Jump to content

யார் இந்தப் பொடியன்... இந்திய கிரிக்கெட்டின் புது சென்சேஷன்! #ShubhangHegde


Recommended Posts

யார் இந்தப் பொடியன்... இந்திய கிரிக்கெட்டின் புது சென்சேஷன்! #ShubhangHegde

 
 

கடந்த சனிக்கிழமை இரவு ப்ரோ கபடி பார்த்துவிட்டு சேனல்களை மாற்றியபோது, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டியின் Presentation Ceremony நடந்துகொண்டிருந்தது. கர்நாடகா பிரீமியர் லீக் தொடரின் பரிசளிப்பு விழா. பெரும்பாலும் பார்த்துப் பழகிடாத முகங்கள். அப்போதுதான் ஒரு விருதை வாங்கிக்கொண்டு போன ஒரு வீரன், மீண்டும் இன்னொரு விருதினை வாங்கிச் சென்றான். பிஞ்சு முகம். 18-19 வயது இருக்கும் என்று நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, "The young promising player of the Tournament award goes to...Shubhang Hegde" - என்று வர்ணனையாளர் சாரு அறிவித்ததும், அதே இளம் வீரன் மூன்றாவது விருதை வாங்க வருகிறான். அந்த ஃபைனலின் Promising young player விருதையும், ஆட்டத்தின் சிறந்த பெளலருக்கான விருதையும் கூட அவன்தான் வென்றிருந்தான். 

Shubhang Hegde

 

ஸ்டுவர்ட் பின்னி, மனீஷ் பாண்டே, ஸ்ரீநாத் அரவிந்த் ஆகிய இந்திய வீரர்கள் நிறைந்த பெலகாவி அணியில் இப்படியொரு ஆளா? அவன் ஸ்பின்னர் என்று சாரு தெரிவித்திருந்ததால் எனக்குள் ஒரு ஆர்வம். அவனைப்பற்றி கூகுள் செய்தேன். விக்கிபீடியா பக்கம் இல்லை. எந்த கிரிக்கெட் இணையத்திலும் அவர் Profile இல்லை. கடந்த வருடம் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை கிளிக் செய்தேன். முதல் வரியே தூக்கிவாரிப்போட்டது. அவனுக்கு அப்போது வெறும் 15 வயது. ஆம், கர்நாடகா பிரீமியர் லீக் தொடரின் இந்த சீசனில் தன் சுழற்பந்துவீச்சால் சுழன்றடித்த 16 வயது சூறாவளிதான் அந்த சுபாங் ஹெக்டே!


'சரி, அந்தப் பையன் அப்படி என்னதான்பா பண்ணான்?'. ஆவல் மேலிட,  Hotstar-ல் அந்த இறுதிப் போட்டியைப் பார்த்தேன். அவ்வப்போது 'இந்த சீசனின் சிறந்த அணி' என்று 11 சிறந்த வீரர்கள் கொண்ட அணியை டிஸ்ப்ளே செய்து கொண்டிருந்தனர். அதிலும், அந்தச் சிறுவனின் முகம். ஆம், சிறுவன்தான். 16 வயதுக்காரனை சிறுவன் என்றுதானே சொல்ல முடியும்! ஆட்டத்தின் 4-வது ஓவர். பவர்பிளே வேறு. எந்த சலனமும் இன்றி பந்தைக் கையில் வைத்திருந்தான் ஹெக்டே. ரோனித் மோரே பேட்டிங். Left arm orthodox. ஷார்ட் லெங்த்தில் வீசப்பட்ட பந்து, அற்புதமாக டர்ன் ஆகி ஆஃப்-சைடில் வெளியே சென்றது. அடுத்த பந்தும் அப்படியே. அதுவரை ஆஃப் சைடு பந்துகளை விளாசிக் கொண்டிருந்தார் தாஹா. இந்த முறை பந்து டர்ன் ஆகவில்லை. பேட்ஸ்மேனின் கணிப்புக்குக் கொஞ்சமும் இடம் தரவில்லை. ஃபுல் பால். ஸ்டிக் லெங்த். இரு பேட்ஸ்மேன்களுக்கும் எப்படி வீச வேண்டுமென்று தெளிவான பிளான். அந்த பிளானை எக்சிக்யூட் செய்ததில் அவ்வளவு பெர்ஃபெக்ஷன். 

தன் இரண்டாவது ஓவரை வீச வருகிறார். மீண்டும் மோரே. இறங்கி வந்து அடிக்க முயல்கிறார். முதல் ஓவரில் ஆனது போலவே ஒரு அற்புத டர்ன். ஸ்டம்பிங். அடுத்து 4 'டாட் பால்கள்'. கடைசிப் பந்தில் விக்கெட். மெய்டன் மற்றும் இரண்டு விக்கெட்டுகள். ஃபைனலில் தடுமாறுகிறது பிஜாபுர் புல்ஸ். போட்டுத் தாக்கிவிட்டான் அந்தப் பதினாறரை வயதுச் சிறுவன். "மிகவும் அக்ரசிவான பந்துவீச்சு. பவர்ப்ளே ஓவர்களில் எவ்வளவு தைரியத்துடன் பந்து வீசுகிறார். அற்புதமான பவுலிங். நினைவு கொள்ளுங்கள் இந்த வீரனுக்கு 16 வயது தான் ஆகியுள்ளது"- இடது கை சுழற்பந்து ஜாம்பவான் வெட்டோரி கமென்டர் பாக்சில் அமர்ந்து ஹெக்டேவை புகழ்ந்து கொண்டிருக்கிறார். மெய் சிலிர்க்கிறது. வெட்டோரியின் குரலைக் கேட்டதும் உள்ளுக்குள் ஒருவகையான எண்ண ஓட்டம். ஏன்..? "வெட்டோரிதான் என் ரோல் மாடல்" என்று ஹெக்டே கூறியதாக அந்தக் கட்டுரையில் படித்த ஞாபகம். ஆம்... ஓராண்டுக்கு முன்புதன் ரோல் மாடலாகக் கூறிய வீரரே இப்போது அவனை மைக் பிடித்து புகழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தச் சிறுவனை நினைத்துப் பெருமையாக இருந்தது. கிரிக்கெட் பேட்டையும், பந்தையும் வாழ்க்கையாக நினைப்பவனுக்கு அதைத்தவிர வேறென்ன வேண்டும்?

அவன் பந்துவீசியபோது அவனுக்குள் இருந்த தன்னம்பிக்கை வியப்பு! எங்கு ஃபீல்டர் இருக்க வேண்டும் என்று கேப்டனிடம் தெளிவாகக் கூறுகிறான். அடிக்கப்படும் பந்துகள் ஃபீல்டர் நிற்கும் திசை தவிர எங்குமே போகவில்லை. அவ்வளவு தெளிவான ஃபீல்டு பிளேஸ்மென்ட். பவுலிங்கில் அவ்வளவு தெளிவு. நான்கு ஓவர் முடிவில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள். வர்ணனையில் அமர்ந்திருந்த மைக் ஹஸ்ஸி, வெட்டோரி, சாரு, இந்தி நடிகர் சுனில் ஷெட்டி வரை அனைவரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்த ஒரு போட்டியினால் மட்டும அல்ல. இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அந்தச் சிறுவன் இதைத்தான் செய்துள்ளான். 8 போட்டிகளில் 7 விக்கெட்டுகள். எகானமி வெறும் 6.31 தான். அதனால் தான் போட்டி முடிந்ததும் அத்தனை விருதுகள். ஒருநாள் நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிப்பான் என்ற நம்பிக்கை. ஆனால் யாராக?

Shubhang Hegde


போட்டியின் போது சுபாங்  ஹெக்டே பவுலராக அடையாளப்படுத்தப்பட்டான். 2017 கர்நாடகா பிரீமியர் லீக் தொடரில் கூட 2 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டிருந்தான். ஆனால் அந்தக் கட்டுரையில் அவன் 'ஆல் ரவுண்டர்' என்று பார்த்ததாக ஞாபகம். ஆம், 2016-ல் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் டிவிஷன் போட்டிகளில் 4 சதங்கள் அடித்திருந்தான் ஹெக்டே. அதிகபட்சமாக 191. பேட்டிங்கிலும் அவன் கில்லாடி. "நான் ஒரு பவுலிங் ஆல் ரவுண்டர் ஆக விரும்புகிறேன்" என்று சொல்லியிருந்தான். அவனது ரோல் மாடல் வெட்டோரியைப் போலவே! 

சச்சினும், டிராவிட்டும் கூட அவனுக்குப் பிடித்த வீரர்கள். பேட்டிங்கை விட பவுலிங் சிறப்பாக இருப்பதனால், அனைவரின் பார்வையும் அவனது பவுலிங்கின் மீது மட்டும் படுவதைப் போன்ற உணர்வு. விஜய் மெர்சென்ட் 'Under-16' தொடரில் 5 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் அள்ள, 'சிறந்த பவுலர்' என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களுக்கு, வலைபயிற்சியில் பந்துவீசியுள்ளான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் Trials-ல் பங்கேற்று வெட்டோரியின் கண்முன் பந்துவீசியிருக்கிறான். அப்போது அவனைத் தேர்வு செய்யாத வெட்டோரி, வர்ணனையின்போது நிச்சயம் வருந்தியிருப்பார். இப்படித்தான் கர்நாடகா பிரீமியர் லீகிலும் அவனது பேட்டிங்கை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லையோ என்று சந்தேகம் எழுகிறது.

"1984-ல் இருந்து பயிற்சியளித்து வருகிறேன். சுபாங்கைப் போல் ஒரு ஆல்ரவுண்டரைப் பார்த்தது இல்லை" என்று பிரமிக்கிறார் அவனது பயிற்சியாளர் இர்ஃபான் சேத். அந்த ஆல்ரவுண்டர் அப்படியே ஆல்ரவுண்டராக வளர வேண்டும். தலைசிறந்த ஆல்ரவுண்டராக கிரிக்கெட் உலகை ஆள வேண்டும். அதுவே அவனுக்கான வெற்றி. அதுவே, "உன் தோல்விகளை நேசி. அது உனக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்களைக் கற்றுக்கொள்" என்று கூறிய அவரது தந்தைக்கான வெற்றி. அவனது தந்தை சமாரத் ஹெக்டேவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

 

பயிற்சியாளர் சொன்னதுபோல சுபாங் ஹெக்டே ஒரு மாபெரும் திறமைசாலி. இளம் பொக்கிஷம். 16 வயதுதான் ஆகிறது. இரண்டு மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தால், நிச்சயம் இந்திய அணியில் அவனுக்கு இடம் உறுதி. ஆனால், அடுத்த குல்தீப்பாகவோ, ஓஜாவாகவோ அவன் அணிக்குள் நுழையக்கூடாது. ஏன் அடுத்த ஜடேஜாவாகக்கூட நுழையக்கூடாது. ஒரு சர்வதேச ஜாம்பவானைப் போல்... அவன் ரோல் மாடல் வெட்டோரியைப் போல்... இல்லை இல்லை வெட்டோரிக்கும் மேல்!

http://www.vikatan.com/news/sports/103365-16-year-old-shubhang-hegdes-rise-in-cricket.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.