Jump to content

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் : புதிய திசைகள்


Recommended Posts

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள்

தேச உருவாக்கமானது  பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் கூட்டின் பரிமாணங்களை தன்னகத்தே கொண்டு தான் வளர்ச்சி பெறுகிறது. ஒரு தேசத்தின் அங்கமாக இருக்கும் வெவ்வேறு மக்கள் திரளின் தனித்துவங்களும் அவர்களது அடையாளங்களும் அவர்கள் சார்ந்த தேசத்திற்குட் பட்டதாக மட்டுமே எப்போதும் பார்க்கப் படவேண்டுமென்ற ஒற்றைப் பரிமாணப் பார்வையானது அடிப்படையில் அந்த மக்களின் உரிமையை மறுக்கும் சிந்தனையே; ஒரு தேசத்தின் பன்முகத் தன்மையை மறுக்கும் இறுக்கமான போக்காகவே பார்க்கப் பட வேண்டும்.

தமிழ் தேசத்தின் அக முரண்பாடுகளைப் பற்றிப் பேசுவது அல்லது ஒடுக்கப் பட்ட மக்கள் தமது உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பது தமிழ் தேசத்தை பலவீனப் படுத்தும் செயலாக பொதுப் புத்தி மட்டத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையில், அக ஒடுக்குமுறை பற்றி பேசுவோரையும் குரல் எழுப்புவோரையும் நோக்கி "தமிழன்" எனும் ஏக பரிமாணத்தை மட்டும் ஏற்கும் படி வற்புறுத்துவது ஒரு மக்கள் கூட்டம் தனது அடையாளம் என்னவென்பதை தானே தீர்மானிக்கும் உரிமையை மறுதலிப்பதாகும்.

இந்த பின்னணியில், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மயானங்கள் அகற்றப்படும் வரை பல்வேறு தரப்பின் ஆதரவுடன் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் பல வகைகளில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், இறந்தவர்களின் உடல்களை குறித்த மயானத்தில் எரிப்பதற்கும் யாழ் மேல் நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தைச் சுற்றி மக்கள் குடியிருப்புகள் இருப்பதைப் போன்ற நிலை யாழ் குடா நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ளமையைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சனைகளுக்கான பொதுத் தீர்வை எட்ட வேண்டிய தேவை உள்ளது. மயானம் அருகே குடியிருப்புகள் என்பது வேறு வழியில்லாத விளிம்பு நிலை மக்களின் தெரிவாகவே உள்ளமையைப் புரிந்து கொண்டு இவ்விடயத்தை வெறுமனே சட்டப் பிரச்சனையாக அல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அணுகுவதே தமிழ் தேசத்தின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து சக்திகளின் செயலாக இருக்க முடியும். மயானங்கள் நவீன மயப் படுத்தப் பட்டு மக்கள் குடியிருப்புகள் இல்லாத பகுதிகளில் அமைக்கப் படுவதன் மூலம் சுமுகமான தீர்வு சாத்தியமாகும். இந்த வகை நவீன மயானங்களைப் பயன்படுதுவதன் மூலம் தேவைக்கதிகமாக உள்ள, அரிதாக இயங்கி வரும் அல்லது கைவிடப் பட்ட  மயானங்கள் சார்ந்த நிலப் பகுதிகள் மக்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப் படலாம்.

இதற்கு மாறாக தமிழ் தலைமைகளின் பாராமுகமும் புத்தூர் மக்களின் போராட்டம் குறித்த வடமாகாண சபையின் அக்கறையற்ற போக்கும் கண்டனத்திற்குரியவை. "மயானம் முதல் வந்ததா அல்லது குடியிருப்புகள் முதல் வந்தனவா" என்ற விவாதங்களுக்குள் சிக்குண்டு போகாமல் தேச அக்கறையுடன் கூடிய மனிதாபிமான முறையிலான அணுகுமுறையே இங்கு பொருத்தமாக இருக்கும். தமிழர்களின் கல்வி, பொருளாதார வளங்கள் மட்டுமல்லாது பெருமளவிலான தமிழர் நிலங்கள் இனவாத அரசினாலும் அவர்களது பங்காளிகளாலும் திட்டமிட்ட வகையில் சூறையாடப் படும் நிலையில் தேசமாக எமது கவனம் அவ்விடயங்கள் குறித்து குவிவதை திசை திருப்பும் வகையில் பெருந்தேசிய வாதிகள் தமது கைங்காரியங்களைச் செய்வார்கள் என்ற அவதானம் எமக்குத் தேவை. 

தமிழ் தேசமானது இனவாதம், சாதிய ஒடுக்குமுறை, பிரதேசவாதம், மதவாதம் இன்னும் பல அக முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டிருக்க, இம்முரண்பாடுகளில் ஒன்றை அல்லது சிலவற்றை தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக நிறுத்தி பெளத்த சிங்கள பெருந்தேசியத்திற்கு மறைமுகமாக வழிசமைத்து கொடுக்கும் அடையாள அரசியல் இத்தேசத்தில் அரங்கேற்றப்படுகிறது. இது தலித்தியமாக, சாதியமாக, பிரதேசவாதமாக, மதவாதமாக முன்னிறுத்தப்படுகின்றது; குறிப்பான நிகழ்வுகளை பொது உண்மையாக காட்டும் இவ்வகை கவர்ச்சி அரசியலும் சரியாக அடையாளம் காணப்பட வேண்டும்.

இந்த சூழ்நிலையில் ஆதிக்க சக்திகள்  தமிழ் தேசத்தைப் பிளவு படுத்துவதிலும் ஏற்கனவே இருக்கக் கூடிய உள் முரண்பாடுகளை மேலும் கூர்மையடையச் செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை இனவாத அரசின் அங்கமாக இருந்து தமிழ் மக்களை அழிப்பதில் எல்லா வகையிலும் முன்னின்ற ஜேவிபி  அணிகள் கூட அதே தமிழ் மக்களின் நலனிற்காக குரல் கொடுக்கிறோம் என்று ஓடிவருவதன் பின்னணி புரிந்து கொள்ளத் தக்கதே. ஆனால் அதையே காரணமாக வைத்து கலைமதிக் கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரப் பின்னிற்பதாகக் கூறும் தமிழ் சக்திகளின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. 

சாதியம் சில அரசியல் தலைமைகளின் வாக்கு வங்கியாக உள்ளமையால் அந்தக் கட்டமைப்பை அப்படியே காப்பாற்றுவதிலும் தாமே அம்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று நிறுவ முயல்வதும் அந்த சக்திகளின் நடைமுறையாக உள்ளது. இந்த வகை தலைமைகளால் ஒரு தரப்பு மக்கள் மற்றைய மக்களின் நலன்களுக்கு எப்போதும் நேரெதிரானவர்கள் என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப் படுகிறது. இதனை விட இனவாத அரசின் நேரடி மற்றும் மறைமுக முகவர்கள் சமூக வலைத் தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் வெவ்வேறு மக்கள் பிரிவிற்கு கொம்பு சீவிவிடும் வேலையைக் கச்சிதமாகச் செய்து வருகின்றனர். 

ஒரு தேசம் தனக்குள் இருக்கும் அக ஒடுக்குமுறைகளைக் களையாமல் தனக்குள் ஐக்கியப் படுவதென்பது சாத்தியமில்லை என்ற புரிதலுடன் தமிழ் தேசத்தில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து அகமுரண்பாடுகளையும் பேசு பொருளாக்குவோம். அக ஒடுக்கு முறைக்குள்ளாகும் மக்கள் மத்தியில் எழும் போராட்டங்கள் எமது சமூகத்தை அடுத்த நிலைக்கு வளர்த்துச்  செல்லும் பண்புகளைக் கொண்டிராத பட்சத்தில் அவை பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழக் கூடிய ஆபத்தையும் இங்கு குறித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

நன்றி
புதிய திசைகள்

25 - 09 -2017

Link to comment
Share on other sites

யேர்மனி சுற்காட் நகரில் சுடுகாடு அல்ல இடுகாட்டின் அருகிலேயே விநாயகருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு செய்கின்றனர். அடாத்தானது என்றாலும் ஒருவரிடம் அதிகாரம் இருக்குமேயானால் எதுவும் செய்யலாம். கடவுளும் அதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டிய நிலையில் மனிதர்களால் என்ன செய்யமுடியும்...?? :shocked:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.