Jump to content

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக திறந்த மன்றில் ஆஜர்


Recommended Posts

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக திறந்த மன்றில் ஆஜர்

 


11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக திறந்த மன்றில் ஆஜர்
 

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக இன்று திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

கடற்படை வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், சக்கர நாற்காலியில் அமர வைத்து திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்திற்குள் அழைத்துச் செல்லும் போதும், வழக்கு விசாரணையின் பின்னரும் அவரை நிழற்படம் அல்லது காணொளி எடுக்க முடியாதவகையில், சிவில் உடையில் சென்ற கடற்படை உத்தியோகத்தர்கள் மறைத்துக்கொண்டதாக நியூஸ்பெஸ்ட்டின் நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் 25 கடற்படை உறுப்பினர்களிடம் கடந்த சில நாட்களாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதின்றத்தில் இன்று அறிவித்தனர்.

இந்த வாக்குமூலம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த தவணையின் போது மன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

 

http://newsfirst.lk/tamil/2017/09/11-தமிழ்-இளைஞர்கள்-கடத்தல்/

Link to comment
Share on other sites

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் கடற்படை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்

கடந்த 2008 -ஆம் ஆண்டு கொழும்பு நகரில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தசனாயக்க உற்பட 6 கடற்படை அதிகாரிகள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதை நிருபிக்க தேவையான ஆதாரங்கள் இருப்பதாக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்நாட்டு போரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஒரு போராட்டம் . (கோப்பு படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇலங்கை உள்நாட்டு போரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஒரு போராட்டம் . (கோப்பு படம்)

தனக்கு பிணை வழங்குமாறு கோரி சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.

சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பின் வழக்கறிஞர் கருத்து தெரிவித்த போது, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டது முதல் அவர்களை காணாமல் போகும் வரை இடம்பெற்ற நிகழ்வுகளில் இந்த சந்தேக நபர்களுக்குத் தொடர்புள்ளதாகத் தெரிவித்தார்.

  •  

இப்போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் அதன் மூலம் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாகத் தெரிவித்த அரச தரப்பு வழக்கறிஞர் மேலும் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுமென்றும் எச்சரித்தார்.

எனவே சந்தேக சபர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பாக தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் கூறினார் அரச தரப்பின் வழக்கறிஞர்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அரச தரப்பிற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்தார்.

இதன்படி பிணை மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 தேதி வரை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு அரச தரப்பின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-41402239

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.