Jump to content

இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றையும் வலியுறுத்தவில்லை – வடமாகாண முதலமைச்சர்!


Recommended Posts

27WIGNESWARAN.jpg

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகளான வட – கிழக்கு இணைப்பு, சமஷ்டித் தீர்வு என்ற ஒன்றையுமே வலியுறுத்தவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்தெரிவிக்கையில், இடைக்கால அறிக்கையுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட ஆங்கில பின்னிணைப்பினை வாசித்தீர்களானால், தமிழர்களின் 70 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் கோரிக்கையை வெறும் ஒன்றே கால் பக்கத்தில் அடக்கியுள்ளனர்.

அதாவது, குறித்த பின்னிணைப்பில் வேறு அறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளார்களே தவிர தமக்கு வேண்டியவற்றைக் கூறவில்லை. இருப்பினும் வடமாகாணசபையும், தமிழ் மக்கள் பேரவையும் விபரமான அறிக்கையை சமர்ப்பித்திருந்தன.

அத்துடன் மத்திய அரசாங்கத்துக்கும் மானில அரசாங்கத்துக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னென்ன அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டுமென்பது குறிப்பிடப்படவில்லை.

ஒட்டு மொத்தத்தில் இந்த இடைக்கால அறிக்கை தமிழர் இனப்பிரச்சனை தொடர்பான பயணத்தினை பின்னோக்கிக் கொண்டுசென்றுள்ளது எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=79610

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.