Jump to content

ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது


Recommended Posts

புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக, அவரின், 1.16 கோடி ரூபாய் 
மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டு உள்ளது. 

 

ஏர்செல்,மேக்சிஸ்,முறைகேட்டில்,கைது,கார்த்தி சிதம்பரம்

இது தொடர்பான விசாரணையில், வங்கி கணக்குகளை, அவர் அவசரமாக கைமாற்றியதும் அம்பலமாகி உள்ளது. அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கையில், மகன் சிக்கியுள்ளதால், 'மாஜி' நிதி அமைச்சர், சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, மே மாதம், சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. 
அதாவது, 2௦௦7ல், மத்திய நிதி அமைச்சராக இருந்த, சிதம்பரத்தின் உதவியுடன், வெளிநாட்டைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, மத்திய அரசின், அன்னிய முதலீட்டு வாரிய அனுமதியை, முறைகேடாக பெற்றுத் தந்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வங்கி கணக்குகள் முடக்கம்



இந்த வழக்கில், தேடப்படும் நபராக கார்த்தியை அறிவித்து, சி.பி.ஐ., பிறப்பித்த நோட்டீசும், அக்டோபர், 4 வரை நீட்டிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சி.பி.ஐ.,யின்முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், கார்த்தி மீது, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கார்த்திக்கு சொந்தமான, 1.16 கோடி ரூபாய்

மதிப்பிலான வங்கிக் கணக்குகளை, அதாவது, அசையும் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இதற்கான உத்தரவை, அத்துறையின் இணை இயக்குனர், ராஜேஷ்வர் சிங் பிறப்பித்து உள்ளார். இவர், '௨ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் உள்ளார். 
இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கார்த்தி தன் வங்கியில் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை மற்றும் அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள, 90 லட்சம் ரூபாய், அவரது கட்டுப்பாட்டிலுள்ள, ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலுள்ள, 26 லட்சம் ரூபாய் ஆகியவை, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் முடக்கப்பட்டு உள்ளன.
'ஏர்செல்' நிறுவனம், அன்னிய முதலீட்டுக்கு அனுமதி பெற்ற பின், ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்துக்கு, 26 லட்சம் ரூபாய் அளித்துள்ளது. ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனம், பாஸ்கரராமன் என்பவரால் நடத்தப்படுகிறது. இவரை, தன் கணக்கு தணிக்கையாளர் என, கார்த்தி கூறியுள்ளார்.
இதேபோல், கார்த்தி, அவரது உறவினர் பழனியப்பன் ஆகியோரது, சி.எம்.எஸ்.பி.எல்., என்ற நிறுவனத்துக்கு, 2 லட்சம் அமெரிக்கா டாலரை, அதாவது, 1.30 கோடி ரூபாயை, 'மேக்சிஸ்' நிறுவனம் வழங்கியுள்ளது. சட்ட நுணுக்கம் தொடர்பான, மென்பொருள் தயாரித்து கொடுத்ததற்காக, இத்தொகை தரப்பட்டதாக, மேக்சிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், அந்த மென்பொருள், இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது; மலேஷியாவில் பயன்படுத்த முடியாது என்பது தெரிய வந்துள்ளது.இந்நிலையில், 2013ல், ஹரியானா மாநிலம் குர்கானில், தனக்கு சொந்தமான சொத்தை, பன்னாட்டு நிறுவனத்துக்கு, கார்த்தி, வாடகைக்கு விட்டிருந்தார். அந்த சொத்தை, சமீபத்தில், விற்று விட்டார்.

 
Advertisement

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் தொடர்புடைய, தன் வங்கிக் கணக்கையும், கார்த்தி மூடிவிட்டார்; மற்ற வங்கி கணக்குகளையும் மூட, அவர் முயற்சித்தார். இந்த வழக்கில், வெளிநாடுகளில் இருந்து, முறைகேடாக ஆதாயங்கள் பெறப்பட்டது குறித்து, அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளது.
 

புது விசாரணை


ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், கார்த்திக்கு எதிராக, புது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதி கொடுத்த சூழ்நிலைகள் குறித்தும், அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், 3500 கோடி ரூபாய் முதலீடு செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதித்துள்ளது. ஆனால், 600 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க, நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால், '180 கோடி ரூபாய் முதலீட்டு திட்டம்' என, அன்னிய நேரடி முதலீட்டு வாரியத்திடம் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அதனால், இந்த திட்டத்தை, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவுக்கு, வாரியம் அனுப்பவில்லை எனவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
 

என்னை அச்சுறுத்த முயற்சி


இது குறித்து அவர் கூறுகையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை பொய்யான குற்றச்சாட்டு மற்றும் தவறான யூகங்களின் வினோத கலவை, என்னை அச்சுறுத்தவும், மவுனம் ஆக்கவும், அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. என்னை யாரும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1862905

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக, அவரின், 1.16 கோடி ரூபாய் 
மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டு உள்ளது. 

 

ஏர்செல்,மேக்சிஸ்,முறைகேட்டில்,கைது,கார்த்தி சிதம்பரம்

அந்த நடிகையின் சாபம் சும்மா விடாது....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அந்த நடிகையின் சாபம் சும்மா விடாது....:grin:

அந்த நடிகையின் சிரிப்பழகே தனது தூக்கத்தை கெடுத்ததாக சொல்வாராமே, சின்ன செட்டியார். :grin: 

Link to comment
Share on other sites

8 hours ago, Nathamuni said:

அந்த நடிகையின் சிரிப்பழகே தனது தூக்கத்தை கெடுத்ததாக சொல்வாராமே, சின்ன செட்டியார். :grin: 

நாதம்.. யார் அந்த நடிகை? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

நாதம்.. யார் அந்த நடிகை? :unsure:

பிள்ளையும் பெத்து, குடித்தனம் நடுத்துறா.... பெயர் சொல்ல வேண்டாமாம் எண்டு, அண்ண, தனிக் கடதாசி போட்டு இருக்கிறார்.... அது தான் யோசிக்கிறேன்...

எதுக்கும் தனி மடல் போடுகிறேன்... :grin: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.