயிரம் ரசிகர்கள். சரியாக 10.07 மணி. முதல் துப்பாக்கிக் குண்டு வெளியேறிய நேரம். மண்டலாய் பே ரிசார்ட் ஹோட்டலின் 32-வது மாடியில் இருந்து தோட்டாக்கள் பறக்க ஆரம்பித்தன. தொடர்ந்து 2 மணி நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. ஆரம்பத்தில் இதை வாண வேடிக்கை என்றுதான் நினைத்தார்கள். ஒவ்வொருவராக செத்து மடியவும், பிறகுதான் கூட்டம் கலைய ஆரம்பித்தது. மொத்தம் 59 பேர் மரணத்தை தழுவினார்கள். 527 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகவும் மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுதான்.

முதல் எச்சரிக்கை டாக்ஸி டிரைவர்களுக்குத்தான் வந்தது. அவர்களின் நீல ஸ்கிரீனில், மண்டலாய் ஹோட்டல் இருக்கும் தெருப் பக்கம் போக வேண்டாம். அங்கே துப்பாக்கிச் சூடு நடக்கிறது என்ற எச்சரிக்கை வந்தது. ஆனால் அதற்குள் பலர் பலியாகி விட்டனர். அதன்பிறகுதான் போலீஸார் எச்சரிக்கை வந்தது. துப்பாக்கிச் சூடு ஆரம்பித்து 90 நிமிடங்கள் கழிந்த பிறகும், மக்களை தரையில் படுக்குமாறும், ஒளிந்து கொள்ளுமாறும் போலீஸார் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர்.

http://tamil.thehindu.com/world/article19795069.ece

Link to comment
Share on other sites

லாஸ் வேகஸ் தாக்குதல் - துப்பாக்கிதாரியா, பயங்கரவாதியா?

 
லாஸ் வேகஸ் துப்பாக்கிதாரி Image captionபேடக்கின் தோழி எனக் கூறப்படும் டான்லி

லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 59 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேடக் பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கியநிலையில் ஏன் அவரை ஒரு பயங்கரவாதி என்று குறிப்பிடப்படவில்லை என இணையத்தில் விவாதம் தொடங்கியுள்ளது.

64 வயதான ஸ்டீஃபன் பேடக் குறித்து குறிப்பிடும் செய்தி ஊடகங்கள், அவரை ஒரு 'தனி மனிதர்' என்றும், ஒரு முதியவர் என்றும் 'சூதாட்டக்காரர்' மற்றும் 'முன்னாள் கணக்காளர்' என்று குறிப்பிடுகின்றன. அவரை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதில்லை. இது வலைதளவாசிகள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.

இத்தகைய தாக்குதலை அவர் நடத்த என்ன காரணம் என தெரியவில்லை. மேலும் அவருக்கும் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது மற்றும் அவருக்கு மன நோய் இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதே வேளையில் பேடக் முஸ்லிமாக இருந்திருந்தால் அவர் உடனடியாக பயங்கரவாதி என வரையறுக்கப்பட்டிருப்பார். முஸ்லிம் பயங்கரவாதம் என்று குறிப்பிடப்படுவதற்கு எவ்வித ஆதாரமும் தேவைப்படுவதில்லை என சமூக ஊடகங்களில் பலரும் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இன, நிற வேறுபாடுகள் என்ற காரணங்களால் அவர் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என சிலர் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரபலங்கள், தொலைக்காட்சி நபர்கள் மற்றும் கல்வியாளர்களும் கூட இது குறித்து விவாதித்துவருகின்றனர்.

லாஸ் வேகஸ்படத்தின் காப்புரிமைTWITTER

அமெரிக்க நவேடா மாநில சட்ட விதிப்படி பொது மக்களுக்கு பெரும் உடல் தீங்கு அல்லது மரணம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட வன்முறையை பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் பயங்கரவாத செயல் என வரையறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய சட்டத்தில், "உள்நாட்டு பயங்கரவாதம் என்பதை, கூட்டாட்சி அல்லது மாநில சட்டத்தை மீறுகின்ற மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல். அதாவது பொதுமக்கள் அல்லது அரசாங்கங்களை அச்சுறுத்துதல் அல்லது ஒடுக்குவதற்கான நோக்கங்கள் என்ற அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.

அரசியல் அல்லது சமூக இலக்குகளை கணக்கில் கொண்டு, அரசாங்கத்தை, பொது மக்களை அல்லது எந்த ஒரு பிரிவையும் அச்சுறுத்துவது அல்லது ஒடுக்குவதற்கான நோக்கமாக இருக்க வேண்டுமென எஃப்.பி.ஐ கூறுகிறது.

வன்முறையில் ஈடுபடுபவர், பெரும் தீங்கை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், அரசாங்கத்தை கட்டுப்படுத்த முயல்வது அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தியல் முயற்சியை மேற்கொள்வது என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.

லாஸ் வேகஸ்

லாஸ் வேகஸ் நகரத்தின் தலைமை அதிகாரி ஜோசப் லோம்பார்டோ, பேடக் பற்றி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது "பேடக் எதனால் இப்படி செய்தாரென தெரியவில்லை. அந்த நேரத்தில் அவரது மனநிலை எப்படி இருந்தது என தெரியவில்லை. இப்போது அவர் ஒரு தனி மனிதர் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பலர் நவேடா மாநில சட்டத்தின் வரையறையின் ஒரு படத்தை பகிர்ந்து கொண்டு, தெளிவான விளக்கத்தை வெளிப்படுத்திய போதிலும், அவர் இவ்வாறு தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு பிறகு கடந்த மூன்று நாட்களில் டிவிட்டர் பக்கத்தில் `ஒற்றை ஓநாய்' என்று அடையாளப்படுத்தப்படும் 'லோன் வோல்ஃப்' என்ற வார்த்தை 2 லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்

இன, நிற வேறுபாடு என்ற விவாதம் தொடங்கிய பிறகு 'பயங்கரவாத தாக்குதல்' என்ற வார்த்தை டிவிட்டர் பக்கத்தில் 1,70,000 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. முகநூல் புத்தகத்திலும் இதுகுறித்து விவாதங்கள் நடந்துவருகின்றன.

பிபிசி கொள்கைகளின்படி பொதுவாக பயங்கரவாதி அல்லது பயங்கரவாதம் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதில்லை. வேறொரு நபரால் அந்த வார்த்தை சொல்லப்படும் போது மேற்கோளிட்டு மட்டுமே காட்டப்படுகிறது.

"பயங்கரவாதம் அல்லது பயங்கரவாத செயல் என்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஒருமித்த விளக்கம் ஏதும் இல்லை. அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது, அடிக்கடி நெறிசார்ந்த முடிவின் அடிப்படையிலேயே அமைகிறது" என பிபிசி கூறுகிறது.

பிபிசி கொள்கைகளின்படி பொதுவாக பயங்கரவாதி பயங்கரவாதம் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது இல்லை.

"அது, ஒரு குறிப்பிட்ட செயலின் உண்மைத் தன்மையை அல்லது தீவிரத்தை வெளியிடாமல் தவிர்க்க விரும்புகிறோம் என்று பொருள் அல்ல. ஆனால், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், ஆக்கப்பூர்வமான ஊடகத் தொழிலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பரிசீலிக்க வேண்டும்" என்று பிபிசி கொள்கை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா திரும்பிய தோழி

மரிலோ டான்லிபடத்தின் காப்புரிமைPOLICE HANDOUT Image captionமரிலோ டான்லி

சமூக ஊடகங்களில் இத்தகைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்டீஃபன் பேடக்கின் தோழி என்று கூறப்படும் பிலிப்பைன்ஸை சேர்ந்த மரிலோ டான்லி தற்போது அமெரிக்கா திரும்பியுள்ளார்.

தாக்குதல் சம்பவம் நடந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாத்திலிருந்து பிலிப்பைன்ஸிலிருந்து அவர் எங்கும் செல்லவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் அவர் தற்போது தாமாக விசாரணைக்கு முன் வந்து அமெரிக்க அதிகாரிகளை சந்தித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டான்லி பேடக் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு முதல் நாள் டான்லியின் வங்கி கணக்கில் அவர் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்தியதாக பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் ஏ.ஃப்.பி (AFB) செய்தி முகமையிடம் கூறியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-41495995

Link to comment
Share on other sites

Quote

 

கடந்த செப்டம்பர் மாத்திலிருந்து பிலிப்பைன்ஸிலிருந்து அவர் எங்கும் செல்லவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் அவர் தற்போது தாமாக விசாரணைக்கு முன் வந்து அமெரிக்க அதிகாரிகளை சந்தித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன


 

Philippine immigration officials said Ms. Danley left Manila on Sept. 22 for a trip to Hong Kong and returned on Sept. 25.

https://www.nytimes.com/2017/10/04/us/marilou-danley-stephen-paddock.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.