Jump to content

புதிய அர­ச­மைப்பு தமி­ழ­ருக்கு வெற்றி சிங்­க­ள­வர், முஸ்­லிம்­க­ளுக்கு ஏமாற்­றம்


Recommended Posts

புதிய அர­ச­மைப்பு தமி­ழ­ருக்கு வெற்றி சிங்­க­ள­வர், முஸ்­லிம்­க­ளுக்கு ஏமாற்­றம்

கிழக்கு மாகாண எதிர்க்கட்­சித் தலை­வ­ரின் நிலைப்­பாடு இது

 
 
புதிய அர­ச­மைப்பு தமி­ழ­ருக்கு வெற்றி சிங்­க­ள­வர், முஸ்­லிம்­க­ளுக்கு ஏமாற்­றம்
 1
  •  
  •  
  •  
  •  
  •  

வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால‌ அறிக்கை த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ஓர‌ள‌வு வெற்­றி­யா­க‌வும் முஸ்­லிம்­க‌ளுக்­கும், சிங்­க‌ள‌வ‌ருக்­கும் எந்த‌ ந‌ன்மையை­யும் வழங்­கா­மல் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வாறு கிழக்கு மாகா­ண­ச­பை­யின் எதிர்க்கட்­சித் தலை­வ­ரும், முஸ்­லிம் உலமா கட்­சி­யின் தலை­வ­ரு­மான முபா­றக் அப்­துல் மஜீத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
இடைக்­கால‌ அறிக்­கை­யில் வ‌ட‌க்கும் – கிழ‌க்­கும் ஒரே அல‌காக‌க் க‌ருத‌ப்­ப‌டும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கிழ‌க்கு முஸ்­லிம்க‌ளை த‌மிழ‌ர் ஆதிக்­க‌த்­துக்கு அடி­மைப்­ப‌டுத்­தும் க‌ருத்­தா­கும். இத‌னை எந்த‌ வ‌கையி­லும் உல‌மா க‌ட்சி ஏற்­றுக்­கொள்­ளாது.

அது­வும் சுத‌ந்­தி­ர‌க் கட்­சி­யும் ஐக்­கிய‌ தேசிய‌க் க‌ட்சியும் அதி­கார‌ப் ப‌ர‌வ‌லாக்­க‌ல் செய்ய‌ வேண்­டும் என்­ப‌தில் ஒத்த‌ க‌ருத்­துள்ள‌ நிலை­யில் மாகா­ண‌ங்­க‌ளுக்கு பொலிஸ், காணி அதி­கா­ர‌மும் வ‌ழ‌ங்க‌ப் பட்டு வ‌ட‌க்கும் கிழ‌க்­கும் இணைக்­க‌ப்­ப‌ட்­டால் அது நிச்­ச‌ய‌ம் முஸ்­லிம்­க‌ளுக்கு பாத‌ க‌ங்க‌ளை ஏற்­ப‌டுத்­தும்.

எதிர் கால‌த்­தில் த‌மிழ், முஸ்­லிம் மோத‌ல்க‌ளை ஏற்­ப‌டுத்­தும். 1985 ஆம் ஆண்­டு­க­ளில் ஐக்­கிய‌ தேசி­ய‌க்­க‌ட்சி செய்த‌து போன்று முஸ்­லிம்­க‌ளுக்­கும் த‌மிழ‌ர்­க‌ளுக்­கும் ஆயு­த‌த்தை கொடுத்து இரு இன‌ங்­க‌ளை­யும் மோத‌ விட்ட‌து போன்ற‌ மோத‌லை சிங்க‌ள‌ பேரி­ன‌வாத அர‌சு­க‌ள் ஏற்­ப‌டுத்­த‌லாம்.

கிழ‌க்­கில் ம‌ட்டும‌ல்­லாது கிழ‌க்­குக்கு வெளியே குறிப்­பாக‌ வ‌ட‌க்கு மேல் மாகா­ண‌ம் போன்ற‌ மாகா­ண‌ங்­க‌ளில் மிக‌ச்­சி­று­பான்­மை­யாக‌ வாழும் முஸ்­லிம்­க‌ளுக்­கும் இது மிக‌ப்பெ­ரிய‌ பாதிப்பை ஏற்­ப‌டுத்­தும்.

இத‌ன் க‌ர‌ண‌மாக‌வே 2010 ஆம் ஆண்டு முத‌ல் உல‌மா க‌ட்சி மாகா­ண‌ங்­க‌ளுக்கு பொலிஸ், காணி அதி­கா­ர‌ம் வ‌ழ‌ங்குவ‌தா­யின் கிழ‌க்­குக்கு வெளி­யில் வாழும் முஸ்­லிம்­க‌ளின் பெரும்­பான்மை பிர‌ தே­ச‌ங்க‌ளை இணைத்து த‌னி நிர்­வாக‌ ச‌பைக‌ளை ஏற்­ப‌டுத்த‌ வேண்­டும் என‌ கூறி வ‌ருகி­றோம். அவ்­வாறு முடி­யாது என்­றால் த‌ற்போதி­ருக்­கும் இன‌வாத‌ சூழ‌லில் மாகாண‌ சபை­க‌ளுக்கு காணி, பொலிஸ் அதி­கா­ர‌ம் வ‌ழ‌ங்க‌க் கூடாது என்ப‌தே எம‌து நிலைப்­பா­டா­கும்.

இல‌ங்கை வ‌ர‌லாற்றைப் பார்க்­கும் போது பொலி­ஸார் பெரும்­பா­லும் இன‌வா­த‌மாக‌வே செய‌ற்­ப‌ட்டு வ‌ந்துள்ள‌தை காண்­கி­றோம்.

வ‌ட‌க்கும் கிழ‌க்­கும் இணைக்­க‌ப்­ப‌ட்டு த‌மிழ் பொலிஸ் உரு­வாக்­க‌ப்­ப‌ட்ட‌ போது முஸ்­லிம்­க‌ள் மீது மேற்கொள்­ள‌ப்­ப‌ட்ட‌ அடா­வ‌டித்­த‌ன‌ங்க‌ளை நாம் எளி­தில் ம‌ற‌ந்து விட‌ முடி­யாது. வ‌ர‌லாற்­றின் க‌ச‌ப்பான‌ நிக‌ழ்­வு­க‌ள் பாட‌மாக‌ ஏற்­றுக்­கொள்­ள‌ப்­ப‌ட்டு எடுக்­க‌ப்­ப‌டும் தீர்­வுக‌ளே நிர‌ந்த‌ர‌ அமை­தியைத் த‌ரும்.

நிறை­வேற்று அதி­கா­ர‌ம் கொண்ட‌ அரச தலை­வர் முறை இருக்க‌ வேண்­டும் என்ற‌ சிறி­ல‌ங்கா சுத‌ந்­தி­ ர‌க்­க‌ட்­சி­யின் நிலைப்­பாட்டை நாம் வ‌ர‌வேற்­கி­றோம். அதுவே எம‌து நிலைப்­பா­டா­ கும் -– என்­றார்.

http://newuthayan.com/story/32293.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பங்காளதேசத்தினை கிழக்கு பாகிஸ்தானாகவும், இன்றைய பாகிஸ்தானை மேறகு பாகிஸ்தானாகவும் நிலத்தொடர்பு இல்லாத இரு பிரதேசங்களை, அடம் பிடித்து வாங்கி, என்ன நடந்தது இறுதியில்?

இவர்களுக்கு, கிழக்கு அம்பாறையும், மன்னார் எருக்கலம்பிட்டியும், யாழ் பொம்மைவெளியும், மேல்மாகாண பாணந்துறை, கண்டியின் சில பகுதிகள் எல்லாம் சேர்த்து ஒரு அலகாக வேண்டும் என்ற நிலைப்பாடு. 

Link to comment
Share on other sites

43 minutes ago, Nathamuni said:

இன்றைய பங்காளதேசத்தினை கிழக்கு பாகிஸ்தானாகவும், இன்றைய பாகிஸ்தானை மேறகு பாகிஸ்தானாகவும் நிலத்தொடர்பு இல்லாத இரு பிரதேசங்களை, ஆடம் பிடித்து வாங்கி, என்ன நடந்தது இறுதியில்?

இவர்களுக்கு, கிழக்கு அம்பாறையும், மன்னார் எருக்கலம்பிட்டியும், யாழ் பொம்மைவெளியும், மேல்மாகாண பாணந்துறை, கண்டியின் சில பகுதிகள் எல்லாம் சேர்த்து ஒரு அலகாக வேண்டும் என்ற நிலைப்பாடு. 

மீண்டும் இந்த கோமாளி சிங்களவனையும் தம்முடன் கூட்டு சேர்த்து தமிழரையும் சிங்களவனையும் மோத விடும் புரோக்கர் வேலையை தான் செய்யுதுகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.