Jump to content

தமிழர்களின் காத்திருப்பை புரிந்துகொள்ளட்டும் மைத்திரி


Recommended Posts

தமிழர்களின் காத்திருப்பை புரிந்துகொள்ளட்டும் மைத்திரி

 
 
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

சில தினங்­க­ளுக்கு முன்­னர் ஐக்­கிய நாடு­கள் சபை­யில் உரை­யாற்­றிய இலங்­கை­யின் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­ சேன, அர­சி­யல் தொடர்­பில் சில கடும்­போக்­கா­ளர்­கள் துரி­த­மான பய­ணத்தை, விரை­வான தீர்­வு­களை எதிர்­பார்க்­கி­றார்­கள், அவர்­க­ளின் விருப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு செயற்­ப­ட­மு­டி­யாது, துரி­த­மான பய­ணம் ஆபத்­தா­னது, கடும்­போக்­கா­ளர்­கள் எதிர்­பார்க்­கும் துரி­த­மான உட­ன­டித் தீர்­வு­களை வழங்­கு­வ­தில் உள்ள சிர­மங்­களை உலக நாடு­கள் புரிந்­து­கொள்­ள­வேண்­டும் என்­றார்.

போருக்­குப் பின்­னர் நிரந்­தர அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தில் மைத்­திரி அரசு காட்­டி­வ­ரும் மெத்­த­னம் அண்­மைக் கால­மாக உலக நாடு­க­ளின் குறிப்­பாக மேற்கு நாடு­க­ளின் விச­னத்­திற்கு உள்­ளாகி வந்­தன. ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரும் இலங்­கை­யின் போக்­குக் குறித்து கடு­மை­யான கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­தி­ருந்­தார்.

அதி­லும், பொறுப்­புக்­கூ­றல் விவ­கா­ரங்­க­ளில் கொழும்­பின் தற்­போ­தைய அணு­கு­முறை தொடர்ந்­தால் அது பன்­னாட்டு நீதி­மன்­றில் கொழும்பு நிறுத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு அதி­ க­ரிக்­கும் என்று எச்­ச­ரித்­தி­ருந்­தார்.
தீர்வு பின்­தள்­ளிப் போவது குறித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னும் அண்­மைய நாள்­க­ளில் கடு­மை­யான கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இத்­த­கைய பின்­ன­ணி­யில்­தான் கடும்­போக்­கு­வா­தி­க­ளின் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப தீர்வை விரை­வாக வழங்க முடி­யாது என்று பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் தெரி­வித்­தி­ருக்­கி­றார் மைத்­தி­ரி­பால சிறி­சேன.
தீர்வை விரை­வாக வழங்­க­வேண்­டும் என்று எந்­தச் சிங்­க­ளத் தரப்­பி­ன­ருமே வலி­யு­றுத்­த­வில்லை. தமி­ழர்­கள் மட்­டுமே வலி­யு­றுத்­து­கி­றார்­கள்.

தமி­ழர்­க­ளி­லும் கடும்­போக்­கு­வா­தி­கள் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வோர் தீர்வு என்று கூறிக்­கொண்டு அர­சும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் மக்­களை ஏமாற்­று­ கின்­றன என்று கண்­டிக்­கி­றார்­க­ளே­த­விர, தீர்வை விரை­வாக அரசு வழங்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தும் வகை­யில் நடந்­து­ கொள்­ள­வில்லை. தமிழ் மக்­கள் விரும்­பும், ஏற்­றுக்­கொள்­ளும் தீர்வு ஒன்று எட்­டப்­ப­ட­வேண்­டும் என்­ப­தைத்­தான் அவர்­கள் வலி­யு­றுத்­து­கி­றார்­கள்.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது கடும்­போக்­கு­வா­தி­கள் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால யாரைக் குறிப்­பிட்­டுக் கூறு­கின்­றார் என்­பது தெளி­வில்­லா­ம­லேயே இருக்­கி­றது. தீர்வு விரை­வு­ ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் என்­றும் அதன் மூலம் தமது இயல்பு வாழ்வு திரும்ப வேண்­டும் என்­றும் தமிழ் மக்­கள் அனை­வ­ருமே விரும்­பு­கி­றார்­கள், எதிர்­பார்க்­கி­றார்­கள். அப்­ப­டி­யா­னால் தமிழ் மக்­கள் அனை­வ­ரை­யும்­தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடும்­போக்கு வாதி­கள் என்று குறிப்­பிட்­டி­ருக்­க­வேண்­டும்.

விரை­வான தீர்வை விரும்­பும் தமி­ழர்­கள் அனை­வ­ரை­யும் அப்­படி கடும்­போக்­கு­வா­தி­க­ளா­கக் குறிப்­பி­டு­வ­தற்கு முன்­னர் அரச தலை­வர் ஒன்­றைப் புரிந்­து­கொள்­ள­வேண்­டும், அது தமது அர­சி­யல் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காண 60 வரு­டங்­க­ளுக்­கும் மேற்­பட்ட கால­மா­கத் தமிழ் மக்­கள் காத்­தி­ருக்­கி­றார்­கள்.

கடந்த 30 ஆண்­டு­க­ளாக நடந்த ஆயு­தப் போராட்­டம் மட்­டுமே தமி­ழர்­க­ளின் அர­சி­யல் போராட்­ட­மல்ல. அதற்கு முன்­னாள் 30 ஆண்­டு­க­ளுக்கு மேலாக அவர்­கள் அர­சி­யல் தீர்வு ஒன்றை எதிர்­பார்த்­தி­ருக்­கி­றார்­கள். அதற்­கா­கப் போரா­டு­கி­றார்­கள். அதற்­கான அற­வ­ழிப்­போ­ராட்­டங்­கள் கொழும்பு அர­சு­க­ளால் அடக்­கு­ மு­றைக்­குள்­ளாக்­கப்­பட்­ட­போ­து­தான் ஆயுத, வன்­முறை வழி­யில் 30 ஆ்ண்டுகள் போரா­டி­னார்­கள்.

எனவே போர் முடிந்த 7 வரு­டங்­க­ளாக மட்­டுமே தமி­ழர்­கள் தீர்­வுக்­கா­கக் காத்­தி­ருக் கிறார், அவ்­வ­ளவு விரை­வா­கத் தீர்­வைத் தர­மு­டி­யாது என்று அர­சி­யல் தலை­வர்­கள் கருத்­துத் தெரி­விப்­பது பிரச்­சி­னை­யின் அடிப்­ப­டையை அவர்­கள் தவ­றா­கப் புரிந்­து­வைத்­துள்­ளார்­கள் என்­ப­தன் அடை­யா­ள­மா­கும்.

பிரிட்­ஷா­ரின் பிடி­யில் இருந்து விடு­பட்ட இலங்­கை­யின் நவீன வர­லாறு முழு­வ­துமே தமி­ழர்­கள் அர­சி­யல் தீர்­வுக்­கா­கக் காத் திருக்­கி­றார்­கள் என்­பது ஒரு தலை­மு­றை­யின் மொத்­தக் காலம். அதற்­குப் பின்­ன­ரும் தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­க­வில்லை என்­ப­தால்­தான் அதனை விரைந்து வழங்­க­வேண்­டும் என்று ஐ.நா. போன்ற பன்­னாட்டு அமைப்­பு­க­ளும் மேற்கு நாடு­க­ளும் அழுத்­தம் கொடுக்­கின்­றன.

அது தமி­ழர்­க­ளின் கடும்­போக்­குத் தன­மான எதிர்­பார்ப்பு அல்ல, மிக மெத்­த­மான எதிர்­பார்ப்பு, இன்­ன­மும் அத­னைச் சாதிக்­கத் தெரி­யாத ஓர் இனத்­தின் எதிர்­பார்ப்பு என்­பதை அரச தலை­வர் புரிந்­து­கொள்­ள­வேண்­டும்.

http://newuthayan.com/story/31766.html

Link to comment
Share on other sites

தமிழர்களின் காத்திருப்பை மைத்­தி­ரி­பால சிறி­சேன புரிந்துகொள்வாரோ இல்லையோ!  ஆனால்.....ஐக்­கிய நாடு­கள் சபை­க்கும், பன்­னாட்­டுச் சமூ­கத்திற்கும் புரிதலை ஏற்படுத்தக்கூடிய வல்லமை உடைய தமிழர்தரப்பில்  உள்ளவர்கள் மைத்­தி­ரி­பாலவிற்குப் பின்னால் கும்புடு போட்டு  வருகிறார்களே...! :shocked: 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.