Jump to content

தித்திக்கும் முத்தத்தின் தித்திப்புகள் எத்தனை ?


Recommended Posts

 அறிந்ததுதான்,மேலும் அறியுங்கள்,உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் வாசித்துக் காட்டுங்கள்.முத்த சாகரத்தில் மூழ்கித் திளையுங்கள்.


“மகள்கள் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேராதது என்று…” ஆமாங்க! முத்தம் என்பது அன்பின் வெளிபாடு. கட்டாயப்படுத்தி ஒருவருடன் உடலுறவில் கூட ஈடுபடலாம். ஆனால், முத்தமிட முடியாது. அப்படி செய்தாலும் உங்களுக்கு அதில் எந்த ஒரு உணர்ச்சியும் இருக்காது.

முத்தம் என்பது ஒரு உறவின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும் பல வகைகளில் மேம்பட உதவுகிறது.

முத்தமிட்டுக் கொள்வதால் மனதில் ஒரு நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படுகிறது எண்ணும் நபர்களே, முத்தமிட்டுக் கொள்வதால், முத்தமிட்டுக் கொண்ட பிறகு ஒரு சில நிமிடத்தில் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என தெரியுமா?

இதயத்துடிப்பு!
ஒரு நீண்ட முத்தமிட்டுக் கொள்வது (லிப்லாக்) உங்கள் சர்குலர் சிஸ்டத்திற்கு நன்மை விளைவிக்கும். இதனால் உங்கள் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 110 முறை துடிக்கும். இது இதயத்திற்கு ஒரு நல்ல பயிற்சி ஆகும்.

நுரையீரல்!
முத்தமிட்டுக் கொண்ட பிறகு நுரையீரல் வலிமையாக இயங்க துவங்கும். நிமிடத்திற்கு 20 முறை என்பதை தாண்டி 60 முறை மூச்சு விடுவீர்கள். இதனால் நுரையீரல் பிரச்சனை வாய்ப்புகள் குறையும்.

எச்சில்!
வாயில் எச்சில் சுரக்க வேண்டியது அவசியம். இது உணவில் செரிமானம், வாயின் ஆரோக்கியம் என பலவற்றுக்கு உதவும். முத்தமிட்டுக் கொள்வதால் வாயில் எச்சில் அதிகம் சுரக்கும் என பல் மற்றும் வாய் ஆரோக்கிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மன அழுத்தம்!
மூன்று நிமிடத்திற்கும் மேலாக முத்தமிட்டுக் கொள்வது மன அழுத்தம் மற்றும் அதன்பால் ஏற்படும் விளைவுகளை குறைய செய்கிறது. மேலும், முத்தமிட்டுக் கொள்வதால் ஏற்படும் பயோ-கெமிக்கல் ரியாக்ஷன்கள் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை அழிக்குமாம்.

ஆயுள்!
தினமும் துணையை முத்தமிட்டு வழியனுப்பும் தம்பதிகள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஐந்து ஆண்டுகள் அதிகம் ஆயுள் பெறுகிறார்களாம். அப்பறம் என்ன காசா, பணமா.. தினமும் ஒன்னு கொடுத்து அனுப்புங்க.


சுய மரியாதை!
முத்தமிட்டுக் கொள்வது ஒருவரின் சுய மரியாதை நிலையை ஊக்குவிக்கிறது. இதனால் அவரின் மனநல அளவு மேலோங்கும். மேலும், இது ஒருவகையான பாராட்டும் கருவியாக திகழ்கிறது.


கலோரிகள்!
ஒரு நிமிட முத்தம் இரண்டு முதல் மூன்று கலோரிகளை கரைக்க செய்கிறது. இரட்டிப்பு மடங்கு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. அன்பாக வெளிப்படும் முத்தம் குறைந்தது 20 நொடிகளாவது நீடிக்கும்.

மன பாரம்!
மன பாரத்தை குறைக்க முத்தம் ஒரு சிறந்த கருவி. இது ஒருவரின் கோபம், மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் கார்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோனை அழித்தல், நல்ல எண்ணங்கள் மனதில் அதிகரிக்க செய்தல் என பல வகையில் உதவுகிறது.


தசைகள்!
முத்தமிட்டுக் கொள்ளும் போது முகத்தின் முப்பது தசைகள் செயல்படுகின்றன. இதில் எட்டு, முகத்தின் சருமம் இறுக்கமடைய உதவுகிறது. இதனால் கன்னம் தொங்காது, சருமம் மிருதுவாகும். முகத்தின் சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இதயம்
முத்தம் இதயத்திற்கு ஒரு நல்ல தோழன். இது இதயம் நன்கு பம்ப் ஆக உதவும் அட்ரினலின் உருவாக்குகிறது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அடிக்கடி முத்தமிட்டுக் கொள்தல், இதய இயக்க நலன், இரத்த அழுத்தம் குறைய, கொலஸ்ட்ரால் குறையவும் முத்தம் பலனளிக்கிறது.

அடிக்கடி முத்துமிட்டுக் கொள்வதால் நீங்கள் பெறும் இதர நலன்கள்…

1. வயிற்றுவலி வராது,
2. இரத்தத்தில் இன்பெக்ஷன் ஏற்படாது,
3. இயற்கையாக எச்சிலில் இருந்து ஆன்டி- பயாடிக்ஸ் உற்பத்தி ஆகும்.,
4. மனநலம் மேம்படும்,
5. நிம்மதி உணர்வீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நந்தி! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2017 at 4:07 AM, குமாரசாமி said:

இணைப்பிற்கு நன்றி நந்தி! 

 

On 10/1/2017 at 8:28 AM, நந்தி said:

நன்றிக்கு நன்றிகள் குமாரசாமி அண்ணன்.

தம்பி சும்மா அந்த மனுசன் நன்றிச் சொல்லி இருக்கு  உன்மை நிலை நான் அறிவேன் :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் என்று இங்கே குறிப்பிடுவது,  "கன்னத்தில்...  முத்தம் இடுவதையா...." 
அல்லது...  "பிரெஞ் கிஸ்"  எனப்படும், உதட்டுடன்... உதடு சேர்த்து  முத்தமிடுவதையா... கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். 
எதையும்... விளக்கமாக சொன்னால் தானே, நாமும்...  பயன்  பெற முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

தம்பி சும்மா அந்த மனுசன் நன்றிச் சொல்லி இருக்கு  உன்மை நிலை நான் அறிவேன் :10_wink:

வந்துட்டாங்கள்......எங்கையெண்டு பாத்துக்கொண்டிருந்தவங்கள் வந்துட்டாங்கள்....:grin:

Link to comment
Share on other sites

11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

தம்பி சும்மா அந்த மனுசன் நன்றிச் சொல்லி இருக்கு  உன்மை நிலை நான் அறிவேன் :10_wink:

என்ன செய்வது தனிக்காட்டு ராஜா, குமாரசாமி அண்ணனுக்கும் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எல்லாம் இருக்கும்தானே அதுதான்...

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

முத்தம் என்று இங்கே குறிப்பிடுவது,  "கன்னத்தில்...  முத்தம் இடுவதையா...." 
அல்லது...  "பிரெஞ் கிஸ்"  எனப்படும், உதட்டுடன்... உதடு சேர்த்து  முத்தமிடுவதையா... கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். 
எதையும்... விளக்கமாக சொன்னால் தானே, நாமும்...  பயன்  பெற முடியும். 

கேட்டாலும் கேட்டீர்கள் ஒரு கேள்வி நச்சென்று தமிழ்சிறி.அதாகப்பட்டது அண்ணலும் துழாவ,அவளும் துழாவ, செம்புலப் பெயர் நீர் போல் தாம் கலக்கும் அசைவ முத்தம்.

6 hours ago, குமாரசாமி said:

வந்துட்டாங்கள்......எங்கையெண்டு பாத்துக்கொண்டிருந்தவங்கள் வந்துட்டாங்கள்....:grin:

குமாரசாமி அண்ணன் உங்களுக்குத் தெரியாததா,பாம்பின்கால் பாம்பறியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

வந்துட்டாங்கள்......எங்கையெண்டு பாத்துக்கொண்டிருந்தவங்கள் வந்துட்டாங்கள்....:grin:

சும்மா ஒரு புதுனம் பார்க்க வெளிக்கிட்ட நான் தான் பாருங்க சாமி   bursting-head-smiley-emoticon.gif

7 hours ago, நந்தி said:

என்ன செய்வது தனிக்காட்டு ராஜா, குமாரசாமி அண்ணனுக்கும் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எல்லாம் இருக்கும்தானே அதுதான்...

என்ன ஐயா இப்படி கேட்டு ப்புட்ட 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நந்தி said:

என்ன செய்வது தனிக்காட்டு ராஜா, குமாரசாமி அண்ணனுக்கும் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எல்லாம் இருக்கும்தானே அதுதான்...

எல்லாம் சரி....மடத்துக்கும்  பயிர்ப்புக்கும் விண்ணாண விளக்கம் கோரப்படுகின்றது.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

எல்லாம் சரி....மடத்துக்கும்  பயிர்ப்புக்கும் விண்ணாண விளக்கம் கோரப்படுகின்றது.

ஐயையோ இதைத்தான் சொல்லுவது நுணலும் தன் வாயால் கெடும் என்று.எப்படியோ அறிந்ததை சொல்லுறன்.

அச்சம் 
---------
அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது. 

மடம் 
----------
தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை. 

நாணம் 
----------
சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம். 

பயிர்ப்பு 
----------
தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.