Jump to content

ஜெர்மனி: எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்


Recommended Posts

ஜெர்மனி: எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

 
 
ஜெர்மனி: எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்
 
பெர்லின்:

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் பிரதமராக பதவி வகித்து வருகிறார். 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

இந்த நிலையில் ஜெர்மனியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாத கட்சி (சி.டி.யூ.) மற்றும் ஹோர்ஸ்ட் சீஹோபரின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (சி.எஸ்.யூ.) ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

201709260110308091_1_Copy%20of%20angell.

கடந்த முறை ஏஞ்சலா மெர்க்கலுடன் கூட்டணி அமைத்து இருந்த சமூக ஜனநாயக கட்சியான எஸ்.பி.டி. இம்முறை தனித்து தேர்தலை சந்தித்தது. இது தவிர, ஏ.எப்.டி., எப்.டி.எப்., டி லிங்கே, கிரீன் ஆகிய 4 முக்கிய கட்சிகளும் களம் கண்டன. ஜெர்மனி அரசியலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பல முனை போட்டி நிலவியதால் தேர்தல் முடிவுகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஜெர்மனி பாராளுமன்றத்தின் புதிய நடைமுறைப் படி மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 709 ஆகும்.

நேற்று முன்தினம் ஓட்டுப் பதிவு முடிந்ததும், ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாத கூட்டணி முன்னணி பெற்றது. ஏஞ்சலா 4-வது முறையாக எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், பல முனை போட்டி நிலவியதால் அவருடைய கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 246 இடங்களையே அந்த கூட்டணி கைப்பற்றியது. மேலும், கடந்த முறை அந்த கூட்டணி பெற்ற ஓட்டுகள் 41.5 சதவீதத்தில் இருந்து 32.9 சதவீதமாக சரிந்தது.

அதே நேரம், அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏஞ்சலா மெர்க்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழமைவாத கூட்டணியில் இருந்து தேர்தலுக்கு முன்பே விலகிய எஸ்.பி.டி. கட்சி 153 இடங்களை கைப்பற்றியது. ஏ.எப்.டி. 94 இடங்களிலும், எப்.டி.எப். 80, டி லிங்கே, 69, கிரீன் கட்சி 67 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

தொகுதி வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு, பிடித்தமான தலைவருக்கு ஒரு ஓட்டு என்னும் இரட்டை ஓட்டு என்ற நடைமுறை ஜெர்மனியில் உள்ளது. இதனால் அதிக இடங்களை வென்ற கூட்டணி என்ற விதத்திலும், பிடித்த தலைவர்களில் அதிக சதவீத ஓட்டுகளை பெற்றவர் என்பதன் அடிப்படையிலும் ஏஞ்சலா மெர்க்கல் 4-வது முறையாக பிரதமர் ஆகிறார். எனினும் அவர் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத்தான் ஆட்சியை அமைக்க முடியும்.

அவர் ஜனநாயக விடுதலை கட்சியான எப்.டி.எப். மற்றும் கிரீன் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் ஜெர்மனிக்கு மாற்று என்னும் ஏ.எப்.டி. கட்சியும் போட்டியிட்டது. சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கைகளை பின்பற்றும் ஏ.எப்.டி. கட்சி யாருமே எதிர்பாராத விதமாக 94 இடங்களை கைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி பாராளுமன்றத்தில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளது. அந்த கட்சிக்கு 13 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.

மேலும் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனி பாராளுமன்றத்தில் 6 பெரிய கட்சிகள் இடம்பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

எஸ்.பி.டி. கட்சியின் தலைவர் மார்க் சூல்ட்ஸ், தனது கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அறிவித்து உள்ளார். 2-ம் இடத்தை பிடித்த இவருடைய கட்சிக்கு 20.6 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. 

http://www.maalaimalar.com/News/World/2017/09/26011028/1109919/German-election-Angela-Merkel-wins-but-bleeds-support.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.