Jump to content

இக்கட்டான நிலையில் நடராஜன்...பரோலுக்காகத் தவிக்கும் சசிகலா!


Recommended Posts

இக்கட்டான நிலையில் நடராஜன்...பரோலுக்காகத் தவிக்கும் சசிகலா!

 
 

நடராஜன்

“உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் ம.நடராசனை சந்திக்க சசிகலா பரோலில் வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மருத்துவமனையில் நடராஜன்

அ.தி.மு.க-வின் பவர் சென்டராக இருந்த சசிகலா குடும்பத்தின் முக்கிய நபராக விளங்கியவர் ம.நடராசன். அ.தி.மு.க என்ற கட்சியை தனது மனைவி மூலம் பலநேரங்களில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். ஒருகட்டத்தில் சசிகலாவுக்கும் இவருக்கும் மனவருத்தம் ஏற்பட்டு, இருவரும் விலகி இருந்தபோதும், குடும்பஉறவுகள் மூலம் கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு இருந்த செல்வாக்கைத் தொடர்ந்து நிலைநாட்டிவந்தார். 

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தினர் கட்சியின் பொறுப்புகளில் வர முடிவெடுத்தபோது, அதன் பின்னணியில் இருந்து இயக்கியவர் நடராசன் என்று சொல்லப்பட்டது. ஒரு கட்டத்தில் சசிகலா முதல்வராக பதவியேற்கும் நிலையில் அந்தத் தகவல் பெசன்ட் நகர் வீட்டில் இருந்த நடராசனுக்கு சொல்லப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்ததால் நான்கு ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை சசிகலாவுக்கு ஏற்பட்டது. பெங்களூரு சிறைக்கு சசிகலா செல்லும் முன்பே பெங்களுரு சென்ற நடராசன், சசிகலாவை சிறைவாசல் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். மனைவி சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு கட்சி விவகாரங்களில் பெரிதாக தலைக்காட்டாமலே இருந்தார். அதோடு அவருக்கு கல்லீரலில் தொற்று ஏற்பட்டதால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கல்லீரலை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் உறுப்புதானம் பெற பதிவு செய்திருந்தார் நடராசன்.

அப்போலோவில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகு குற்றாலத்தில் ஓய்வில் இருந்த நடராசனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயல் இழந்துவருதால் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், கல்லீரலோடு, சிறுநீரகமும் நடராசனுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதால், வேறு சிறுநீரகமும் பொறுத்த வேண்டிய நிலை உள்ளது.

மனைவி பற்றி விசாரிக்கிறார்

இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது நடராசன் இருந்து வருகிறார். அவருடைய உறவினர்கள் பலரும் சந்தித்து வருகிறார்கள்.  அவர்களிடம் சசிகலா குறித்து கேட்டுள்ளார்.இந்தத் தகவல் சசிகலாவுக்குச் சொல்லப்பட்டது. அவரும் கணவரின் உடல்நிலை நினைத்து வருத்தப்பட்டுள்ளார். சசிகலா பரோலில் வந்து நடராசனைப் பார்க்க வேண்டும் என்று அவருடைய உறவுகள் சொல்லிவருகின்றனர்.  ஆனால், சசிகலா மீது சிறையில் விதிகளை மீறியதாக எழுந்த சர்ச்சை இருப்பதால் பரோல் வழங்க கர்நாடக சிறைத்துறை யோசனை செய்துவருகிறது.'

சசிகலா

 

இந்நிலையில்தான், சசிகலா சிறையில் இருந்து வருவதற்கு வாய்ப்பாக குளோபல் மருத்துவமனை, நடராஜன் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டது. இந்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டதே சசிகலாவின் பரோலுக்குத்தான் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் பரோலுக்கு சசிகலா விண்ணப்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில தினங்களில் நடராசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்புள்ளதால், அறுவை சிகிச்சை நடைபெறும் தினத்தன்று பரோலில் வர சசிகலா திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். சசிகலாவின் வழக்கறிஞர்கள் இதற்கான வேலையில் தீவிரம் காட்டிவருவதாகச் சொல்கிறார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/103386-natarajan-wants-to-meet-his-wife-sasikala.html

Link to comment
Share on other sites

கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோல் மனு..!

 
 

நடராஜன்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று பரோல் கேட்டு சசிகலா மனு போட்டுள்ளார். 

 

சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல், சிறுநீரக நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை அவரது உறவினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு தினமும் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. 

சசிகலா

 

இந்நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் அவருக்கு இப்போது தேவைப்படுகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று பெங்களூரூ சிறைத்துறைக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார் சசிகலா. இந்த பரோல் மனுவை சிறைத்துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/103394-sasikala-apply-parole-to-bangalore-jail-authorities.html

Link to comment
Share on other sites

நடராஜனை பார்க்க வர மாட்டேன்: சசிகலா
 
 
 

மருத்துவமனையில், உயிருக்கு போராடும் கணவர் நடராஜனை பார்க்க, 'பரோலில்' வர, சசிகலா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

 

நடராஜனை,பார்க்க, வர ,மாட்டேன்,சசிகலா

சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நடராஜனுக்கு, சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய

கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்சசிகலாவை, கர்நாடக, அ.தி.மு.க., செயலர், புகழேந்தி சந்தித்து, 'பரோல் விடுமுறையில் வந்து,நடராஜனை பாருங்கள்' என, கூறியுள்ளார். பரோல் கேட்பதற்கான மனுவில் கையெழுத்திடும் படியும், சசிகலாவிடம், வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர். ஆனால், அம்மனுவில் கையெழுத்து போட, சசிகலா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அதே சமயம், நடராஜனின் உடல்நிலை பற்றி மட்டும், புகழேந்தியிடம் விசாரித்து உள்ளார்.
இது குறித்து, மன்னார்குடி வட்டாரம் கூறியதாவது: நடராஜன், கவலைக்கிடமாக இருக்கிறார். அவருக்கு,முக்கியமான இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளன.

அதற்கு முன், சசிகலா வந்து பார்க்க வேண்டும் என, உறவினர்கள் விரும்புகின்றனர்; ஆனால், அவர் மறுத்துள்ளார்.பரோல் விடுமுறைக்கு விண்ணப்பிக்க, அவர் விரும்பவில்லை.

 

ஜெயலலிதாவால் ஓரங்கட்டி வைக்கப்பட்ட நடராஜனுடன், 33 ஆண்டுகளாக, சசிகலா சேர்ந்து வாழவில்லை. 'சசிகலா நடராஜன்' என்ற பெயரை மாற்றி, 'வி.கே.சசிகலா' என, வைத்துக் கொண்டார்.

ஏற்கனவே, மகாதேவன், தினகரன் மாமியார் மரணத்திற்கும், சசிகலா வரவில்லை. இதனால், குடும்பத்தில் பிரச்னை வெடித்து உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1864197

Link to comment
Share on other sites

தசரா விடுமுறைக்கு பிறகு பரோல் கோரி விண்ணப்பிக்க சசிகலா திட்டம்: பெங்களூரு அதிமுக வட்டாரம் தகவல்

 

 
Sasikala1

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ள கணவர் நடராஜனை பார்ப்பதற்காக தசரா விடுமுறைக்கு பிறகு பரோல் கேட்க சசிகலா திட்டமிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கவலைக்கிடமான நிலையில் உள்ள அவரைப் பார்க்க, கடந்த வாரம் சசிகலா பரோலில் சென்னை செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பரோலில் வெளியே செல்வதற்கு ஏராளமான விதிமுறைகள் இருப்பதால், அவர் பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே, சிறைத்துறை நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவற்றுக்கு தசரா விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே இப்போது பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது.

தசரா விடுமுறை முடிந்த பிறகு, சிறை அதிகாரிகள் பணிக்கு திரும்பியதும் சசிகலா அவசர பரோல் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “கர்நாடகாவில் தற்போது தசரா விடுமுறை காலம் என்பதால் சசிகலா பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை. வரும் திங்கள்கிழமைக்கு பிறகு நடராஜனின் மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்து, சசிகலா முறைப்படி பரோலுக்கு விண்ணப்பிக்க இருக்கிறார்.

கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின்படி அவசர பரோலில் 15 நாட்கள் வரை செல்ல முடியும். ஆனால் எத்தனை நாட்கள் பரோல் கோருவது என்பது குறித்து தனது வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினரிடம் சசிகலா ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்” என்றனர்.

http://tamil.thehindu.com/india/article19779471.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.