Jump to content

வேட்டையாடு விளையாடு


Recommended Posts

வேட்டையாடு விளையாடு: ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள்

 

 
vettai

ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள்

இன்றைக்கும் உலக கிளாசிக்குகளில் ஒன்றாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ படம் கருதப்படுகிறது. 16-ம் நூற்றாண்டு ஜப்பானில் குடியானவர்களின் நிலை, சாமுராய் வீரர்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண்பித்த கருப்பு வெள்ளைத் திரைப்படம் இது. அறுவடையான பயிர்களைக் கொள்ளையடிக்க குதிரைகளில் திருடர்கள் கூட்டமாக வருவார்கள். அவர்களிடமிருந்து அறுவடையைப் பாதுகாக்க ஏழு நாடோடி சாமுராய்களைக் காவலர்களாக நியமிக்கிறது ஒரு ஜப்பானிய கிராமம். ஏழு பேரும் சேர்ந்து அந்தக் கிராமத்தைச் சூறையாட வரும் 40 திருடர்களை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதே கதை. 1954-ல் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மிக அதிகப் பொருட்செலவில் தயாரானது. அந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு ஐந்து மில்லியன் டாலர். இந்தச் செலவில் அப்போது ஏழு ஜப்பானியத் திரைப்படங்களை எடுத்துவிடுவார்கள். சாமுராய் படங்கள் எடுப்பதில் வல்லவர் என்று கருதப்படும் அகிரோ குரசோவாவின் முதல் சாமுராய் படம் இதுவே. அடிப்படை மனித உணர்வுகளும் மோதல்களும் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கும் இப்படம் சினிமா ரசிகர்கள், திரைப்பட மாணவர்கள் இரு தரப்பினராலும் இன்றும் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. செர்ஜியோ லியோன் எடுத்த வெஸ்டர்ன் திரைப்படமான ‘மேக்னிபிஷண்ட் செவன்’, செவன் சாமுராயை அடிப்படையாகக் கொண்டது. செவன் சாமுராயின் தாக்கத்தில் இந்தியில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிபெற்ற இந்திப் படம் எது?

சினிமா வரலாறாக மாறிய நாடகம்

தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயம் எழுதப்பட்ட ஆண்டு 1952. புராணக் கதைகளிலிருந்து சமூக யதார்த்தத்தையும் எளிய மக்களின் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும்படி எடுக்கப்பட்ட ‘பராசக்தி’ வெளியானது இந்த ஆண்டில்தான். பின்னாளில் தமிழக அரசியலில் சாதனையாளராக மாறிய மு.கருணாநிதியை நட்சத்திர வசனகர்த்தாவாக்கிய திரைப்படம் இது. பெரும் நடிக ஆளுமையான சிவாஜி கணேசன் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமும் இதுவே. அக்காலத்தில் வெளிவந்த பெரும்பாலான சினிமாக்களைப் போலவே பராசக்தியும் வெற்றிகரமான நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். தீவிர நாத்திகரான அந்தத் தமிழறிஞர்தான் பராசக்தி நாடகத்தை எழுதினார். அவர் யார்?

மிட்டாய் விற்ற திரைப்பட இயக்குநர்!

ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜியார்ஜ் மெலியஸ், உலக சினிமா வரலாற்றில் முக்கியமான ஒரு அத்தியாயம். ஒரு கலை வடிவமாகச் சினிமா உருவாகி வந்த நாட்களில் மாயாஜாலக்காரராக இருந்த ஜியார்ஜ் மெலியஸ், சினிமா என்ற வடிவத்தின் மீது ஈர்ப்புகொண்டார். இன்று ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் என்று சொல்லப்படும் சினிமா தொழில்நுட்பத்தின் தந்தை இவர்தான். மல்டிபிள் எக்ஸ்போஷர்ஸ், டைம் லாப்ஸ் போட்டோகிராபி ஆகிய தொழில்நுட்பங்களை முதலில் பயன்படுத்தியவர். கறுப்பு வெள்ளை பிலிமில் வண்ணங்கள் வரைந்து அதை வண்ணப்படமாக மாற்றியவர். காமிக்ஸ் கதைபோல ஒவ்வொரு காட்சிக்கும் முதலிலேயே ஓவியங்களை வரைந்து வைக்கும் ஸ்டோரிபோர்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய திரைப்பட இயக்குநர்களில் ஒருவர். இவர் எடுத்த ‘எ ட்ரிப் டு தி மூன்’ மற்றும் ‘தி இம்பாசிபிள் வாயேஜ்’ போன்ற ஊமைப் படங்கள் ஆரம்ப கால அறிவியல் மிகுபுனைவு திரைப் படைப்புகளாக இன்றும் பேசப்படுகின்றன. முதல் உலகப் போர் காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியால் திரையுலக வாழ்க்கையைத் தொடர முடியாத ஜியார்ஜ் மெலியஸ், ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்கு மிட்டாய் மற்றும் பொம்மை விற்கும் கடை நடத்தி மறைந்துபோனார். அவரது வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கிய திரைப்படம் எது?

நடைப்பயிற்சியில் சிக்கிய பூனை

நிழல் உலகைச் சித்தரித்த வகையில் கேங்க்ஸ்டர் படங்களின் பைபிளாகக் கருதப்படுவது ’காட்பாதர்’. எழுத்தாளர் மரியா பூசோ எழுதிய நாவலின் திரைவடிவத்தை இயக்கியவர் பிரான்சிஸ் ஃபோர்ட் கோப்போலா. நியூயார்க் நகரில் ஆதிக்கம் செலுத்தும் மாஃபியா குடும்பத்தின் கதை இது. மூத்த குடும்பத் தலைவர் விட்டோ கார்லியனாக மார்லன் பிராண்டோவும் அவரது மகன் மைக்கேல் கார்லியனாக அல் பாசினோவும் நடித்தனர். மார்லன் பிராண்டோவுடன் நடித்த பூனையை தற்செயலாக பிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலோ, தன் காலை நடைப் பயிற்சியில் பார்த்தபோது கண்டுபிடித்தார். பிராண்டோவுக்கும் அதற்கும் உண்டான நட்பு படத்துக்கு உயிர்கொடுத்தது. காட்பாதர் படத்தில் சினிமா தயாரிப்பாளரின் படுக்கையில் ரத்தத்துடன் அறுக்கப்பட்ட குதிரைத் தலைக் காட்சியில் பயன்படுத்தப்பட்ட குதிரையின் தலை நிஜமானது. இப்படத்துக்காகக் கிடைத்த ஆஸ்கர் விருதை யாருக்காக மறுத்தார் மார்லன் பிராண்டோ?

திரைக்குள் வந்த தெருக் குழந்தைகள்

மீரா நாயர் இயக்கி 1988-ல் வெளியான படம் ‘சலாம் பாம்பே’. மும்பையின் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் மும்பை குடிசைப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளே நடித்தனர். பாட்டும் பிரம்மாண்டமும் பகட்டும் கொண்டதாக அறியப்பட்ட இந்தி சினிமாவின் எல்லைகளைத் தகர்த்தது இத்திரைப்படம். கான் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டு, கோல்டன் கேமரா அண்ட் ஆடியன்ஸ் விருதைப் பெற்றது. சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது திரைப்படம் இது. இப்படத்தின் இசையமைப்பாளர் யார்?

விடைகள்

புதிருக்கான விடைகளைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உண்மையாகவே நீங்கள் தேர்ந்த திரை ஆர்வலர்தான். இதோ விடைகள் 1.ஷோலே 2.பாவலர் பாலசுந்தரம் 3.ஹியூகோ 4. அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் 5.எல். சுப்ரமணியம்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19756253.ece

Link to comment
Share on other sites

வேட்டையாடு விளையாடு: நாடறிந்த நட்சத்திரக் காதல்

 

 
29chrcjMGRandVNJanaki%202

நாடறிந்த நட்சத்திரக் காதல்

1. இந்து ஆலய நுழைவுப் போராட்டத்தைக் கதைக்கருவாகக் கொண்டு 1947-ல் வெளியான படம் ‘தியாகி’. இந்தப் படத்துக்கு பாபநாசம் ராஜகோபால அய்யர், எஸ்.வி.வெங்கடராமன், டி.ஆர். ராமநாதன் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்தனர். பாபநாசம் சிவனின் அண்ணன்தான் பாபநாசம் ராஜகோபால அய்யர். இவரது மகள்தான் பின்னர் வி.என்.ஜானகி ராமச்சந்திரன் என்று அறியப்பட்டு, தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராகவும் ஆனார். வி.என்.ஜானகியின் நடிப்பு இந்தப் படத்திற்காகப் பேசப்பட்டது. இவர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த படம் ‘ராஜமுக்தி’. இதற்குப் பிறகுதான் எம்.ஜி.ஆரை மணந்து, ஜானகி ராமச்சந்திரன் ஆனார். திருமணத்துக்குப் பின்னர் இந்த நட்சத்திரஜோடி நடித்து வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் எது?

மறக்க முடியாத மாண்டேஜ்!

2. கொடுமைக்கார மேலதிகாரிகளுக்கு எதிராக ரஷ்யக் கப்பல் படைவீரர்கள் கிளர்ந்தெழுந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 1925-ல் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்’. ரஷ்ய இயக்குநர் ஐசன்ஸ்டீன் உருவாக்கிய இந்த மவுனப்படம், சினிமா மாணவர்களுக்கான உலகளாவியப் பாடப்புத்தகமாக இன்றளவும் கருதப்பட்டு வருகிறது. எடிட்டிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சினிமாவைப் புரிந்துகொள்வதற்கும் உருவாக்குவதற்குமான ‘மாண்டேஜ்’ முறை சித்தரிப்பு, இந்தப்படத்தின் மூலமாகவே புகழ்பெற்றது. அதிகாரிகளுக்கு எதிராக போர்க்கப்பலில் இருக்கும் புரட்சியாளர்கள் சிவப்புக் கொடியை ஒரு காட்சியில் காட்டவேண்டும். ஆனால் அப்போது இருந்த கருப்புவெள்ளை படச்சுருளில் சிவப்பைக் கொடியைக் காட்டினால் கருப்பாகத் தெரியும். இதனால் படப்பிடிப்பில் வெள்ளைக்கொடி பயன்படுத்தப்பட்டது. பின்னர் இயக்குநர் ஐசன்ஸ்டினே அமர்ந்து 108 பிரேம்களுக்கு சிவப்பு வண்ணம் நிரப்பினார். அந்தக் காட்சி அப்போது ரஷ்யாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1917 ரஷ்யப்புரட்சிக்குக் காரணமாக இருந்த ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்’ கலகம் நடந்த ஆண்டு எது?

இந்திய எழுத்தாளரின் ஆங்கிலப் படம்

3. தேவ் ஆனந்த், வஹீதா ரஹ்மான் ஜோடியின் நடிப்பில் 1965-ல் வெளியான படம் ‘கைட்’. ஆர்.கே.நாராயண் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தி மொழிப்படமாக இதை இயக்கினார் விஜய் ஆனந்த். எழுத்தாளர் ஆர்.கே. நாராயணால் வெறுக்கப்பட்ட இத்திரைப்படம், இந்திய சினிமா தந்த மாபெரும் படைப்புகளில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது. எஸ்.டி.பர்மன் இப்படத்துக்கு அளித்த பாடல்கள் இன்றும் ரசித்துக் கேட்கப்படுபவை. ‘கைட்’ ஆங்கிலத்திலும் எடுக்கப்பட்டது. ஆங்கில வடிவத்தை இயக்கியவர் டாட் டேனியலெவ்ஸ்கி. ஆனால் இந்தப் படம் 42 ஆண்டுகள் கழித்து 2007-ல் தான் திரையைக் கண்டது. இதற்கு ஆங்கிலத் திரைக்கதை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் யார்?

அவசியப்படாத அனுபவம்

4. இத்தாலிய நியோரியலிசத் திரைப்படங்களின் பாதிப்பில் மலையாளத்தில் உருவான முதல் யதார்த்தப்படம் ‘நியூஸ்பேப்பர் பாய்’. 1950-களில் கேரளத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் நடக்கும் கதை இது. திரைக்கதை, நடிப்பு, தயாரிப்பு வரை முற்றிலும் முன் அனுபவம் இல்லாத மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய முதல் திரைப்படம் இது. இதற்குத் திரைக்கதை எழுதி இயக்கியவர் ராமதாஸ். ஆதர்ஸ் கலாமந்திர் என்ற குழுவாக மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் செலவில் உருவான இப்படம், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. இதன் உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படத்தின் பெயர் என்ன?

ஓய்வறியா உளவாளி!

5. எழுத்தாளர் ஐயன் ப்ளெமிங்கால் உருவாக்கப்பட்டு இன்றும் குழந்தைகளாலும் பெரியவர்களாலும் மறக்கமுடியாத கதாபாத்திரமாக இருக்கும் பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட், சினிமாவில் தோன்றிய ஆண்டு 1963. திரைப்படம் ‘டாக்டர் நோ’. கற்பனையில் மனச்சித்திரமாக இருந்த ஜேம்ஸ்பாண்ட் ரத்தமும் சதையுமாக இந்தப் படத்தின் மூலமே உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகமானார். ஜேம்ஸ் பாண்டுக்கு முதலில் உயிர்கொடுத்த நடிகர் சீன் கானரி. இதுவரை வெவ்வேறு நடிகர்கள் நடித்து வெளிவந்திருக்கும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் 26. இதுவரை ஜேம்ஸ்பாண்ட் கதாபத்திரத்தை ஏற்ற நடிகர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடைகளைச் சரிபார்த்து உங்கள் திரைப்பட வரலாற்று அறிவை மதிப்பிடத் தயாரா?

இதோ விடைகள்

1.மோகினி(1948) 2. 1905-ம் ஆண்டு 3. பேர்ல் எஸ்.பக்

4. ஒரு நியோரியலிஸ்டிக் ஸ்வப்னம் 5. ஒன்பது

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19769628.ece

Link to comment
Share on other sites

வேட்டையாடு விளையாடு 03

 
moviesjpg

1. காதலை உதறிய ‘தேவதாஸி’

1948-ல் ஒரு தேவதாசியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வரலாற்றுப் படம் ‘தேவதாஸி’. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தொழில்நுட்பம் படித்த மாணிக் லால் டாண்டன் தான் இத்திரைப்படத்தின் இயக்குநர். உடன் படித்த எல்லிஸ் ஆர். டங்கனை சினிமா எடுப்பதற்காக இந்தியாவுக்கு அழைத்து வந்தவர் இவர்தான். வங்க எழுத்தாளர் கிடார் சர்மா எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு 1941-ல் வெளியாகிய ‘சித்ரலேகா’ படத்தின் திரைக்கதை தான் ‘தேவதாஸி’க்கு உந்துதல்.

கண்ணனும், லீலாவும் முன்னணிக் கதாபாத்திரங்களாக நடித்த இப்படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரத்தின் தனி நகைச்சுவை டிராக் பெரிதாகப் பேசப்பட்டது. ஏழைப் பெண்ணாக இருந்து புகழ்பெற்ற தேவதாசியாக ஆகும் நாயகி, இரண்டு ஆண்களின் காதலுக்கு நடுவே தெய்வத்திடம் சரணடையும் கதை இது. இப்படத்துக்கு வசனம் எழுதிய புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்?

2. இது ஒரு தோல்விக் கதை

ஹாலிவுட்டிலும் உலக அளவிலும் 75 ஆண்டுகள் ஆன பின்னரும் ‘சிட்டிசன் கேன்’ திரைப்படம் தலைசிறந்த சினிமாக்களின் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் வெற்றி, தோல்வி, வீழ்ச்சியை அவரது மரணத்தின் பின்னணியில் துலக்கிய படம் இது. மனிதர்கள் வெற்றியடைவதையே பேசிக்கொண்டிருந்த திரைப்படங்களின் மத்தியில் தோல்விக்கதை என்று சொல்லக்கூடிய ஒன்றை எடுக்க நினைத்ததாக இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர்ஸன் வெல்ஸ் கூறியிருக்கிறார். நாடக இயக்குநராகப் புகழ்பெற்றிருந்த ஆர்சன் வெல்ஸ், ‘சிட்டிசன் கேன்’ மூலமாகத் தன் திரைவாழ்க்கையைத் தொடங்கியபோது அவருக்கு வயது 25.

அனுபவம் பெற்ற இயக்குநர்களுக்கே தரத் தயங்கும் பைனல் கட்(இறுதி வடிவத்தை எடிட் செய்யும் உரிமை) உரிமையை, ஆர்கேஓ ஸ்டுடியோஸ் நிறுவனம் இவருக்கு அளித்தது. படத்தின் நாயகனாகவும் ஆர்சன் வெல்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒளிப்பதிவில் பல புதிய உத்திகள் கையாளப்பட்ட இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் க்ரெக் டோலண்ட். திரைப்பட உருவாக்கம் குறித்து எதுவுமே தெரியாத ஆர்ஸன் வெல்ஸ் கொடுத்த சுதந்திரத்தில் க்ரெக் டோலண்ட் இந்தப் படத்தின் ஒளிப்பதிவுக்காக காமிராக்களையும் லென்ஸுகளையும் பிரத்யேகமாக வடிவமைத்துப் பயன்படுத்தினார். டீப் போகஸ் ஷாட்டுகளுக்காக இன்றும் கொண்டாடப்படும் திரைப்படம் இது. சிட்டிசன் கேன் படத்தை எடுப்பதற்கு முன்பு திரைப்பயிற்சிக்காக ஆர்சன் வெல்ஸ் 40 முறை பார்த்த திரைப்படம் எது?

3. வாழ்க்கையை மாற்றும் விபத்து

லத்தீன் அமெரிக்க சினிமா, ஹாலிவுட்டுக்குத் தந்த கொடையான இயக்குநர் அலெஜேன்ட்ரோ கொன்சாலஸ் இனாரிட்டு எடுத்த முதல் திரைப்படமான ‘அம்ரோஸ் பெரோஸ்’ உலக அளவில் இவருக்குப் புகழைத் தந்த படைப்பாகும். கான் உலகத் திரைப்பட விழாவில் விமர்சகர்களின் விருதைப் பெற்ற இப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. மூன்று விதமான சமூகப் பின்னணியில் உள்ள தனித்தனி நபர்களின் வாழ்க்கையை ஒரு விபத்து பிணைத்து அடியோடு மாற்றவும் செய்துவிடுகிறது.

‘அம்ரோஸ் பெரோஸ்’சின் அர்த்தம் ‘மோசமான காதல்கள்’. மெக்சிகோவின் சமூக, அரசியல் சூழலை ஆழமாகப் பிரதிபலித்த இத்திரைப்படத்தைத் தொடர்ந்து டிரையாலஜியாக ‘21 கிராம்ஸ்’, ‘பேபல்’ ஆகிய திரைப்படங்களை எடுத்தார் இனாரிட்டு. 2014-ல் இனாரிட்டு இயக்கிய பேட்மேன் ஆர் தி அன்எக்ஸ்பெக்டட் விர்ச்சு ஆப் இக்னொரன்ஸ் படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். இவர் இயக்கத்தில் லியானார்டோ டி காப்ரியோ நடித்துச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம் எது?

4. கமல் ஹாசனை கவர்ந்த படம்

இந்திய மாற்று சினிமா இயக்கத்தில் எளிய சினிமா பார்வையாளர்களையும் வசீகரிக்கும் அர்த்தமுள்ள திரைப்படங்களை எடுத்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் கோவிந்த் நிஹ்லானி. நீதித் துறையில் உள்ள ஊழலைச் சித்தரிக்கும் ‘ஆக்ரோஷ்’, இரண்டு முரண்பாடான கொள்கைகள் கொண்டவர்களின் காதலுக்குள் வரும் பூசலைச் சொல்லும் ‘அர்த் சத்யா’ உள்ளிட்ட திரைப்படங்கள் முக்கியமானவை. ‘அர்த் சத்யா’ படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தான் பின்னர் அமரர் ஓம்பூரி நடித்தார். அதுவே அவரது பிற்கால நடிப்பு வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமைந்தது.

நிஹ்லானி 1994-ல் இயக்கிய திரைப்படம் ‘த்ரோகால்’. ஒரு தேசத்தையே அச்சுறுத்தும் தீவிரவாதிகளுக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடக்கும் உளவியல் யுத்தம்தான் இப்படம். பின்னர் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து தமிழில் வெளிவந்த ‘குருதிப்புனல்’ இப்படத்தைத் தழுவித்தான் எடுக்கப்பட்டது. ‘த்ரோகால்’ வழியாக பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்க வேண்டிய இந்த இசையமைப்பாளரின் கணிப்பொறியில் ஏற்பட்ட பிரச்சினையால் அந்தப் படத்தில் அறிமுகமாக இயலவில்லை. அந்த இசையமைப்பாளர் யார்?

5. பால.கைலாசம் விட்டுச்சென்ற படைப்புகள்

இந்தியாவின் ஆலயக் கட்டிடக் கலை மற்றும் சிற்பக்கலையைப் பேணும் விஷ்வகர்மாக்களின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றிப் பேசும் தமிழ் ஆவணப்படம் ‘வாஸ்துமரபு’. தமிழில் ஆவணப்பட இயக்கம் என்பது இன்னும் பரவலாகாத நிலையில் 1991-ல் பால.கைலாசம் உருவாக்கிய அழகிய ஆவணப்படம் இது. இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பியான வி.கணபதி ஸ்தபதியின் பார்வையில் இந்த ஆவணப்படம் இந்தியாவின் கட்டிடக் கலை மரபு குறித்துப் பேசுகிறது.

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள், கும்பகோணத்தில் நீடிக்கும் வெண்கலச் சிற்ப வார்ப்புகள் என இன்றும் உயிர்ப்புடன் தொடரும் கட்டிடக் கலை மரபைப் பேசும் படம் இது. கலைஞனுக்கும் அவன் ஈடுபடும் கலைக்குமுள்ள ஆன்மிக உறவையும் கட்டிடக் கலையிலிருக்கும் கணித நுட்பங்களையும் ஆவணப்படுத்திய படமும்கூட. வெளி, ட்வைஸ் டிஸ்கிரிமினேட்டட் உள்ளிட்ட சிறந்த ஆவணப்படங்களை எடுத்த பால.கைலாசம் 2014-ம் ஆண்டு காலமானார். இவருடைய தந்தை பிரபலமான தமிழ் இயக்குநர்களில் ஒருவர். அவர் யார்?

விடைகள்:

1. பி.எஸ். ராமையா

2. ஜான் போர்ட் இயக்கிய ‘ஸ்டேஜ் கோச்’.

3. தி ரெவனென்ட

4. ஏ.ஆர். ரஹ்மான்

5. கே. பாலசந்தர்

 
 
 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19806958.ece

Link to comment
Share on other sites

வேட்டையாடு விளையாடு 04: நேருவைக் கவர்ந்த திரைப்படம்

 

 
1jpg

1. புதுமைகளின் காதலர்!

பாடல்களுக்கு நடுவில் கொஞ்சூண்டு கதை சொன்னவை அந்நாட்களின் தமிழ் சினிமாக்கள். அவற்றின் மத்தியில் பாடலே இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அந்த நாள்’. சிவாஜி கணேசன், பண்டரிபாய் நடித்து 1954-ம் ஆண்டு வெளியானது. வீணை மேதை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய திரைப்படம் இது.

         

அகிரா குரோசவாவின் ‘ரஷோமா’னின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படம் இது. செஸ், ஸ்நூக்கர், ஓவியம் என்று பல துறைகளில் வல்லுநராக இருந்தவர் எஸ். பாலச்சந்தர். 1964-ல் இவர் இயக்கி வெளியாகிய ‘பொம்மை’ படத்தின் இறுதியில் ஓடும் டைட்டில் காட்சியில் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் திரையில் தோன்றச்செய்து, அவர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதுமையைச் செய்திருந்தார். தமிழ் சினிமாவுக்கு கே.ஜே.யேசுதாஸ் ‘பொம்மை’ படத்தின் வழியாகவே அறிமுகமாகினார்.

‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ பாடலில் பயன்படுத்தப்பட்டது ஒரே ஒரு இசைக்கருவிதான். அந்த இசைக்கருவி எது?

2jpg
 

2. இன்னும் முடியாத குருக்‌ஷேத்திரம்

உலகமெங்குமுள்ள நடிகக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் சேர்ந்து பணியாற்றிய திரைப்படம் ‘தி மகாபாரதா’. 1985-ல் ஐந்தாண்டு கால ஆராய்ச்சி, பயணங்களின் அடிப்படையில் ஒன்பது மணி நேர பிரெஞ்ச் நாடகமாக உருவாக்கப்பட்ட மகாபாரத்த்தின் திரைவடிவம் இது. மகாபாரதம் என்றாலே நம் கண்முன் தோன்றும் பிரமாண்டத்தை நீக்கி, எளிய அரங்கங்கள், உடைகள் வழியாக தர்மம், எதார்த்த வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை உருவாக்கியிருந்தார் பீட்டர் ப்ரூக். பீட்டர் ப்ரூக்குடன் சேர்ந்து இந்த நாடகத்தை எழுதியவர் பிரெஞ்சு திரைக்கதையாசிரியர் ஜீன் க்ளாட் கேரியர்.

பீட்டர் ப்ரூக்குடன் இணைந்து வடதமிழகம் வரை வந்து மகாபாரதக் கூத்துகளையும் இந்த நாடகத்தை எழுதுவதற்கு முன்பாகப் பார்த்திருக்கின்றனர். இந்த நாடகத்திலும் திரைப்படத்திலும் திரௌபதையாக நடித்தவர் பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய். உலகளாவிய கலை ஆர்வலர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மகாபாரதம் பரவலாக இப்படைப்பின் மூலமாகவே அறிமுகமானது.

எத்தனையோ காலங்களுக்கு முன்னர் இந்தியாவில் நடந்ததாகச் சொல்லப்படும் மகாபாரதம் இன்றும் உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் யுத்தமாக, மோதல்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகவே சர்வதேச நடிகர்களை இதில் நடிக்க வைத்த்தாக கூறியிருக்கிறார் பீட்டர் ப்ரூக்ஸ். இந்தப் படைப்பில் முக்கியமாக விடுபட்ட கதாபாத்திரங்கள் எவை?

3jpg
 

3. நேருவைக் கவர்ந்த திரைப்படம்

வங்காளத்தின் சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் கதை 62 ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவாக எடுக்கப்பட்டது. இயக்குனர் புதியவர். ஒளிப்பதிவாளர் புதியவர். நடிகர்கள் புதியவர்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமல்ல உலக சினிமா வரைபடத்திலும் தடம்பதித்த அத்திரைப்படத்தின் பெயர் ‘பதேர் பாஞ்சாலி’. இயக்கியவர் சத்யஜித் ராய். ஒருமுறை பார்த்தவர்கள் கூட அப்புவையும் துர்காவையும் கிழவியையும் மறக்க மாட்டார்கள். விபூதிபூஷன் வங்க எழுத்தாளர் பந்தோபாத்யாயா எழுதிய ‘பதேர் பாஞ்சாலி’ நாவலை ‘அபு ட்ரையாலஜி’ யாக மூன்று படங்களாக எடுத்தார். கோல்கத்தாவுக்கு அருகிலுள்ள போரல் என்னும் கிராமத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.

சத்யஜித் ராய், பல பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் தனது எல்பி ரெக்கார்டுகளின் சேகரிப்புகளைக் கூட விற்றும் தன் மனைவியின் நகைகளை அடகு வைத்தும் எடுத்த இப்படத்தின் படப்படிப்பு வேலைகள் ஐந்து வருடங்களுக்கு நீண்டது. மேற்கு வங்காள அரசின் நிதியுதவி கிடைத்தபிறகே படவேலைகள் முடிவடைந்தன. இப்படத்துக்கு இசையமைத்தவர் சிதார் மேதை ரவிஷங்கர். இத்திரைப்படத்தை வெளியான பிறகு பார்த்த அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு செய்த முயற்சியால் கான் திரைப்பட விழாவுக்குச் சென்று சிறந்த மானுட ஆவணத்திற்கான விருதைப் பெற்றது.

விளம்பரத்துறையில் பணியாற்றிய சத்யஜித்ரே தொழில்முறைப் பயணமாக லண்டன் சென்றபோது சினிமா எடுக்கத் தூண்டிய திரைப்படம் எது?

4jpg
 

4. உலகை கலக்கிய திரைப்பட வகை

வறண்ட நெடிய பாலை நிலங்கள், பணத்துக்காக குற்றவாளிகளைக் கொலை செய்ய அலையும் ஈரமேயில்லாத கண்களைக் கொண்ட கவ்பாய் வீரர்கள், மவுத் ஆர்கன் இசை, குதிரைகள் என்றவுடன் வெஸ்டர்ன் படங்கள் நமக்கு ஞாபகத்தில் வரும். 19-ம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவில் மிசிசிபி நதிக்கு மேற்கே குடியேறிய வெள்ளையர்களின் வாழ்க்கை, பூர்வகுடிகளுடனான மோதல்களைக் களனாக கொண்ட கதைகள் இவை. ஹாலிவுட்டில் 1920-களில் வெஸ்டர்ன் திரைப்படங்கள் ஒரு வகைமையாகப் பெரும் புகழைப்பெற்றன.

1960-களில் ஸ்பாகர்ட்டி வெஸ்டர்ன் என்ற பெயரில் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கவ்பாய் படங்கள் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பார்க்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் புகழ்பெற்ற மேற்கத்திய கவ்பாய் படங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றன. தமிழ் வெஸ்டர் திரைப்படங்களை எடுப்பதில் முத்திரை பதிப்பவராக காலம் சென்ற இயக்குனர் கர்ணன் இருந்தார். கங்கா, ஜம்பு, எங்கள் பாட்டன் சொத்து போன்ற திரைப்படங்கள் புகழ்பெற்றவை.

ஸ்பாரகர்ட்டி வெஸ்டர்ன் வகைமையில் எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதி பரதன் இயக்கிய மிகப்பெரும் வெற்றிபெற்ற மலையாளத் திரைப்படத்தின் பெயர் என்ன?

5jpg
 

5. உலகின் சிறந்த இரு படங்கள்

தோல்வியுற்ற தனிவாழ்க்கை; அமரத்துவம் வாய்ந்த கலை; இதற்கு சினிமா உதாரணமாக இருந்தவர் நடிகர், இயக்குனர் குருதத். வசந்த் குமார் சிவசங்கர் படுகோன் என்ற இயற்பெயரைக் கொண்ட குரு தத், இந்தி சினிமாவின் அழியாக் காவியங்களான ப்யாசா, காகஸ் கே பூல் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்தவர். பாலிவுட் வணிக சினிமா வடிவத்துக்குள்ளேயே கலாபூர்வமான சாதனைகளைச் செய்ததாக நினைவுகூரப்படுகிறார்.

இவர் இயக்கி நடித்த பியாசா, காகஸ் கே பூல் ஆகிய படங்களின் பாடல்கள் இன்றும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. ’காகஸ் கே பூல்’ தான் இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமும் கூட. தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்த குரு தத் 1959-ல் எடுத்த காகஸ் கே பூல் பெரிய தோல்வியைச் சந்தித்தது. ஆனால் 1980-களுக்குப் குரு தத்தின் மரணத்துக்குப் பிறகு இந்திய அளவில் எடுக்கப்பட்ட காவியங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.

உலகளவில் எடுக்கப்பட்ட 100 சிறந்த படங்களில் இரண்டாக இவர் எடுத்த பியாசாவும் காகஸ் கே பூலும் இடம்பெற்றுள்ளன. 39 வயதில் மறைந்து போன குரு தத் பிறந்த ஊர் எது?

answeresjpg
 

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19851490.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வேட்டையாடு விளையாடு 05:முரசு நடனத்துக்கு முன்னோடி!

 

 
20chrcjKalpana%201948

‘கல்பனா’ 1948

1. முரசு நடனத்துக்கு முன்னோடி!

ந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர் உதய் சங்கர் எடுத்த ஒரே திரைப்படம் `கல்பனா’. இந்தியாவின் செவ்வியல், நாட்டுப்புற, பழங்குடி நடன வடிவங்களை இணைத்து, 1944-ம் ஆண்டில் சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் தொடங்கப்பட்ட கனவுப் படைப்பு இது. பெரும் எண்ணிக்கையிலான நடனக்கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் இணைந்து ஒத்திகை பார்த்து நடுநடுவே படமெடுத்து முடிக்க நான்கு ஆண்டுகள் ஆனது. உதய் சங்கரின் மனைவி அமலா சங்கர், பத்மினி ஆகியோர் நடித்து 1948-ல் வெளியான இந்தித் திரைப்படம் இது. உதய் சங்கர் தன் பணத்தையெல்லாம் இழந்து கொல்கத்தாவுக்குத் திரும்ப வைத்த தோல்வித் திரைப்படமும் கூட.

ஆனால் இப்படத்துக்காக நடந்த நடன, இசை ஒத்திகையைப் பார்த்து வியந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன், பின்னர் எடுத்த ‘சந்திரலேகா’வில் இந்தியாவையே வியக்க வைத்த 400 நடனக் கலைஞர்கள், பிரம்மாண்ட டிரம்களில் நின்று ஆடும் பாடல், `கல்பனா’வின் தாக்கத்தில் உருவானதே. `கல்பனா’வின் அசல் நெகடிவ் சீர்குலைந்த நிலையில், ஹாலிவுட் இயக்குநர் மார்டின் ஸ்கார்சிசியின் வேர்ல்ட் சினிமா புராஜக்ட் திட்டத்தின் மூலம் டூப் நெகட்டிவ் சீராக்கப்பட்டு 2012-ல் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தின் சிதைந்துபோன டூப் நெகடிவ்வை டிஜிட்டல் முறையில் சீராக்குவதற்கு எத்தனை மணி நேரம் எடுத்தது?

 

parakajpg
 

2. படத்துக்கென்றே ஒரு கேமரா!

இருபத்தைந்து நாஇப்படத்துக்காக டுகள், ஆறு கண்டங்களில் படம்பிடிக்கப்பட்ட ஆவணப்படமான ‘பராகா’வில் விவரணை கிடையாது. அதன் இயக்குநர் ரான் ப்ரிக்கே, ‘மனித குலத்தின் மீதான தியானம்’ என அதை வர்ணித்தார். இயற்கை நிகழ்வுகள், மனித இயக்கங்கள், தொழில்நுட்பத்தின் தாக்கம், உலகளாவிய வழிபாட்டு முறைகளை ஆகியன குறித்து எந்த இடையீடும் குறுக்கீடும் இன்றி பார்க்கும் மாற்றுத் திரைப்படம் இது. தேசம், மதம், அரசியல் அடையாளங்கள் தாண்டி ஒரு மனிதனின் அகத்தை நோக்கிப் பேசும் இப்படத்துக்காக பிரத்யேகமாக 65 எம்எம் காமிரா உருவாக்கப்பட்டது.

1992-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் இசை, அதன் காட்சிகளுக்கு இணையாகப் பெரிதும் பேசப்பட்டது. இசையமைப்பாளர் மைக்கேல் ஸ்டீயர்ன்ஸ். எல். சுப்ரமணியனும் இப்படத்துக்காகப் பணியாற்றிய இசைக்கலைஞர்களுள் ஒருவர். அன்றாட வாழ்க்கையின் நுட்பமான மாறுதல்களைப் படம்பிடிப்பதற்காக ’டைம்லாப்ஸ்’ தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஆவணப்படம் இது. ‘பராகா’ என்ற வார்த்தையின் அர்த்தம்?

3. தமிழுக்கு வந்த சார்லி சாப்ளின்!

 

3jpg
 

சார்லி சாப்ளினின் சிறந்த படைப்புகளில் ஒன்று ‘சிட்டி லைட்ஸ்’. உலகின் பல்வேறு மொழிகளில் எண்ணற்ற தழுவல்களாக மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டேயிருந்தது. டி.ஆர்.ராமச்சந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜூனியர் நாயகன், நாயகியாக நடித்து, 1954-ல் வெளியான படமான ‘ராஜி என் கண்மணி’யை இயக்கிய கே.ஜே. மகாதேவன் ‘சிட்டி லைட்ஸ்’-ஐ அப்படியே தமிழாக்க முயற்சி செய்திருந்தார். கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி எழுதி, கே. சுப்ரமணியன் இயக்கிய ‘தியாகபூமி’யில் நாயகனாக நடித்தவர் இவர்.

சாப்ளினின் சேட்டைகளை நாயகன் டி.ஆர். ராமச்சந்திரன் இப்படத்தில் முயன்றிருப்பார். இப்படத்தில் சந்திரபாபு, ரங்காராவின் நடிப்பும் பேசப்பட்டது. எஸ். ஹனுமந்தர ராவ் இசையமைத்த இத்திரைப்படத்தில் சங்கு. சுப்ரமணியம் எழுதி, ஆர். பாலசரஸ்வதி பாடிய ‘மல்லிகைப் பூ ஜாதி ரோஜா’ இன்றும் ரசிகர்களால் ஆராதிக்கப்படும் பாடல். தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்பட்ட இப்படம் தோல்வியைத் தழுவியது. ஜெமினி தயாரித்த இப்படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு சூட்டப்பட்ட தலைப்பு என்ன?

4. எம்.டி.வாசுதேவனை அறிமுகப்படுத்தியவர்!

mtvjpg

தென்னிந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ஏ. வின்சென்ட். இவர் மலையாள யதார்த்த சினிமா இயக்குநராகவும் புகழ்பெற்றார். இவர் இயக்கிய ‘முறப்பெண்ணு’ படத்தின் மூலம் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரை திரைக்கதையாசிரியராக அறிமுகப்படுத்தி 50 ஆண்டுகள் முடித்துவிட்டன. எம்.டி.வி எழுதிய ‘சினேகத்தின்டே முகங்கள்’ சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு அவரே திரைக்கதை எழுதினார்.

பிரேம் நசீர், கே.பி.உமர், சாரதா, அடூர் பாசி போன்றோரின் சிறப்பான நடிப்புக்காக இப்படம் இன்றும் கொண்டாடப்படுகிறது. ஒரு நிலப்பிரபுத்துவக் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் முறிவுகள்தான் கதை. பி.ஏ.சிதம்பரநாத் இசையமைத்த இத்திரைப்படத்துக்கு பாடல்களை பி.பாஸ்கரன் எழுதினார். கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி ஆகியோர் பாடிய பாடல்களுக்காக இன்றும் சிதம்பரநாத் நினைவுகூரப்படுகிறார். இப்படத்தின் உட்புறக் காட்சிகள் சென்னையில் உள்ள எந்த ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டன?

5. வங்கத்தின் மாற்றுப் படைப்பாளி!

 

megajpg
 

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை தொடர் பான கதைகளைத் தனது படைப்புகளாக்கியவர் வங்காள இயக்குநர் ரித்விக் கட்டக். வங்கத்தின் தலைசிறந்த மாற்று இயக்குநராக அறியப்படும் இவர், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள் வாழும் கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் நடைபெறும் கதையாக இவர் எடுத்த ‘மேக தக்க தாரா’ வணிகரீதியாகவும் வரவேற்கப்பட்ட வெற்றிப் படைப்பு. அழகிய யுவதியான நீதா, குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவராலும் தொடர்ந்து சுரண்டப்பட்டு தியாகியாக மரணமடையும் கதை. வேலை, வாழ்க்கை, ஆரோக்கியம் எல்லாவற்றையும் இழந்து இறந்து போகும் நீதாவாக நடித்திருந்தவர் சுப்ரியா சவுத்ரி. ரித்விக் கட்டக் சிறந்த வாத்திய இசைக்கலைஞரும் கூட. அவர் எந்த வாத்தியத்தை இசைப்பதில் வல்லவர்?

answersjpg

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19882146.ece

Link to comment
Share on other sites

வேட்டையாடு விளையாடு: முதல் ‘கேவா’ கலர் திரைப்படம்!

 

 
1jpg

1. முதல் ‘கேவா’ கலர் திரைப்படம்!

‘அண்டா கா கசம் அபூகா ஹுகும் திறந்திடு சீசேம்’ என்ற மறக்க முடியாத மந்திரத்தைக் குழந்தைகளுக்கு வழங்கிய சினிமா ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில் வரும் ஒரு கதை இது. மூலக்கதையில் அலிபாபா மிகவும் எளியவன். ஆனால் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் தயாரித்து இயக்கி 1956-ல் வெளியாகி வெற்றிபெற்ற இப்படத்தில் அலிபாபாவோ ஆக்ஷன் நாயகன். தென்னிந்தியாவின் முதல் கேவா கலர் திரைப்படம் இது. ‘மலைக்கள்ள’னுக்குப் பிறகு பணக்காரர்களிடமிருந்து பறித்து ஏழைகளுக்கு உதவும் ராபின் ஹூட் வகை கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆரை வெற்றிகரமாக நிறுவிய வீரதீர வகைப் படம். தளபதி ஷேர் கானால் கடத்தப்பட்டு அலிபாபாவால் பின்னர் மீட்கப்படும் நாயகி மர்ஷியானாவாக பானுமதிக்கும் அபு ஹுசைன் என்ற வில்லனாக நடித்த பி.எஸ். வீரப்பாவுக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்த படம். இதில் இடம்பெற்ற ‘சலாம் பாபு’ என்ற ஆட்டப் பாடலுக்கு ஆடிய வஹீதா ரஹ்மான் பின்னர் இந்தித் திரையுலகில் பெரும் புகழ்பெற்றார். இப்படத்தின் வசனகர்த்தா யார்?

       
2jpg
 

2. அமெரிக்கா விதித்த அபராதம்!

கியூபா தேசத்தின் பாரம்பரிய இசையை உலகுக்கு அறிமுகப்படுத்த ஜெர்மானிய திரைப்பட இயக்குநர் விம் வெண்டர்ஸ் எடுத்த ஆவணப்படம் ‘பியூன விஸ்டா சோஷியல் கிளப்’. அமெரிக்க இசைக்கலைஞர் ஆர். ஒய். கூடர், தனது நண்பரான விம் வெண்டர்ஸை கியூபாவுக்கு அழைத்துச் சென்று, 90 வயதுக்கு மேற்பட்ட கியூபாவின் சிறந்த இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கினார். கியூபா தேசம் அமெரிக்காவுக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தும் அரசியல் பதற்றங்களால் நாட்டுக்கு வெளியே பயணம் செய்ய முடியாத நிலையிலிருந்த மூத்த கியூப இசைக்கலைஞர்கள், உலகப் புகழ் பெறுவதற்கும் சர்வதேச இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது இந்த ஆவணப்படம். சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை ஐரோப்பிய திரைப்பட விழாவில் பெற்றது. கியூபா மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைக்கு எதிராகச் செயல்பட்டதற்காக இயக்குநர் விம் வெண்டர்ஸுக்கு விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு?

3jpg
 

3. ‘காந்தி’ எனும் சாதனை

ரிச்சர்ட் அட்டன்பரோவின் கனவுத் திரைப்படமான ‘காந்தி’ இந்தியாவில் 1982-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வெளியானது. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு உட்பட பத்து பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. 20 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னரே அட்டன்பரோவால் இப்படத்தை எடுக்க முடிந்தது. நேரு காலத்தில் தொடங்கிய முயற்சி இந்திரா காந்தி காலத்தில் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் 1980-ல் தொடங்கப்பட்டது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பென் கிங்ஸ்லி. வெள்ளைத் தாய்க்குப் பிறந்த பென் கிங்ஸ்லியின் தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் கிருஷ்ண பண்டிட் பாஞ்சி. உலகிலேயே அதிகத் துணைநடிகர்களைக் கொண்டு படம்பிடிக்கப்பட்ட காட்சியாக காந்தியின் இறுதி ஊர்வலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான கிராமங்களில் துண்டு நோட்டீஸ் கொடுத்து அழைத்து வரப்பட்டுப் படம்பிடிக்கப்பட்ட இக்காட்சியில் நடித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

4jpg
 

4. அக்கால கேரளத்தின் வரலாறு!

பொதுமக்களிடம் நன்கொடைகள் மூலம் நிதிதிரட்டி காலம்சென்ற இயக்குநர் ஜான் ஆபிரகாம் எடுத்த மலையாளத் திரைப்படம் ‘அம்ம அறியான்’. கேரளத்தின் வயநாடு மலைக்கிராமம் ஒன்றில் இளம் நக்சலைட்டான ஹரி என்பவர் இறந்துவிடுகிறார். ஹரி இறந்த செய்தியை அவனது தாயிடம் தெரிவிக்க, ஹரியின் உடலுடன் அவரது சொந்த கிராமத்துக்கு அவரின் நண்பர்கள் பயணிப்பதுதான் கதை. போகும் வழியில் ஹரிக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் வழியாக, ஒரு துடிப்பான இளம் நக்சலைட்டின் ஆளுமைச் சித்திரம் நமக்குத் தரப்படுகிறது. உண்மைச் செய்திகளும் கற்பனையும் ஆவணப்படத் தன்மையும் கொண்ட சோதனைத் திரைப்படம் இது. ஒரு தாய், மகன் பற்றிய கதை வழியாக கேரளத்தின் போராட்ட வரலாற்றுப் பின்னணியில் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், தற்கொலை செய்துகொண்ட மகன்களின் கதையாக இத்திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர் ஜான் ஆபிரகாம் எடுத்த ஒரே தமிழ் படம் எது?

5jpg
 

5. திரைக்கு வந்த காதல்!

மீபத்தில் 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் பாலிவுட்டின் ‘பிக் பி’ அமிதாப் பச்சன். அவர் நடித்த சிறந்த திரைப்படங்களுள் ஒன்று ‘சில்சிலா’. அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ரேகா, சஞ்சீவ் குமார் நடித்து யஷ் சோப்ரா இயக்கிய இத்திரைப்படம், அமிதாப் பச்சனுக்கும் ரேகாவுக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்ததாகச் சொல்லப்பட்ட காதலைப் பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் அமிதாப்புடன் சேர்ந்து நடித்த கடைசித் திரைப்படமும் அதுவே. ரேகாவுடன் அமிதாப் பச்சன் நடித்த கடைசித் திரைப்படமாகவும் ‘சில்சிலா’ அமைந்துவிட்டது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும் திருமணத்துக்குப் பிறகு நாயகனும் நாயகியும் தங்கள் பழைய காதலைப் புதுப்பித்துக் கொள்ளும் கதையைப் பார்வையாளர்கள் ஏற்காததால் படம் தோல்வியுற்றது. தொடக்கத்தில் தோல்வியைத் தழுவினாலும் இந்தித் திரைப்படங்களில் ஒரு செவ்வியல் படமாக ‘சில்சிலா’ நிலைபெற்று விட்டது. ஜெயா பச்சன், ரேகா இருவரையும் தேர்வு செய்வதற்கு முன்பு, இவர்களுக்குப் பதிலாக யஷ் சோப்ரா வேறு இருவரைத் தேர்ந்தெடுத்திருந்ததாக கூறியிருந்தார். அந்த நடிகைகள் யார்?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19923822.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வேட்டையாடு விளையாடு 07: பாடல் படப்பிடிப்பில் புதுமை

vettaiyadujpg

1. பாடல் படப்பிடிப்பில் புதுமை

மிழ் சினிமாவில் மறக்கடிக்கப்பட்ட மேதைகளில் ஒருவர் ராம்நாத். அவரது இயக்கத்தில் 1950-ல் வெளிவந்த படம் ‘ஏழை படும் பாடு’. புகழ்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹூஹோவின் ‘லெஸ் மிஸரபிள்ஸ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. 1862-ல் வெளியான இந்த நாவல், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஜப்பானியம், இத்தாலி ஆகிய மொழிகளில் நாடகம் மற்றும் திரை வடிவங்களைக் கண்டது. கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜாவர் என்ற கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துத்தான் வழக்கறிஞரும் திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான என். சேதுராமன், ‘ஜாவர்’ சேதுராமன் ஆனார். தமிழ்த் திரையுலகின் முதல் நட்சத்திர எழுத்தாளரான இளங்கோவன் திரைக்கதை எழுதிய படம் இது. இப்படத்தில் வரும் ‘விதியின் விளைவால்’ பாடல் எதற்காகப் புகழ்பெற்றது?

   
1jpg
 

2. அனிமேஷன் துறையில் சாதனை!

ணினி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் முழு நீளத் திரைப்படமான ‘டாய் ஸ்டோரி’ 1995, நவம்பர் 22-ல் வெளியானது. பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து, வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்ட இப்படத்தை இயக்கியவர் ஜான் லாசஸ்டர். சிறந்த அனிமேஷன் திரைப்படமாக இன்றும் கொண்டாடப்படும் இப்படம் உலகெங்கும் அதிக வசூலைக் குவித்தது. இந்தப் படத்தின் நாயகனான வுடி-க்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ். திரைக்கதை, இசை, பாடலுக்காக ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட இப்படம், ஸ்பெஷல் அச்சீவ்மெண்ட் அகாடமி விருதைப் பெற்றது. உலகம் முழுக்க குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், வீடியோ கேம்கள், தீம் பார்க்குகளுக்கான உந்துதலையும் ‘டாய் ஸ்டோரி’ படம் தந்துள்ளது. டாய் ஸ்டோரியை உருவாக்கிய பிக்ஸார் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்த பிரபலம் யார்?

3. சினிமா மாணவர்களின் வேதம்

யுத்தம் மக்களின் வாழ்வை மட்டுமல்ல; ஆன்மாவையும் நிலைகுலையச் செய்கிறது. யுத்தத்தின் மோசமான பாதிப்பு குழந்தைகளுக்குத்தான் என்பதை அற்புதமாக வெளிப்படுத்தும் திரைப்படம் ‘இவான்ஸ் சைல்ட்ஹுட்’. கவித்துவமும் ஆன்மிக விசாரணையும் கொண்ட திரைப்படங்களை எடுத்த ரஷ்ய திரைப்பட இயக்குநர் ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கியின் முதல் படம். தன் வாழ்நாளில் ஏழு திரைப்படங்களையே எடுத்த தார்க்கோவ்ஸ்கி, இங்மார் பெர்க்மன், கீஸ்லோவெஸ்கி போன்ற திரைமேதைகளைப் பாதித்தவர்.

4jpg

இவான் என்ற பெயரில் வெளியான ரஷ்யச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் 1962-ல் வெளியானது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் அநாதைச் சிறுவன் இவானின் அனுபவங்களைச் சொல்லும் படம் இது. ஆந்த்ரேய் தார்க்கோவெஸ்கி எடுத்த சினிமாக்களிலேயே பெரும் வர்த்தக வெற்றியை ஈட்டிய படைப்பு இது. இதன் சில காட்சிகள் குறித்த அதிருப்தியை தார்க்கோவெஸ்கி தான் எழுதிய புத்தகம் ஒன்றில் வெளிப்படுத்தினார். சினிமா மாணவர்களின் வேதங்களில் ஒன்றாகக் கருதப்படும் அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன?

4. ஜி.வி.ஐயர் கதையில் சிவாஜி

ந்தியாவில் சம்ஸ்கிருத மொழியில் எடுக்கப்பட்ட முதல்படம் ‘ஆதி சங்கராச்சார்யா’(1983). அத்வைத வேதாந்தத்தைப் போதித்த ஆதி சங்கரரின் வாழ்க்கையையும் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டது இப்படம். இந்திய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சினிமாக்களை எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்திய ஜி.வி.ஐயர், ஆதி சங்கரரின் வாழ்க்கை நிகழ்வுகள் மட்டுமின்றி அவரது போதனைகளையும் எளிமையாக இப்படத்தின் மூலம் சொல்ல முயன்றிருந்தார்.

மது அம்பாட்டின் ஒளிப்பதிவும் பாலமுரளி கிருஷ்ணாவின் இசையும் சிறப்பாகப் பேசப்பட்டன. கன்னடம், சம்ஸ்கிருதத்தில் தேர்ந்த ஞானம் மிக்க ஐயர், அதைத் தொடர்ந்து ‘மத்வாச்சார்யா’, ‘ராமானுஜாச்சார்யா’ படங்களையும் எடுத்தார். நாடக நடிகர், தயாரிப்பாளர், கதை வசன கர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பல முகங்களைக் கொண்ட ஐயர் கதை எழுதி சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் எது?

warjpg
5. தடுத்த தணிகை, விடுவித்த நீதிமன்றம்!

‘ராம் கே நாம்’ (கடவுளின் பெயரால்..) என்ற ஆவணப்படம் மூலம் புகழ்பெற்றவர் ஆனந்த் பட்வர்த்தன். 1998-ல் பாகிஸ்தான், இந்திய அரசுகளின் அணு ஆயுதச் சோதனையை ஒட்டி இவர் எடுத்த படம் ‘வார் அண்ட் பீஸ்’. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வளர்ந்துவரும் மதவாதத்துக்கும் அணு ஆயுத ஆதரவுக் கொள்கைகளுக்கும் இடையிலான உறவை ஆராயும் இப்படத்தை மூன்று ஆண்டுகளாக எடுத்தார் பட்வர்த்தன்.

ஜப்பானிலும் அமெரிக்காவிலும் அணு ஆயுதங்கள் தொடர்பாக இருக்கும் அணுகுமுறைகளை அலசும் இப்படத்தின் 21 இடங்களில் துண்டிக்கப் பரிந்துரைத்தது தணிக்கைக் குழு. இதையடுத்து நீதிமன்றம் சென்றார் ஆனந்த் பட்வர்த்தன்.

அவருக்கு அங்கே வெற்றி கிடைத்தது. அந்தப் படத்தை முழுமையாக வெளியிடத் தீர்ப்பளித்த நீதிமன்றம் எது?

answersjpg
 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19968242.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வேட்டையாடு விளையாடு: கொலைக் களமான குளியலறை

 

 
10chrcjpsychoso

சைக்கோ

1. கொலைக் களமான குளியலறை

திகில் படங்களின் தாய் எனக் கருதப்படுவது 1960-ல் வெளியான ‘சைக்கோ’. இந்தப் படத்தின் மூலம், குளியல் அறையை உக்கிரமான கொலைக்கான களமாக மாற்ற முடியும் எனக் காட்டியவர் திரைப்பட மேதை ஆல்ப்ரட் ஹிட்ச்காக். ஒரு சாலையோர விடுதி, அங்கே தனியாக இருக்கும் விடுதி நிர்வாகி, ஒரு களவு, ஒரு கொலை, விசாரணை என அடுத்தடுத்து திருப்பங்களைத் திரைக்கதையில் வைத்த ஹிட்ச்காக், படத்தின் தொடக்கத்தில் வரும் ஷவர் குளியல் காட்சியில் கதாநாயகி கொலையாவதைப் பல்வேறு கோணங்களிலிருந்து எடுத்து ஒருங்கிணைத்தார். ஒரு கொலை அத்தனை உக்கிரத்துடன் சித்திரிக்கப்பட்ட திரைப்படத்தை அதற்கு முன்னர் அமெரிக்கர்கள் பார்த்திருக்கவில்லை. நார்மன் பேட்ஸாக நடித்த அந்தோணி பெர்கின்சும் மரியானாக நடித்த ஜேனட் லீயும் சினிமா ரசிகர்களுக்கு இன்றும் காவிய நினைவாகப் பதிந்துள்ளனர். நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படம், ஒரு விருதைக்கூட வெல்லவில்லை. இந்தப் படத்தின் புகழ்பெற்ற கொலைக் காட்சியில் ரத்தத்துக்குப் பதில் பயன்படுத்தப்பட்ட திரவம் எது?

2. ஒரு இயக்குநர் பிறந்தார்!

இரண்டாம் உலகப் போர் காலத்தில், ஜப்பானிய ராணுவத்திடம் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் போர்க் கைதிகளாகச் சிக்கியிருந்தனர். பர்மாவில் ரயில் பாலம் கட்டும் மிகக் கடினமான பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டபோது நடந்த சம்பவங்களின் கதைதான் ‘தி ப்ரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்’. இதைத் திரைப்படமாக்கியவர் இயக்குநர் டேவிட் லீன். ‘டாக்டர் ஷிவாகோ’, ‘லாரன்ஸ் ஆப் அரேபியா’ திரைப்படங்களுக்காகப் புகழ்பெற்றவர் இவர். போரைப் பின்னணியாகக் கொண்ட சிறந்த மானுட ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்திரைப்படம் 1957-ல் வெளியாகி ஏழு ஆஸ்கர்களைக் குவித்தது. பிரிட்டன் - அமெரிக்கக் கூட்டுத்தயாரிப்பாக இலங்கையின் கண்டிக்கு அருகே படமாக்கப்பட்டது. ஒரு மழைக் காட்சிக்காக, படப்பிடிப்புக் குழுவினருக்கு, “ரெய்ன்” என்று இயக்குநர் டேவிட் லீன், உத்தரவிட்டபோது அந்த இடத்தில் மழை பெய்விக்கப்பட்டது. இதைத் தற்செயலாக அங்கே சுற்றுலா வந்திருந்த ஒரு சிறுவன் பெரும் அதிசயமாகப் பார்த்தான். ஆறாம் வகுப்பு படித்துவந்த அந்தத் தமிழ்ச் சிறுவன் அங்குதான் சினிமா காமிராவையும் தொட்டான். அதன் பிறகு அந்தச் சிறுவன் வளர்ந்து இளைஞரானபின் இந்தியா வந்து சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும் தமிழ் சினிமா இயக்குநராகவும் உருவானான். அவர் யார்?

3. பேசப்பட்ட வசனம்

எம்.ஜி.ஆர், சாவித்திரி நாயகன் நாயகியாக நடிக்க சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கி 1957-ல் வெளியான திரைப்படம் ‘மகாதேவி’. தன்னிடம் போரில் தோல்வியடைந்த மன்னனையே அரசவைக்கு விருந்தினராக அழைக்கிறார் பகை மன்னர். தோல்வியுற்ற மன்னனின் மகள் மகாதேவி மீது ஆசை வைக்கிறார் தளபதி. மகாதேவிக்கோ இளையதளபதி மேல் நேசம். மூத்த தளபதியோ, “மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்று பிடிவாதமாக இருக்கிறார். எம்.என். ராஜம், பி.எஸ். வீரப்பா, ஓ.ஏ.கே தேவர், சந்திரபாபு ஆகியோர் நடிக்க, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படம் வாகினி ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், இசை, நடிப்பு ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைந்தது இத்திரைப்படம். எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய ‘காக்கா காக்கா மை கொண்டா... காடை குருவி பூ கொண்டா...’ தாலாட்டுப் பாடலாகப் புகழ்பெற்றது. வசனங்களுக்காகவும் புகழ்பெற்ற இந்தப் படத்தின் வசனகர்த்தா யார்?

4. கோமாளியின் தோல்வி

மக்களைச் சந்தோஷப்படுத்தும் கலைஞன், தன் துயரங்களையும் துக்கங்களையும் பொதுவில் வைக்க முடியாது. இதுதான் ‘மேரா நாம் ஜோக்கர்’ இந்திப் படத்தின் ஒருவரிக் கதை. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் எனப் பல பரிமாணங்களை எடுத்த திரைக்கலைஞர் ராஜ்கபூரின் செல்வத்தையும் உழைப்பையும் காலத்தையும் அதிகம் எடுத்துக்கொண்டு 1972-ல் வெளியான இப்படம் பெரும் தோல்வியுற்றது. சர்க்கஸ் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியில், நாயகன் கோமாளி ராஜுவின் கதைதான் ‘மேரா நாம் ஜோக்கர்’. மூன்றேமுக்கால் மணிநேர நீளம் கொண்ட இப்படம், இரண்டு இடைவேளைகள் கொண்டது. பெரிய நட்சத்திரங்கள், நாயகிகள், காதல், நகைச்சுவை, இசை என உணர்வுபூர்வமான தருணங்கள் இருந்தும் தோல்வியைத் தழுவியது. ராஜ்கபூரின் வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தின் கதை, அப்போதைய பார்வையளர்களுக்கு மிகவும் கனமாக இருந்ததால் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இன்று சர்வதேச அளவில் இந்திய கிளாசிக்குகளில் ஒன்றாக இன்று கருதப்படுகிறது. ராஜ்கபூரின் மகன் ரிஷிகபூர் அறிமுகமான இப்படம், தொடங்கப்பட்டு வெளியாக எத்தனை காலம் பிடித்தது?

5. வளைகுடாப் போரின் காட்சி ஆவணம்!

போருக்கு எதிரான குரலை ஆற்றலுடன் வெளிப்படுத்தும் அரிய ஆவணப்படங்களில் ஒன்று ‘லெசன்ஸ் ஆஃப் டார்க்னெஸ்’. வளைகுடாப் போரின் ரத்தத் தடயங்களைக் காட்டிய படம் இது. ஈராக்கிய எண்ணெய்க் கிணறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எரிந்துகொண்டிருப்பதைப் பறவைக் காட்சியாகக் காண்பித்தபடி யுத்தம் ஏற்படுத்தும் நிலைக்குலைவை இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் நிறுவியிருப்பார். 13 சிறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்ட படைப்பு இது. வளைகுடாப் போர் காலத்தில் அதை ஒளிபரப்பி உலகம் முழுவதும் புகழ்பெற்றது சிஎன்என் தொலைக்காட்சி. டெலிபோட்டோ லென்ஸ்களைப் பயன்படுத்தியும் டிரக்குகளில் காமிராக்களைப் பொருத்தியும் இந்தப் படத்தை எடுத்து 1992-ல் வெளியிட்டார். இந்த ஆவணப்படத்துக்கு ரிச்சர்ட் வாக்னர் போன்ற செவ்வியல் இசைக் கலைஞர்களின் இசைக் கோலங்களை ஹெர்சாக் பயன்படுத்தியிருந்தார். போரின் பயங்கரத்தை அழகியல் காட்சிகளாக மாற்றிவிட்டதாகக் கடும் கண்டனங்களையும் சந்தித்த ஹெர்சாக், இந்த ஆவணப்படத்துக்காக மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழாவில் பெற்ற விருது எது?

answersJPG

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article20009449.ece

Link to comment
Share on other sites

வேட்டையாடு விளையாடு 09: தொலைக்காட்சியிருந்து ஒரு சூப்பர் ஸ்டார்!

 

 
17CHRCJMANIKAUL

மணி கவுல்   -  Handout E Mai;

 

இந்திய மாற்று சினிமா இயக்குநர்களில் ஒருவரும் சிறந்த ஆவணப்படங்களை உருவாக்கியவருமான மணி கவுல் இயக்கிய படம் ‘இடியட்’ (1992). பாலிவுட்டின் ராஜாவான ஷாரூக் கானின் முதல் திரைப்படம் இது. ரஷ்ய நாவலாசிரியர் பியோதர் தாஸ்தாயேவ்ஸ்கி எழுதிய ‘இடியட்’ நாவலின் தழுவலான இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. மாறாக, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நான்கு பாகங்களாகத் திரையிடப்பட்டது. சில திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டது.

     

‘தியேட்டர் ஆக்ஷன் க்ரூப்’ என்ற டெல்லி நாடகக் குழுவில் நடிகராகவும், தேசிய நாடகப் பள்ளியின் மாணவருமான ஷாரூக் கான், தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதிலேயே ஈடுபாட்டுடன் இருந்தவர். ஷாரூக் கான் சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை முதலில் வாங்கித் தந்த புத்தகங்களில் ஒன்று ‘இடியட்’. இந்த சென்டிமெண்டும் இப்படத்தில் ஷாரூக் நடிப்பதற்குக் காரணம். பாலிவுட் சினிமாவில் நடிக்கத் தனது தோற்றம் சரிவராது என்ற எண்ணத்தில் இருந்தவர். மணி கவுல் இயக்கத்தில் நடித்த பிறகும் தொலைக்காட்சி நாடகங்களிலேயே தொடர்ந்த ஷாரூக் கானை யாருடைய மரணம் சினிமாவை நோக்கி நகர்த்தியது?

2.ஒரு கிராமத்தின் கதை

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் இங்மார் பெர்க்மனுக்கு சர்வதேச அந்தஸ்தை உருவாக்கிய திரைப்படம் ‘தி செவன்த் சீல்’. 1957-ல் வெளியான இப்படம், நேசம், தியாகம், வலி, கடவுளின் இருப்பு, மரணம் தொடர்பான பிரச்சினைகளை 14-ம் நூற்றாண்டில் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஐரோப்பியக் கிராமத்தின் பின்னணியில் விசாரணை செய்கிறது. மரணதேவனுக்கும் சிலுவைப் போரிலிருந்து திரும்பும் வீரன் அண்டோனியஸ் ப்ளாக்குக்கும் நடைபெறும் உரையாடல் பகுதி பிரபலமானது. மத்திய கால ஐரோப்பியக் கட்டிடப் பின்னணியை பெர்க்மன் தன் தந்தை பணியாற்றிய தேவாலயத்தில் பார்த்த புடைப்புச் சிற்பங்களில் இருந்து உருவாக்கியிருந்தார்.

மிகத் துயரமான காலகட்டங்களிலும் நம்பிக்கையும் சிரிப்பும்தான் வாழ்க்கையைக் காப்பாற்றும் என்று தெருக்கூத்தாடித் தம்பதியின் வழியாகவும் அவர்களது குட்டிப்பையன் வழியாகவும் சொல்லியிருப்பார் பெர்க்மன். சரித்திர காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்க இங்க்மர் பெர்க்மனுக்கு உந்துதலாக இருந்த திரைப்பட இயக்குநர் யார்?

17chrcjAviator

‘தி ஏவியேட்டர்’ படத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேத் ப்ளான்ஜெட்

 

3.முந்திக்கொண்ட இயக்குநர்!

விமான ஓட்டி, விமானப் போக்குவரத்து நிறுவனர், திரைப்பட இயக்குநர், சாகசக்காரர் எனப் பல முகங்களைக் கொண்ட அமெரிக்கத் தொழிலதிபர் ஹோவர் ஹியூஸ். அவரது வாழ்வும் சரிவும் ஒரு சிறந்த திரைப்படத்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், கிறிஸ்டோபர் நோலன் உட்படப் பல இயக்குநர்கள் ஹோவர் ஹியூஸின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கிவிட வேண்டும் என்பதைத் தங்கள் கலைவாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக வைத்திருந்தனர். ஆனால், ஹோவர் ஹியூஸின் வாழ்வைத் வெற்றிகரமாகத் திரைப்படமாக்கியவர் மார்டின் ஸ்கார்சிஸி. ‘ஹோவர் ஹியூஸ்: தி சீக்ரெட் லைப்’ என்ற சுய சரிதை நூலை அடிப்படையாகக் கொண்டு, ஸ்கார்சிஸி இயக்கி 2004-ல் ‘தி ஏவியேட்டர்’ என்ற தலைப்பில் வெளியானது.

வெற்றிகரமான இயக்குநர்-நாயகக் கூட்டணியான மார்டின் ஸ்கார்சிஸி- லியனார்டோ டி காப்ரியோ கூட்டணி இணைந்த இரண்டாவது படம் இது. 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தைப் பழைய லைட்டிங் தொழில்நுட்பங்களையும் ஆரம்பகால வண்ணக்கலவை முறைகளையும் சேர்த்து உருவாக்கியிருப்பார்கள். 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படம் எத்தனை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது?

4.இயக்குநர் ஆன ஒளிப்பதிவாளர்!

ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் லேப்மேன் ஆக இருந்த பி.எஸ். ரங்கா இயக்கிய படம் ‘நிச்சய தாம்பூலம்’ (1962). ஒளிப்பதிவாளராக ‘பக்த நாரதர்’(1942) படத்தில் அறிமுகமான பி.எஸ். ரங்கா, பெங்களூருவில் முதல் கலர் லேபை அமைத்தவர். தமிழ், தெலுங்கு, இந்தியில் புராணப் படங்களையும் கிராமியப் படங்களையும் எடுத்து வெற்றிபெற்றவர். ‘நிச்சய தாம்பூலம்’ படத்துக்கு ஒளிப்பதிவு, தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, அதை வெற்றிப் படைப்பாக்கினார்.

நடிகை ஜமுனாவுக்கு இந்தப் படத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. கடுமையான காவல் துறை அதிகாரி, ஊதாரி மகன், அன்பான தாயைச் சுற்றிய கதை இது. ரங்கா ராவ், சிவாஜி கணேசன், பி.கண்ணாம்பா ஆகியோர் நடித்திருந்த இப்படத்தின் பாடல்கள் புகழ்பெற்றவை. இந்தப் படத்துக்காக டி.எம். சௌந்திரராஜன் குரலில் இன்றும் புகழ்பெற்ற பாடலாக வலம் வரும் அந்தப் பாடல் எது?

17CHRCJNICHAYATHAMBOOLAM

‘நிச்சயத் தாம்பூலம்’ படத்தில் சிவாஜி, ஜமுனா   -  THE HINDU ARCHIVES

 

5.நிறைவு தராத படைப்பு

பரத நாட்டியத்துக்கு 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமூகரீதியான புறக்கணிப்பு இருந்தது. அதை மீறி, அந்தக் கலையைத் தன் மேதைமையாலும் மரபுவழி பெற்ற சம்பிரதாய ஞானத்தாலும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவர் நடனக் கலைஞர் பாலசரஸ்வதி. அவரது நடனத்தைப் பார்ப்பதற்கான ஒரே காட்சி ஆவணம் 1976-ல் வெளியான ‘பாலா’ என்ற ஆவணப்படம். நிகழ்த்துகலைகளுக்கான தேசிய மையம், தமிழ்நாடு அரசு இரண்டும் சேர்ந்து தயாரித்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் சத்யஜித் ராய்.

கோயில் சிற்பங்களில் பதிவாகியிருக்கும் பரத நாட்டியத்தின் மரபைப் பிரதிபலிக்கும்விதமாக அமைந்த, பாலசரஸ்வதியின் நடனத்தை மையமாகக் கொண்ட ஆவணப்படம் இது. பாலசரஸ்வதி தனது நடன வாழ்வில் உச்சமாக இருந்தபோது இந்த ஆவணப்படத்தை சத்யஜித் ராய் திட்டமிட்டிருந்தார். ஆனால், பாலசரஸ்வதியின் 58-ம் வயதிலேயே இந்தப் படம் சாத்தியமானது. சத்யஜித் ராய், பாலசரஸ்வதி இருவருக்குமே நிறைவு தராத படைப்பு இது. சத்யஜித் ராய் தனது எந்த வயதில் பாலசரஸ்வதியின் நடனத்தைப் பார்த்தார்?

answerjpg

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article20489494.ece

Link to comment
Share on other sites

வேட்டையாடு விளையாடு 10: கறுப்பினப் பெண்களின் கதை

 

 
the%20color%20peoplejpg

'தி கலர் பர்ப்பிள்'

1. கறுப்பினப் பெண்களின் கதை

 

ஆலிஸ் வாக்கர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 1985-ல் இயக்கிய திரைப்படம் ‘தி கலர் பர்ப்பிள்’. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கக் கிராமம் ஒன்றில் வாழ்ந்த கறுப்பினப் பெண் செலி ஹாரிஸின் கதை இது. கறுப்பினத்தவர்கள் மீதான கடுமையான ஒடுக்குமுறை நிலவிய சூழலில், பல்வேறு துயரங்களைத் தாண்டி சமத்துவத்துக்காகப் போராடிய கறுப்பினப் பெண்களின் கதை என்றும் இதைச் சொல்லலாம். எந்தச் சூழ்நிலையிலும் பெண்களுக்குப் பெண்கள்தான் ஆதரவாக இருக்க முடியும் என்பதையும் உணர்த்தும் திரைப்படம் இது.

ஹாலிவுட்டில் ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘இ.டி’ போன்ற பெரும் பொழுதுபோக்குத் திரைப்படங்களை உருவாக்குபவராகவே அதுவரை அறியப்பட்டிருந்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் பாதையை மாற்றிய படம் இது. இந்தப் படத்துக்கான கதையை எழுதிய ஆலிஸ் வாக்கர், முதலில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்குக்கு அனுமதி தரவில்லை. தன் மகளுடன் அவர் இயக்கிய ‘இ.டி’ படத்தைப் பார்த்த பிறகே அனுமதி தந்தார். 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படத்துக்கு ஒரு விருதுகூடக் கிடைக்கவில்லை. இப்படத்தில் நடித்த பிரபல டாக் ஷோ நட்சத்திரம் யார்?

2. திருந்த ஒரு வாய்ப்பு

எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்தவனுக்கும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும். இதுதான் 1957-ல் இந்தியில் வெளியாகிய ‘தோ ஆங்கேன் பாரஹ் ஹாத்’ திரைப்படத்தின் கரு. சினிமாவைச் சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை உணர்த்திய தொடக்க காலப் படைப்பாளிகளில் ஒருவர் இயக்குநர் சாந்தா ராம். லட்சியவாதியான ஜெயிலர் ஆதிநாத், கொடூரமான குற்றங்களைப் புரிந்த ஆறு குற்றவாளிகளைத் தேர்ந்தெடுத்து ஒரு வறண்ட பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களையும் நல்வழிப்படுத்தி அந்த வறண்ட நிலத்தையும் விளைநிலமாக மாற்றுகிறார்.

கனமான செய்தியை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும் சினிமா ஊடகத்தின் சுவாரசியமான அம்சங்களோடு கதை சொல்லியிருப்பார் சாந்தாராம். இசையமைப்பாளர் வசந்த் தேசாயும் பாடலாசிரியர் பரத் வியாசும் சேர்ந்து உருவாக்கிய ‘ஐ மாலிக் தேரே பந்தே ஹம்’ பாடல் இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி வென்றது. இந்திய ஜனாதிபதியின் தங்கப்பதக்கத்தை வென்ற இத்திரைப்படத்தின் தமிழ் வடிவத்துக்குப் பெயர் என்ன?

3. வங்கப் பிரிவினை ஆவணம்

இந்தியாவின் முதல் கதைப் படத்தை எடுத்துப் புகழ்பெற்றவர் தாதாசாஹேப் பால்கே. ஆனால், இந்திய சினிமா சரித்திரத்தில் அவருக்கு முன்பே திரைப்படங்களை எடுத்தவர்களில் முதன்மையானவர் வங்கத்தைச் சேர்ந்த ஹிராலால் சென். 1866-ல் பிறந்து தனது 51 வயதில் காலமான ஹிராலால் சென், காலத்தால் மறக்கடிக்கப்பட்ட ஆளுமைகளில் ஒருவர். புதிய ஊடகத்தின் சாத்தியங்களைப் பரிசோதித்தவர் மட்டுமல்ல. சில பங்களிப்புகளையும் வழங்கியவர் என்று கருதப்படுகிறார். தற்போது வங்க தேசத்திலிருக்கும் போக்ஜுரியில் பிறந்த ஹிராலால், கர்சன் பிரபுவின் வங்கப்பிரிவினை அறிவிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் பேரணியைப் படமெடுத்தார். இரண்டு மைல்களுக்கும் மேல் நீண்டிருந்த மக்கள் திரளின் அடர்த்தியைக் காண்பிப்பதற்காக ஒளிப்பதிவுக் கருவியைக் கருவூலக் கட்டிடத்தின் மேல் வைத்துப் படமாக்கினார்.

வங்கப் பிரிவினை தொடர்பான முதல் அரசியல் ஆவணப்படமாக அது கருதப்படுகிறது. ஜபகுசும் கூந்தல் தைலம், எட்வர்ட்ஸ் மலேரியா மருந்து விளம்பரப் படங்களையும் எடுத்திருக்கிறார். சினிமா ஊடகம் பிறந்து தவழத் தொடங்கிய காலகட்டத்தில், கல்கத்தாவில் இரண்டு இடங்களில் மட்டுமே மின்சார வசதி இருந்த சூழ்நிலையில் படங்களை எடுக்கவும் திரையிடவும் செய்தவர் ஹிராலால். 1917-ல் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் தனது படங்களைப் பறிகொடுத்த அவர், சினிமாட்டோகிராப் மெஷினை வாங்குவதற்காகத் தந்தையிடமிருந்து பெற்ற பணம் எவ்வளவு?

where%20is%20thejpg

‘வேர் இஸ் தி ஃபிரெண்ட்ஸ் ஹோம்?

 

4. நவயுக ஈரானிய சினிமா முன்னோடி

நவயுக ஈரானிய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான அப்பாஸ் கியரோஸ்தமி இயக்கி, 1987-ல் வெளியான திரைப்படம் ‘வேர் இஸ் தி ஃபிரெண்ட்ஸ் ஹோம்?’. 1970-களின் தொடக்கத்திலேயே திரைவாழ்க்கையைத் தொடங்கிய கியரோஸ்தமிக்கு சர்வதேச கவனத்தை அளித்த திரைப்படம் இது. ஈரானிய சமூக, பொருளாதாரக் கலாசாரப் பின்னணியிலும் சினிமா தணிக்கை சார்ந்தும் குழந்தைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை மட்டும்தான் எடுக்க முடியும் என்கிற சூழலில் வெளியான திரைப்படம் இது.

ஈரானில் கோகர் நகரத்தில் நடக்கும் மூன்று திரைப்பட வரிசையில் முதல் படம் இது. இதையடுத்து ‘லைஃப் அண்ட் நத்திங் மோர்’, ‘த்ரூ தி ஆலிவ் ட்ரீஸ்’ படங்களை எடுத்தார். சிறுவன் அகமது பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுப்பாடம் செய்யும்போது தனது நண்பனின் நோட்டுப் புத்தகத்தைத் தெரியாமல் எடுத்து வந்துவிட்டதை உணர்கிறான். நண்பனின் நோட்டுப்புத்தகத்தை ஒப்படைக்காவிட்டால் அடுத்த நாள் அவன் தண்டிக்கப்படலாம் என்கிற சூழ்நிலையில் அவனைத் தேடி பக்கத்துக் கிராமத்துக்குப் பயணிக்கிறான் அகமது.

ஈரானிய கிராமிய வாழ்க்கை, நிலப்பரப்பு, மக்களது நம்பிக்கைகள் அழகிய முறையில் பதிவான திரைப்படம் இது. 14 வயதுக்குள் சிறுவர்கள் பார்க்க வேண்டிய பத்து சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்கிறது இத்திரைப்படத்தை தேர்ந்தெடுத்த அமைப்பு எது?

5. மனோன்மணியான கனவுக்கன்னி

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் அக்காலத்தில் பிரம்மாண்டமாக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, 1942-ல் வெளியான திரைப்படம் ‘மனோன்மணி’. யாரை நாயகன், நாயகியாக நடிக்க வைக்கலாம் என பொதுமக்களின் அபிப்ராயத்தைக் கேட்கும் புதுமையான யோசனை இப்படத்துக்காகப் பின்பற்றப்பட்டது. அக்காலத்தின் கனவுக்கன்னியான டி. ஆர். ராஜகுமாரியை மனோன்மணியாக மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

நாயகனாக பி. யு. சின்னப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழறிஞர் பி. சுந்தரம் பிள்ளை 1892-ல் எழுதிய காவிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்பு இது. ராஜா, இளவரசி, ராஜகுரு, சதிகார மந்திரிகள் என சுவாரசியத்துக்குக் குறைவற்ற இந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது. இப்படத்தின் நகைச்சுவை டிராக்கில் நடித்த என்.எஸ். கிருஷ்ணன்- மதுரம் ஜோடியின் எந்தப் பாடல் பிரபலமானது?

answersjpg

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article20746639.ece

Link to comment
Share on other sites

வேட்டையாடு விளையாடு 11: நிஜமான கற்பனை!

 

 
01chrcj2001-a-space-odyssey

1. நிஜமான கற்பனை!

அறிவியல் புனைவு எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் எழுதிய ‘தி சென்டினல்’. சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் உருவாக்கிய திரைப்படம் ‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’. பூமிக்கு அப்பால் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளதா என்பதை ஆராயும் ஒரு குழு, செயற்கை நுண்ணறிவுகொண்ட கணிப்பொறியான ஹால் உடன் வியாழன் கிரகத்துக்குச் செல்லும் கதை இது. விலங்குகளிலிருந்து பரிமாண வளர்ச்சியை அடைந்ததாகச் சொல்லப்படும் மனிதனின் அடுத்த நிலை என்ன என்ற கேள்வியை முன்வைத்த இத்திரைப்படம் 1968-ல் வெளியானது.

   

செயற்கை நுண்ணறிவுத் துறை, கணிப்பொறியியல் ஆகியவற்றில் வருங்காலத்தில் நடக்கப் போகும் முன்னேற்றங்களைக் கணித்த திரைப்படம் என இன்றும் விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. ஸ்பெஷல் எஃபக்டுகளுக்காக மட்டுமே ஆஸ்கர் வென்ற இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் ஷாட்கள் 205. நீல் ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் நிலவுக்குள் அடி வைப்பதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட படம் இது. பெரும்பகுதியும் உரையாடல் இல்லாத இத்திரைப்படத்தில் வசனமே இல்லாத பகுதி எவ்வளவு நேரம்?

2. அரசு இயந்திரத்தை அசைத்த படம்

கடந்த நூற்றாண்டின் இறுதியில் எய்ட்ஸ் என்ற நோய் உலகையே அச்சுறுத்திய சூழலைப் பற்றிய ஆவணப்படம் ‘ஹவ் டூ சர்வைவ் எ ப்ளேக்’. வறிய நிலையில் வாழும் மக்கள் எய்ட்ஸ் நோய் தாக்கினால் இறப்பதைத் தவிர வேறு வழியில்லாத சூழ்நிலையில் அமெரிக்க மருத்துவச் சூழல், அந்நாட்டு அரசின் பாராமுகம் பற்றி எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் டேவிட் பிரான்ஸ். 80-களின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் எய்ட்ஸ் என்ற பெயர் அறிமுகமானதிலிருந்து அது தொடர்பான தகவல்களைப் பத்திரிகையாளராகச் சேகரித்த டேவிட்டின் முதல் படைப்பான இந்த ஆவணப்படம், ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகவும் அந்நோய் பாதித்தவர்களுக்கான கவுரவம், சிகிச்சைக்காகவும் போராடிய ACT UP அமைப்பின் உறுப்பினர்களுடனான நேர்காணல்கள், அவர்கள் நடத்திய போராட்டங்கள், கருத்தரங்குகள் என 700 மணிநேரம் ஒளிப்பதிவு செய்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஆவணப்படம் இது. ஒருகட்டத்தில் எய்ட்ஸ் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி அமெரிக்க அரசு எய்ட்ஸ் ஆராய்ச்சிக்காக நிதியொதுக்குவதற்கும் காரணமாக அமைந்த படம் இது. எய்ட்ஸ் தாக்கிய யாருடைய மரணம் டேவிட் பிரான்ஸை இப்படத்தை எடுக்கத் தூண்டியது?

01chrcjSitthoorranipadmini

‘சித்தூர் ராணிபத்மினி’ படத்தில் சிவாஜி, வைஜெயந்தி மாலா

 

3. வாய்மொழி வரலாற்றின் ராணி

ராஜஸ்தானைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. ஆனாலும், ராணி பத்மினி என்பவர் மக்களின் வாய்மொழிக் கதைகள் வழியாக, ஓவியங்களின் வழியாக மக்கள் மனதில் நிலைத்த கற்பனைக் கதாபாத்திரம் என்று வரலாற்றாசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னாட்களில் இயக்குநராகப் பெரும்புகழ்பெற்ற சி.வி.ஸ்ரீதர், கதை வசனகர்த்தா இளங்கோவுடன் சேர்ந்து எழுதி, சித்ரபு நாராயணமூர்த்தி இயக்கத்தில் 1963-ல் வெளியான திரைப்படம் ‘சித்தூர் ராணி பத்மினி’.

சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எம்.என். நம்பியார், டி.எஸ்.பாலையா எனப் பெரிய நட்சத்திரங்களின் பட்டாளமே நடித்த படம் இது. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் ஆசைக்கு ஆட்படாமல், மரணம் மூலம் தப்பிக்கும் ராணி பத்மினியின் கதை இது. அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற கலை இயக்குநரான ஏ.கே.சேகர் இப்படத்துக்காக உருவாக்கிய செட்களும் உடைகளும் மிகவும் பேசப்பட்டன. ஜி.ராமநாதனின் இசையில் மிக எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்தின் பாதிப்பில் இந்தியில் எடுக்கப்பட்டுத் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் திரைப்படம் எது?

4. ஆஸ்கர் படத்துக்கு ஆதர்சம்!

நிழலுலக தாதாக்களைப் பற்றி கொலைகள் நடக்கும்போதோ அவர்கள் கொல்லப்படும்போதோ கேள்விப்படுகிறோம். மற்றவர்களைக் கொல்வதற்கும் அவர்களே இறந்துபோவதற்கும் நடுவில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? இந்தக் கேள்விக்கான பதில்தான் ராம் கோபால் வர்மா இயக்கி 1998-ல் வெளியான ‘சத்யா’ திரைப்படம். மும்பையின் நிழல் உலகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பம், உறவுகள், நண்பர்கள், காதல், ஆசாபாசங்கள் என அவர்களது தனிப்பட்ட அன்றாட வாழ்க்கையை மிக நெருக்கமாகச் சித்தரித்த திரைப்படம் இது. ஜே. டி. சக்கரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய், ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர்களில் ஒருவர், பின்னர் ‘தேவ் டி’ என்ற புகழ்பெற்ற இந்திப் படத்தின் இயக்குநராகப் பிரபலமான அனுராக் காஸ்யப்.

‘சத்யா’ படத்தில் இடம்பெற்ற சந்தீப் சவுதாவின் பின்னணி இசை, பாலிவுட் சினிமா ஒரு தரத்தை அடைந்ததன் அடையாளமாகப் பாராட்டப்பட்டது. இதே படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் விஷால் பரத்வாஜ். சிறந்த திரைப்படமென்று விமர்சகர்களாலும் பாராட்டப்பெற்று வசூலிலும் வென்றது ‘சத்யா’. ‘சத்யா’வை உந்துதலாகக் கொண்டு, மும்பையைக் கதைக் களமாக்கி, டேனி பாயல் இயக்கிய ஆஸ்கர் விருதுப் படம் எது?

01chrcjsathya

‘சத்யா’ படத்தில்

 

5. ஓவியம்போல் ஆன ஒளிப்பதிவு!

சர்வதேச சினிமாவில் இரண்டாயிரத்துக்குப் பிறகு தன் படைப்புகளின் வழியாக அதிகம் பேசப்பட்டவர் தென் கொரியாவைச் சேர்ந்த இயக்குநர் கிம் கி டுக். காமம், குற்றம், வன்முறை வாயிலாக ஞானத்தை அடையும் பவுத்த மடாலயத்தில் வளரும் சிறுவனின் கதையைப் பருவங்களினூடாகச் சொன்ன ‘ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர் அண்ட் ஸ்ப்ரிங்’ திரைப்படம் 2003-ல் வெளியானது.

மலைகளுக்கு நடுவே நூற்றாண்டுகளைக் கடந்த மரங்களின் நிழல்கள் தெள்ளியதாகத் தெரியும் அழகிய ஏரி ஒன்றில் அமைந்திருக்கும் பவுத்த மடாலயச் சூழலில் தொடங்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு கீழைநாடுகளின் ஓவிய பாணி கலைவண்ணத்தை ஞாபகப்படுத்தியது. காட்சிகளின் வாயிலாகவே உணர்வுகளைச் சொல்லத் தெரிந்தவர் என்று புகழப்படும் கிம் கி டுக், இந்தப் படத்தில் எந்தக் காட்சிப் படிமத்தை அதிகமாகப் பயன்படுத்தினார்?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article21228893.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வேட்டையாடு விளையாடு 12: மிருணாள் சென் இயக்கிய தெலுங்குப் படம்!

 

 

08chrcjranjan

ரஞ்சன்

1. மிருணாள் சென் இயக்கிய தெலுங்குப் படம்!

1970, 80-களில் இந்தியா முழுக்க மாற்று சினிமா அலை இருந்தபோதும் தெலுங்கு சினிமாவில் மட்டும் அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்தச் சூழ்நிலையில் தெலுங்கு சினிமாவில் எடுக்கப்பட்ட மிகச் சில மாற்று முயற்சிகளில் ஒன்று ‘ஒக்க ஊரி கதா’. பிரபல இந்தி எழுத்தாளர் முன்ஷி ப்ரேம் சந்தின் ‘கஃபான்’-ன் சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு மிருணாள் சென் தெலுங்கில் எடுத்த திரைப்படம் இது.

வறுமை, ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும் மது போதை ஆகிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சினிமாவை, மிருணாள் சென் தெலங்கானா பகுதியில் படம்பிடித்தார். குடிகாரத் தந்தை, மகனாக வாசு தேவ ராவ், நாராயண ராவ் ஆகியோர் நடித்தனர். பிரசவத்தில் மருத்துவ வசதியில்லாமல் இறந்துபோகும் மருமகள் கதாபாத்திரத்தில் நடனக் கலைஞர்கள் உதய் ஷங்கர், அமலா ஷங்கரின் மகள் மமதா ஷங்கர் நடித்தார். இந்துஸ்தானி புல்லாங்குழல் கலைஞர் பண்டிட் விஜய ராகவ ராவ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு மொழிக்கான தேசிய விருதை வென்ற ஆண்டு எது?

2. ஹாலிவுட்டில் தடம் பதித்த சசி கபூர்!

ங்கிலப் படங்களில் நடித்ததன் மூலம் சர்வதேசக் கவனம் பெற்ற ஓம்பூரி, நஸ்ருதீன் ஷா, அமிதாப் பச்சன், இர்ஃபான் கான் போன்றவர்களுக்கு முன்னோடி சமீபத்தில் காலமான சசி கபூர். ஹெர்மன் ஹெஸ்யேயின் புகழ்பெற்ற சித்தார்த்தா நாவலின் திரைவடிவத்தில், அந்தணக் குடும்பத்தில் பிறந்து சமணனாக மாறி, வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் இளம் சித்தார்த்தனாக நடித்தவர் சசி கபூர்.

08CHRCJSASI

‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் சசி கபூர்

கோன்ராட் ரூக்ஸ் இயக்கத்தில் ‘சித்தார்த்தா’ என்ற பெயரிலேயே இந்த அமெரிக்கப்படம் 1972-ல் வெளியானது. முழுக்க முழுக்க வட இந்தியாவிலும், பெரும்பகுதி பரத்பூர் மகாராஜாவின் அரண்மனைகளிலும் உருவாக்கப்பட்டது. ஸ்வென் நைக்விஸ்டின் கவித்துவமான ஒளிப்பதிவு இப்படத்துக்காக இன்றும் கொண்டாடப்படுகிறது.

வியட்நாம் போருக்குப் பின்னர் நம்பிக்கையும் ஊக்கமும் குறைந்திருந்த அமெரிக்க இளைஞர்களிடையே சித்தார்த்தன் என்ற இளைஞனின் ஞானத்துக்கான யாத்திரை பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. சித்தார்த்தனுக்கும் தாசி கமலாவுக்கும் இடையிலான நெருக்கமான காட்சிகளை கஜூரோஹா சிற்பங்களின் தாக்கத்தில் கோன்ராட் ரூக்ஸ் எடுத்திருந்தார். இந்தியாவில் அக்காலகட்டத்தில் அந்த சர்ச்சைக்குள்ளான காட்சிகளில் நடித்த இந்திய நடிகை யார்?

3. பாக்யராஜ் செய்த மறுஆக்கம்

பாலிவுட்டின் அறிவியல் புனைவுப் படமான ‘மிஸ்டர் இந்தியா’, இன்றும் சிறந்த பொழுதுபோக்கு சினிமாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1987-ல் வெளியான படங்களில் தேசிய அளவில் அதிகபட்ச வசூலைக் குவித்த படம் இது. இரும்புக்கை மாயாவியைப் போல் கையில் கட்டியிருக்கும் தங்கக் கடிகாரத்தைத் தடவினால் உருவம் மறைந்து பல சாகசங்களில் ஈடுபடும் நாயகனாக அனில் கபூர் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவிக்குப் பெரும் புகழ் கிடைத்தது. ‘பாண்டிட் குயின்’ மூலம் சர்வதேச கவனத்தைப் பின்னால் பெற்ற சேகர் கபூர் இயக்கிய ‘மிஸ்டர் இந்தியா’, இந்திய சினிமா நூற்றாண்டின்போது சிறந்த நூறு இந்தியத் திரைப்படப் பட்டியலில் இடம்பெற்றது. நாயகனாக அனில் கபூர் ஏற்ற மிஸ்டர் இந்தியா கதாபாத்திரம் அமிதாப் பச்சனால் மறுக்கப்பட்டது.

08CHRCJmrindia

‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் அனில் கபூர், ஸ்ரீதேவி

பாலிவுட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் கூட்டணியான சலீம்-ஜாவேத் இணைந்து எழுதிய கடைசி திரைப்படம் இது. லக்ஷ்மி காந்த் பியாரேலால் இசையமைத்த பாடல்கள் மூலம் இந்தியாவையே அதிரவைத்த இப்படம் தமிழில் இயக்குநர் கே. பாக்யராஜால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அந்தப் படம் எது?

4. இந்தியாவை அதிரவைத்த நடிகர்!

துரை முருகன் டாக்கீஸ் தயாரித்து அந்நாளைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து 1941-ல் வெளியான திரைப்படம் ‘அசோக் குமார்’. மாமன்னர் அசோகர் தொடர்புடைய பவுத்தக் கதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. கர்னாடக இசை மேடைகளிலும் சினிமாவிலும் பிரபலமாக இருந்ததால் தியாகராஜ பாகவதர் செய்த தாமதத்தையும் மீறி படம் வெற்றிபெற்றது.

ராஜா சந்திரசேகர் இயக்கிய இந்தப் படத்தில் இளவரசன் குணாளனாக பாகவதரும், அவருடைய தாய், தந்தையாக கண்ணாம்பா மற்றும் நாகையாவும் நடித்தனர். தமிழில் கண்ணாம்பாவுக்கு இரண்டாவது படம் என்பதால் தெலுங்கில் எழுதி வைத்து வசனங்களைப் பேசினார் கண்ணாம்பா. இப்படத்தில் எம்ஜிஆர் சிறிய வேடத்தில் எம். ஜி. ராமச்சந்தர் என்ற பெயரில் நடித்தார். இப்படத்தில் புத்தராகச் சிறிய வேடத்தில் நடித்து பின்னர், சந்திரலேகா வழியாக இந்தியாவையே அதிரவைத்த நடிகர் யார்?

5. சினிமா பற்றிய ஆவணப்படம்

சினிமாவின் நூற்றாண்டை முன்னிட்டு மோஹ்சன் மக்மல்பஃப் 1995-ல் ஒரு டாகு டிராமா எடுத்தார் . ஒரு புதிய படத்துக்காக நடிகர், நடிகையர் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து, முகவரி தரப்பட்ட இடத்துக்கு ஆயிரக்கணக்கான பேர் வருகின்றனர். கிட்டத்தட்ட அங்கே ஏற்படும் கலவரச் சூழ்நிலையை அமைதிப்படுத்தி, நடிகர், நடிகையரை நேர்காணல் செய்வதுதான் இப்படம். உண்மைக்கும் புனைவுக்கும் இடையிலான எல்லைகள் மயங்குவதை அற்புதமாக வெளிப்படுத்தும் ஆவணப் படைப்பு இது. சினிமா இயக்குநருக்குள்ள சக்தி, அதிகாரத்தை வெளிப்படுத்தும் இப்படம், சினிமாவில் நடிக்க, சிரிக்கவும் அழவும் காத்திருக்கும் எத்தனையோ பேரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறந்த பதிவாக இருந்த இப்படத்தின் பெயர் என்ன?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article21290790.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வேட்டையாடு விளையாடு 13: எட்டு ஜோடிகளின் வாழ்க்கை!

 

 
22chrcjlove%20acuvaly

‘லவ் ஆக்சுவலி’

1. எட்டு ஜோடிகளின் வாழ்க்கை!

‘லவ் ஆக்சுவலி’. நேசத்தின் செய்தியைத் தலைப்பிலேயே சொல்லும் இந்தப் படத்தின் மொத்தக் கதையும் லண்டனைச் சேர்ந்த எட்டு ஜோடிகளின் வாழ்க்கையில் நடக்கும் பிரிவும் இணைவும்தான். இந்தக் கதைகளில் பிரிட்டிஷ் பிரதமரின் காதல் கதையும் இடம்பெற்றுள்ளது. பிரதமரின் காதலில் இடையூறை ஏற்படுத்துபவர் அமெரிக்க அதிபர். இந்த ஆறு பேரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் காதலும் நேசமும் கிறிஸ்துமஸ் நாளன்று துளிர்க்கிறது.

   

செப்டம்பர் 11 விமானத் தாக்குதலில் பலியான அப்பாவிப் பயணிகள் இறக்கும் தருவாயில் தங்கள் பிரியமானவர்களுக்கு விடுத்த செய்தியில் அன்பைத் தவிர வேறெதுவுமில்லை என்பது படத்தின் தொடக்கத்திலேயே டேவிட் என்ற கதாபாத்திரத்தின் குரலில் நினைவூட்டப்படுகிறது. 2003-ல் வெளியாகி வெற்றிபெற்ற இத்திரைப்படம், பண்டிகைக் காலத்தில் சிரித்துக் கொண்டாடி மனம் நெகிழ்ந்து பார்ப்பதற்கான படைப்பாகக் கருதப்படுகிறது.

ஹக் கிராண்ட், எம்மா தாம்சன், பில் நை எனப் பெரும் நட்சத்திரப் படையே நடிக்க, பெரும்பாலும் பண்டிகைப் பருவத்தின் இரவுப் பின்னணியில் பாடல்களுடனும் நடனங்களுடன் எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்கியவர் ரிச்சர்ட் கர்டிஸ். இத்திரைப்படத்தில் ரூபஸ் என்ற கதாபாத்திரமாக பரிசுப் பொட்டலத்தைத் திரும்ப திரும்ப உருவாக்கும் சேல்ஸ்மேனாக நடித்தார் ரோவான் அட்கின்சன். மிகப் பிரபலமான அந்த நகைச்சுவைக் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

2.வளைந்துகொடுத்த ஆஸ்கர்!

கருணையையும் மன்னிக்கும் இயல்பையும் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் வகையில், சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய கதையைத் தழுவி 1971-ல் எடுக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் ‘எ கிறிஸ்துமஸ் கரோல்’. முதலில் தொலைக்காட்சித் திரைப்படமாக எடுக்கப்பட்டு, பின்னர் திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டு வெற்றிபெற்றது. ரிச்சர்ட் வில்லியம்ஸ் இயக்கிய இத்திரைப்படத்தின் உருவாக்கத்தில் தலைசிறந்த அனிமேட்டரான கென் ஹாரிஸின் பங்களிப்பு முக்கியமானது.

சார்லஸ் டிக்கன்ஸின் கதைகளை அடிப்படையாக வைத்து வெளியான திரைப்படைப்புகளில் ஆஸ்கர் விருதை வென்ற படம் இதுதான். 1972-ம் ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்காக இந்த விருது கிடைத்தது. தொலைக்காட்சியில் வெளியான ஒரு படைப்புக்காகத் தனது விதிகளையே இந்தக் குறும்படத்துக்காகத் தளர்த்தியது ஆஸ்கர் அமைப்பு. அன்பு, ஈகையின் மகிமையை உணராத பணக்காரக் கஞ்சன் எபினேசர் க்ரூஜ்ஜை மூன்று ஆவிகள் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் இரவு திருத்துவதாக எழுதப்பட்ட இந்த கிளாசிக், எந்த ஆண்டு புத்தக வடிவில் வெளியிடப்பட்டது?

22chrcjchristmascarol

3. வடதுருவம் நோக்கி ஒரு ரயில் பயணம்!

சாண்டா கிளாஸ் வசிப்பதாகச் சொல்லப்படும் வடதுருவ உறைபனிப் பகுதிக்கு மந்திர ரயிலொன்றில் பயணிக்கும் சிறுவனின் சாகசம்தான் 2004-ல் வெளியான ‘போலார் எக்ஸ்பிரஸ்’. லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் வகையில் கிளாசிக் என்று கருதப்படும் இப்படம் குடும்பம் மொத்தமும் உட்கார்ந்து கண்டுகளிக்க வேண்டிய படமாகும். ‘பெர்பார்மன்ஸ் கேப்ட்சர்’ உத்தியில் உருவான முதல் முழு நீளக் கதைப்படம் இது. எந்தப் பின்னணியோ அரங்கப் பொருட்களோ இல்லாமல் நடிகர்கள் முழுமையாகக் கற்பனையில் நடிக்க வேண்டிய சவால் இத்தொழில்நுட்பத்தில் உள்ளது. குழந்தைகளுக்கான கதாசிரியர் க்ரிஸ் வேன் ஆல்ஸ்பர்க் எழுதிய சித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு ராபர்ட் ஜெமெக்கிஸ் இயக்கிய இத்திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் யார்?

22chrcjthe%20polar%20express
 

4. கேரளம் தந்த படம்

கேரள திரைப்பட ரசிகர்கள், பைபிள், கிறிஸ்துவின் வாழ்க்கை தொடர்பான ஆங்கிலத் திரைப்படங்களைப் பெரும் வெற்றிபெறச் செய்தவர்கள். கிறிஸ்துவின் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மலையாள நாடகங்களும் பெரும் வெற்றிபெற்றவை. இயேசுவின் கதை முழுமையாகக் கையாளப்பட்ட மலையாளத் திரைப்படம் ஜீசஸ். 1973 டிசம்பர் 21 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. தமிழிலும் வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தது.

பி. ஏ. தாமஸ் யுனிவர்சல் பிக்சர்ஸ் பேனரில் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் புகழ்பெற்றவை. எம். எஸ். விஸ்வநாதன், யேசுதாஸ், ஆலப்புழை ரங்கநாத், ஜோசப் கிருஷ்ணா ஆகியோர் சேர்ந்து இசையமைத்திருந்தனர். முரளி தாஸ் இயேசுவாகவும், ஜெமினி கணேசன் ஞானஸ்நானம் அளிக்கும் யோவானாகவும் எம். என். நம்பியார், இயேசுவின் சீடர் யூதாசாகவும் நடித்திருந்தனர். கே. ஜே. யேசுதாஸ் பாடிய ‘காகுல்தா மலைகளே’ இன்றும் நினைவுகூரப்படும் பாடல். இப்படத்தில் சலோமி கதாபாத்திரத்தில் நடித்த புகழ்பெற்ற நடிகையும் ஆளுமையும் யார்?

22chrcjBLACKCHRISTMASPOSTER
 

5. மன்னிப்பைக் கோரும் ஆவணம்!

ஆப்ரிக்கெனர் ரெஸிஸ்டெனர் மூவ்மெண்ட் என்றழைக்கப்படும் வெள்ளை ஏகாதிபத்திய அமைப்பைச் சேர்ந்தவர்களால் 1996-ல் கிறிஸ்துமஸ் அன்று ஒரு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தென் ஆப்ரிக்காவிலுள்ள வோர்செஸ்டர் நகரத்தில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் ஒரு கறுப்பினத் தாயும் அவருடைய மூன்று குழந்தைகளும் கொல்லப்பட்டனர். அந்தக் குண்டுவெடிப்புத் தாக்குதல் குழுவிலிருந்த இளைய குற்றவாளியான ஸ்டெபான்ஸ் கோய்ட்ஸீ, தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று பேசி அவர்களிடம் மன்னிப்பு பெறுவதே ‘ப்ளாக் கிறிஸ்துமஸ்’ ஆவணப்படம். புகழ்பெற்ற இயக்குநர் மார்க் கப்லான் இயக்கிய இப்படம் நிறவெறியின் பாதிப்புகளை ஒடுக்கப்பட்டவர்கள் பார்வையிலிருந்து மட்டுமல்ல ஒடுக்குமுறையாளர்களின் தரப்பிலிருந்தும் பேசுவது. மனித உரிமைகள், இனவெறிப் பிரச்சினைகள் தொடர்பாகத் தொடர்ந்த ஆவணப்படங்கள் எடுத்துவரும் மார்க் கப்லான் தனது எந்த ஆவணப்படத்துக்காக 2005-ல் எம்மி விருது பெற்றார்?

விடைகள்: 1.மிஸ்டர் பீன், 2. 1843, 3.டாம் ஹாங்ஸ், 4.ஜெயலலிதா, 5.எ லயன்ஸ் ட்ரையல்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22150424.ece

Link to comment
Share on other sites

வேட்டையாடு விளையாடு 14: ஆஸ்கரைத் தவறவிட்ட ‘இந்தி’யப் படம்!

 

 
29chrcjfive%20broken%20camaras

பைவ் ப்ரோக்கன் கேமராஸ்

1. ஆஸ்கரைத் தவறவிட்ட ‘இந்தி’யப் படம்!

சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை ஒரு ஓட்டில் இழந்த பெருமை பெற்ற ‘மதர் இண்டியா’ 1957-ல் வெளியானது. சுனில் தத், நர்கீஸ் ஜோடிக்கு அழியாப் புகழைக் கொடுத்த படம் இது. மகபூப் கான் இயக்கிய இதன் கதை திருமணத்துக்குப் பின்னான பெண்ணின் நிலை, வட்டியால் அவதிப்படும் இந்திய விவசாயிகளின் நிலை ஆகியவற்றைப் புரட்சிகரமாக வெளிப்படுத்தியது. விமர்சனரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றிபெற்ற படம் இது. இதன் தலைப்பு இந்தியாவைக் கேலிசெய்து எழுதப்பட்ட கேதரீன் மயோ-வின் நூலுக்கு எதிர்வினையாக வைக்கப்பட்டது. இப்படத்தில் முதன்முறையாகக் கதாநாயகி வேடம் ஏற்ற நர்கீஸின் இயற்பெயர் என்ன?

2. ஓர் இயக்குநரின் கலை உச்சம்!

போலந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டாப் கைஸ்லோவ்ஸ்கியின் ‘ப்ளூ’ (1993), ‘வைட்’ (1994), ‘ரெட்’ (1994) எனும் ட்ரையாலஜி முதன்மையாகக் கொண்டாடப்படுகிறது. ‘த்ரீ கலர்ஸ்’ ட்ரையாலஜி என்று அழைக்கப்படும் இப்படைப்பின் மூன்று வண்ணங்களும் பிரான்ஸின் தேசியக்கொடியில் இருப்பவை. ‘ப்ளூ’ சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் ‘வைட்’ சமத்துவம் என்ற கருத்தாக்கத்தையும் பரிசீலிக்கும் கதைகளைக் கொண்டவை. மனித உறவுகளில் தார்மிகரீதியாகவும் ஆன்மிகரீதியாகவும் நிலவும் சிக்கல்களைக் கையாள்வதில் ஆர்வமுள்ள கைஸ்லோவ்ஸ்கியின் கலை உச்சமாக இந்தப் படைப்புகள் கருதப்படுகின்றன. வாழ்வில் தற்செயல் நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் புதிர்போல மனிதர்கள்மீது கவிந்துவிடும் விதியையும் ‘ரெட்’ படத்தின் மூலமாக ஆராயும் கைஸ்லோவ்ஸ்கி, சமகால இயக்குநர்களான குவெண்டின் டாரண்டினோ, அலெஜேண்ட்ரோ கோன்சாலெஸ் இனாரிட்டு போன்றவர்களை இப்படம் பெரிதும் பாதித்துள்ளது. சிறந்த இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவுக்காக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்த மூன்று படங்களையும் பத்து மாதங்களில் எடுத்தார். இதையடுத்து தனது ஓய்வை அறிவித்தபோது அவருக்கு வயது என்ன?

29chrcjmother%20india

மதர் இண்டியா

3. தமிழ் சினிமா தந்த ராமாயணம்

மவுனப்படக் காலத்திலிருந்தே ராமாயணம் சினிமாக் கலைஞர்களை ஈர்த்துள்ளது. பேசும் படமாக ‘சம்பூர்ண ராமாயணம்’ தமிழில் முதலில் 1958-ல் வெளியானது. 22 ஆயிரம் அடிகள் நீளம்கொண்ட மூன்றரை மணி நேரம் ஓடும் இத்திரைப்படத்தின் திரைக்கதையைப் பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எழுத, கே. சோமு இயக்கினார். எம்.ஏ.வேணு தயாரித்தார். ராமனும் சீதையுமாக என்.டி.ராமராவும் பத்மினியும் நடித்தனர். பரதனாக சிவாஜி கணேசன் நடித்தார். ராவணனாக டி.கே.பகவதி காட்டிய பராக்கிரமம் திரை ரசிகர்கள் மறக்காதது. தசரதராக நாகையாவும் கைகேயியாக வரலட்சுமியும் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசையில் மருதகாசி எழுதிய பாடல்கள் புகழ்பெற்றவை. ராவணனுக்காக சி.எஸ்.ஜெயராமன் பாடிய ‘இன்று போய் நாளை வா’ பாடல் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இன்றும் நிற்பதோடு, பிரபல இந்துஸ்தானிக் கலைஞரான பீம்சென் ஜோஷியையும் கவர்ந்தது. இந்தப் படம் உருவாக்கப்பட்ட ரத்னா ஸ்டுடியோ எந்த ஊரில் அமைந்திருந்தது?

4. உடைக்கப்பட்ட கேமராக்கள் !

ஆறு ஆண்டுகள் உழைப்பில் உருவான ஆவணப்படம் ‘ஃபைவ் ப்ரோக்கன் கேமராஸ்’. இஸ்ரேலிய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட தனது கிராமத்தின் ஆலிவ் மரத் தோப்புகளின் அழிவு, அந்த நிலத்தில் தடுப்புச்சுவர் கட்டுவதை எதிர்க்கும் மக்களின் அமைதிப் போராட்டம் ஆகியவற்றைச் சொல்லும் படம் இது. கிராமத்தில் நடக்கும் தொடர் போராட்டத்தைப் படம் பிடிக்கும் இமாட் பர்னாட்டின் ஆறு கேமராக்கள் இஸ்ரேலிய ராணுவத்தினரால் அடுத்தடுத்து உடைத்து நொறுக்கப்பட்டன. ஒவ்வொரு கேமரா உடையும் பின்னணியில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. பாலஸ்தீனியர் இமாட் பர்னாட், இஸ்ரேலியர் கய் தாவிதி இருவரும் சேர்ந்து உருவாக்கிய படம் இது. தேசங்கள், பேதங்கள் கடந்த ரசவாதம் இந்த ஆவணப்படம். 2013-ம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இதன் இயக்குநர் இமாட் பர்னாட், ஆஸ்கர் நிகழ்ச்சியில் பங்கேற்க லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இறங்கியபோது அவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு எந்த ஆவணப்பட இயக்குநரின் பரிந்துரையின் பேரில் அவருக்கு அனுமதி தரப்பட்டது?

29CHRCJSAMPOORNARAMAYANAM

சம்பூர்ண ராமாயணம்

5. துயரக் காதலின் இசை

ஹாங்காங்கைச் சேர்ந்த இயக்குநர் வோங் கார்வாய் எடுத்த துரதிர்ஷ்டம் பிடித்த அழகிய காதல் கதை இது. அறுபதுகளின் காலத்தின் ஒப்பனை, உடைகள் ஆகியவற்றுடன் ஓவியம் போல உருவான ‘இன் தி மூட் ஃபார் லவ்’ என்னும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் டாய்ல். ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் இரண்டு தம்பதியரில் ஒவ்வொருவரும் அடுத்த இணையின் பால் ஈர்க்கப்படுகின்றனர். நகரமயமாதல், கணவன்-மனைவி உறவுக்குள்ளேயே ஏற்படுத்தும் தனிமை, ஏக்கம், நிறைவேறாத காதல் அனைத்தும் இணைந்த இப்படத்தின் இசை மிகவும் பேசப்பட்டது. ‘யுமிஜிஸ் தீம்’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் புகழ்மிக்க சவுண்ட் டிராக்கை உருவாக்கிய இசையமைப்பாளர் யார்?

answersjpg

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22298134.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வேட்டையாடு விளையாடு 15: பெற்றோர்கள் பேசுவதை நிறுத்தினர்!

 

 
12chrcjles%20400%20cups

1.பெற்றோர்கள் பேசுவதை நிறுத்தினர்!

நியூ வேவ் என்னும் புதிய அலை சினிமாவை வரையறை செய்த திரைப்படம் '400 ப்ளோஸ்'. திரைப்பட விமர்சகராக பிரான்சில் புகழ்பெற்ற ப்ரான்ஸூவா த்ரூபோ 1959-ல் எடுத்த முதல் முழுநீளத் திரைப்படம் இது. கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்ற இளையவர் என்ற பெருமையும் த்ரூபோவுக்குக் கிடைத்தது. பெற்றோரிடமும் பள்ளியிலும் பொருந்தவே முடியாமல் போகும் பாரீஸைச் சேர்ந்த இளம் சிறுவன் அண்டோனி டோய்னலின் பால்யம்தான் இப்படத்தின் கதை. தமிழ் சினிமா இயக்குநர் பாலுமகேந்திராவைப் பெரிதும் பாதித்தது இத்திரைப்படம்.

       

இதைப் பார்த்த பிறகு ப்ரான்ஸூவா த்ரூபோவின் பெற்றோர்கள் அவரிடம் மூன்று ஆண்டுகள் பேசவேயில்லை. பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை ஒருவர் சொந்தமாகப் படமெடுப்பதற்கு இரண்டாம்நிலை உதவி இயக்குநராகவும் முதல்நிலை உதவி இயக்குநராகவும் ஐந்து படங்களில் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் அனுபவமேதுமில்லாத த்ரூபோவுக்கு அவருடைய வாழ்க்கையையே படமாக எடுப்பதற்கு சென்டர் நேஷனல் டியு சினிமா அமைப்பு அனுமதி அளித்தது. இந்தப் படம் யாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது?

12chrcjeric%20brokovige
 

2. ஒரு பெண்ணின் போராட்டம்

உயர்கல்விப் பின்னணி இல்லாத, இரண்டுமுறை விவாகரத்தான, வேலைதேடும் மூன்று குழந்தைகளின் தாய், தான் வசிக்கும் பகுதியில் தண்ணீரை மாசுபடுத்தும் பசிபிக் கேஸ் அண்ட் எலக்ட்ரிக் பெருநிறுவனத்துக்கு எதிராகப் போராடி வெல்லும் கதைதான் ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து ஆஸ்கர் விருது வென்ற ‘எரின் ப்ராக்கோவிச்’. அமெரிக்காவில் நடந்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், கதையின் நாயகியை முன்னிறுத்தி வசூலைக் குவிக்க முடியும் என்பதை நிரூபித்தது.

ஜூலியா ராபர்ட்ஸ் ஹாலிவுட் சரித்திரத்திலேயே ஒரு நாயகி நடிகை வாங்கியிராத 20 மில்லியன் டாலரைச் சம்பளமாகப் பெற்றார். ஸ்டீபன் சோடர்பெர்க் இயக்கி 2000-ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் சிறந்த நீதிமன்ற வாதாடல் காட்சிகளைக் கொண்டது. ஒரு தாயாக பொருளாதார நெருக்கடி ஒரு புறமிருக்க, தன் பகுதி மக்களுக்கு நஷ்ட ஈடு கோரும் போராட்டத்தைத் தொடரும் போராளியாகச் சிரிக்கவும் நெகிழவும் வைக்கும் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் எத்தனை முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்?

3. நவீன காலத்தின் தேவதாஸ்

இழந்த காதலுக்கு அடையாளமான தேவதாஸை நாயகனாக்கி நாவலாக எழுதியவர் வங்க எழுத்தாளரான சரத் சந்திர சட்டபாத்யாய. 1917-ல் எழுதப்பட்டு பின்னர் இந்தியா முழுவதும் திரை இயக்குநர்களையும் பார்வையாளர்களையும் ஈர்த்தது தேவதாஸ் நாவல். 1928-ல் இயக்குநர் பி.சி. பருவாவால் மவுனப்படமாக எடுக்கப்பட்டது. அவரே 1935-ல் வங்காள மொழியிலும் இந்தியிலும் அதைப் பேசும் படமாக்கினார்.

பின்னர் 1955-ல் துயர நாயகனாக திலீப் குமாரை நாயகனாக்கி பிமல் ராய் எடுத்த ‘தேவதாஸ்’ இன்றும் பாலிவுட் திரைக்காவியங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. நாகேஸ்வர ராவ், கமல் ஹாசன், ஷாரூக் கான் என காலங்காலமாக நாயகர்கள் துயர நாயகர்களாக பல்வேறு மொழிகளில் வடிவெடுத்த தேவதாஸின் கதையை நவீன வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாற்றி அனுராக் காஸ்யப் எடுத்து வெற்றிபெற்ற திரைப்படம் எது?

12CHRCJDEVDAS
 

4. ராஜாஜிக்கு சினிமா பிடிக்கும்!

அப்போது இளம் இயக்குநராக இருந்த சிங்கீதம் சீனிவாச ராவ், 90 வயதுகளில் இருந்த மூதறிஞர் ராஜாஜியிடம் சென்று அவரது நாவலைப் படமாக்குவதற்கு அனுமதி கேட்டுப் போனார். ராஜாஜிக்கு சினிமா பிடிக்காது என்று கேள்விப்பட்டிருந்த சீனிவாச ராவ், அவரிடம் தயங்கித் தயங்கி தனது அனுமதியைக் கேட்டார். “யார் சொன்னது? எனக்கு மோசமான படங்களைத்தான் பிடிக்காது” என்று சூடாகப் பதில் சொல்லி, அனுமதி அளித்தார். மதுவின் தீமைகள் குறித்தும் அது குறிப்பாக குடும்பங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் 1974-ல் எடுக்கப்பட்ட அந்தப் படம்தான் ‘திக்கற்ற பார்வதி’.

ஸ்ரீகாந்த் - லக்ஷ்மி இருவரும் நாயகன், நாயகியாக நடிக்க கருப்பு வெள்ளையில் வெளியான திரைப்படம் இது. வீணை சிட்டிபாபு இசையமைத்து, ஒளிப்பதிவாளர் ரவி வர்மா பணியாற்றிய இத்திரைப்படத்தின் ஒரு பாடலை ராஜாஜியே எழுதியிருந்தார். சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்ற இத்திரைப்படம் 28 நாளில் ஒரே கட்டமாக ராஜாஜியின் பிறந்த ஊரில் படம்பிடிக்கப்பட்டது. அந்த ஊர் எது?

12chrcjgates-of-heaven
 

5. ஷூவைத் தின்ற இயக்குநர்!

போர்ச் சூழ்நிலைகளில் பாதிக்கப்படும் சமூகங்களைக் குறித்த அரசியல் ரீதியான ஆவணப்படங்களை எடுப்பதற்குப் புகழ்பெற்றவர் எர்ரல் மோரிஸ். ‘தி ஃபாக் ஆப் வார்’, ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் ப்ரொசிஜர்’ போன்ற படங்கள் புகழ்பெற்றவை. இவர் 1978-ல் எடுத்த ‘கேட்ஸ் ஆப் ஹெவன்’ உள்ளடக்க அளவிலேயே சுவாரசியம் மிக்கது. செல்ல வளர்ப்புப் பிராணிகளுக்காக ஆடம்பரமான சமாதிகளைக் கட்டி மரியாதை செய்யும் வித்தியாசமான மனிதர்கள் பற்றியது இந்த ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தில் தாங்கள் வளர்த்த பூனை, நாய்களைப் பற்றி ஆத்மார்த்தமாகவும் நேசத்துடன் அவர்கள் பேசும் நேர்காணல்களும் இந்தப் படத்தில் உள்ளன.

மனித இயல்பிலுள்ள சோகம், நகைச்சுவை, முரண்பாடுகளைப் பேசும் இந்த ஆவணப்படம் செவ்வியல் ஆக்கங்களில் ஒன்றாகப் பேசப்படுகிறது. இப்படம் குறித்த யோசனையை எர்ரல் மோரிஸ் சொன்னபோது அவரது நண்பரும் புகழ்பெற்ற இயக்குநருமான ஒருவர், “இத்திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டால் நான் எனது ஷூவைச் சாப்பிடுவேன்” என்று சவால் விட்டார். அந்த சவாலில் தோற்று ஷூ சாப்பிட்ட அந்த இயக்குநர் யார்?

ansjpg

http://tamil.thehindu.com

 

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வேட்டையாடு விளையாடு : 500 நாட்கள் படப்பிடிப்பு

mughal-e-azam

1. 500 நாட்கள் படப்பிடிப்பு

க்பரின் மகன் சலீம், அரசவை நாட்டியப் பெண் அனார்கலி ஆகிய கதாபாத்திரங்களின் காதல் கதையை இந்தியர்களின் மனதில் காவியமாகப் பதியச்செய்த படம் 1960-ல் வெளியான ‘முகல்- எ- ஆஸம்’. உருது நாடகாசிரியர் இம்தியாஸ் அலி தாஜ் எழுதிய நாடகமே சினிமாவாக எடுக்கப்பட்டது. 1946-ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நாட்டின் அரசியல் சூழல் காரணமாகத் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர், 1950-களின் தொடக்கத்தில் முற்றிலும் புதிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்துக்காக 500 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதன் தயாரிப்புச் செலவு அன்று 1.5 கோடி ரூபாய். ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள், குதிரைகள், யானைகள் பயன்படுத்தப்பட்ட இந்தப் படத்தில் டெல்லியின் சிறந்த தையல் கலைஞர்கள் உடைகளை வடிவமைத்தனர்.

   

ஹைதராபாத்திலிருந்து பொற்கொல்லர்கள் வரவழைக்கப்பட்டு நகைகள் தயாரிக்கப்பட்டன. ராஜாவின் கிரீடங்களைச் செய்ய கோலாபூரிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். திரைப்படத்தின் காவியப் பரிமாணத்துக்கு நவுஷாத்தின் இசை உதவியது. இயக்குநர் கே. ஆசிப் இயக்கத்தில் திலீப்குமார், மதுபாலா ஜோடியாக நடித்தனர். அவர்கள் நிஜவாழ்க்கையிலும் காதலின் உச்சமும் பிரிவும் இப்படத்தின் படப்பிடிப்பில்தான் நடந்தது. இந்திய சினிமாவில் இன்றும் அற்புதமான காதல் காட்சிகளுக்காக நினைவுகூரப்பட்ட இத்திரைப்படம் டிஜிட்டல் முறையில் வண்ணப்படமாக வெளியான ஆண்டு எது?

2. பெண்களுக்காக ஓர் ஆண்!

குடும்பத்திலும் சமூகத்திலும் வெளிப்படையாகப் பேசத் தயங்கக்கூடிய ஒன்றாகவே இன்னும் இருக்கிறது மாதவிடாய். இயற்கையான இந்த நிகழ்வைப் பெண்கள் ஆரோக்கியமாக எதிர்கொள்ளக் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரிப்பதற்காகப் பல போராட்டங்களைச் சந்தித்து வெற்றிபெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம். இவரைக் குறித்து அமித் விர்மானி 2013-ல் எடுத்த ஆவணப்படமே ‘மென்ஸ்சுரல் மேன்’.

26chrcjmentural%20man
 

கிராமப்புறப் பெண்களும் எளிதில் வாங்கிப் பயன்படுத்தும் வண்ணம், குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து வழங்குவதோடு அதையே ஒரு வாழ்வாதாரத் தொழிலாகவும் செய்ய, ஓர் இயந்திரத்தை உருவாக்கியவர் இவர். சிறந்த ஆவணப்படத்துக்கான ‘ஆசியா பசிபிக் ஸ்க்ரீன்’ விருதுக்குப் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் 23 மாநிலங்களில் இதுவரை 643 சானிட்டரி நாப்கின் உற்பத்தி இயந்திரங்களை நிறுவியுள்ள முருகானந்தத்தின் வெற்றிக்கதையை வைத்து, அக்ஷய் குமார் நாயகனாக நடித்து விரைவில் வெளியாகவுள்ள பாலிவுட் திரைப்படம் எது?

3. இந்தியில் ஜெமினி கணேசன்

றுப்பு வெள்ளை தமிழ் சினிமாக்களில் 60 ஆண்டுகளைத் தாண்டியும் கதையம்சம், நடிப்பு, இசை, பாடல்கள் என எல்லா அம்சங்களுக்காகவும் நினைவுகூரப்படும் படம் 1955-ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘மிஸ்ஸியம்மா’. விஜயா தயாரிப்பு நிறுவனம், தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்த இப்படத்தை இயக்கியவர் எல்.வி.பிரசாத். ரவீந்திரநாத் தாகூரின் ‘மன்மோயி கேர்ள்ஸ் ஸ்கூல்’, ஷரதிந்து பந்தோபாத்யாயின் ‘டிடெக்டிவ்’ கதைகளை அடிப்படையாகக்கொண்டு இத்திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதியவர் சக்ரபாணி. ஜெமினி கணேசன் நாயகனாகவும் பானுமதி நாயகியாகவும் நடிக்க, நான்கு ரீல்கள் எடுக்கப்பட்ட பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக பானுமதி படத்திலிருந்து வெளியேற நேர்ந்தது.

26CHRCJMISSIAMMA
 

அப்போது வளரும் நடிகையாக இருந்த சாவித்திரி ஆற்றல் வாய்ந்த நட்சத்திரமாகத் தெரியவருவதற்கு பானுமதியின் வெளிநடப்பு காரணமாக இருந்தது. ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’, ‘வாராயோ வெண்ணிலாவே’, ‘எனையாளும் மேரிமாதா’ போன்ற அருமையான பாடல்களைப் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகியாக பி. சுசீலா தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் நிலைபெற்ற படமும் இதுதான். தெலுங்கில் நாகேஸ்வரராவ் நடித்து வெற்றிபெற்ற இத்திரைப்படத்தின் இந்தி வடிவத்திலும் ஜெமினி கணேசனே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்தி வடிவத்தின் பெயர் என்ன?
 

26chrcjSergeiEisenstein02

4. தடைசெய்யப்பட்ட படம்!

ரசியல் உள்ளடக்கம், படத்தொகுப்பு உள்ளிட்ட சினிமாவின் சகல துறைகளிலும் முன்னோடியாகக் கருதப்படுவர் ரஷ்ய இயக்குநர் செர்கி ஐசன்ஸ்டீன் (Sergei Eisenstein). அவரது 120-வது பிறந்த நாளை (2018 ஜனவரி 22 ) முன்னிட்டு அவரை கூகுள் டூடுள் சிறப்பித்துள்ளது. இவருடைய ‘இவான் தி டெரிபிள்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக 1944 மற்றும் 1958-ம் ஆண்டுகளில் வெளியானது.

16-ம் நூற்றாண்டில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னனான நான்காம் இவான் வசிலியவிச்சின் வாழ்க்கை சரிதம் இது. முதல் பாகம் அன்றைய சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலினை மிகவும் கவர்ந்தது. இரண்டாம் பாகத்தில் ஜார் மன்னர் இவானின் கொடுமைகள் குறித்த சித்தரிப்புகள் இருந்ததால் ஸ்டாலின் அதை ரசிக்கவில்லை. எனவே, அது தடை செய்யப்பட்டது.

ஐசன்ஸ்டீனின் மறைவுக்குப் பிறகு நிகிதா குருசேவின் நிர்வாகத்தில் இரண்டாம் பாகம் வெளியான ஆண்டு எது?

 

5. அமெரிக்காவின் குடும்ப வாழ்க்கை

ஹாலிவுட்டின் அரவிந்த் சுவாமி என அழைக்கத் தக்கவர் மத்திய வயது நடிகரான ஜார்ஜ் க்ளூனி. அவரது நடிப்பில் வெளியான சிறந்த படங்களில் ஒன்று ‘தி டெஸன்டன்ட்ஸ்’. சிறந்த திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான அலெக்சாண்டர் பேய்ன், உல்லாசத் தீவான ஹவாயின் நிலப்பரப்புகளை இன்னொரு கதாபாத்திரமாக்கி எடுத்த இக்குடும்பத் திரைப்படம் 2011-ல் வெளிவந்தது. ஹவாய் தீவில் குடியேறிய முதல் வெள்ளைக்காரக் குடும்பத்தின் கோடீஸ்வர வாரிசான மட் கிங்கின் தொழில் வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் ஒரே சமயத்தில் நெருக்கடி சூழ்கிறது. மனைவி, குழந்தைகளை அதுவரை கவனிக்காமலேயே இருந்த மட் கிங்கின் மனைவி எலிசபெத் ஒரு சாகச விரும்பி.

26chrcjdesendents

ஒரு படகு விபத்தில் சிக்கி கோமா நிலைக்குப் போகிறார் எலிசபெத். மரணத்தின் விளிம்பில் இருக்கும் மனைவி, முரட்டுக் குழந்தைகள், மனைவி குறித்து புதிதாகத் தெரியவரும் உண்மைகளுடன் போராடித் தீர்வுக்கு வருவதே இப்படத்தின் கதை.

குடும்பத் தலைவன் குடும்பத்தின் மீது காட்டும் அலட்சியம் மேலதிக அலட்சியங்களுக்கு வழிவகுக்கும்; ஒரு பிரச்சினைக்கான தீர்வு இன்னொரு பிரச்சினைக்கும் தீர்வாக மாறமுடியும் என்பதை நேர்த்தியாகச் சொன்ன திரைப்படம் இது.

சகல வகையிலும் வளர்ந்த நாடாகச் சொல்லப்படும் அமெரிக்கா, தற்போது எதிர்கொள்ளும் தார்மிகக் குடும்ப நெருக்கடிகளைச் சித்தரிக்கும் இப்படம் எந்தப் பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றது?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22522045.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வேட்டையாடு விளையாடு : வசூல் நாயகன் எம்.ஜி.ஆர்

 

 
02chrcjkedi

1. வசூல் நாயகன் எம்.ஜி.ஆர்

கோவையைச் சேர்ந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸின் பெயர் சொல்லும் படமான ‘மலைக்கள்ளன்’, எம்.ஜி.ஆரை வசூல் நாயகனாக மாற்றியது. தமிழறிஞரும் கவிஞருமான நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, ‘ராபின் ஹூட்’ மற்றும் ‘மார்க் ஆஃப் ஸாரோ’ படைப்புகளின் உந்துதலில் இக்கதையை எழுதினார். ‘கலைஞர்’ மு.கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதினார். எஸ்.எம்.நாயுடு இசையமைத்து டி.எம்.சவுந்திரராஜன் பாடிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் நமது சூழலுக்கு இன்றும் பொருந்தும் ஒன்று.

     
02CHRCJMALAIKKALLANMGR

‘மலைக்கள்ளன்’ படத்தில் எம்.ஜி.ஆர்

தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் என அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்ற இத்திரைப்படத்தின் இந்தி வடிவத்தில் திலீப் குமாரும் மீனாகுமாரியும் இணைந்து நடித்தனர். முன்பின் அறிமுகமேயில்லாத ஒரு தயாரிப்பாளரான ஸ்ரீராமுலு நாயுடு, கோவையிலிருந்து மும்பைக்குத் வந்து தன்னை வைத்துப் படமெடுக்க ஆவலாக இருக்கிறார் என்ற ஆச்சரியத்தில் திலீப் குமார் ஒப்புக்கொண்ட இத்திரைப்படத்தின் பெயர் என்ன?

2. பூனையின் கண்கள் வழியே…

ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இஸ்தான்புல் நகரின் வரலாறு. ஓட்டோமான் பேரரசு காலத்திலிருந்து நவீன காலம்வரை பூனைகளையும் குடிமக்களாகப் பாவிக்கும் இஸ்தான்புல் நகரத்தின் வாழ்வியலை, பூனைகளின் கண்களிலிருந்து பார்க்கும் ஆவணப்படம் ‘கேடி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படம், இருண்ட விதானங்கள், கட்டிடக் கூரைகள், வீடுகளின் பால்கனிகள், ஜன்னல்கள், மொட்டை மாடிகளில் அலையும் பூனைகளின் வெவ்வேறு குணாதிசயங்களைக் கவித்துவத்துடன் காண்பிக்கும். செயடா டோருன் உருவாக்கிய இந்த ஆவணப்படத்துக்காகவே பூனைகளின் உயரத்தில் படம் பிடிப்பதற்காக கேமிரா தாங்கிகள் வடிவமைக்கப்பட்டன.

வேகமாக நவீனமாகி வரும் ஒரு புராதன நகரத்தின் தொன்மையை நினைவில் வைத்திருக்கும் உயிர்களைக் குறித்த இந்த ஆவணப்படம் அமெரிக்காவில் 2.8 மில்லியன் டாலரைத் திரையரங்குகளிலேயே வசூலித்து வெற்றிபெற்றது. உலகிலேயே அழகிய நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்தான்புல்லின் எழிலை, பூனையின் கண்களின் வழியாகப் பார்க்கச் செய்த இந்த ஆவணப்படத்தை 2017-ல் வெளியான சிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக எந்தப் பத்திரிக்கை தேர்ந்தெடுத்தது?

3. பவுலோஸ் எனும் படைப்பாளி

இல்லாத தந்தையைத் தேடி பதின்வயதுச் சிறுமியும் அவள் தம்பியும் கிரீஸ் நகரத்திலிருந்து ஜெர்மனிக்குத் தனியாகப் பயணம் செல்கின்றனர். வாய்ப்புகளைத் தேடி ஒரு நாடகக் குழு வெவ்வேறு இடங்களுக்குப் பயணிக்கிறது. ஒரு நடிகன் அன்பைத் தேடி அலைகிறான். இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு வன்முறையையும் பல்வேறு விதமான துயரங்களையும் தவிர உலகம் வேறெதைக் கொடுத்திருக்கிறது என்பதை ‘லேண்ட்ஸ்கேப் இன் தி மிஸ்ட்’ திரைப்படம் வழியாகப் பார்வையாளர்களிடம் எழுப்பியவர் தியோ ஆஞ்சலோ பவுலோஸ்.

02chrcjennio%20morricone%20and%20quentin

என்னியோ மாரிக்கோனியுடன் குவெண்டின் டொரண்டினோ

 

நாடகப் பாங்கிலான காட்சிகள், உறைந்த ஓவியம் போன்ற காட்சிகள், மனத்தை உலுக்கும் படிமங்களுடன் தியோ ஆஞ்சிபோ பவுலோஸின் இயக்கம் இதைக் கலைப்படைப்பாக்கியது. யுத்தங்கள், முரண்பாடுகள், பாலியல் வன்முறைகளுக்கு நடுவே திணறும் மானுட நிலை குறித்து சினிமாவில் ஆத்மார்த்தமாக விசாரணை செய்த ஆந்த்ரேய் தார்க்காவெஸ்கி, இங்க்மர் பெர்க்மன், ராபர்ட் ப்ரெஸ்ஸான் ஆகிய முதல் வரிசை இயக்குநர்களின் பெயர்களுடன் இடம்பிடிப்பவர் பவுலோஸ். ஏதென்சில் பிறந்த படைப்பாளியான தியோ ஆஞ்சலோ பவுலோஸ் 1988-ல் எடுத்த இந்தப் படம் வெனிஸ் உலகத் திரைவிழாவில் எந்தப் பரிசைப் பெற்றது?

4. சண்டைபோட்ட இசையமைப்பாளர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவில் நிலவிய சமூக அவலங்களில் முக்கியமானது கருப்பின ஒடுக்குமுறை. இதைப் பின்னணியாகக் கொண்டு குவெண்டின் டொரண்டினோ 2012-ல் இயக்கிய திரைப்படம் ‘ஜாங்கோ அன்செய்ன்ட்’. ஜேமி பாக்ஸ், கிறிஸ்டோபர் வால்ட்ஸ், லியார்னடோ டி காப்ரியோ, கெர்ரி வாஷிங்டன் ஆகிய நட்சத்திரங்களின் அபாரமான நடிப்புக்காகப் பேசப்பட்டது இத்திரைப்படம். கருப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ஒரு சுவாரசியமான வெஸ்டர்ன் மசாலா திரைப்படமாக குவெண்டின் டொரண்டினோ மாற்றிவிட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டார்.

02chrcjlandscape%20in%20the%20mist

‘லேண்ட்ஸ்கேப் இன் தி மிஸ்ட்’

 

இத்திரைப்படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடிக்க லியானர்டோ டிகாப்ரியோ முதலில் தயங்கினார். ஏனெனில், கொடூரமான கொலையாளியாகவும் இனவாத வசைகளைக் கூறுபவராகவும் அவரது வேடம் இருந்ததே காரணம். இயக்குநரின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பின்னரே ஏற்றார். இப்படத்தின் இசையமைப்பாளர் என்னியோ மாரிக்கோனி, தனது இசையைச் சீர்மையில்லாமல் டொரண்டினோ உபயோகிப்பதாகக் குற்றம்சாட்டி அடுத்த படத்தில் பணியாற்ற மாட்டேன் என்று கூறினார். ஆனால் அதை மீறி, டொரண்டினோவின் அடுத்த படத்துக்கு இசையமைத்து ஆஸ்கரும் வென்றார். அந்தப் படம் எது?

5. தேவைப்படாத பின்னணி இசை

மலையாளத் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் இரண்டாவது திரைப்படம் ‘கொடியேற்றம்’. தென்னிந்திய சினிமாவுக்கு ஒரு தனித்த ஆளுமையின் வருகையை உறுதிப்படுத்திய படைப்பு எனக் கொண்டாடப்படுகிறது. சாதாரணத் தோற்றம்கொண்ட கோபியை நாயகனாக நடிக்க வைத்து தேசிய விருதும் பெற்று பரத் கோபியாக்கிய திரைப்படம் இது. 1975-ம் ஆண்டிலேயே படத்தின் பணிகள் முடிந்துவிட்டாலும் கடுமையான நிதி நெருக்கடியால் இரண்டு ஆண்டுகள் கழித்தே வெளியானது.

ஏ.வி.எம் லேபரட்டரியில் கொடுப்பதற்குப் பணம் இல்லாமல் படத்தையே வெளியே எடுக்க முடியவில்லை. கிராமத்தில் தங்கையின் உழைப்பால் வரும் கூலியில் சாப்பிட்டுவிட்டு வயதில் சிறியவர்களுடன் நாட்களைக் கழிக்கும் அசடனான சங்கரன் குட்டியின் வாழ்க்கையைத் தங்கையின் திருமணம் தடம் மாற்றுகிறது. ஒரு மனிதன் அடையும் முதிர்ச்சி அவனுடைய தங்கை, மனைவி, தோழி வழியாக நிகழ்கிறது. இந்திய சினிமாவில் பின்னணி இசையே இல்லாமல் வந்த முதல் திரைப்படம் இது. மேளச்சத்தம், பட்டாசு சப்தங்கள் மட்டுமே இப்படத்தின் பின்னணி. சங்கரன் குட்டியின் மனைவி சாந்தம்மாவாக நடித்த நடிகை யார்?

02chrcj%20Bharat-Gopy%20and%20Vilasini%2

‘கொடியேட்டம்’ பட்டத்தில் கோபி, விலாசினி

 

விடைகள்

1. ஆஸாத், 2. டைம், 3. வெள்ளிச் சிங்கம், 4. தி ஹேட்புல் எய்ட், 5. கே.பி.ஏ.சி. லலிதா

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

வேட்டையாடு விளையாடு 19: பாலிவுட்டின் முதல் நிழலுலக சினிமா!

16CHRCJcid%20olddevanand

1. பாலிவுட்டின் முதல் நிழலுலக சினிமா!

பாலிவுட் சினிமாவில், திரைக்கு வெளியே நீடித்த சிறந்த நட்புகளில் ஒன்று தேவ் ஆனந்த், குரு தத்துடையது. தேவ் ஆனந்த் முதலில் வெற்றிபெற்றால் குருதத் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்றும், குரு தத் முதலில் வெற்றிபெற்றால் தேவ் ஆனந்தை நாயகனாக்கி இயக்க வேண்டுமென்றும் அவர்களிடம் ஒரு ஒப்பந்தமிருந்தது. அந்த ஒப்பந்தத்தை தேவ் ஆனந்தை நாயகனாக்கித் திரைப்படம் தயாரித்ததன் வாயிலாகப் பாதியளவு நிறைவேற்றினார் குரு தத். அந்தப் படத்தில் ஊழல் அரசியல்வாதியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்த நினைத்த நேர்மையான ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை செய்யப்படுகிறார்.

       

அந்தக் கொலையைத் துப்புத் துலக்கச் சென்று சிக்கலில் மாட்டி விடுபடும் இன்ஸ்பெக்டர் சேகர்தான் தேவ் ஆனந்த். மும்பையின் குற்றவுலகம் மீது வெளிச்சம் பாய்ச்சிய இத்திரைப்படம், வி. கே. மூர்த்தியின் சிறந்த ஒளிப்பதிவுக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறது. மும்பை நகரம் குறித்த ஓ. பி. நய்யார் இசையமைத்த ‘ஏ தில் ஹை முஷ்கில் ஜீனா யஹான் யே ஹை பாம்பே மேரி ஜான்’ என்ற பாடல் அப்போதைய பாம்பேயின் தேசிய கீதமாக இருந்தது. 1956-ல் வெளியான ‘சி.ஐ.டி’ திரைப்படத்தின் இயக்குநர் யார்?

16chrcjALAYAM

‘ஆலயம்’ படத்தில் மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ்

 

2. பெயரை மாற்றிய திரைப்படம்

நேர்மையான அதிகாரியான ராமலிங்கம் பணி ஓய்வு பெறும் நாள் அது. தவிர்க்கவே முடியாத பணச் சிக்கல் ஒன்று வருகிறது. அந்தப் பணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் குறுக்குவழியில் ஒரு வாய்ப்பும் வருகிறது. அதை ராமலிங்கம் ஏற்றாரா, தன் நேர்மையைத் தக்கவைத்தாரா, இதுதான் ‘ஆலயம்’ படத்தின் கதை. அலுவலகத்துக்கு உள்ளேயே எடுக்கப்பட்டு தேசிய விருதையும் பெற்ற இப்படைப்பில் ராமலிங்கமாக நடித்தவர் ‘மேஜர்’ சுந்தர் ராஜன்.

பீம்சிங்கின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட இப்படத்தை அவரிடம் இணை இயக்குநர்களாகப் பணியாற்றிய திருமலையும் மகாலிங்கமும் இயக்கினார்கள். பிலஹரி ராமன் எழுதிய ‘நெஞ்சே நீ வாழ்க’ நாடகம்தான் இப்படத்துக்கு அடிப்படை. ஜி. விட்டல் ராவ் ஒளிப்பதிவு செய்த ‘ஆலயம்’ படத்துக்கு டிகே ராமமூர்த்தி இசையமைத்தார். அப்போது நாடகங்களில் நடிகராகப் புகழ்பெற்றிருந்த கோபாலரத்தினம் இந்தப் படத்துக்குப் பிறகு எந்தப் பெயரில் அறியப்பட்டார்?

16chrcjlife%20animated
 

3. மாறுபட்ட ஆசிரியர்கள் !

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மூன்று வயதுக் குழந்தை ஓவன், வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் படங்களைப் பார்த்து வெளியுலகுடன் தொடர்புகொள்ளக் கற்றுக்கொண்ட அனுபவங்களைச் சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட ஆவணப்படம் ‘லைஃப், அனிமேட்டெட்’. அமெரிக்க ஆவணப்பட இயக்குநர் ரோகர் ரோஸ் வில்லியம்ஸ் 2016-ல் இயக்கிய படம் இது. இந்த ஆவணப்படத்தில், ஒரு ஆட்டிச சிறுவனுக்கு மோக்லி, பீட்டர் பேன் ஆகிய அனிமேஷன் கதாபாத்திரங்களே ஆசிரியர்கள்.

ஆட்டிசச் செயற்பாட்டாளர்கள், ஆட்டிசக் குழந்தைகளிடம் இப்படம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் டிஸ்னி ஸ்டுடியோஸ் ஊழியர்களை நெகிழவைத்த இதில் அனிமேஷன் உத்தியும் பயன்படுத்தப்பட்டது. ஒரு பத்திரிகையாளர் தன் மகனுடனான அனுபவத்தை வைத்து எழுதிய ‘லைப், அனிமேட்டட்: எ ஸ்டோரி ஆப் சைட்கிக்ஸ், ஹீரோஸ் அண்ட் ஆட்டிசம்’ என்ற நூலே இப்படத்துக்கு அடிப்படை. அந்தப் பத்திரிகையாளரின் பெயர் என்ன?

16chrcjkanyakumari

‘கன்யாகுமரி’ படத்தில்

 

4. மலையாளத்தில் அறிமுகமான கமல்

கேரளத்தின் சிறந்த எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் திரைப்படத்துக்கென்றே எழுதிய கதை ‘கன்னியாகுமரி’. ‘கண்ணும் கறலும்’ மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல் ஹாசன் நாயகனாக மலையாளத்தில் முதலில் அறிமுகமான திரைப்படம் இது. சேது மாதவன் இயக்கிய இத்திரைப்படம் 1974-ல் வெளியானது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு சிற்பிக்கும் வளையல் விற்கும் பெண்ணுக்குமான உறவுதான் கதை.

புகழ்பெற்ற வங்காள நடிகை ரிதா பாதுரி கதாநாயகியாக நடித்த இப்படம் முழுமையாக கன்னியாகுமரி கோயிலிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் படமாக்கப்பட்டது. கன்னியாகுமரியின் இயற்கை அழகை பி.எல். ராய் அழகாகப் படம்பிடித்தார். எம். பி. ஸ்ரீனிவாசனின் இசையை இன்னமும் மலையாள சினிமா ரசிகர்கள் மறக்க இயலாதது. தனது இயற்கையான நடிப்புக்காக கமல் ஹாசன் எந்த விருதை முதல் முறையாகப் பெற்றார்?

16chrcjmetropolis-
 

5. ஹிட்லருக்குப் பிடித்த மவுனப்படம்

மவுனப் படக் காலம் தொடங்கி பேசும்படம் வரைக்கும் திரைப்பட ஆக்கத்துக்காகப் பேசப்படும் முன்னோடிகளில் ஒருவர் ஆஸ்திரிய இயக்குநர் பிரிட்ஸ் லாங். இவர் இயக்கிய ‘மெட்ரோபொலிஸ்’ மவுனப் படங்களிலேயே பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட சயன்ஸ் பிக்ஷன் திரைப்படமாகும். 2026-ம் ஆண்டில் மெட்ரோபொலிஸ் நகரத்தின் மேல்தளத்தில் பணக்கார வர்க்கம் ஒன்று அதிகபட்ச உல்லாசத்தில் வாழ்ந்துவருகிறது. அவர்களுக்கான பணிகளையும் சேவைகளையும் செய்து அந்த நகரத்தை இயக்கியபடி ஒரு பாட்டாளி வர்க்கம் பாதாள உலகத்தில் வசித்துவருகிறது. இரு வர்க்கங்களும் காதல் ஒன்றால் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.

1925-ம் ஆண்டில் ஐந்து மில்லியன் ரீச்மார்க்ஸ் ஜெர்மன் பணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் வரும் கட்டிட செட்கள் க்யூபிஸ்ட் ஓவியங்களிலிருந்து தாக்கம் பெற்றவை. மாயாஜாலம் போலத் திகழும் காட்சிகளுக்காகவும் ஸ்பெஷல் எஃபக்டுகளுக்காகவும் பேசப்பட்ட இப்படம் அக்காலகட்டத்தில் நாஜிகளின் அரசியலுக்குச் சார்பானதாகக் கருதப்பட்டது. ஹிட்லர் தன்னைக் கவர்ந்த திரைப்படம் என்றும் பாராட்டினார். சிதிலமாகிப்போன இந்தப் படத்தின் ஒரிஜினல் பிரதி அர்ஜென்டினாவில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

விடைகள்

1. ராஜ் கோஸ்லா, 2. டைப்பிஸ்ட் கோபு, 3. ரான் சஸ்கிண்ட் 4. பிலிம்பேர், 5. 2008

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22770474.ece

Link to comment
Share on other sites

வேட்டையாடு விளையாடு 20: ஒரு கதை பல படங்கள்

 

 
23chrcjit-happened-one-night-cover

1. ஒரு கதை பல படங்கள்

ஹாலிவுட் இயக்குநர் ப்ராங்க் காப்ரா எடுத்து ஏழு ஆஸ்கர்களை வென்ற வெற்றிப்படம் ‘இட் ஹேப்பன்ட் ஒன் நைட்’. உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் மறுஆக்கம் செய்யப்பட்ட சில படங்களில் இதுவும் ஒன்று. ஹாலிவுட்டிலேயே மீண்டும் ‘ரோமன் ஹாலிடே’ ஆனது. இதுதான் ஏவிஎம்மின் தயாரிப்பில் ராஜ் கபூர், நர்கிஸ் நடித்து இந்தியில் ‘சோரி சோரி’ ஆனது. எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்து தமிழில் ‘சந்திரோதயம்’ ஆகியது. கோடிஸ்வரக் குடும்பத்தின் ஒரே வாரிசான நாயகி, திருமண நிச்சயதார்த்தத்துக்கு முந்தைய தினம் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

   

உண்மையான அன்பைத் தேடி வெளியே போகும் அவர் ஒரு லட்சிய மனிதனைச் சந்திக்கிறார். 1966-ல் இயக்குநர் கே. சங்கர் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து வெளியான இந்த வெற்றிப்படம் தம்பு அவர்களின் சிறந்த ஒளிப்பதிவுக்காகப் பேசப்பட்டது. குறிப்பாக, எம். என். நம்பியாருக்கும் எம்ஜிஆருக்கும் நடக்கும் க்ளைமாக்ஸ் சண்டை குறைந்த ஒளியில் படம்பிடிக்கப்பட்டது. இதே கதையுடன் நதியா, மோகன் நடித்து 1986-ல் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற சினிமா எது?

2. இந்திப் படத்தில் ஆஸ்திரேலிய நடிகை

பாலிவுட்டில் குழந்தையாக நடைபயின்று கொண்டிருந்தபோது இந்தியப் பெண்கள் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கத் தயங்கிக்கொண்டிருந்த காலம் அது. கையில் சவுக்குடன் கவர்ச்சிகரமான உடையுடன் இந்திய ஆண்களை அடித்துத் துவைத்து துவம்சம் செய்யும் சாகச நாயகியாக பாலிவுட்டில் அறிமுகமானவர் ஆஸ்திரேலியா நடிகை மேரி ஆன் இவான்ஸ். பணக்காரர்களைக் கொள்ளையடித்து ஏழைகளை வாழவைக்கும் முதல் பெண் ராபின்ஹூட்டாக அவர் அறிமுகமான படம் ‘ஹன்டர்வாலி’.

மேரி ஆன் இவான்ஸின் நடிப்புத் திறன், சண்டைத்திறனைப் பார்த்த தயாரிப்பாளர் ஜே.பி.எச்.வாடியா, படத்துக்கான பட்ஜெட்டை அதிகப்படுத்திக் காதல் காட்சிகளையும் பாடல்களையும் சேர்த்தார். நாயகியின் மீது இத்தனை நம்பிக்கை வைத்தும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் சண்டைகளும் அவரது கவர்ச்சிகரமான உடைகளும் இந்தியப் பார்வையாளர்களைக் கவருமா என்ற சந்தேகம் விநியோகஸ்தர்களிடம் இருந்தது.

அதனால் பலமாதங்கள் பெட்டியில் இருந்து தயாரிப்பாளராலேயே 1935-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேரி ஆன் இவான்ஸ்க்குத் தயாரிப்பாளர் கொடுத்த அடைமொழி எது?

23chrcjthoovanathumbikal
 

3. காதலும் காமமும்

வெளிவந்தபோது தோல்விப்படமென்றாலும் மலையாளத் திரையுலகின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக மதிக்கப்படும் இடத்தைப் பெற்றது 1987-ல் வெளியான ‘தூவானத்தும்பிகள்’. சிறந்த திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான பத்மராஜன், தான் எழுதிய ‘உடகப்போல’ என்ற நாவலை மையமாக வைத்து இயக்கிய சினிமா இது. இரண்டு வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வரும் பெண்களுடனான ஒரு ஆணின் காதல் அவனில் ஏற்படுத்தும் மாற்றங்கள்தாம் கதை. மோகன்லால் மலையாள சினிமா ரசிகர்களின் நினைவில் உறைந்த படங்களில் இதுவும் ஒன்று.

ராதாவாகவும் க்ளாராவாகவும் பார்வதி, சுமலதா நடித்த இத்திரைப்படத்தில் மழையும் பிரதான கதாபாத்திரம். காதலும் காமமும் ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை அழகாகச் சொல்லிய இப்படைப்பில் மலையாள பிரம்மச்சாரிகளின் மது கலாச்சாரம் யதார்த்தமாகப் பதிவானது. இப்படத்தின் பின்னணி இசை, மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் பயன்படுத்தப்பட்டது. அந்தப் படத்தின் பெயர்?

23chrcjthe%20apple
 

4. புகழ்பெற்ற குழந்தைகள் சினிமா

பார்வையற்ற தாயாலும் வறுமையான தந்தையாலும் வெளியில் விடப்படாமலேயே வளர்க்கப்படும் 11 வயது இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய உண்மைக்கதை தான் ‘தி ஆப்பிள்’. உலகப் புகழ்பெற்ற ஈரானியத் திரைப்பட இயக்குநர் மக்மல்பஃப்-ன் மகள் சமீரா மக்மல்பஃப் இயக்கிய முதல் படைப்பு இது. அதிகபட்சத் தணிக்கைக்குட்பட்ட ஈரானிய சினிமா குழந்தைகள் வழியாக எப்படிக் கதை சொல்கிறது என்பதை அறிவதற்கான படம் இது.

பெற்றோரின் சிறையிலிருந்து விடுதலையாகும் அந்தப் பெண் குழந்தைகளுக்கு வெளி உலகம் தரும் அனுபவங்களையும் நுட்பமாகப் பதிவுசெய்யும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை உண்மைச் செய்தி வெளியான நான்கு நாட்களில் தொடங்கினார் சமீரா. ஈரானில் மட்டுமல்ல; மத்தியக் கிழக்கு நாடுகளில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை இரண்டு குழந்தைகள் வாயிலாகக் காண்பித்த சமீரா மக்மல்பஃப்புக்கு இத்திரைப்படத்தை இயக்கியபோது என்ன வயது?
 

23chrcjRaviShankar

5. இசைத் திருவிழாப் படம்

1967-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற மான்டிரி பாப்(montery pop) இசைத் திருவிழா, பாப் இசையின் புதிய அத்தியாயம் என்று சொல்லலாம். அந்தத் திருவிழாவை 16எம்எம் கேமராவில் ஆவணப்படமாக்கியவர் பென்னேபேக்கர். அமெரிக்கா, வியட்நாமின் மீது தொடுத்த ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகக் கிளர்ந்த ஹிப்பிகளின் திருவிழாவாகவும் இந்த ஆவணப்படத்தில் அக்காலகட்டம் பதிவாகியுள்ளது. வழக்கமான மசாலாத் தன்மையிலிருந்து ஹாலிவுட் சினிமா மாறி, யதார்த்தமாகக் கதை சொல்ல ஆரம்பித்திருந்ததன் தாக்கமும் இந்த ஆவணப்படத்தில் உண்டு.

இந்தியாவைச் சேர்ந்த இளம் சாஸ்திரியக் கலைஞர்களும் மேற்கத்திய பாப் இசைத் திருவிழாவில் பங்கேற்று கிழக்கும் மேற்கும் சந்தித்த அரிய நிகழ்ச்சி இது. இந்தியாவின் இசைக்கலைஞர் ஒருவருக்கு உலகளாவிய அறிமுகத்தைத் தந்தது இத்திருவிழா. அவர் யார்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22826215.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.