Jump to content

சீனாவில் அந்த ஏழு நாட்கள்


Recommended Posts

சீனாவில் அந்த ஏழு நாட்கள்

 

லியோ நிரோச தர்ஷன்

இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர்கள் குழு கடந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்தது. இதனை கொழும்பில் உள்ள சீன தூதரகம் ஒழுங்குபடுத்தியிருந்தது. முற்றிலும் மாறுபட்ட சூழல், உணவு மற்றும் மனிதர்கள் என பல்வேறு வேறுபாடுகளுக்கு மத்தியில் புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இந்த விஜயம் அமைந்திருந்தது.

குறிப்பாக உணவு விடயத்தில் கிடைத்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகவே அங்கு சென்ற தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணப்பட்டது. எவ்வாறாயினும் சீன அரசின் நோக்கம் அந்த நாட்டின் பல்துறைசார் வளர்ச்சியை எமக்கு காண்பிப்பதாகும். அதனடிப்படையில் மெய்சிலிர்க்க கூடிய பல கட்டுமானங்கள் எம்மை ஆச்சரியப்படுத்தியது மாத்திரமல்லாது தனது தேசத்திற்கான சீனர்களின் உழைப்பு எம்மை சிந்திக்க வைத்தது.

அந்த விஜயம் தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்குவதற்கு முன்னர் சீனா தொடர்பாக மேலான பார்வைக்கு செல்வோம்...

உலக பொருளாதாரத்தின் முக்கிய பங்குதாரராக வளர்ந்துள்ள சீனா கிழக்காசியாவின் முக்கிய நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். அதே போன்று சீனா உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமை மற்றும் தொன்மையின் அடையாளமாக காணப்படுகின்றது.

நவீன உலகின் சவால்களை எதிர்கொண்டு தொழில்நுட்பம், கட்டட நிர்மாணம் மற்றும் துறைமுக அபிவிருத்தி என பல துறைகளில் இன்று சீனா விரைவான வளர்ச்சியை தொட்டுள்ளது. இந்நிலையில் அனைத்துலகத்திற்கும் தமது முன்னேற்றங்களை அறிவிக்கவும் சீனா தொடர்பான எதிர்மறையான கருத்துகளை நாடுகளில் தம்பக்க நியாயத்தை அந்த நாடுகளின் தாய்மொழியில் தெளிவுபடுத்த சீனா மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் முக்கியமானவையாகும்.

உலக நாடுகளுடனான சீனாவின் தற்போதைய அணுகு முறைகள் பண்டைய காலத்தின் நிலைகளில் இருந்து வேறுபட்டு தற்போது புதிய கோணங்களில் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையுடனான சீனாவின் உறவுகள் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் சீனா இலங்கை தொடர்பில் அதீத விட்டுக்கொடுப்புடன் செயற்படுவது குறித்து பூகோள அரசியலில் பல்வேறு கருத்தாடல்கள் காணப்படுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் இதுவரை காலமும் இலங்கையின் சிங்கள அரசியல் மற்றும் சிவில் தரப்புகளுடன் தொடர்புகளை பேணி வந்த சீனா தற்போது தமிழின தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சிறுபான்மையின நலன்கள் குறித்தும் அக்கறை காட்டி வருகின்றது. இதன் வெளிப்பாடாக கடந்த வாரத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் குழு ஒன்று சீனாவிற்கு சென்றிருந்தது. இலங்கையின் முன்னணி ஊடகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் ஊடகவியலாளர்களை மாத்திரம் அழைத்து செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகவே காணப்பட்டது.

இந்த விஜயத்தில் சீனாவின் முன்னேற்றங்கள் குறித்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. சீனாவை பொறுத்த வரையில் தலைநகராக பீஜிங் நகரமும் வணிக தலைநகராக சாங்காயும் உள்ளன.

உலகின் மிகப் பழைமையான நாகரீகங்களில் ஒன்றாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய சீன நாகரிகம் வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. 1911 ஆம் ஆண்டில் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டது. இன்று மக்கள் சீனக் குடியரசு உலகின் மிக முக்கியமான நாடாகும். அதேபோன்று உலக பொருளாதாரத்தின் முக்கிய பங்காளியாக வளர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிலையான உறுப்புரிமையை சீனா கொண்டுள்ளதுடன் உலக வணிக நிறுவனம், ஆசியா – -பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், கிழக்காசிய உச்சிமாநாடு மற்றும் சாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது.

உலகின் மிகப்பெரிய நிலையான பாதுகாப்புப் படையை சீனா கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் முக்கியமானதொன்று. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

அத்துடன் உலகின் ஏற்றுமதி அளவில் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. 1978 ஆம் ஆண்டில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 53வீதமாக காணப்பட்ட சீனாவின் வறுமை வீதம் 2001 ஆம் ஆண்டில் 8 வீதமாக ஆகக் குறைந்துள்ளது. இதன் பின்னரான பொருளாதாரத் திட்டங்களும் பன்னாடுகளுடனான இரு தரப்பு ஒத்துழைப்புகளும் சீனாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் செதுக்கியுள்ளது.

இதன் வெளிப்பாடாக உலக பொருளாதாரத்தில் கடந்தாண்டு சீனாவின் பங்களிப்பு 35 வீதமாக பதிவாகியதாக கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவு பிரிவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறு பல கோணங்களில் தனது துரித முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வரும் சீனா, தன்னுடன் நண்பனாகுமாறு அனைத்து உலகிற்கு திறந்த அழைப்பை விடுத்துள்ளது. இவ்வாறானதொரு பரந்தளவிலான அனைத்து இன நட்புறவை வளர்ப்பதற்காக சீனா இலங்கையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே தான் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் முன்னேற்றங்கள் குறித்தும் தமிழர் ஒத்துழைப்பு குறித்தும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றது.

 

செங்டூ நகரம்

இலங்கையில் இருந்து அழைத்துச் சென்ற தமிழ் ஊடகவியலாளர்கள் குழுவிற்கு சீனா காண்பித்த முதலாவது நகரம் செங்டூவாகும். செங்டூ சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இது மேற்கு சீனாவின் முதன்மையான பொருளாதார, போக்குவரத்து, தொடர்பு மையங்களில் ஒன்றாகும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக் குடியேற்றம் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சிச்சுவான் பல்கலைக்கழகம் இந்நகரத்தில் அமைந்துள்ளது.

சுற்றுலா துறையின் முக்கிய பகுதியாகவும் செங்டூ நகரம் காணப்படுகின்றது. உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள பெண்டா கரடிகளின் சரணாலயம் செங்டூ நகரிலேயே அமைந்துள்ளது. இன்னும் பத்து ஆண்டுகளில் பாரிய வளர்ச்சியை செங்டூ நகரம் அடையும் என அங்குள்ள சீன அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

செங்டூ நகரிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பெண்டா கரடிகளின் சரணாலயத்தில் சுமார் 140 இற்கும் மேற்பட்ட கரடிகள் உள்ளன. இந்த பெண்டா கரடிகள் இயற்கையின் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவே சீனர்கள் கருதுகின்றனர். இதனால் மிகவும் அதிக செலவில் பெண்டா கரடிகளின் சரணாலயம் பராமரிக்கப்படுவதுடன் 24 மணித்தியாலமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. செங்டூ நகரின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக இந்த சரணாலயம் காணப்படுகின்றது.

மிகவும் பாரம்பரியமான இடங்களும் செங்டூ நகரின் சிறப்பிற்கு காரணமாகியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பதாக எவ்விதமான வசதிகளும் இல்லாமல் காணப்பட்ட இந்த நகரத்தை சீன அரசு அனைவரின் உள்ளங்களையும் கவரக்கூடிய இடமாக மாற்றியுள்ளது....

(படப்பிடிப்பு : எம். நியூட்டன்)

(பயணம் தொடரும்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-30#page-7

Link to comment
Share on other sites

சீனாவி்ல் அந்த ஏழு நாட்கள்

 

லியோ நிரோச தர்ஷன்

 

இலங்­கையின் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழுவின் சீன விஜ­யத்தில் முக்­கி­ய­மான சந்­திப்­பாக சீன வானொ­லியின் தமிழ் பிரி­வு­ட­னான சந்­திப்­பினை குறிப்­பி­டலாம். ஆங்­கில மொழியின் ஆதிக்­கத்­திற்குள் தமிழ் மொழி படும்­பா­டு­களை புதி­தாக சொல்ல வேண்­டி­ய­தில்லை. ஒரு ஆங்­கில சொல் கூட இல்­லாது தூய தமிழில் பேசு­ப­வர்­களை எமது நாட்டில் அடை­யாளம் காண முடி­யுமா? என்றால் அதுவும் சந்­தேகம் தான்.

இவ்­வா­றா­ன­தொரு காலக்­கட்­டத்தில் தூய தமிழில் பேசும் சீனர்கள் சிலரை சீன வானொ­லியின் தமிழ் பிரிவில் சந்­தித்து மெய்­சி­லிர்த்து போனோம். அவர்­களின் பெயர் தூய தமிழ் பெயர்கள். பேசும் மொழியும் கலப்­ப­ட­மற்­றது. சீனாவின் பாரம்­ப­ரியம் மற்றும் கொள்­கை­களை அனைத்­து­லக நாடு­க­ளுக்கும் அந்த நாடு­களின் தாய்­மொ­ழி­களில் கூறு­வதே சீன வானொ­லியின் பன்­னாட்டு சேவையின் நோக்­க­மாகும்.

அதே போன்று உலகில் வாழும் பல இலட்சம் தமி­ழர்கள் சீன வானொ­லியின் தமிழ் பிரி­விற்கு அனுப்பி வைத்­துள்ள வாழ்த்து அட்­டைகள் நிலை­யத்தின் நடுப்­ப­கு­தியில் உலக படத்­தி­லான பாரிய குவ­லைக்குள் வைக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்­து­லக ரசி­கர்கள் மீதான அக்­க­றையை வெளிப்­ப­டுத்தும் வகையில் இந்த செயற்­பாடு காணப்­பட்­டது.

சீன வானொ­லியின் வர­லாற்றை சற்று நோக்கும் போது ..சீன சர்­வ­தேச வானொலி நிலை­யத்தின் தமிழ்ச் சேவையே சீன வானொலி நிலையம் ஆகும். 1941 ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட உல­க­ளா­விய ஒலி­ப­ரப்புச் சேவை ஆகும். இது தற்­போது 64 மொழி­களில் ஒலி­ப­ரப்பு செய்­கி­றது. அவற்றுள் தமிழும் ஒன்று. சீன வானொ­லியின் தமிழ்ப் பிரிவு, 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சீனா­வுக்கும் உலக நாடு­களின் மக்­க­ளுக்கும் புரிந்­து­ணர்வை வளர்ப்­ப­தற்­காக இந்த வானொலிச் சேவை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. செய்தி, அர­சியல், பொரு­ளா­தாரம், பண்­பாடு, அறி­வியல் மற்றும் தொழில்­நுட்பம் என பல துறை சார் தக­வல்­களைப் பன்­னா­டு­க­ளுக்கும் பரப்பி வரு­கின்­றது.

சீன வானொ­லியின் தமிழ்­பி­ரிவு தலை­வ­ராக தற்­போது கலை­மகள் என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்ற சாவோ ஜியாங் செய­ற் ப­டு­கின்றார். சீன வானொ­லியின் தமிழ்ப் பிரிவு, 2013 ஆம் ஆண்டு பொன்­ வி­ழா வைக் கொண்­டா­டி­ய­தாக எம்­முடன் கலந்­து­ரை­யாடி போது தமிழ்ப்­ பி­ரிவு தலைவர் கலை­மகள் தெரி­வித்தார்.

சீனப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஒரு பகு­தி­யாக, பெய்ஜிங் ஒலி­ப­ரப்புக் கல்­லூ­ரியும் இருக்­கி­றது. தமிழ் பட்­டப்­ப­டி ப்பு 1960- இல் தொடங்­கப்­பட்­டது. முதல் கட்­டத்தில் 20 மாண­வர்­களும் அதன் பின் 1963 -இல் 20 மாண­வர்­களும் சேர்ந்து படிக்கத் தொடங்­கினர்.

அந்தச் சம­யத்தில் அவர்­க­ளுக்குத் தமிழைக் கற்­றுத்­தர இலங்­கையில் இருந்து மாகறல் கந்­த­சாமி என்ற தமி­ழ­றிஞர் சென்றார். இவரை அடுத்து சின்­னத்­தம்பி, சாரதா சர்மா, முனைவர் ந. கடி ­கா­சலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் போன்­ற­வர்கள் பணி­பு­ரிந்­துள்­ளனர்.

ஆரம்ப காலத்தில் சீனப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தமிழ் கற்ற மாண­வர்­களைக் கொண்டே முதல் தமிழ் ஒலி­ப­ரப்பு தொடங்­கப்­பட்­டுள்­ளது. அப்­போது அதன் பெயர் பீஜிங் வானொ­லி­யாகும். இன்று சீன வானொலி என்று தமிழில் அழைக்­கப்­ப­டு­கின்­றது.

சீனத் தமிழ் வானொலி நிகழ்ச்­சிகள் நல்ல வர­வேற்பைப் பெற்று வரு­கின்­றன. ஆரம்­ப­கா­லத்தில் அரை மணி நேர­மாக இருந்த தமிழ்ச் சேவை 2004 ஆம் ஆண்­டுக்கு பின்னர் ஒரு மணி நேரச் சேவை­யாக உயர்வு கண்­டது. தற்­போது இரண்டு மணி நேரம் வரையில் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

சீன வர­லாற்றுச் சுவ­டுகள், சீன உணவு வகைகள், சீனாவில் இனிய பயணம், சீனப் பண்­பாடு, சீனக் கதைகள், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர் நலன்கள், சீன இசை நிகழ்ச்சி போன்­றவை சீனாவின் கலை கலா­சா­ரங்­களை வெளி உல­கிற்கு அறிய செய்யும் வகையில் நிகழ்ச்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணி­யாற்றும் சீனர்கள் அனை­வரும் தங்­க­ளு­டைய பெயர்­களைத் தூய தமிழில் மாற்றிக் கொண்­டுள்­ளனர்.அவர்­களின் பெயர்கள் கலை­மகள், கலை­மணி , நிலானி மற்றும் பூங்­கோதை என்று அழைக்­கப்­ப­டு­கின்­றனர். இவ்­வ­கை­யான தமிழ்ப் பெயர்கள் இந்த காலக்கட்டத்தில் கேட்பது அரிதாகும்.

இவ்வாறு சீன வானொ லியில் பல தரப்பட்ட பலந்துரையாடல்கள் மற்றும் நேர்காணல்கள் மற்றும் சந்திப்புகள் என இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் மும்முரமாக இருக்கையில் நினைவு பரிசில்கள் பரிமாறப்பட்டன. அத்துடன் அடுத்த சந்திப்பிற்கு செல்வதற்காக நாம் தயாரானோம்....

(படப்பிடிப்பு : எம். நியூட்டன்)

 

(பயணம் தொடரும்)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-07#page-9

Link to comment
Share on other sites

சீனாவி்ல் அந்த ஏழு நாட்கள்

 

லியோ நிரோச தர்ஷன்
(படப்பிடிப்பு : எம். நியூட்டன்)

இலங்கை தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் சீன விஜ­யத்தின் மற்­று­மொரு சந்­திப்­பாக அந்­நாட்டு அரச விமான சேவை நிறு­வ­னத்­தி­னருடன் காணப்­பட்­டது. சீன நிறு­வ­னத்தின் தென்­மேற்கு பிராந்­தி­யத்தின் தலை­மை­ய­லு­வ­லகம் செங்­குடு நகரில் அமைந்­துள்­ளது. அந்த பிராந்­தி­யத்தின் துணை தலைவர் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் எம்மை வர­வேற்று எயார் சீன நிறு­வ­னத்தின் செயற்­பா­டுகள் மற்றும் சேவைகள் தொடர்பில் தெளிவுப­டுத்­தி­னார்கள்.

சீன தேசிய விமான சேவை நிறு­வ­ன­மானது அந்­நாட்டின் மிக பெரிய அரச நிறு­வ­னங்­களில் ஒன்­றாகும். சீன அரச தலைவர் வெளிநாட்டு பய­ணங்­களை மேற்­கொள்­வ­தற்கு இந்த நிறு­வ­னத்­தையே பயன்­ப­டுத்­தினார். 628 விமா­னங்­களை எயார் சீன நிறு­வனம் கொண்­டுள்­ளது. உலக அளவில் 408 சேவை­களை வழங்கி வரு­கின்­றது.

ஆறு கண்­டங்­க­ளிலும் ஏயார் சீன நிறு­வனம் சேவை விஸ்­த­ரிப்பு மேற்­கொண்­டுள்­ளமை முக்­கிய விட­யமாகும். 39 நாடு­க­ளுக்கு நேர­டி­யாக செல்லக் கூடிய வாய்ப்­பு­களும் அந்த நாடு­களில் காணப்­ப­டு­கின்றன 184 சர்­வ­தேச விமான நிலை­யங்­களில் சேவை விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஏயார் சீன நிறு­வ­னத்தின் தென்­மேற்கு பிராந்­தி­யத்தின் துணைத் தலை வர் சுஹு யூ தெரி­வித்தார்.

எயார் சீன நிறு­வ­னமும் முகவும் வலி­மை­யான கட்­ட­மைப்பை கொண்­டுள்­ளது. உலகில் சிவில் விமான துறையில் முக்­கிய பங்­கா­ள­ராக காணப்­ப­டு­கின்ற அதேசமயம் உலக தர­வ­ரி­சையில் மேலும் முன்­னேறி முதலாம் இடத்­திற்கு செல்ல வேண்டும் என்­பதே எயார் சீன நிறு­வ­னத்­திற்கு இலக்­காக உள்­ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் செங்­குடு சுயாங்­லியு சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து கொழும்பை நோக்­கிய விமான சேவைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. ஆரம்பித்து ஒன்­றரை வரு­டத்­திற்குள் சுமார் 1 இலட்­சத்து 80 ஆயிரம் பேர் இந்த விமான சேவையை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

மேலும் எயார் சீன நிறு­வ­னத்தின் கொழும்பு மற்றும் செங்­குடு இடை­யி­லான விமான சேவையை பயன்­ப­டுத்தும் போது அங்­கி­ருந்து வேறு பகு­தி­க­ளுக்கு செல்­வ­தாயின் அதற்­கான ஒழுங்­களை சீன விமான சேவை நிறு­வனம் வழங்­கு­வ­துடன் அனைத்து அடிப்­படை வச­தி­க­ளையும் கொண்ட தங்­கு­மி­டங்­களை பய­ணி­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கு­கின்­றது. வாரத்­திற்கு நான்கு முறை இந்த இரு விமான நிலை­யங்­க­ளுக்கும் இடை­யி­லான சேவை காணப்­ப­டு­கின்­றது. இந்த சேவையை பயன்­ப­டுத்தும் பய­ணி­களின் எண்­ணிக்கை 5 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் இந்த துறையில் போட்டி தன்­மைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. எனவே முன்­னோக்கி செல்லும் போது ஏற்­பட கூடிய சவால்­களை எயார் சீன நிறு­வனம் சிறந்த முகா­மைத்து கட்­ட­மைப்பை கொண்டு எதிர்­கொள்­கின்­றது. இதன் கார­ண­மா­கவே பய­ணி­களின் எண்­ணிக்கை வீதமும் அதி­க­ரித்­துள்­ளது.

குறிப்­பாக இந்த ஆண்டில் இலங்கை பய­ணி­களின் எண்­ணிக்கை 10 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது ஒரு சிறந்த முன்­னேற்­ற­மாகும்.

சீனாவில் தற்­போது காணப்­ப­டு­கின்ற பொரு­ளா­தார முன்­னேற்­றங்கள் மற்றும் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற சீன திட்­டங்கள் தொழில் நிறு­வ­னங்­களின் அதி­க­ரிப்பின் கார­ண­மாக எதிர்­வரும் காலங்­களில் வர்த்­த­கர்­களின் விஜ­யங்­களும் அதி­க­ரிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

அந்த வகையில் சீன விமான நிறு­வ­னத்தின் வர­லாற்­றினை அவ­தா­னத்தில் கொள்ளும் போது ,சீன தேசிய விமான சேவை நிறு­வ­ன­மான எயார் சீன நிறு­வனம் சீன அர­சாங்­கத்தின் நிறு­வ­ன­மாகும். 1949 ஆம் ஆண்டில் சீன மக்கள் குடி­ய­ரசு அமைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக இதுவே சீனக் குடி­ய­ரசின் முதன்மை வான்­வழிப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­ன­மா­கவும் விளங்­கி­யது. இதன் தலைமை அலு­வ­லகம் பெய்­ஜிங்கில் அமைந்­துள்­ளது. எயார் சீனா விமான சேவைகள் பெய்ஜிங் சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து இயக்­கப்­ப­டு­கின்­றன. உலகின் மிகக் கூடு­த­லான வானூர்தித் தொகு­தியைக் கொண்ட நிறு­வ­னங்­களில் பத்­தா­வ­தாக சீன விமான சேவைகள் நிறு­வனம் உள்­ளது.

இந்த நிறு­வ­னத்தின் சின்­ன­மான கலை­ம­ய­மான பீனிக்ஸ் பறவை வடி­வத்தை முன்னாள் தேசியத் தலை­வ­ரான டங் சியா­வுபிங் உரு­வாக்­கினார். எயார் சீன நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­னங்­க­ளாக எயார் சீன சரக்கு சேவை, எயார் மக்­காவு, பெய்ஜிங் எயார்லைன், டாலியன் எயா­ரர்லைன், ஷான்டோங் எயா­ரர்லைன் , ஷென்ஷென் எயார்லைன் மற்றும் திபெத் எயார்லைன் ஆகி­யன காணப்­ப­டு­கின்­றன.

இதன் சேவை மையங்­க­ளாக பெய்ஜிங் சர்­வ­தேச விமான நிலையம், செங்­குடு சுயாங்­லியு சர்­வ­தேச விமான நிலையம் மற்றும் சாங்கை புதோங் சர்­வ­தேச விமான நிலையம் உள்­ளிட்ட சீனாவின் முக்­கிய நக­ரங்­க­ளாக கருதக் கூடிய அங்க் ஷோ சியோஷன் சர்­வ­தேச விமான நிலையம் ,சோங்கிங் ஜியாங்பே சர்­வ­தேச விமான நிலையம், டியான்ஜின் பின்ஹைய் சர்­வ­தேச விமான நிலையம் மற்றும் உஹான் தியான்ஹே சர்­வ­தேச விமான நிலையம் ஆகியன காணப்­ப­டு­கின்­றன.

எயார் சீன நிறு­வனம் இலங்­கை­யுடன் நெருங்­கிய பரந்­த­ள­வி­லான உற­வு­களை கொண்­டுள்­ளது. இதன் ஊடாக இரு தரப்பு சுற்றுலா பயணிகள் ஊக்குவிக்க முடியும். அதேபோன்று எயார் சீன நிறுவனத்தின் பரந்துபட்ட சேவைகள் தொடர்பாக இலங்கையில் மக்கள் மத்தியில் புரிதலை ஏற்படுத்த அந்நாட்டு ஊடகங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததா கும். 

எனவே தமிழ் ஊடகங்கள் 

(பயணம் தொடரும்)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-14#page-8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார். அது பயங்கர வாத அமைப்பென்றால் ஏன் காட்டிக்கொடுக்கும்வரை அந்த அமைப்பில் இருந்தார்? அதில் அங்கம் வகித்த இவரும் பயங்கரவாதியே. இவரது பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறதே, அப்படியெனில் புலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடியது, இது போன்றதுகள் பயங்கரவாதியாக அங்கு இயங்கியிருக்கின்றன அதனாலேயே தண்டனைக்கு பயந்து ஓடி இலங்கை பயங்கரவாதத்தோடு இணைந்து தமது பயங்கரவாதத்தை முன்னெடுக்கின்றன. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்படி இவரால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியுமென்பதையும் இவர்தான் விளக்க வேண்டும். 
    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.