Jump to content

கதிர்காமர் கொலை வழக்கு:குறுக்குக் கேள்விகளால் நெஞ்சுவலிக்கிறது


Recommended Posts

கதிர்காமர் கொலை வழக்கு:குறுக்குக் கேள்விகளால் நெஞ்சுவலிக்கிறது
 

image_52ba688fa3.jpgமுன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின், படுகொலை வழக்கில், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியினால் கேட்கப்படும் கேள்விகளால் தனக்கு நெஞ்சுவலி ஏற்படுவதாக, உதவிச் சட்ட வைத்திய அதிகாரி எச்.பி. விஜயவர்த்த நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.  

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 2005ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதியன்று, கொழும்பில் உள்ள அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து, ஆயுததாரிகளால், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.   

இந்த படுகொலைதொடர்பில், சட்டமா அதிபரினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டம்மான், சார்ள்ஸ் மாஸ்டர், முத்தையா சகாதேவன் மற்றும் சிதோர் ஆரோக்கிய நாதன் ஆகிய ஐவருக்கும் எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.   

2009ஆம் ஆண்டு, யுத்தம் முடிவுக்கு, வந்ததன் பின்னர், முதல் மூன்று பிரதிவாதிகளின் பெயர்களும், குற்றச்சாட்டுப் பத்திரத்திலிருந்து அகற்றப்பட்டது.   

நான்காம் மற்றும் ஐந்தாம் பிரதிவாதிகளான முறையே, முத்தையா சகாதேவன், சிதோர் ஆரோக்கியநாதன், ஆகிய இருவரையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டு, மற்றொரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த வழக்கு, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில், நீதிபதி பியசேன ரணசிங்க முன்னிலையில், கடந்த வௌ்ளிக்கிழமை (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.   

இந்த வழக்கில், 2ஆம் பிரதிவாதியின், விசாரணையில், அரச சாட்சியாக, சாட்சியமளிக்க, அரச தரப்பால் அழைக்கப்பட்ட, உதவிச் சட்ட வைத்திய அதிகாரி எச்.பி. விஜயவர்த்தனவின் சாட்சியத்தை, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி எம். நவாவி நெறிப்படுத்தினார்.   

அதன்போது, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சாந்த, 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி, பிரதிவாதியான சிதோர் ஆரோக்கியநாதனை தன்முன்னிலையில், வைத்திய பரிசோதனைக்கு முன்னிலைப்படுத்தினார்.  

பிரதிவாதியான சிதோர் ஆரோக்கியநாதனிடம் வினவியபொழுது பொலிஸார், பொல்லினால் தன்னை தாக்கியதாக கூறினார். எனினும், பிரதிவாதியின் உடலை, தான் சோதனைச் செய்தபொழுது, பொலிஸார் தாக்கியதற்கான, எந்தக் காயங்களோ அல்லது தழும்புகளோ காணப்படவில்லையென சட்ட வைத்திய அதிகாரி சாட்சியமளித்தார். அதனையடுத்து, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை, அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் கையளித்தார்.   

அதனையடுத்து, இந்த வழக்கில், 2 ஆம் பிரதிவாதியின் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜரானார். சிரேஷ்ட சட்டத் தரணிகளான தர்மஜா தர்மராஜா, அனோமா பிரியதர்சினியின் ஆலோசனையில், டபேரில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, சட்ட வைத்திய அதிகாரி எச்.பி. விஜயவர்த்தனவின் சாட்சியத்தை குறுக்குவிசாரணை செய்தார்.   
அரச சட்டத்தரணியின் கேள்விக்களுக்கு, நீ பதிலளிக்கும் போது, பிரதிவாதியின் (சிதோர் ஆரோக்கியநாதன்) உடல் சோதனை செய்த பொழுது, பொலிஸார், தாக்கியதற்கான எந்தக் காயங்களோ அல்லது தழும்புகளோ பிரதிவாதியின் உடலில் காணப்படவில்லையென சாட்சியமளித்துள்ளீர்.  

ஆனால், 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதியன்று, குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சாந்த, இந்த பிரதிவாதியை வைத்திய பரிசோதனைக்காக, உமக்கு முன்னிலைப்படுத்திய பொழுது, தடிகளாலும் கேபல் வயர்களாலும், இரும்பு கம்பிகளினாலும் தாக்கி, பொலிஸார் பிரிதிவாதியை சித்திரவதைப்படுத்தியுள்ளனர்.  

அவ்வாறு, சித்திவதை புரிந்ததால், இந்த பிரதிவாதியின் உடலில் 13 தழும்புகள் காணப்பட்டன என்றும் குறிப்பிட்டிருந்தீர்.  

ஆனால், உண்மையை மறைத்து பொலிஸ் சார்பாக சாட்சியமளிக்கும் நோக்கில் உண்மைக்கு மாறாக, சட்ட வைத்திய அறிக்கையை தயாரித்தது மட்டுமன்றி, பொய்ச் சாட்சியமும் அளித்துள்ளீர் என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா சாட்சியை பார்த்து கேட்டார்.   

இதற்கு பதிலளித்த உதவிச் சட்ட வைத்திய அதிகாரி எச்.பி. விஜயவர்த்தன, பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியின் கேள்விகளால், தனக்கு மார்புவலி ஏற்படுவதாக தெரிவித்தார்.  

தனது கேள்விகளை அடுக்கிய, சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, கௌரவமான வைத்தியத் தொழில்புரியும் நீர், சத்தியம் செய்து நீதிமன்றில் உண்மையை மறைத்து, அரசுக்கு சார்பாக, பொய்சாட்சி சொன்னால் நெஞ்சு வலி வரத்தான் செய்யும் எனக் கூறினார்.   

இதன்போது, குறுக்கிட்ட விசேட மேல் நீதிமன்றத்தின், நீதிபதி பியசேன ரணசிங்க, எந்த ஆதாரத்தின் அடிப்படையில், சட்ட வைத்திய அதிகாரியை கேள்விக்கு உட்படுத்துகின்றீர் என வினவினார்.   

அதன்போது, தன்னுடைய மேலதிக வாதத்தை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா,  சட்டமா அதிபரினால் இந்த வழக்கு, 2008 ஆம் ஆண்டு, நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வேளையில், பிரதிவாதி தரப்பில் ஆஜராகிய, நான் இந்த வழக்கின் 2ஆம் பிரதிவாதியை (சிதோர் ஆரோக்கியநாதன்) சட்ட வைத்திய அதிகாரியின் முன் ஆஜர்படுத்தி, வைத்திய அறிக்கையை கோரும்மாறு, இந்த நீதிமன்றில் விண்ணப்பித்தேன்.  

எனது வேண்டுகோளையடுத்து, 2ஆம் சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் கொண்டுசென்று, சட்டவைத்திய அறிக்கையை பெறுமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  

இந்த வழக்கின், 2 ஆம் பிரதிவாதி, வைத்திய அதிகாரி சமீர குணவர்த்தன முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.  

வைத்திய சோதனையின் பின்னர், உதவி சட்ட வைத்திய அதிகாரியினால், இந்த நீதிமன்றுக்கு, சட்ட வைத்திய அறிக்கையும் அனுப்பப்பட்டது. அதில், பிரதிவாதியின் உடலில் 23 காயத் தழும்புகள் உள்ளன.   

இந்த காயத் தழும்புகளில், 12 காயத் தழும்புகள் பொல்லுகளாலும் கேபல் வயர்களாலும், இரும்பு கம்பிகளினாலும் பொலிஸார் தாக்கியதால் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தக் காயத்தழும்புகள், பிரதிவாதியை, பொலிஸார், தங்களுடைய, கட்டுப்பாட்டில் தடுத்து வைத்து விசாரித்த காலத்திலேயே ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.   

மேலும், 2000ஆம் ஆண்டு பிரதிவாதி, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதனால், உடலில் 11 தழும்புகள் உள்ளதாகவும், எதிரியின் உடலில் மொத்தமாக, 23 காயத் தழும்புகள் உள்ளன என்றும் சட்டவைத்திய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது  

இந்த நீதிமன்றின் கட்டளையின் பிரகாரம் பிரதிவாதியை, வைத்திய சோதனை செய்து, இந்த நீதிமன்றுக்கு சட்ட வைத்திய அதிகாரி சமீர குணவர்த்தனவினால் அனுப்பப்பட்ட, சட்ட வைத்திய அறிக்கை, இந்த வழக்குக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ளது.  

ஆனால், அரச தரப்பில் சாட்சியமளிக்கும், இந்தச் சாட்சி, சட்ட வைத்திய அறிக்கையில், பிரதிவாதியின் உடலில் எந்த விதமான காயத் தழும்புகளும் உள்ளதாக குறிப்பிடவில்லை. பொலிஸார் தாக்கியதால் பிரதிவாதியின் உடலில் நிரந்தரமாக, ஏற்பட்டுள்ள காயத்தழும்புகளை இன்றும் இந்த நீதிமன்றம் பார்வையிடலாம் என தனது வாதத்தை நிறைவுசெய்தார்.  

அதையடுத்து, அந்த வழக்கு, மேதிக விசாரணைக்காக, ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/கதிர்காமர்-கொலை-வழக்கு-குறுக்குக்-கேள்விகளால்-நெஞ்சுவலிக்கிறது/175-204405

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.