Jump to content

சடுகுடு ஆடும் ரஜினி-கமல் அரசியல்


Recommended Posts

சடுகுடு ஆடும் ரஜினி-கமல் அரசியல்

 

 
2jpg

கோவையில் ரஜினி ரசிகர்களின் போஸ்டர்.

கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க நாள் பார்க்க, ரஜினியோ அதற்கு அமைதி காக்க, கோவை ரஜினி ரசிகர்கள் கமலுக்கு எதிராக போஸ்டர், வாட்ஸ் அப் படங்களை கடைவிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதில், 'சப்பாணிகிட்ட பத்த வச்சது பரட்டையா?' என்ற வேடிக்கை குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

'போர் வரட்டும் பார்க்கலாம்' என்று ரஜினி சொல்லிச் சென்றது இன்னமும் அடையில் அப்படியே இருக்க, பிக்பாஸ் வருகையில் திடீர் எழுச்சி பெற்ற கமலஹாசன் அதீத அரசியல் பேசி, இறுதியில் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதையும், அதற்கான சின்னம், கட்சிப் பெயர் பணிகளில் இறங்கி விட்டதாகவும் அறிவிக்க, தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் எல்லாம் ஒரு மாதிரியாகத்தான் விழித்துக் கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகளுக்கு எப்படியோ, அதிமுக இல்லையென்றால் சுலபமாக வெல்லும் அடுத்த நிலையில் உள்ள திமுக ஒருவித திகிலுடன் உள்ளது.

ஆட்சியில் குழப்பங்கள் நிகழும் போதெல்லாம் அடுத்தது திமுகவா? அதிமுகவா? என்ற கேள்விகள்தான் தமிழக அரசியலை உலுக்கி எடுக்கும். இதில் கொஞ்சம் விதிவிலக்காக எம்ஜிஆர் மரணத்தின் போது ஜெ, ஜா அணி பிரிய கிராமங்கள் தோறும் சேவக்கோழியா? (அதிமுக ஜெ) ரெட்டைப்புறவா? (அதிமுக ஜா) என்பதே சின்ன சர்ச்சைகளாகி இறக்கை கட்டிக் கொண்டன. இவர்கள் போட்ட சைக்கிள் இடைவெளி குஸ்தியில் பிரிந்த ஓட்டுகள் மூலம் திமுக வென்று ஆட்சியை அமைத்துக் கொண்டது.

அப்போது ஜெயலலிதா  நட்சத்திர அந்தஸ்தில் பிரச்சார பீரங்கியாக இருந்தார். திமுகவிற்கு அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவர் கருணாநிதி படு ஸ்மார்ட்டாக ஓடியாடி களமாடிக் கொண்டிருந்தார். எனவே அந்த விஷயம் எளிதில் சாத்தியமாயிற்று. என்றாலும் கூட அதிமுக அணிகள் ஒன்றிணைய, இரட்டை இலை கிடைத்துவிட, ராஜீவ் காந்தி அகால மரணமடைய அந்த விஷயங்கள் எல்லாம் நட்சத்திர அந்தஸ்துள்ள ஜெயலலிதாவை மாபெரும் தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்த நிலையில் வைத்து விட்டது.

அதன் பிறகு அவர் இடறி விழும்போதெல்லாம் கருணாநிதியும், கருணாநிதி இடறி விழும்போதெல்லாம் ஜெயலலிதாவும் முதல்வர்களாக பரிணமித்தார்கள். கடந்த தேர்தலில் மட்டும் கருணாநிதியின் அரசியல் தந்திரங்களையும், வியூகங்களையும் அவரின் அரசியல் வாரிசுகள் ஏற்காத நிலையில் மீண்டும் முதல்வர் நாற்காலியை தக்க வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. ஒரு வேளை கருணாநிதி கணக்குப் போட்டபடி விஜயகாந்த் அவர் அணியில் கூட்டு சேர்ந்திருந்து, அந்த அணி பலம் பொருந்தியதை பார்த்து மற்ற உதிரிக்கட்சிகளும் அதனுடன் பிணைந்திருந்தால் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் வரலாறு 1996 வருடம் போல் சுத்தமாக மாறியிருக்கும்.

இடையில் ஜெயலலிதா மரணமும் அதையொட்டி நிகழ்ந்த- நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கும் தமிழகத்தில் இடமிருந்திருக்காது. இப்போது ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி, டிடிவி. தினகரன் அணி என்றெல்லாம் பிரிந்தே தேர்தலை சந்தித்தாலும் ஜெயலலிதா சேவற்கோழி சின்னத்தில் நின்று வென்றதைப் போன்ற கணிசமான இடங்களை எந்த ஓர் அதிமுக அணியாவது பிடிக்குமா என்பது கேள்விக்குறியே.

அதேபோல் எல்லா அணிகளும் ஒன்றிணைந்து இரட்டை இலையை தக்க வைத்தால் கூட நிலைமை எப்படியிருக்கும் என்பதை சொல்ல முடியாது. ஆனால் பணமும், பேரமும் துள்ளி விளையாடும். அதன் சக்திக்கு ஏற்ப திமுக வெற்றிக்கு போராட வேண்டி வரும். என்றாலும் கூட சுலபமாக அக்கட்சியே வென்று ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்புகள் நிறைய. இந்த இடத்தில்தான் வருகிறது சிக்கல். அதை   நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் ஏற்படுத்துகிறார்கள்.

 மக்களுக்காகப் பாடுபடுகிறேன் என்று அறிவித்துக் கொண்ட தங்களை நேர்படத் தெரிந்தவர்களை விடவும், தங்களுக்கு தெரிந்த நட்சத்திரங்களையே விரும்புகிறார்கள். அந்த அளவுக்கு கவர்ச்சி மாயையில் விழுந்து கிடக்கிறார்கள். அதைத்தான் அறுவடை செய்து கொள்ள ஒருவர் அரசியலுக்கு ரெடி என்கிறார்; இன்னொருவர் போர் வரட்டும் பார்க்கலாம் என்கிறார். இதில் தற்போதைக்கு குழம்பிப்போயிருப்பவர்கள் அதிமுக- திமுகவினர் மட்டுமல்ல. அவர்களை விடவும் குழப்பத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் ரஜினி-கமல் ரசிகர்கள்தான்.

'முதலில் அவர் வருவாரா? இவர் வருவாரா?', 'இவர் வருவது உறுதியாகி விட்டது; ஆனால் அவர் எதுவும் பேசாமல் இருக்கிறாரே!', 'அவர் பதுங்குவது பாய்வதற்கா? இல்லை மறுபடியும் பட விநியோகம் முடிந்தவுடன் மறுபடியும் தூங்குவற்கா?', 'ரெண்டு பேரும் ஒரு வேளை அரசியல் கட்சி ஆரம்பித்தால் யார் எம்ஜிஆர் ஆவார்; யார் கருணாநிதி ஆவார்?', 'கருணாநிதி எங்கே ஆவார்? ஒருவர் சிவாஜி கணேசனாகவே ஆவார்!', 'அவர் சிவாஜி கணேசன் ஆனால் மட்டும் இவர் எம்ஜிஆர் ஆகிவிடுவாரா? மாட்டார்!' என இப்படியெல்லாம் கமெண்ட்ஸ் இருவேறு தரப்பு ரசிகர்களிடம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே வேறு அரங்கிலிருந்து உரத்து வேறொரு குரல், 'அட நம்ம கேப்டன் பழையபடி நல்லா பேசறார்ப்பா. வாட்ஸ் அப்புல வந்துச்சு பார்க்கலை. திரும்ப அவர் களத்தில் பழையபடி விளையாடுவார். மத்தவங்க வூட்டுக்கு போக வேண்டியதுதான்!' என்கிறது.

இந்த அரசியல் குத்தாட்ட குளறுபடியில் கோவை ரஜினி ரசிகர்கள் ஒரு படி மேலே போய் ரஜினிக்கும், கமலுக்கும் கலகம் மூட்டுகிற மாதிரியான போஸ்டர்களை தெருக்களிலும், வாட்ஸ் அப் மற்றும் முகநூல்களிலும் களம் இறக்கி உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு போஸ்டரில் 'பதினாறு வயதினிலே!' சப்பாணி கமல் பரட்டை ரஜினியின் கையை அமுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அதில் 'பட்டமும், பதவியும் தானா தேடி வர்ரது... பரட்டைக்கு மட்டும்தான்டா!' என்று வாசகங்கள்.

இன்னொன்று கபாலி ரஜினி போஸ்டர். அதில் 'தெனாலி வந்தா கோமாளி; கபாலி வந்தாதான்டா தீபாவளி!' என நறுக் வாசகங்கள்.

அடுத்த போஸ்டரில் தலைமைச்செயலகம், ரஜினி படம் பொறித்து, 'தலைவா நீங்க செலக்ஷன் இனி இல்லை எலக்ஷன்!' என வாசகம் நகர்கிறது.

இந்த போஸ்டர்களை பொறுத்தவரை என்ன சொல்கிறதோ இல்லையோ. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் சிவாஜி ரசிகர்களும், எம்ஜிஆர் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசிக் கொண்டது போலான சூழ்நிலையை தற்போதைய அரசியல் சூழல் ஏற்படுத்திக் கொடுத்து விட்டது என்பதைத்தான்.

ஏற்கெனவே 'நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவரும் வேளையில் அவருக்கு போட்டியாக நீங்களும் அரசியலுக்கு வருகிறீர்களா?' என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் , 'நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவருவதால் நான் அரசியலுக்கு வர நினைக்கவில்லை. எனக்கு தேவை என்று நான் நினைப்பதனால்; தமிழகத்துக்கு தேவை என்று நினைப்பதனால் நான் வருகிறேன். தமிழக மக்கள் கொடுத்திருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பேசி வருகிறேன்!' என்று தெளிவாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதற்கு முந்தைய பேட்டி ஒன்றில், 'நான் அவருடன் (ரஜினியுடன்) இதைப்பற்றி பேசவில்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியே பேசினேன் என்று  தெரிவித்தால் என்ன பேசினேன் என்று சொல்வேன் என எண்ணுகிறீர்களா?' என்றும் நாசூக்காக கேட்டிருந்தார்.

இதையெல்லாம் தொடர்ந்து இன்னொரு மீடியா பேட்டியில், 'பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல; ஒத்த கருத்துடன்பாடு ஏற்பட்டால் அதனுடன் கூட்டணிக்கு தயார்!' என்றும், 'நானும் ரஜினியும் இரண்டு பேருமே ஊழலுக்கு எதிரான ஒத்த கருத்தோடுதான் வருகிறோம்!' எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்து ரஜினி ரசிகர்கள், 'கமல் வேறு; ரஜினி வேறு; இருவேறு கட்சிகளைத்தான் அவர்கள் ஸ்தாபிக்கப் போகிறார்கள்!'  என்று உறுதியாக நம்புகின்றனர்.

என்றாலும் இவர் இவ்வளவு பகிரங்கமாக அறிவிக்கும்போது அவர் ஏன் சும்மா இருக்கிறார் என்றும் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒரு ரஜினிமன்ற நிர்வாகி, ''சென்ற புகைப்பட செஷனில் 16 மாவட்டங்களை சேர்ந்த மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். மீதியுள்ள 15 மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு இந்த  செப்டம்பரில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். அதுவும் நடக்கவில்லை. படப்பிடிப்பு வேலைகளால் அது தள்ளிப் போகிறது என்று சொன்னாலும் அவர் சென்னையில்தான் இருக்கிறார். ஒருவேளை ரசிகர்கள் சந்திப்பு இப்போது நடத்தி கமல்ஹாசன் அரசியல் வருகை, ஜெயலலிதா மரண சந்தேகம், மாறி வரும் அரசியல் சூழல் பற்றி பேச்சு வந்தால் என்ன செய்வது என அதை தவிர்த்திருக்கலாம்!'' என குறிப்பிட்டவர், வேறு சில விஷயங்களில் உணர்ச்சி பொங்கினார்.

''இந்த நேரத்தில் அவர் தூய்மை திட்டத்தை பற்றி பேசுகிறார். சத்குருவின் நதி மீட்பு பிரச்சார விளம்பரத்தில் இடம் பெறுகிறார். இதுவெல்லாம் கூட ரசிகர்கள் மத்தியில் ஒரு நெகட்டிவ் சிந்தனையை ஏற்படுத்தியிருக்கிறது. கமல்ஹாசன் தெளிவாக இருக்கும்போது, இவர் ஒரு சார்பாக, யாருக்காக நிற்கிறார் என்பதை இப்படி வெளிப்படுத்துகிறாரே. இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் அவர் (ரஜினி) அரசியலுக்கு வரும்போது கண்டிப்பாக கமலின் அரசியல் எடுபடாது. அந்த அளவுக்கு ரஜினிக்கு பெண்கள் முதல் பெரியவர்கள் வரை கண்மூடித்தனமான வரவேற்பு உள்ளது. எனவே நாங்கள் இந்த விஷயத்தில் பொறுமை காத்து வருகிறோம்!'' என்கிறார் இவர்.

இன்னொரு ரசிகர் மன்ற பொறுப்பாளர் வேறொரு சந்தேகத்தையும் கிளப்பினார். ''கமல் பேசுவது எல்லாமே ரஜினியின் குரலாகவே இருக்கிறது. அவர் ரஜினியிடம் அரசியல் பேசாமல் இப்படி வெளிப்படையாக மேடை அரசியல் பேச மாட்டார். எப்பவும் மற்றவர்களை பேசவிட்டு, அதன் எதிர் வினைகளை கருத்தில் கொண்டு பிறகு அதன் ஆழத்தில் மூழ்குவது ரஜினியின் பாங்கு. அதைத்தான் கமலிடம் பத்த வச்சுட்டு கவனித்துக் கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது!'' என்கிறார் அவர்.

கமல், ரஜினி ரசிகர்களின் இந்த நிலைப்பாடுகள் திமுக அரங்கில் மட்டுமல்ல; தேமுதிக அரங்கிலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.

இவர்கள் இருவருமே கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் யார் யாருடன் கூட்டு வைப்பார்கள். அதனால் எந்த அளவு ஓட்டுக்கள் சிதறும். அது எந்த கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்பதை இப்போதே கணக்குப் போட்டு பார்க்க தொடங்கியுள்ளார்கள்.

''எங்கே, எப்படி கூட்டணி அமைந்தாலும், எந்தப்பக்கம் ஓட்டுகள் பிரிந்தாலும் இப்போதைக்கு அவையெல்லாமே எங்களுக்கு (திமுகவிற்கு) வரவேண்டிய ஓட்டுகளே. அந்த அளவுக்கு மக்கள் அதிமுக ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளார்கள். அந்த வெறுப்பரசியலை எந்த அளவுக்கு ரஜினி, கமல் பக்கம் போகாமல் பாதுகாக்க போகிறாரோ அதில்தான் எங்கள் செயல் தலைவரின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கிறது!'' என்பதை திமுகவின் மூத்த முன்னோடிகள் கூட ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article19763619.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.