Jump to content

படகுகளை மீட்க இந்திய மீனவர் குழு இலங்கை வருகை


Recommended Posts

படகுகளை மீட்க இந்திய மீனவர் குழு இலங்கை வருகை

 

 

சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றத்திற்காக கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க அரசு ஒத்துக்கொண்டதுடன் முதல் கட்டமாக  42 விசைப் படகுகளை விடுவித்துள்ளது.

7_TN_Boats.jpg

இந்தப் படகுகளின் நிலை பற்றி அறிந்துகொள்வதற்காக, கடந்த மாதம் ஏழு பேர் அடங்கிய இந்தியக் குழுவொன்று இலங்கை வந்திருந்தது.

காங்கேசன்துறை மற்றும் கிராஞ்சி துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 42 படகுகளையும் ஆய்வு செய்த குழுவினர், அவற்றுள் 36 படகுகள் மட்டுமே பயன்பாட்டுக்கு உரிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தது.

இந்நிலையில், நாளை (27) இலங்கை வரும் இந்தியக் குழுவினர், குறிப்பிட்ட 36 படகுகளையும் மீட்டுச் செல்லவுள்ளனர்.

நாற்பத்தெட்டு மீனவர்கள் அடங்கிய இக்குழு, நாளை காலை 5 மணிக்கு மண்டபம் துறைமுகத்தில் இருந்து 6 விசைப் படகுகளில் இலங்கை வருகின்றது.

http://www.virakesari.lk/article/24950

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.