Jump to content

புலம்பெயர் புலிகளின் ஊதுகுழலாக விக்னேஸ்வரன்; திஸாநாயக்க சாடல்


Recommended Posts

புலம்பெயர் புலிகளின் ஊதுகுழலாக விக்னேஸ்வரன்; திஸாநாயக்க சாடல்

 

புலம்பெயர் புலிகளின் ஊதுகுழலாக விக்னேஸ்வரன்; திஸாநாயக்க சாடல்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிடுகின்ற கருத்துக்களுக்குப் பின்னால் புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் உந்துசக்தியளிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்த உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் மட்டும் எதிர்ப்பு வெளியிடுவதை புரிந்துகொள்ள முடியாதிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச செவிப்புலனற்றோர் தினத்தை முன்னிட்டு இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் மற்றும் யாழ் மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 2017ஆம் ஆண்டிற்கான தேசிய செவிப்புலனற்றோர் தின விழா இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

செவிப்புலனற்றோர் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனியொன்று இன்று காலை யாழ் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.

இப்பேரணி யாழ் நகரூடாக சென்று வீரசிங்கம் மண்டபத்தில் நிறைவடைந்து அங்கு செவிப்புலனற்றோர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நாடெங்கிலுமிருந்து சமார் இரண்டாயிரம் செவிப்புலனற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியதுடன் அவர்கள் சான்றிதல்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அண்மையில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தை ஒருபோதும் தான் ஏற்கப்போவதில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றார்.

இந்த நிலையில் குடாநாட்டுக்கு விஜயம் செய்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் முதலமைச்சரின் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க “முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் தொடர்பாக நான் மிகவும் கவலையடைகிறேன். முதலமைச்சரது அறிவிப்புக்கள் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகளின் குரல் என்பதை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். முதலமைச்சர் ஸ்ரீலங்காவின் சிரேஷ்ட முன்னாள் நீதியரசர் அதுபோல அவரது பிள்ளைகள் வாசுதேவ நாணயக்கார, குணசேகர போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது பிள்ளைகளையே திருமணம் முடித்துள்ளனர். இப்படிப்பட்ட நபர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. தமிழ் இளைஞர்களின் மூளையைச் சலவைச் செய்யவும், தற்காலிக பிரபல்யத்திற்காகவுமே அவர் இப்படியான கருத்துக்களை வெளியிடுகிறார். இதுகுறித்து எனது அதிருப்தியை நான் வெளியிடுகின்றேன். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்த சட்டத்திற்கு முழுமையாக ஆதரவளித்ததோடு ஏனைய தமிழ்க் கட்சிகளும், ஆதவளித்தன. முஸ்லிம் கட்சிகள் ஆரம்பத்தில் எதிர்த்தாலும் இறுதியில் அவர்களும் இணங்கினர். இது வடக்கு, தெற்கு உட்பட நாட்டு மக்களுக்கே நன்மைகிடைக்கும் விடயமாகும். விருப்பு வாக்குகளுக்குப் பின்னால் செல்கின்ற, பணக்காரர்களுக்கு அடிபணிகின்ற, கடத்தல்காரர்களுக்கு அடிமையாகின்ற தேர்தல் முறையை மாற்றிவிட்டு தொகுதிவாரி தேர்தல் முறைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு வெளியிடுவதை புரிந்துகொள்ள முடியாதுள்ளது” என்றார்.

இதேவேளை ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடிக்கும் வியூகத்தில் அக்கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுவருவது கவலையளிப்பதாகவும் கூறினார்.

“மஹிந்த ராஜபக்ச இப்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு விரும்புகிறார். மஹிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1978ஆம் ஆண்டிலிருந்தே விருப்பு வாக்கு முறையற்ற, தொகுதி வாரி தேர்தல் முறையை அமுல்படுத்துமாறு கோரிவருகிறோம். அதனை கட்சியின் முன்னாள் சிரேஷ்ட தலைவியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவே முதலில் அதனை கோரத்தொடங்கினார். அவருடன் மிகநெருக்கமாக இருந்த மஹிந்த ராஜபக்ச, விருப்புவாக்கு முறையை நீக்கிவிட்டு தொகுதிவாரி தேர்தல் முறையையே தினமும் கோரிவந்தார். அவரது 2 தேர்தல்களிலும்கூட தொகுதிவாரி தேர்தல் முறையை அமுல்படுத்துவதாகவே கூறியிருந்தார். ஆனால் இன்று அதனை எதிர்க்கின்றார். எனவே அடுத்த தேர்தல்களில் சுதந்திரக் கட்சியை தோற்கடிப்பதற்கே அவர் இதனை கூறுகின்றார். மஹிந்த ராஜபக்ச எமது கட்சியின் தலைவராக இருமுறை இருந்தவர் என்ற வகையில் சுதந்திரக் கட்சியையே தோற்கடிக்க அவர் நினைப்பதையிட்டு நாங்கள் கவலையடைகிறோம்” என்று தெரிவித்தார்.

 

https://news.ibctamil.com/ta/politics/SB-Dissanayake-comment-on-CV

Link to comment
Share on other sites

ஏன் சிங்களவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு ஐநாவுக்கு அனுப்பப்படவில்லையா?? வை.கோவை சூழ்ந்து கேள்வி கேட்டவர்களும் மூளை சலைவை செய்யப்பட்ட இனவாதிகளே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.