Jump to content

கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ் மன்­னார் ஆயர் தெரி­விப்பு


Recommended Posts

கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ்

மன்­னார் ஆயர் தெரி­விப்பு

 
 
கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

“புதிய அர­ச­மைப்­பில் அதி உச்ச அதி­கா­ரப் பகிர்­வுக்கு இணக்­கம் தெரி­விக்­கப்­பட்­டமை எமக்­குக் கிடைத்த இறை­வ­னின் கொடை. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கிடைக்­காத ஒன்­றைக் கேட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றார்”
இவ்­வாறு மன்­னார் மறை­மா­வட்ட ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை ஆண்­டகை தெரி­வித்­தார்.

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
புதிய அர­ச­மைப்­பில் அதி­யுச்ச அதி­கா­ரப் பகிர்­வுக்கு இணக்­கம் தெரி­விக்­கப்­பட்­ட­மை­யா­னது எமக்கு கிடைத்த இறை­வ­னின்.

நான் ஒரு அர­சி­யல்­வாதி அல்ல. நாட்­டில் உள்ள அனைத்து மக்­க­ளும் அமை­தி­யு­ட­னும் மகிழ்­சி­யு­ட­னும் வாழ­வேண்­டும் என்று நினைக்­கிற ஒரு­வன்.

இது­வரை கால­மும் தனி நாடு கோரி போராடி வந்­தா­லும் நாம் அத­னைத் தற்­போது கேட்க முடி­யாது. அத­னைக் கேட்­டா­லும் இவர்­கள் தரப்­போ­வ­தில்லை. இந்த நிலை­யில் தற்­போது கிடைக்க உள்ள அதி­யுச்ச அதி­கா­ரப் பகிர்வை நாம் ஒரு இறை­வ­னின் கொடை­யா­கப் பார்க்க வேண்­டும்.

அதி­கா­ரங்­களை வழங்­கி­விட்டு பின்­னர் அவர்­க­ளுக்­குத் தேவை­யா­ன­வாறு அத­னைத் திரும்­பப் பெற்­றுக்­கொள்­ளா­த­வாறு திருத்­தம் செய்­யப்­பட வேண்­டும்.
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் கிடைக்­காத ஒன்றை கேட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார் – என்­றார்.

http://newuthayan.com/story/31978.html

Link to comment
Share on other sites

முன்பிருந்த நல்ல ஆயர்களுக்கு இழுக்கை ஏற்படுத்த ஒரு களை கிளம்பியுள்ளது.

தற்போதைய மன்னார் ஆயரின் சில நடவடிக்கைகளைப் பார்க்கும் போது டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி  போலவே தமிழினப் படுகொலைகளை செய்த அரச பயங்கரவாதிகளின் கைக்கூலியாக செயற்பட முனைவது தெரிகிறது.

Link to comment
Share on other sites

maxresdefault-6.jpg

அரசாங்கம் தருவது இறைவன் நமக்களித்த கொடையென அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டுமென மன்னார் மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஆனால், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

சென்ற வாரம் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்துக் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

புதிய அரசியல் யாப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் காணப்பட்டமை இறைவன் நமக்குக் கொடுத்த கொடை.

நான் அரசியல்வாதியல்ல. இந்த நாட்டில் அனைத்து மக்களும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழவேண்டுமென நினைப்பவன்.

நாம் இதுவரை காலமும் தனிநாடு கோரிப் போராடி வந்தோம். தற்போது அதனைக் கேட்கமுடியாது. கேட்டாலும் அவர்கள் தரப்போவதில்லை. இந்த நிலையில் தற்போது கிடைக்கவுள்ள அதிகாரப்பகிர்வை இறைவனின்கொடையெனக் கருதவேண்டும்.

அதிகாரங்களை வழங்கிவிட்டு மீண்டும் அவர்கள் பறிக்காதவாறு திருத்தம் செய்யப்படவேண்டும். வடமாகாண முதலமைச்சர் கிடைக்காத ஒன்றைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=79748

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள்.. ஜேசுவின் போதனைகளோடு நின்று கொள்வது நல்லம்.

யாழ் குடா நாடு ஆக்கிரமிக்கப்பட்ட பின்.. யாழ் பேராயர் அரசாங்க பிரதிநிதி போல கருத்துக்கள் வெளியிட்ட காலங்களையும் மறக்க ஏலாது.

ஜேசு கூட பாதிக்கப்பட்ட மக்களின் நியாயத்திற்காகத்தான் பாடுபட்டார். சிலுவை சென்றார்.

நீங்கள் என்னடான்னா.. மக்களை துன்புறுத்துவனின் காலடியில் ஜேசுவை சரணடையச் சொல்கிறீர்கள். கேட்டால்.. ஜேசுவின் சேவகர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். ஜேசுவை இதனால்.. கொச்சைப்படுத்தும் நீங்கள் எல்லாம்... தமிழ் மக்களுக்கு கருத்துச் சொல்ல அருகதை அற்றவர்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

தாங்கள்.. ஜேசுவின் போதனைகளோடு நின்று கொள்வது நல்லம்.

யாழ் குடா நாடு ஆக்கிரமிக்கப்பட்ட பின்.. யாழ் பேராயர் அரசாங்க பிரதிநிதி போல கருத்துக்கள் வெளியிட்ட காலங்களையும் மறக்க ஏலாது.

ஜேசு கூட பாதிக்கப்பட்ட மக்களின் நியாயத்திற்காகத்தான் பாடுபட்டார். சிலுவை சென்றார்.

நீங்கள் என்னடான்னா.. மக்களை துன்புறுத்துவனின் காலடியில் ஜேசுவை சரணடையச் சொல்கிறீர்கள். கேட்டால்.. ஜேசுவின் சேவகர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். ஜேசுவை இதனால்.. கொச்சைப்படுத்தும் நீங்கள் எல்லாம்... தமிழ் மக்களுக்கு கருத்துச் சொல்ல அருகதை அற்றவர்கள். :rolleyes:

இயேசு நாதர் சிலுவையில் ஏறினார்!

இந்தாள்....அரச மரத்தில தான் ஏறுவன் எண்டு பிடிவாதம் பிடிக்குது!

இனத்தின் பெயரால்....தமிழினம் அழிந்ததை விடவும்...மதத்தின் பெயரால் அழிந்தது தான் அதிகம்!

இந்துமதம் முதல்.....கிறிஸ்தவம்...இஸ்லாம் வரை இதைத் தான் செய்தன!

தவிக்கிற முயலை அடிக்கிறதிலை....இவைக்கு நிகரேயில்லை!

சில நல்ல கிறிஸ்தவர்களை நான் அறிவேன்...அவர்கள் இப்படியான விடயங்களிள் தலையை நுழைப்பதே இல்லை!

 

ஆபிரிக்காவில் இருந்த போது...,

இயேசுவின் சிலைகளைப் பார்த்தேன்!

அவர்களின் மூக்கு..,

தட்டையாக இருந்தது!

 

எமது தேசத்தின்,

இயேசு நாதர்களைப் பார்த்தேன்!

அவர்கள்  இன்னும்.....,

வெள்ளைக்காரராகவே இருந்தனர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயரும் ஒரு தனிமனிதன்  என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். 
அத்துடன்அவரின் கருத்துக்கு நாங்கள் மதமுலாம் பூசுவதையும் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

8 hours ago, nedukkalapoovan said:

தாங்கள்.. ஜேசுவின் போதனைகளோடு நின்று கொள்வது நல்லம்.

யாழ் குடா நாடு ஆக்கிரமிக்கப்பட்ட பின்.. யாழ் பேராயர் அரசாங்க பிரதிநிதி போல கருத்துக்கள் வெளியிட்ட காலங்களையும் மறக்க ஏலாது.

ஜேசு கூட பாதிக்கப்பட்ட மக்களின் நியாயத்திற்காகத்தான் பாடுபட்டார். சிலுவை சென்றார்.

நீங்கள் என்னடான்னா.. மக்களை துன்புறுத்துவனின் காலடியில் ஜேசுவை சரணடையச் சொல்கிறீர்கள். கேட்டால்.. ஜேசுவின் சேவகர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். ஜேசுவை இதனால்.. கொச்சைப்படுத்தும் நீங்கள் எல்லாம்... தமிழ் மக்களுக்கு கருத்துச் சொல்ல அருகதை அற்றவர்கள். :rolleyes:

மிகச் சரியான கருத்து!

மன்னார் ஆயருக்கு மகிந்த சிந்தனைதான் பைபிள் என்று விளங்குது.
ஜேசுநாதரை விட மகிந்த மிக உயர்ந்தவர் என்று நல்லா விளங்கி வைச்சிருக்கிறார்.

இவர் இந்த அறிக்கையோட நீண்டுவிடக் கூடாது.
மன்னாரில் உள்ள ஜேசு, மேரி சிலைகளை அப்புறப்படுத்தி மகிந்தவின் சிலைகளை வைக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரனை ஒரு இந்துவாக கருதி மதமாற்றங்களில் ஈடுபட்டுவரும் இந்த மன்னார் கிறீஸ்தவ குழுக்கள் கொஞ்சகாலமாக கழுதைபடாதபாடாக கத்தி வருவதை அறிய முடிகிறது.

இந்தப் போக்கு ஆரோக்கியமானது இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவாலயத்திற்குப் போனமா ஆராதனை செய்தமா என்று உங்க சொந்த வேலையப் பாருங்க.(நான் நினைக்கிறேன் கருணா பிரிவின் போது இவர்தான் மட்டக்களப்பு ஆயராக இருந்து அவருக்கு சப்போட் பண்ணிணவர் என்று நினக்கிறேன்)

Link to comment
Share on other sites

2 hours ago, vanangaamudi said:

ஆயரும் ஒரு தனிமனிதன்  என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். 
அத்துடன்அவரின் கருத்துக்கு நாங்கள் மதமுலாம் பூசுவதையும் தவிர்க்கவேண்டும்.

ஆயரை ஒரு தனிமனிதனாக ஏற்றுக்கொகொண்டு, அதனால் அவருக்கு எந்த சிறப்பு தகுதிகளும் கவுரவமும் வழங்க முடியாது என்பதையும் ஏற்றுக்கொண்டு, மேலும் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஒரு அரைவேக்காடு என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மத சாயம் பூசக்கூடாது.

Link to comment
Share on other sites

5 hours ago, vanangaamudi said:

ஆயரும் ஒரு தனிமனிதன்  என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். 
அத்துடன்அவரின் கருத்துக்கு நாங்கள் மதமுலாம் பூசுவதையும் தவிர்க்கவேண்டும்.

ஒரு தனிமனிதன் ஆயராகலாம்.

ஒரு ஆயரைத் தனிமனிதனாகக் கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

கிறிஸ்தவர்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை ஆண்­டகையின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

இவர் தொடர்ந்து கைக்கூலிகள் போன்று அறிக்கைகள் விடுவாரானால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விற்று ஈனப்பிழைப்பு நடத்துபவர்களின் பட்டியலில் இணைந்துவிடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2017 at 9:45 AM, நவீனன் said:

இது­வரை கால­மும் தனி நாடு கோரி போராடி வந்­தா­லும் நாம் அத­னைத் தற்­போது கேட்க முடி­யாது. அத­னைக் கேட்­டா­லும் இவர்­கள் தரப்­போ­வ­தில்லை. இந்த நிலை­யில் தற்­போது கிடைக்க உள்ள அதி­யுச்ச அதி­கா­ரப் பகிர்வை நாம் ஒரு இறை­வ­னின் கொடை­யா­கப் பார்க்க வேண்­டும்.

இலனகையில் இருப்பதால் ஆயருக்கு கொஞ்சம் விளங்குது ஆனால் அதுவும் கிடைக்குமா பிதாவே என்பதுதான் மக்கள் எண்ணம் 

அந்த ஏசு நாதருக்கே ஸ்தோத்திரம் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.9.2017 at 6:15 AM, நவீனன் said:

கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ்

மன்­னார் ஆயர் தெரி­விப்பு

 
 
கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ்

ஆண்டவரே! தாங்களே இதை சொல்லலாமா?

இல்லாத இடத்திற்கு...இருக்குமிடத்தில் இருந்து பிரித்து கொடுப்பதுதானே நியாயம்.


போதனைகள் போதிக்கும் வாயால் போதிமரத்தவர்களின் சிந்தனைகளை உதிர்க்கலாமா?

கருவறுப்பை கடுமையாக எதிர்க்கும் வத்திக்கானும் இன அழிப்பை ஏற்குமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.