Jump to content

இந்த மொபைலை மடக்கலாம்... சுருட்டலாம்... சாம்சங்கின் அடுத்த சரவெடி!


Recommended Posts

இந்த மொபைலை மடக்கலாம்... சுருட்டலாம்... சாம்சங்கின் அடுத்த சரவெடி!

சாம்சங்

இந்த மாதம் ஆப்பிளின் புதிய ஸ்மார்ட்போனான ஐபோன் X வெளியாகியிருந்த சமயத்தில் சாம்சங் ஒரு அறிவிப்பை வெளியிட்டது . புதிய ஐபோன் X க்கு பதிலடி தரும் வகையில் இந்த அறிவிப்பை சாம்சங் வெளியிட்டிருந்தாலும் ஆப்பிளின் தாக்கத்தால் அந்த அறிவிப்பு பரவலாக கவனிக்கப்படவில்லை. ”2018-ம் ஆண்டு ஜனவரியில் மடக்கக்கூடிய வகையிலான (Foldable Smartphone) ஸ்மார்ட்போனை வெளியிடப்போகிறோம்” என்பதுதான் அந்த அறிவிப்பு.

 

ஸ்மார்ட்போன்கள் தொடக்கத்தில் இருந்த வசதிகளில் இருந்து பல வகைகளில் மேம்பட்டிருந்தாலும் பெரிதாக மாறாத விஷயம் அதன் திரைதான். உடைந்தால் அதிகம் செலவு வைக்கக் கூடியதும் அதுதான். எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் திரை உடைந்து போவதை தடுக்க முடியவில்லை. திரை எதற்காக உடைகிறது என்பதைப் பார்த்தால் அது சற்றும் வளையாத தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதுதான் விடையாக இருக்கும். சற்று நெகிழும் தன்மையுடைய திரையை மொபைலில் பயன்படுத்தினால் அது உடையும் வாய்ப்பைப் பெருமளவு குறைக்க முடியும். இந்த நிலையில்தான் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் மடக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போனை வெளியிடப்போகிறோம் என்று அறிவித்திருக்கிறது சாம்சங். எனவே இதில் நெகிழும் தன்மையுடைய திரை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

சாம்சங


கடந்த வருடம் இது போன்ற ஒரு மொபைலை அறிமுகப்படுத்தியிருந்தது லெனோவோ .டேப்லட் வடிவத்தில் இருந்த அதை இரண்டாக மடித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அது எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்கியும் காட்டியது லெனோவோ. லெனோவோ மட்டுமின்றி இதே கான்செப்டை மையமாக வைத்துப் பல ஸ்மார்ட்போன்கள் படங்கள் வெளிவந்தாலும் அவை எதுவும் விற்பனைக்கு வரவில்லை. எல்லாம் பரிசோதனை நிலையிலேயே இருக்கின்றன. 

ஆனால் இதற்கெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் 2013 ம் ஆண்டிலேயே மடக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போன் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி டெக் உலகை ஆச்சரியப்பட வைத்தது சாம்சங். அப்பொழுது வெளியிட்ட ஒரு வீடியோவில் ஒரு மொபைல் மடக்கக்கூடிய வகையிலும் மற்றொன்று ஒரு சிறிய பாக்ஸ் போன்ற இடத்தில் இருந்து சுருட்டி வைக்கப்பட்ட திரையை வெளியில் இழுக்கும் வகையிலும் இருந்தது. அதன்பிறகு சாம்சங் நிறுவனம் இந்த மாடல் மொபைல் தொடர்பாக ஆர்வம் காட்டாதது போலத் தெரிந்தாலும், இது தொடர்பான ஆராய்ச்சியில் முனைப்பாகவே இருந்தது. அறிவிப்பு வெளியாகி 5 வருடங்களுக்குப் பின்னர் அந்த ஸ்மார்ட்போன் வெளியாவது இப்போது உறுதியாகியிருக்கிறது. 

எப்படி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 

சாம்சங்


7 அல்லது 8 இன்ச் திரையைக் கொண்டிருக்கலாம். அதை மடக்கிப் பயன்படுத்தும் போது கைக்குள் அடங்குமாறு இருக்கும். அதற்கு தகுந்தவாறு பேட்டரியின் வடிவம் மாற்றியமைக்கப்படலாம். திரையைப் பொறுத்தவரை அது OLED வகை திரையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. திரையானது நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். 5 வருடங்களுக்குப் பின்னர் வெளியாவதால் 2013 ம் ஆண்டில் காண்பிக்கப்பட்ட மொபைல் வடிவமைப்பு பெரிய அளவில் மாறுபட்டிருக்கலாம். இது தொடர்பாக பல காப்புரிமைகளை கையில் வைத்திருக்கிறது சாம்சங். 

 

அண்மைக்காலமாக வெளியாகும் மொபைல்களின் திரை பெரிய அளவில் மாற்றம் பெற்று வருகிறது. இதற்கு முன்பு மொபைலின் திரையின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். அது தற்பொழுது வெளியாகும் மொபைல்களில் குறைவதைக் கவனித்தால் தெரியும். அதே வேளையில் இது போன்ற புதிய திரை தொழில்நுட்பங்களால் ஸ்மார்ட்போன்களின் ஒட்டு மொத்த வடிவமைப்புமே மாற்றமடையும். உள்ளங்கைக்குள் உலகம் என்பது போல எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய மொபைலாக இருந்தாலும் அதை நம் கைகளுக்குள் அடக்கி விடலாம். 

http://www.vikatan.com/news/information-technology/103577-samsung-will-launch-foldable-smartphone-soon.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.