Jump to content

ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது


Recommended Posts

புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக, அவரின், 1.16 கோடி ரூபாய் 
மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டு உள்ளது. 

 

ஏர்செல்,மேக்சிஸ்,முறைகேட்டில்,கைது,கார்த்தி சிதம்பரம்

இது தொடர்பான விசாரணையில், வங்கி கணக்குகளை, அவர் அவசரமாக கைமாற்றியதும் அம்பலமாகி உள்ளது. அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கையில், மகன் சிக்கியுள்ளதால், 'மாஜி' நிதி அமைச்சர், சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, மே மாதம், சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. 
அதாவது, 2௦௦7ல், மத்திய நிதி அமைச்சராக இருந்த, சிதம்பரத்தின் உதவியுடன், வெளிநாட்டைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, மத்திய அரசின், அன்னிய முதலீட்டு வாரிய அனுமதியை, முறைகேடாக பெற்றுத் தந்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வங்கி கணக்குகள் முடக்கம்



இந்த வழக்கில், தேடப்படும் நபராக கார்த்தியை அறிவித்து, சி.பி.ஐ., பிறப்பித்த நோட்டீசும், அக்டோபர், 4 வரை நீட்டிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சி.பி.ஐ.,யின்முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், கார்த்தி மீது, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கார்த்திக்கு சொந்தமான, 1.16 கோடி ரூபாய்

மதிப்பிலான வங்கிக் கணக்குகளை, அதாவது, அசையும் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இதற்கான உத்தரவை, அத்துறையின் இணை இயக்குனர், ராஜேஷ்வர் சிங் பிறப்பித்து உள்ளார். இவர், '௨ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் உள்ளார். 
இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கார்த்தி தன் வங்கியில் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை மற்றும் அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள, 90 லட்சம் ரூபாய், அவரது கட்டுப்பாட்டிலுள்ள, ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலுள்ள, 26 லட்சம் ரூபாய் ஆகியவை, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் முடக்கப்பட்டு உள்ளன.
'ஏர்செல்' நிறுவனம், அன்னிய முதலீட்டுக்கு அனுமதி பெற்ற பின், ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்துக்கு, 26 லட்சம் ரூபாய் அளித்துள்ளது. ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனம், பாஸ்கரராமன் என்பவரால் நடத்தப்படுகிறது. இவரை, தன் கணக்கு தணிக்கையாளர் என, கார்த்தி கூறியுள்ளார்.
இதேபோல், கார்த்தி, அவரது உறவினர் பழனியப்பன் ஆகியோரது, சி.எம்.எஸ்.பி.எல்., என்ற நிறுவனத்துக்கு, 2 லட்சம் அமெரிக்கா டாலரை, அதாவது, 1.30 கோடி ரூபாயை, 'மேக்சிஸ்' நிறுவனம் வழங்கியுள்ளது. சட்ட நுணுக்கம் தொடர்பான, மென்பொருள் தயாரித்து கொடுத்ததற்காக, இத்தொகை தரப்பட்டதாக, மேக்சிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், அந்த மென்பொருள், இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது; மலேஷியாவில் பயன்படுத்த முடியாது என்பது தெரிய வந்துள்ளது.இந்நிலையில், 2013ல், ஹரியானா மாநிலம் குர்கானில், தனக்கு சொந்தமான சொத்தை, பன்னாட்டு நிறுவனத்துக்கு, கார்த்தி, வாடகைக்கு விட்டிருந்தார். அந்த சொத்தை, சமீபத்தில், விற்று விட்டார்.

 
Advertisement

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் தொடர்புடைய, தன் வங்கிக் கணக்கையும், கார்த்தி மூடிவிட்டார்; மற்ற வங்கி கணக்குகளையும் மூட, அவர் முயற்சித்தார். இந்த வழக்கில், வெளிநாடுகளில் இருந்து, முறைகேடாக ஆதாயங்கள் பெறப்பட்டது குறித்து, அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளது.
 

புது விசாரணை


ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், கார்த்திக்கு எதிராக, புது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதி கொடுத்த சூழ்நிலைகள் குறித்தும், அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், 3500 கோடி ரூபாய் முதலீடு செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதித்துள்ளது. ஆனால், 600 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க, நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால், '180 கோடி ரூபாய் முதலீட்டு திட்டம்' என, அன்னிய நேரடி முதலீட்டு வாரியத்திடம் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அதனால், இந்த திட்டத்தை, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவுக்கு, வாரியம் அனுப்பவில்லை எனவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
 

என்னை அச்சுறுத்த முயற்சி


இது குறித்து அவர் கூறுகையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை பொய்யான குற்றச்சாட்டு மற்றும் தவறான யூகங்களின் வினோத கலவை, என்னை அச்சுறுத்தவும், மவுனம் ஆக்கவும், அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. என்னை யாரும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1862905

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக, அவரின், 1.16 கோடி ரூபாய் 
மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டு உள்ளது. 

 

ஏர்செல்,மேக்சிஸ்,முறைகேட்டில்,கைது,கார்த்தி சிதம்பரம்

அந்த நடிகையின் சாபம் சும்மா விடாது....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அந்த நடிகையின் சாபம் சும்மா விடாது....:grin:

அந்த நடிகையின் சிரிப்பழகே தனது தூக்கத்தை கெடுத்ததாக சொல்வாராமே, சின்ன செட்டியார். :grin: 

Link to comment
Share on other sites

8 hours ago, Nathamuni said:

அந்த நடிகையின் சிரிப்பழகே தனது தூக்கத்தை கெடுத்ததாக சொல்வாராமே, சின்ன செட்டியார். :grin: 

நாதம்.. யார் அந்த நடிகை? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

நாதம்.. யார் அந்த நடிகை? :unsure:

பிள்ளையும் பெத்து, குடித்தனம் நடுத்துறா.... பெயர் சொல்ல வேண்டாமாம் எண்டு, அண்ண, தனிக் கடதாசி போட்டு இருக்கிறார்.... அது தான் யோசிக்கிறேன்...

எதுக்கும் தனி மடல் போடுகிறேன்... :grin: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.