Jump to content

பூ மலர்ந்திட நடமிட்ட பொன்மயிலே... மாதவி ஃபேனா நீங்க?


Recommended Posts

பூ மலர்ந்திட நடமிட்ட பொன்மயிலே... மாதவி ஃபேனா நீங்க?

 

 
madhavi_stills

 

'பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே... 
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம் 
விழிகளால் இரவினை விடியவிடு

நான் நடமிட உருகிய திருமகனே
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ '

'டிக் டிக் டிக்' படத்தில் வரும் இந்தப் பாடலையும் மறக்க முடியாது... பாடலின் பாவங்களில் ரசம் குறையாது அழகிய நடமிடும் மாதவிப் பொன் மயிலாளையும் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. 'மாதவிப் பொன்மயிலாள்' என்பது என்னுடைய வார்த்தைப் பிரயோகம் அல்ல, அது 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இருமலர்கள்’ திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியின்’ அடவுகளுக்காக கவிஞர் வாலி பிரயோகித்த சொற்கள். காவிய மாதவியைப் போலவே நடிகை மாதவியும் கூட பரதத்தில் சிறந்த ஆளுமை கொண்டவர் என்பதோடு பெயரும் பொருத்தமாக இருப்பதால் இவரையும் அப்படிக் குறிப்பிடுவதில் குற்றமெதுவும் இருக்க வாய்ப்பில்லை.

80 களில் ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, எல்லாம் பாலிவுட்டுக்குச் சென்றதும் கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்டில் அம்பிகா, ராதா, ராதிகா, பானுப்ரியா கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். அம்பிகா, ராதாவுக்கும், பானுப்ரியாவுக்கும் முன்பு சில காலம் தென்னிந்தியத் திரைப்படங்களில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நடிகைகளில் மாதவியும் ஒருவர். முதன்முதலில் தமிழில் அவர் அறிமுகமான திரைப்படம் கமலின் சொந்தத் தயாரிப்பான ராஜபார்வை. அதில் கமலும், மாதவியும் இடம்பெற்ற;

‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதே’  

-பாடல் இப்போதும் பலரது ஹிட்லிஸ்டில் டாப் டென் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார்களோடு மாதவி நடித்த திரைப்படங்கள்...

தமிழில் ரஜினியோடு விடுதலை, உன் கண்ணில் நீர் வழிந்தால், தம்பிக்கு எந்த ஊரு, கர்ஜனை, தில்லு முல்லு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் மாதவி இணைந்து நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்ல ‘இன்சாப் கெளன் கரேங்கா’ உட்பட இந்தியிலும் ரஜினியுடன் பல படங்களில் மாதவி இணைந்து நடித்திருக்கிறார். கமலுடனும் காக்கிச்சட்டை, மங்கம்மா சபதம், சட்டம், ஏக் துஜே கேலியே, எல்லாம் இன்ப மயம், ராஜ பார்வை, டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். திரையுலகில் மாதவி அறிமுகமானது முதல் அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அந்த 17 வருடங்களில் கிட்டத்தட்ட 300 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி தவிர ஒரிய மொழிப்படங்களிலும் மாதவி நடித்திருக்கிறார். 80 முதல் 90 வரையிலான காலகட்டங்களில் இத்தனை மொழிகளிலும் நடித்ததோடு மட்டுமல்லாமல் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் மாதவி உலகம் முழுக்கச் சென்று வழங்கிக் கொண்டு வெகு பிஸியான கலைஞராக இருந்தார்.

பிறந்தது ஆந்திராவில்...

பழைய ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த மாதவியின் அப்பா பெயர் கோவிந்த ஸ்வாமி, அம்மா பெயர் சசிரேகா. இவருக்கு கீர்த்தி குமாரி என்றொரு சகோதரியும், தனஞ்செயன் என்றொரு சகோதரரும் உண்டு. மிகச் சிறு வயதிலேயே உமா மகேஸ்வரியிடம் பரதம் கற்றுக் கொண்ட மாதவி, நாட்டுப்புற நடனத்தை மிஸ்டர் பட் என்பவரிடம் கற்றுக் கொண்டார். 

மாதவி, ஹைதராபத்திலுள்ள ஸ்டான்லி பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பழைய மாணவிகளில் ஒருவர்.

திரையுலகப் பிரவேஷம்...

ஒரு நடன நிகழ்ச்சியின் போது தெலுங்குத் திரையுலக பிரம்மாக்களில் ஒருவரான இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் தாசரி நாராயணராவின் கண்களில் மாதவி படவே, அவரது அருமையான பாவங்களால் ஈர்க்கப்பட்ட தாசரி தனது தயாரிப்பில் நரசிம்ம ராஜூ(விட்டலாச்சார்யா படங்களின் ஏகதேச நாயகன்), மோகன்பாபு நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த தூர்பு படமாரா (கிழக்கு, மேற்கு) எனும் படத்தில் மாதவியை நாயகியாக்கினார். இப்படித்தான் தொடங்கியது மாதவியின் திரையுலகப் பயணம். அதன் பிறகு அவரால் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமின்றி தொடர்ந்து 17 வருடங்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஒரியா எனப் பன்மொழிகளில் பிஸியான நடிகையாகத் திகழ்ந்தார்.

மாதவியின் கணவர் ரால்ப் ஜெய்தீப் ஷர்மா (கணவரின் அம்மா ஜெர்மனி, அப்பா பஞ்சாபி) 

madahvi.jpg

தனது திருமணம் குறித்து மாதவி பேசியதிலிருந்து...

‘என்னுடையது வீட்டினர் பார்த்து செய்து வைத்த அரேஞ்டு மேரேஜ். எங்களுடைய ஸ்வாமிஜி ராமா மற்றும் எனது பெற்றோர்கள் தேடிக் கண்டடைந்த வரன் தான் என் கணவர். திருமணத்திற்கு முன்பு நாங்கள் ஒருமுறை மட்டுமே தொலைபேசி வாயிலாகப் பேசியிருந்தோம். பிறகு ஏர்போர்ட்டில் வைத்து அவரை ஒருமுறை சந்தித்த போது அவர் எனக்கு நிச்சயதார்த்த மோதிரத்தைப் பரிசளித்தார். சந்தித்த ஒரே வாரத்தில் 1996 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினத்தன்று எங்களுக்குத் திருமணமானது.

ஆயிற்று 17 வருடங்கள்... என் ஸ்வாமிஜியும், பெற்றோரும் எனக்காக மிகச்சிறந்த கணவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று இப்போது உணர்கிறேன். என் கணவர் என்னைப் பூப்போல பார்த்துக் கொள்கிறார். சிறு வயதிலிருந்தே நான் என் பெற்றோர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது ஒரே ஒரு விஷயத்தைத் தான், அது என் திருமணம் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணமாக இருக்க வேண்டுமென்பது மட்டுமே! அதுவே என் வாழ்க்கையில் நடந்தது.

எங்களுடையது அருமையான குடும்ப வாழ்க்கை. என் கணவர் ஆன்மீகத்தில் மிகுந்த பற்றுடையவர். நானும் அப்படித்தான். காலையில் சீக்கிரம் எழுந்து குழந்தைகளுக்காகவும், கணவருக்காகவும் சமைத்து வைத்து விட்டு நாள் தவறாமல் வீட்டில் பூஜை செய்வோம். வீட்டைப் பொருத்தவரை நான் மிக மிக பாரம்பரியப் பழக்க வழங்கங்களைக் கடைபிடிக்க விரும்புவேன். அதுவே பிஸினஸ்க்காக வீட்டை விட்டுக் கிளம்பி எங்கள் சொந்தக் கம்பெனி மீட்டிங்கில் கலந்து கொள்ளச் செல்லும் போது வெஸ்டர்ன் உடைகளை அணிந்து கொண்டு செல்வேன். இங்கே அப்படித்தானே இருக்க முடியும். அதனால் தான் என் கணவர், என்னை  ’நீ கிழக்கு, மற்றூம் மேற்கின் பெர்ஃபெக்ட் கலவை’ என்பார்.

குழந்தைகள்...

மாதவிக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த மகளுக்கு 13 வயதாகிறது. இரண்டாவது மகளுக்கு 11 வயது மூன்றாவது பெண்ணுக்கு 9 வயதாகிறது. 

மூவரும் பெண்குழந்தைகளாக அமைந்ததில் உள்ள பெருமிதம்...

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

ஆஹா... எங்கள் முற்பருவ வயதில்  (adolescent) அமலாவுக்கு முன் எங்கள் மனசுக்குள் நர்த்தனமாடிய பொன் மயில் இவர்.

நிரபராதி படத்தை களவாக பார்த்து சாபல்யம் அடைந்தவர்கள் நாங்கள். ஜான்சி ராணி (என்று நினைக்கின்றேன்) படத்தில் வரும் சில வினாடி காட்சிகளுக்காக எத்தனை தடவை டேப்பை ஓடவிட்டு பார்த்து பரவசமடைந்து இருக்கின்றேன்...

படுக்கையில் பாம்பு நெளியுது
தலையனை நூறு கிழியுது
 நீ அணிகிற ஆடையிலொரு
நூலென தினம் நானிருந்திட
சனிதபமபதனி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.