Jump to content

இந்தியாவை சிறுமைப்படுத்த ஐ.நா. சபையில் தவறான புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் தூதர் ​​​​​​​பகிர்க


Recommended Posts

இந்தியாவை சிறுமைப்படுத்த ஐ.நா. சபையில் தவறான புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் தூதர்

பாகிஸ்தான் தூதர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES, TWITTER

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவிற்குப் பதில் தரும் பேச்சில், காசாவில் எடுக்கப்பட்ட ஒரு சிறுமியின் புகைப்படத்தை காஷ்மீர் சிறுமி எனக் காட்டியதால் ஐ.நாவிற்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மலீஹா லோதி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.

நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.வின் வருடாந்திர பொதுச்சபை கூட்டத்தில் சனிக்கிழமையன்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறியிருந்தார்.

பாகிஸ்தானை விமர்சித்து ஐ.நா சபை கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் பேசிய பேச்சு, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பலத்த விவாதங்களை எழுப்பியது.

இந்தியாவிற்கு பதிலளிக்கும் விதமாக ஐ.நா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தானுக்கான ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி, "ஜம்மு கஷ்மீரில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளை இந்திய வெளியுறத்துறை அமைச்சர் புறக்கணிக்கிறார். காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என கூறிக்கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.

கார்டியன்படத்தின் காப்புரிமைGUARDIAN Image captionகார்டியன் இணையதளத்தில் வெளியான சிறுமியின் புகைப்படம்

மேலும் பேசிய அவர், "இந்தியாவின் நிர்வாகத்தில், நூற்றுக்கணக்கான அப்பாவி காஷ்மீர் குழந்தைகளும், பெண்களும் கொல்லப்படுகின்றனர். இந்தியா வீசும் பெல்லட் குண்டுகளால் காஷ்மீர் குழந்தைகளின் பார்வை பறிபோகிறது" என்று கூறினார்.

தனது பேச்சின் போது, முகத்தில் பெல்லட் குண்டுத் தழும்புகள் பதிந்திருக்கும் ஒரு சிறுமியின் புகைப்படத்தை கூட்டத்தில் காட்டினார் லோதி.

பாகிஸ்தான் மிஷன் யூ.என் என்ற டிவிட்டர் பக்கத்தில்,"இதுதான் இந்தியாவின் முகம்" எனக கூறி சிறுமியின் புகைப்படத்தை லோதி காட்டும் படத்தினை பதிவிட்டிருந்தனர்.

இந்த டிவிட்டை, லோதியும் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுபதிவு செய்திருந்தார்.

இந்தியாபடத்தின் காப்புரிமைGOOGLE Image captionகூகுள் தரும் விளக்கம்

பாகிஸ்தான் தூதர் காட்டிய சிறுமியின் புகைப்படத்தைக் கூகுள் இமேஜில் தேடிப்பார்த்தால், இப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது அல்ல காசாவில் எடுக்கப்பட்டது என காட்டுகிறது.

இச்சிறுமியின் புகைப்படத்தை, ஜூலை 2014-ல் ஹெய்டி லெவின் என்ற புகைப்பட கலைஞர் காசாவில் எடுத்துள்ளார்.

கார்டியன் இணையதள புகைப்பட தொகுப்பு பகுதியிலும், இப்புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இந்தியாபடத்தின் காப்புரிமைTWITTER

"இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், இச்சிறுமியின் அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்தாகவும், அவரது உறவினர் தங்கை உட்பட மூவர் இறந்தாகவும்" இப்புகைப்படத்தின் பட விளக்க பகுதியில் கூறப்பட்டுள்ளது.

தவறான புகைப்படத்தை ஐ.நா சபையில் காட்டியதற்காக பாகிஸ்தானுக்கான நிரந்தர தூதர் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

http://www.bbc.com/tamil/india-41381117

Link to comment
Share on other sites

இந்தியா பெருமைக்குரிய நாடல்ல. அதன் இராணுவம் அன்று மேற்குப் பாக்கிஸ்தான் சீரழித்த பின் மிகுந்த கிழக்குப் பாக்கிஸ்தான் பெண்களை சிரழித்த சம்பவங்களையும், இலங்கையில் கிழக்குமாகாணத்தில் பெண்களைச் சிரழித்த சம்பவங்களையும் படங்களில் காட்டமுடியாதிருப்பது துர்பலமே. :(

Link to comment
Share on other sites

நான் எடுத்த படத்தை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்திவிட்டது: பெண் புகைப்படக்காரர் வேதனை!

 

 
pellet_victim

 

நியூயார்க்: 2014-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் காசாவில் தான் எடுத்த புகைப்படத்தினை, ஐநா சபையில் பாகிஸ்தான்  தவறாகப் பயன்படுத்தியதாக பெண் புகைப்படக்காரர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமினைச் சேர்ந்த பெண் புகைப்படக்காரர் ஹெய்தி லெவின்.தற்பொழுது அமெரிக்காவில் இருக்கும் இவர் செய்தி நிறுவனங்களுக்காக புகைப்படங்கள் எடுக்கிறார். அதிலும் குறிப்பாக சண்டை நிகழும் இடங்களில் இவர் எடுத்துள்ள படங்கள் உலகப் புகழ் பெற்றவை.

heidi_levine.jpg

அந்த வகையில் 2014-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நகரான காஸாவில், இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகளை புகைப்படங்கள் எடுத்தார்.  அதில் அங்கு குண்டு தாக்குதலுக்கு பலியான ரவ்யா அபு ஜோம் என்ற பெண்ணின் புகைப்படமும் ஒன்று.தாக்குதலில் கோரத்தினை காட்டுவதாக அந்தப் படம்  அமைந்திருந்தது.

இந்நிலையில் தற்பொழுது ஐநா சபையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் கடந்த ஞாயிறு அன்று கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் உலகுக்கு தீவிரவாதத்தினை ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்குவதாக குற்றம் சாட்டினார்

பின்னர் பேசிய ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தரத் தூதர் மலீஹா லோதி, அதற்கு பதில் அளிக்கும் வகையில் காஷ்மீரில் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தும் இந்தியாவின் ஜனநாயகம் இதுதான் என்று கூறி, காஷ்மீர் தாக்குதலில் பலியான பெண் என்று ஒரு புகைப்படத்தினை காட்டினார்.

மறுநாள் இதற்கு பதில் அளித்துப் பேசிய இந்தியா, மலீஹா காட்டிய படம் போலி என்று நிரூபித்தது. அது உண்மையில் ஹெய்தி லெவினால் எடுக்கப்பட்ட ரவ்யா அபு ஜோமின் புகைப்படமாகும்.

இந்த தகவலினைக் கேள்விப்பட்ட லெவின் கடும் வருத்தம் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

எனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உண்மையில் இத்தகைய செயல்களை கண்டு மனம் வலிக்கிறது. புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரவ்யா அபு ஜோமின் கவுரவத்தினை சீர்குலைக்கும் செயலாகவும் இது அமைந்திருப்பதால் பாகிஸ்தான் கண்டிப்பாக அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வாறு லெவின் தெரிவித்துள்ளார். 

http://www.dinamani.com/world/2017/sep/26/shocked-to-see-my-photograph-being-misused-says-heidi-levine-on-pakistans-gaza-lie-at-united-nations-2780180.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

நான் எடுத்த படத்தை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்திவிட்டது: பெண் புகைப்படக்காரர் வேதனை!

ஹிந்தியும் நேர்மையான நாடு இல்லை. அழிவுகளிலும் கழிவுகளிலும் மிதக்கும் நாடு.
தண்ணிச்சாமி/பொம்புளைக்கள்ளன் சாருக்கானின் திரைப்படங்களை பார்த்து...... ஹிந்தியாவை சொர்க்கபுரியாக பல ஐரோப்பியர்கள் நினைக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.9.2017 at 12:35 AM, குமாரசாமி said:

ஹிந்தியும் நேர்மையான நாடு இல்லை. அழிவுகளிலும் கழிவுகளிலும் மிதக்கும் நாடு.
தண்ணிச்சாமி/பொம்புளைக்கள்ளன் சாருக்கானின் திரைப்படங்களை பார்த்து...... ஹிந்தியாவை சொர்க்கபுரியாக பல ஐரோப்பியர்கள் நினைக்கின்றார்கள்.

ஐரோப்பியரென்ன எங்கட தமிழுகளும் நடனங்கள் போடேக்கை பொலிவூட் என்றுதான் அறிமுகப்படுத்துகினம். அண்மையில் சிறுவர்களை வைத்து ஒருநிகழ்வை யேர்மன் பூங்காவிலை போட்டநேரம் நான் எதேச்சையாகச் சென்றபோது அவதானித்தேன். நாங்கள் தமிழரென்று எமது பண்பாடு என்று சொல்ல வெட்கப்படுகினமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

ஐரோப்பியரென்ன எங்கட தமிழுகளும் நடனங்கள் போடேக்கை பொலிவூட் என்றுதான் அறிமுகப்படுத்துகினம். அண்மையில் சிறுவர்களை வைத்து ஒருநிகழ்வை யேர்மன் பூங்காவிலை போட்டநேரம் நான் எதேச்சையாகச் சென்றபோது அவதானித்தேன். நாங்கள் தமிழரென்று எமது பண்பாடு என்று சொல்ல வெட்கப்படுகினமோ தெரியவில்லை.

ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு சுத்ததமிழர் குடும்பத்தின் திருமண விழாவிற்கு போயிருந்தேன். அங்கு தமிழ்க்கலாச்சார உடைகளை காணவில்லை.பேசும் மொழியில் கூட தமிழை காண்பது அரிதாக இருந்தது.

மணமக்களின் பெற்றோர் மட்டும் தமிழில் கதைத்தார்கள். அவர்களுக்கு ஜேர்மன் மொழி கொஞ்சம் மத்திமம் என்பதை  சொல்லியே ஆக வேண்டும். இல்லையேல் அங்கு அந்த கொஞ்ச தமிழும் வந்திருக்காது.

உணவு விடயத்தில் தாராள தமிழ்க்கலாச்சார அறுசுவை மணங்கள் மூக்கை துளைத்தது. பிட்டு,இடியப்பம்,தோசை,சம்பல் கறி என  மண்வாசனையையே கண்முன்னே நிறுத்தி விட்டார்கள்.

குடிவகை விடயத்தில் கள்ளை தவிர சர்வதேச மர்மபானங்கள் அனைத்தும் இருந்தன.
ஆட்டம் பாட்டம் கூத்துகளில் தமிழ்பாட்டுக்கள் அறவேயில்லை. தமிழில் இருக்கும் அதே மெட்டுடைய கிந்தி பாட்டுக்களை போட்டு ண்டியை நெளித்தார்களே தவிர தமிழ்பாட்டுக்களை போடவேயில்லை.
இத்தனைக்கும் தேப்பன் கோவில் நிர்வாக உறுப்பினர். மோன்காரன்(மாப்பிளை) பட்டுவேட்டி கட்டி சாமி தூக்கிற விண்ணன்.

இந்தப்பாட்டு இருக்க...


குத்தியாட்டம் போட்டது இதுக்கு.....

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.