Jump to content

''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை


Recommended Posts

''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை

மலேசியாவில் உள்ள ஒரு ஆடை வெளுப்பு நிலையம் தங்கள் சேவைகளை முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குவதாக வெளியிட்ட அறிவிப்பு, அந்நாட்டில் ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது.

''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சைபடத்தின் காப்புரிமைTHE MALAYSIAN INSIGHT/HASNOOR HUSSAIN Image caption''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை

மலேசியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இஸ்லாம் மதத்தை கடைபிடிக்கின்றனர்.

மலேசியாவின் ஜோஹோர் மாநிலத்தில் உள்ள ஒரு ஆடை வெளுப்பு நிலையத்தின் விளம்பரப்பலகையின் புகைப்படம் இந்த வாரத்தின் தொடக்கத்தில் சமூகவலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டது.

''தூய்மை காரணங்களுக்காக முஸ்லீம் வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டுமே இந்த ஆடை வெளுப்பு நிலையம் ஆடைகளை பெறும். ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் வருந்துகிறோம்'' என்று அந்த விளம்பரப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது பெயரை கூற விரும்பாத ஆடை வெளுப்பு நிலையத்தின் உரிமையாளர் தி ஸ்டார் செய்தித்தாளிடம் பேசுகையில், ''முஸ்லீம்களை பொறுத்தவரை ஆடைகள் மட்டுமல்ல முழுவதும் தூய்மையாக இருக்கவேண்டும். அதற்கு நான் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.

தனது வாடிக்கையாளர்கள் இது போன்ற ஒரு சேவையை வேண்டி கேட்டுக்கொண்டதாக மலேஷியன் இன்சைட் வலைதளத்திடம் அவர் கூறியுள்ளார்.

இந்த மாகாணத்தின் சுல்தானான சுல்தான் இப்ராஹிம் இப்னி சுல்தான் இஸ்காண்டர் உள்பட பல மலேசியர்கள் (முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதோர் என இரு பிரிவுகளையும் சேர்த்து) இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அரச குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்த சுல்தான், உடனடியாக இந்த பாரபட்சத்தை நிறுத்தாவிட்டால், இந்த ஆடை வெளுப்பு நிலையம் மூடப்படும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து தி ஸ்டார் செய்தித்தாளிடம் அவர் கருத்து தெரிவிக்கையில், ''இது தாலிபன் அரசு ஆளும் மாநிலம் அல்ல. ஜோஹோர் மாநில இஸ்லாமிய தலைவராக இந்த செயலை முற்றிலும் ஏற்க முடியாததாக நான் உணர்கிறேன். இந்த விளம்பரப்பலகை அறிவிப்பில் தீவிரவாதத்தின் சாயல் உள்ளது'' என்று கூறினார்.

''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சைபடத்தின் காப்புரிமைTHE MALAYSIAN INSIGHT/HASNOOR HUSSAIN

இந்த சம்பவம் மலேசியாவில் சமூகவலைத்தளங்களில் பல எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.

ட்விட்டர் வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு, ''தூய்மை என்ற காரணத்தை சாக்காக வைத்து முஸ்லீம் அல்லாதோருக்கு சேவை மறுப்பது இஸ்லாமின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகும்'' என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த விஷயம் தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்பட்டதாக வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

'சீனர்களுக்கு மட்டும்' அறிவிப்பு சரியா?

''முஸ்லீம்களுக்கு மட்டுமே என்ற அறிவிப்பால் பல சீனர்கள் கோபமடைந்துள்ளதாக கூறுகின்றார்கள். இவர்கள் தங்களின் சக சீனர்கள் அவர்களின் வீடுகளை 'சீனர்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் வாடகைக்கு விடுவதை பார்ப்பதில்லையா?'' என்று ஒரு டிவிட்டர் பதிவு வினவியுள்ளது.

தனது சேவையை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் வழங்கும் உரிமை அந்த ஆடை வெளுப்பு நிலையத்தின் உரிமையாளருக்கு உண்டு என்று சிலர் வாதிட்டாலும், அனைவரும் இதனை ஏற்கவில்லை.

சுல்தான் இப்ராஹிமின் எச்சரிக்கையை தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்ட ஆடை வெளுப்பு நிலையத்தின் உரிமையாளர், தனது கடையின் முன்பு இருந்த சர்ச்சைக்குரிய அந்த விளம்பரப்பலகையை நீக்கிவிட்டார்.

இந்த சர்ச்சை தணியத் தொடங்கிய அதே வேளையில், இதே அறிபோன்ற ஒரு அறிவிப்பை மலேசியாவின் மற்றொரு மாநிலத்தில் வேறொரு ஆடை வெளுப்பு நிலையம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

http://www.bbc.com/tamil/global-41457578

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.