Jump to content

'நான் வேறு ரஜினி வேறு...' - கமல் பரபரப்புப் பேட்டி!


Recommended Posts

'நான் வேறு ரஜினி வேறு...' - கமல் பரபரப்புப் பேட்டி!

பிக் பாஸ் நிகழ்ச்சி, ட்விட்டர் கருத்துகள் என்று கமல் பரபரப்பாக இயங்கிவருகிறார். தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துவரும் அவர், 'மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்' என்று கூறினார். இதனிடையே, கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமலைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஊழலுக்கு எதிராக இணைந்து செயல்படப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், 'தனிக்கட்சி தொடங்குவேன், முதல்வர் ஆக விரும்புகிறேன்' என்றும் கருத்து தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.

கமல்ஹாசன்
 

இந்நிலையில், நியூஸ் 18 ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கமல், "மாநில சுயாட்சிகுறித்து அண்ணா கோரிக்கையை முன்வைத்து, பின்னர் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டார். ஆனால், மாநில சுயாட்சிக்கான தேவைகள் இன்னும் இருக்கின்றன. எனக்கு, என் நாடு மிகவும் பிடிக்கும். என் வீட்டில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும்தான் என் நாடு தொடங்கும். வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கண்டிப்பாக பிரிவினை உள்ளது. டெல்லிக்கு, தமிழகப் பிரச்னைகள்குறித்து தெரியாது. இதனால்தான், தேசியக் கட்சிகளால் அங்கு ஜெயிக்க முடிவதில்லை.

 

'ரஜினி ஆன்மிகவாதி. அதனால், பா.ஜ.க-வுக்கு அவர் நண்பராகலாம். ஆனால், நான் பகுத்தறிவுவாதி. எந்தக் கட்சிகளுடனும் நான் சேர மாட்டேன். அனைத்துக் கட்சிகளுமே ஊழல்கறை படிந்தவைதான். ரஜினியுடன் நான் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய அரசியல் நிலைப்பாடுகுறித்தும் நான் அவரிடம் கூறியுள்ளேன். நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அடுத்த ஆண்டில் புதுக்கட்சி தொடங்குவேன்" என்று கூறியுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/103242-kamal-haasan-talks-about-rajinikanth.html

Link to comment
Share on other sites

அரசியல் என்பது 100 நாள் ஓடும் சினிமா அல்ல: கமல்ஹாசன் மீது தமிழக அமைச்சர் பாய்ச்சல்

 

அரசியல் என்பது 100 நாள் ஓடும் சினிமாப்படம் அல்ல, அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் சிவாஜி கணேசனால் எம்.எல்.ஏ.வாக கூட வர முடியவில்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 
அரசியல் என்பது 100 நாள் ஓடும் சினிமா அல்ல: கமல்ஹாசன் மீது தமிழக அமைச்சர் பாய்ச்சல்
 
சென்னை:

சமீபகாலமாக தமிழக அரசியலுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருகிறார். நீட் தேர்வை எதிர்த்து போராடிய அரியலூர் மாணவி அனிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் நிகழ்வுகளை மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறார்.

ஓனம் பண்டிகையையொட்டி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்த கமல்ஹாசன், சென்னையில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பின்னர், அவர் தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதற்கேற்ப, முதல் மந்திரியாக விருப்பம் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்த கமல்ஹாசன், இன்னும் 100 நாட்களுக்குள் தேர்தல் நடந்தால் போட்டியிட தாயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்கிடையில், டெங்கு காய்ச்சலால் சென்னை மாணவன் பலியான சம்பவத்தை சுட்டிக்காட்டி, இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என தனது டுவிட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அரசியலை சினிமாவைப்போல் கமல்ஹாசன் நினைக்கிறார். அரசியல் என்பது 100 நாள் ஓடும் சினிமாப்படம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
201709251720513595_1_j-kumar._L_styvpf.j
ஒருவருக்கு கூடும் கூட்டத்தை அரசியலுக்கான அளவுக்கோலாக மதிப்பிட முடியாது. கூடும் கூட்டத்தை எல்லாம் ஓட்டுகளாக மாற்றிவிட முடியாது. முதலமைச்சர் பதவி என்பது சந்தையில் வாங்கிக் கொள்ளும் பொம்மை அல்ல. நடிகர் சிவாஜி கணேசனும் அரசியல் கட்சி ஆரம்பித்தார். ஆனால், அவரால் எம்.எல்.ஏ.வாக முடியவில்லை.  

டுவிட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவிக்கும் கமலின் போக்கை கண்டிக்கும் வகையில் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் டுவிட்டரில் இருந்து பயனில்லை, மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/25172049/1109874/TN-minister-flays-actor-Kamal-Haasan-s-political-ambitions.vpf

Link to comment
Share on other sites

அரசியல் பிரவேசம் ரஜினிக்கு போட்டியா?- கமல் சொன்ன பதில்

 

 
KAMALHAASAN12432131f

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவரும் வேளையில் அவருக்கு போட்டியாக நீங்களும் அரசியலுக்கு வருகிறீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் நேற்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் பல்வேறு ஊடகங்களுக்கும் சுழல் பேட்டி அளித்தார்.

அவர் அளித்த் பேட்டிகளின் தொகுப்பு:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவருவதால் நான் அரசியலுக்கு வர நினைக்கவில்லை. எனக்கு தேவை என்று நான் நினைப்பதனால்; தமிழகத்துக்கு தேவை என்று நினைப்பதனால் நான் வருகிறேன். தமிழக மக்கள் கொடுத்திருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பேசி வருகிறேன்.

ஒரு நடிகனாக மக்களை மகிழ்வித்தேன் ஓர் அரசியல்வாதியாக மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என நம்புகிறேன். மக்கள் எனை விரும்புவதாகவே எனக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அரசியலுக்கு இத்தனை நாட்களுக்குள் வருவேன் நான் எந்த கால நிர்ணயமும் செய்யவில்லை. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியில் 100 நாட்களில் வருவீர்களா என்று எனக்கு முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அப்படி வைத்துக்கொள்ளலாம் என்றே கூறினேன்.

அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவேன். அதுதான் நியாயமாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது.

கொள்கை என்ன; குரு யார்?

அரசியல் கொள்கை குறித்தும் அரசியல் குரு குறித்தும் கேள்வி எழுப்ப்பபட்டதற்கு, "கொள்கை விஷயத்தில் அவசரப்பட முடியாது. ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அது நாடெங்கிலும் பேசப்படும் பேச்சு. தமிழ்நாட்டில் அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு மெத்தனம் கூடி விட்டது, பயம் போய்விட்டது. இந்த அடிப்படையில் கொள்கை குறிப்புகள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். அரசியல்வாதிகளுக்கான கோபம் மக்களிடம் இருக்கிறது என்பதுதான் உண்மை" என்றார்.

அரசியலில் குரு யார் என்ற கேள்விக்கு, "ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என்மீது கட்சி சாயம் பூசப்படும். நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் பலர் இருக்கிறார்கள். புதிய அரசியல்வாதிக்கு பன்முக தன்மை தேவை என்பது எனது கருத்து. கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோருடனான சந்திப்பு அரசியல் பாடம் கற்பதற்காகவே என்றால் அது மிகையாகாது" எனக் கூறினார்.

சினிமாவுக்கு முழுக்கு போடுவேன்..

அரசியலில் தீவிரமாக இறங்கிய பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன். விஸ்வரூபம்-2 படத்தை முடிக்க வேண்டும். சபாஷ் நாயுடு படத்தையும் முடிக்க வேண்டும். அதை முடிக்காமல் நான் பொதுச்சேவைக்கு போனேன் என்றால் என்னை நம்பி படத்தில் காசு போட்டு இருப்பவர்களெல்லாம் ஏமாந்து விடக்கூடாது. எனவே அந்த படங்களை முடித்து விட்டுத்தான் இங்கு வருவேன். அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவேன். அதுதான் நியாயமாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது.

'நீங்கள் முதல்வரானால் முதல் பணி..'

நீங்கள் முதல்வரானால் முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, "நான் முதல்வரானால் என்று நீங்கள் சொல்லலாமே தவிர நான் சொல்லக்கூடாது. ஏனென்றால் அதுவல்ல எனது இலக்கு. மக்களுக்கான நல்ல விஷயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு நான் ஏதுவாக இருக்க வேண்டும். அப்படி வரவேண்டும் என்று சொன்னால், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" எனக் கூறினார்.

எம்ஜிஆர், என்டிஆர் வழியில் வெற்றி..

"எம்ஜிஆர், என்டிஆருக்குப் பிறகு தனிக் கட்சி தொடங்கிய நடிகர்கள் சோபிக்கவில்லை என்று கூறப்படுவதை அடையாளமாக எடுத்துக்கொள்ள முடியாது. நான் எடுத்துக்கொண்டது எம்ஜிஆர், என்டிஆர் என்ற பெரிய வெற்றியாளர்களைத்தான். அந்த உதாரணத்துடன்தான் ஆரம்பிக்க வேண்டுமே தவிர தோற்றவர்களை பார்த்து எதையும் திட்டமிடக் கூடாது" என நடிகர்கள் அரசியலுக்கு வர நிலவும் எதிர்ப்பு குறித்து கூறினார்.

இவ்வாறு அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துகளையும் கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19755828.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.