Jump to content

எனது சிறு பயணமொன்று..... லிடோ டி ஜேசலோ(இத்தாலி)


Athavan CH

Recommended Posts

இது ஒன்றும் பயண அனுபவமோ அல்லது பயணக் கட்டுரையோ அல்ல, இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கு போய் வந்தேன் என உங்களுக்குச் சொல்வது தான் நோக்கம் .

map.png


இம்முறை வசந்த கால விடுமுறைக்கு இத்தாலியின் கடற்கரை நகரங்களில் ஒன்றான ஜேசலோவிற்கு ஒர் ஐந்து நாள் பயணம் போய் வந்தோம். பயணத்திற்கான நோக்கம் பெரிதாக ஒன்றுமில்லை வீடு , வேலை, மன அழுத்தங்கள் எல்லாவற்றையும் மறந்து சில நாட் கள் ஒய்வெடுப்பது தான் நோக்கம்.எனது வேலை இடத்து நண்பன் ஒருவர் ஐந்தாறு தடவைகள் ஜேசலோவிற்கு சென்று வந்தது ஜேசலோவினை தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது அத்துடன் எனது வீட்டிலிருந்து 600 km தூரத்திலிருந்ததும் ஒரு காரணம்

எமது  வீட்டிலிருந்து காரில் பயணம் 600km தூரம் ஏறத்தாள 7 மணித்தியாலப் பயண நேரம். சிறுவர்களுடன் பயணம், கடைசி மகளுக்கு 1 வயது, எப்படியும் பால் குடுக்க , பம்பர்ஸ் (நப்பி) மாற்ற என இரண்டு மூன்று தரிப்புகள் எடுக்க வேண்டி வரும், போக்குவரத்து நெரிசலும் ஒரு பெரிய பிரச்சனையாக வாய்ப்பு உள்ளது. எனவே பயண நேரம் 9 மணி நேரமாக இருக்கும் எனத் திட்டமிட்டு காலை 4 மணிக்கு புறப்படுவதாகத் திட்டமிட்டோம், பயணத்திற்கு முதல் நாள் காருக்கு ஓயில், தண்ணீர், ரயரின் காற்றழுத்தம் எல்லாம் சரி பார்த்துக்கொண்டேன் . இத்தாலி யில்  பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் பணமாகச் செலுத்தலாம், ஆனால் விடுமுறை காலங்களில் நீண்ட வரிசையில்  நிற்க வேண்டி வரும் என எனது வேலைத்தள இத்தாலி நண்பன் எச்சரிக்க ,கார்ட்டில் செலுத்த முடிவெடுத்தேன்,  எல்லா இடங்களிலும் கடனட்டை பாவிக்க விருப்ப மில்லாததால் . இங்கே TCS  இல்  இத்தாலி பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வியாகாட்(VIA CARD) என ஒன்று விற்பதாக அறிந்து 50 யூரோவிற்கு ஒரு வியாகாட் வாங்கிக் கொண்டேன்.

திட்ட மிட்ட படியே காலை 4 மனிக்கு புறப்படக்கூடியதாக இருந்தது மனைவி தான் பாவம் அதிக வேலைச் சுமை நான் 11.00 மணிக்குப் படுக்கச் செல்ல , அவர் தான் கடைசி நேர ஒழுங்குகளை யெல்லாம் பூர்த்தி செய்து 12.00மணிக்குப் படுத்து 2.30  மணிக்கு எழும்பி பிரசாக பானெல்லம் அவனில் போட்டு தேனீர் போட்டு என்னை 3.15 க்கு எழுப்ப  நான் குளித்து  தேனீர் குடித்து பான் எல்லாம் ஒரு கட்டு கட்டி மனைவியுடன் சேர்த்து பிள்ளைகளிருவரையும் தயார் படுத்தி காரில் ஏற 4.15 ஆகியது

கார் புறப்பட  இரண்டு திட்டங்கள்  மனதில் ஓடியது   சுவிசின் டொச்  மொழி மாநிலங்களையும் சுவிசின் இத்தாலி  மொழி மாநிலமான டிச்சினோ (Ticino ) வையும் பிரிக்கும் அல்ப்ஸ் மலைகுகையான 17 Km நீளமான "கொட்டார்ட்"  குகையையும் ,  சுவிஸ் - இத்தாலி போடரினையும் எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் கடப்பது , என்பதே அது

மனைவியும் இரு  பிள்ளைகளும் காரில் பின்னாலேயே இருக்க நான் தனியே முன்னே . மனைவியும் , கடைசி மகளும் கார் புறப்பட்டு 10 நிமிடத்திலேயே நித்திரைக்குச் செல்ல  மூத்த மகள் என்னுடன் கதைத்துக் கொண்டே வந்தா. அவருடன் கதைத்துக்கொண்டே  காரும் சுவிஸ் கிராமங்களை மெல்லிருட்டில் கடந்து கொண்டிருந்தது..., நேரமும் 5.00 மனியை நெருங்க சூரிய கதிர்களும் வெளியே கசியத்தொடங்கின சற்றே காரின் வேகத்தைக் கூட்டி ஹைவேயைத் தொட்டு "கொட்டார்ட்"  குகையை நெருங்க டிரபிக்கும் கூடியிருந்தது .

55300225_588x368_web.jpg

கொட்டார்ட் குகை  17 km நீளமானது தரையிலுள்ள வாகனப்போக்குவரத்திற்கான குகைகளில் உலகிலேயே நான்காவது நீளமானது (முதலாவது நீளமான குகை(24.5 km) நோர்வேயிலுள்ளது) கொட்டார்ட் குகை யினுள் இரு வழிப் பாதை மாத்திரமே உள்ளது போக ஒன்று வர ஒன்று , ஹைவே யில் இரண்டு ட்ரெக்கில் வரும் வாகனங்கள் குகைக்கு வெளியே நிறுத்தப்பட்டு ஒரு ட்ரெக்கினூடகவே உள்ளே அனுமதிக்கப்படும் இதனால் குகைக்கு வெளியே ட்ரபிக் அதிகமாகும் விடுமுறை கால மென்றால் சொல்லத் தேவையில்லை

0.45534700_1464853261.jpg?itok=MGjJwuVl

கொட்டார்ட் குகை

எவ்வளவு முயற்சி செய்தும் ட்ரபிக்கில் மாட்ட வேண்டி வந்து விட்டது .  மெதுவாக உருண்டு கொண்டிருந்த கார்  இப்போது  நிற்க வேண்டி வந்து விட்டது. வீட்டிலிருந்து புறப்பட்டதுக்கு  2 மணித்தியாலம் கழித்து முதன் முதலில் கார் நிற்கிறது. மெதுவாக காரின் முன் பக்க ஜன்னல்கள் இரண்டையும் திறக்கின்றேன் அல்ப்ஸ் மலைகளினூடே தவழ்ந்து வந்த மெல்லிளங் குளிர் காற்றலைகள் என் முகத்தில் அறைந்து களைப்பை அள்ளிச் செல்கின்றன....,

அதிக நேரம் எடுக்கவில்லை ஒரு அரை மணித்தியாலமே டிரபிக்கில் நிற்க வேண்டி வந்தது. ... இப்போது மெதுவாக ஊரத் தொடங்கிய கார் வேகம் பிடித்து 80 km/h இல் "கொட்டார்ட்"  குகையினுள் நுழைகிறது இனி 17  km  தூரத்திற்கு குகை தான்.... குகையின் அரைவாசித் தூரம் கடந்ததும் சுவிஸ் சின் டொச் மொழி மாநில எல்லை முடிந்து சுவிஸ் இத்தாலி மொழி மாநில எல்லை வரவேற்கிறது.... குகை முடிந்து சிறிதுதூரம் செல்ல 80 km/h வேக எல்லை முடிய , காரும் சுவிஸ் ஹைவேயின் அதி கூடிய வேக மான 120 km/h இனைத்தொடுகிறது..  இடையில் ஒர் ஹைவே எரிபொருள் நிலையம் தென்பட  ஒரு எஸ்பிரசோ குடித்தால் நல்லா இருக்குமென மனம் நினைக்க ...., சுவிஸ் எல்லையை விரைவில் கடக்க வேண்டும் என்ற நிலையில்  அடுத்த 100 km இனையும் நிற்காமல் ஓடுவதென முடிவெடுத்து நான் வேகம் பிடிக்க மற்றய பெரும்பாலான கார்கள் வேகம் குறைத்து ட்ரக் மாற்றி ரெஸ்டுரன்டை நோக்கி நகர்ந்தன.... ,அவை பெரும் பாலும் ஜேர்மனி,நெதர்லாந்து, பெல்ஜியம் கார்களாகவே காணப்பட்டன.....,  அவர்கள் சில வேளை அதிகாலை ஒருமணி, இரன்டு மணிக்கு வெளிக்கிட்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரு பிரேக் தேவைப் பட்டிருக்கும்,

இப்போது காலை சூரிய வெளிச்சம் நன்கு பரவியிருக்க சுவிஸ் நாட்டின் ஒரெயொரு இத்தாலி மொழி பேசும் மாநிலமான டிச்சினோ இதமாக சூரியக்குளியல் செய்து கொண்டிருந்தது  ஹைவேயில் அதிகளவில் வாகனங்கள் காணப்பட்டாலும் எல்லா வாகனங்களும் 120 km/h இலேயே போய்கொண்டிருந்தன இது மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.  சுவிசிலுள்ள ஹைவே களில் டிச்சினோவிலுள்ள இந்த A2 ஹைவேயும் நல்ல அழகானது இரண்டு பக்கமும் கம்பீரமாய் நிற்கும் அல்ப்ஸ் மலைகளினூடு பயணிப்பது ஒரு இனிமையான அனுபவம்

switzerland-2584423_960_720.jpg

 

Autobahn A2, Valle Leventina

 

மகளுக்கும் நான் இடையிடேயே டிச்சினோ மாநிலத்தைப் பற்றிக் கூறிக்கொண்டே வந்தேன். இடையிடயே விழித்த மனைவி இப்போது நன்கு விழித்தெழுந்து தனது கால்களை hand break க்கு மேலால் முன்னால் நீட்டி லாவகமாக இருந்து கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டே சிறிது சிறிதாக செய்து கொண்டு வந்த சான்ட் விச்சுகளை பரிமாறினா எனக்கும் பசி யெடுக்க ஒவ்வொரு வாய்க்கும்  ஒவ்வொரு சான்ட் விச்சுகளை அனுப்பி கொண்டிருந்தேன் ,

டிச்சினோ மாநில தலை நகரான பெலின்சோனா வினை கார் கடந்து சென்று கொண்டிருந்தது காலைக் கதிரவனின் கதகதப்பில் பெலின்சோனா பள்ளத்தாக்கு பளபளத்துக் கொண்டிருந்தது. அதனழகு என்னை வசியம் செய்து இடம் கிடைத்தால் காரை ஒரம் கட்டி சில நிமிடம் நின்று ரசிக்கச் சொன்னது ஆனால் ஹைவேயில் அதற்கான இடமும் இல்லை , எனக்கு நேரமும் இல்லை மனம் ரசனையில் இருக்க காரின் வேகமும் இயல்பாகக் குறைய வீதியும் சற்று ஏற்றமாக ஏறிக்கொண்டே போக  PS குறைந்த எனது கார் சற்று சிரமப்பட கியரை 4க்கு மாற்றி முடியாமல் போக 3 க்கு மாற்றி வேகம் எடுத்து  டிச்சினோ மாநிலத்தின் பெரிய நகரான அழகிய லுகானோவைக் கடந்து கொண்டிருந்தது சுவிசில் எனக்குப் பிடித்த நகரம் எது எனக் கேட்டால் லுகானோ எனத்தான் சொல்வேன் அவ்வளவு ரம்மியமானது அது .

1280px-Castelgrande_Bellinzona.JPG

பெலின்சோனா (Bellinzona)

switzerland-2361939_960_720.jpg

 

01-006-lugano-inverno_crop01.jpg

லுகானோ(Lugano)

இப்போது கார் சுவிசின் எல்லைப்பபுர நகரான கியாசசோவினை அடைந்திருந்தது.பெரிதாக வாகன நெரிசல் இருக்கவில்லை  கஸ்டம்சினூடாக 20 km/h  கார் ஊர்ந்து கொண்டிருந்தது , கியாசோ   கஸ்டம் அதிகாரிகளும் பொலிசும் கொஞ்சம் கடுமையானவர்கள் மோசமான இத்தாலி மாபியாக்களை கையாள்பவர்கள், மற்றும் எல்லை கடக்கும் சட்டவிரோத குடியேறிகளையும் சமாளிப்பவர்கள்...., ஆனால் என்னை போகச் சொல்லி கையசைத்தார்கள் கூடவே மகளுக்கும் கையசைத்து bye சொன்னார்கள் ,
மிகவும் மகிழ்ச்சியாகவே சுவிசுக்கு ஒரு bye சொல்லி இத்தாலிக்குள் நுழைந்தோம் ....., பெரிதாக வாகன நெரிசலுக்குள் சிக்காமல் வந்தது மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது 5 நிமிட ஓட்டத்தில் இத்தாலியின் கோமோ பிரதேசத்தில் முதலாவது எரிபொருள் நிலையம் மற்றும் ரெஸ்டுரன்ட்  வர எனது காரும் அதனை நோக்கி சென்றது.... உள்ளே போனால் கார் விட இடமில்லை எல்லாம் நிறைந்து வழிந்தது பல கார்கள் தரிப்பிடம் தேடி அலைந்து கொண்டிருக்க ஒரு ஜேர்மன் இலக்கமுடைய BMW  இன் பின்னே வெள்ளை லைட் தெரிய என் முகத்திலும் லைட் எரிய இப்போது எனது கார் அந்த இடத்தில், காரை அணைத்து,  hand break ஐ இழுத்து , நான் கீழிறங்க எனது குட்டி மகளும் கண் விழிக்க எல்லாம் நலமே ....., 

கடைசி மகளையும் Bagஐயும்நான் தூக்க மனைவி  பெரிய மகளை அணைத்த படி ரெஸ்டுரன்டினுள் நுழைய உள்ளே ஒரே சனக்கூட்டமும், கபே கப்புகளின் சத்தமும் பணியாளர்களின் இத்தாலி மொழி உரையாடலும் மனதுக்கு ஒரு வித கிளர்ச்சியைக் கொடுத்தது.... பாத்ரூம் சென்று முகத்தில் குளிர் தண்ணீரை அடித்து தலைக்கும் கொஞ்சம் தேய்த்து வெளியே வந்து சில வினாடி காத்திருக்க  மனைவியும் பிள்ளைகளை கூட்டிச் சென்று பம்பர்ஸ் எல்லாம் மாற்றி வந்தார். காரினுள் சாப்பிட்டதால் பெரிதாக பசி இல்லை ஏதாவது குடிப்போம் என முடிவெடுக்க , இல்லை பிள்ளைக்கு முதலில் பால் குடுக்க வேண்டும் என மனைவி சொன்னா(அது தான் தாயுள்ளம் ) நீங்களும் பெரிய மகளும் ஏதாவது குடியுங்கோ நான் பால் குடுத்திட்டு வாறன் என அவா சொல்ல பால் போத்தலினுள் பால் கரைத்தால் ,பால் சூடு ஆற கொஞ்சம் நேரம் எடுக்கும் போல இருக்கவே நான் நேரம் போகிறது என மனைவியை அவசரப்படுத்த நாம் எல்லாரும் கோபி குடிக்க முடிவெடுத்து ஒரு லத்தே மக்கியாத்தோவும் (எனக்கு), இரண்டு ஓவல் மாட்டினும்  வாங்கி குடித்து முடிக்கவும் .சிறிய மகளின் போச்சி பால் ஆறவும் சரியாக இருந்தது.  நான் காரில் போய் மகளுக்கு பால் குடுக்கிறேன் நீங்கள் இருவரும் ஒரு 10நிமிடம் கழித்து வாங்கோ எனக்கூறி விட்டு மனைவி சிறிய மகளுடன் சென்று விட்டா, நான் மீண்டும் ஒரு எஸ்பிரசோ வினை வாங்கிக் குடித்து விட்டு செல்ல ,  மகளும் பால்குடித்து ரெடியாக இருந்தா அவாவைத்தூக்கி முதுகில் மேல்நோக்கி சில தடவைகள் தடவி ஏவறை (birth) எடுக்கச் செய்து maxi cosi  இனுள் இருத்தி பெல்ட் போட்டு விட்டு , பின்னால் சென்று காரைத்திறந்து எனது bag இனுள் ரீசேட் ஒன்றை எடுத்து மாற்றிக் கொண்டேன், இப்போது புத்துணர்வு   இன்னம் கொஞ்சம் கூடியிருந்தது .

நான் காரை ஸ்டார்ட் செய்து பின்னோக்கி நகர்த்தி திருப்பவம் இன்னுமொருவர் முகமெல்லாம் பல்லாகா எனது இடத்தில் கொண்டு வந்து தனது காரை விட்டு எனக்கு நன்றி சொன்னார் ( பாவம் அதிக நேரம் இடம் தேடி அலைந்திருப்பார் போலும்) ரெஸ்டுரன்டின் அருகிலேயே இருந்த எரிபொருள் நிலையத்தினுள் ஒரு புல் டாங் பெற்றோல் அடித்து விட்டு , காரை இத்தாலி ஹைவேயில் ஏற்றுகின்றேன் , மனதிற்குள் பயணத்திட்டம் ஓடுகிறது இனி மிலானோ( Milan ) நோக்கிச் சென்று அங்கிருந்து வெனிஸ் (Venice) நகரை நோக்கிச் செல்லும் ஹைவே யினுள் ஏறி ஜேசலோ exit எடுக்க வேண்டும் மிலானோ ஒரு 50km  , அங்கால ஒரு 300 km ஒடினால் போதும்...

கிடைக்கும் நேரத்தினைப் பொறுத்து மிகுதியை தொடர்கிறேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்....ஆதவன்..!

வாசிக்க மிகவும் நன்றாக உள்ளது!

துணைவியாரை பின் சீட்டுக்கு அனுப்பி விட்டுக்...காரோட்டியது தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி!

அதனுள்....மிகப்பெரிய 'இராசதந்திரம்' புதைந்திருக்கின்றது என்பது இதை வாசிக்கும் பலருக்கும் ...உடனே புரியாது என்று நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் தனது பயணத்தை விபரிக்க விதம்.....  கட்டுரையை  சோர்வு இல்லாமல் வாசிக்கத்  தூண்டுகின்றது.
பகிர்விற்கு... நன்றி ஆதவன்.

Link to comment
Share on other sites

ஐரோப்பாவின் அழகை சில வேளைகளில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.ஆதவன் முயற்சி செய்துள்ளார். தொடருங்கள். வாசிக்கும் ஆவலை தூண்டியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணக் கட்டுரையின் ஆரம்பமே அசத்தலாக இருக்கு ஆதவன், படங்களும் பிரமாதம் தொடருங்கள்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள்....ஆதவன்..!

வாசிக்க மிகவும் நன்றாக உள்ளது!

துணைவியாரை பின் சீட்டுக்கு அனுப்பி விட்டுக்...காரோட்டியது தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி!

அதனுள்....மிகப்பெரிய 'இராசதந்திரம்' புதைந்திருக்கின்றது என்பது இதை வாசிக்கும் பலருக்கும் ...உடனே புரியாது என்று நினைக்கிறேன்!

நான் நேர்மாறு மனிசி பக்கத்தில இருக்கோணும்., நித்திரைச்சாமிக்கு வேறு தெரிவில்லை:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் மிகவும் பெரிய தேசம், நந்தன்!

சிட்னியிலிருந்து மெல்பேனுக்கோ...அல்லது பிரிஸ்பனுக்கோ போறதெண்டால்...சராசரி...ஆயிரம் கிலோமீட்டர் வரையும் ஓட வேணும்! அனேகமாக குறைந்த அளவு..வேகம்...110 கிலோ மீற்றர் என்றாலும்...நூற்றி இருபது..அல்லது நூற்றி இருபத்தைந்தில் ஓடினால் தான் நேர காலத்துக்குப் போய்ச் சேரலாம்!

பக்கத்தில இருந்தால் ...ஸ்பீடோ மீட்டரைப் பாத்த படியே ...அப்பா...அப்பா...எண்டு ஒரே அலுப்பு!

அவை சொல்லுற வேகத்தில ஓடினால்...பின்னால வாறவன் எங்கட காருக்கு மேலால ...ஏறிப் போயிருவான்!

அது தான்...சனத்தைப் பின் சீற்றில விடுகிற ....இராச தந்திரம்!

நம்மிட்டக் கார் பழகினதுகள்...நமக்கே படிப்பிக்க வெளிக்கிட்டால்...பொல்லாத விசர் தா வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் ஆதவன் அட சின்ன வயசுக்காரராயா நீங்கள்  ஹாஹா:unsure:

14 hours ago, நந்தன் said:

நான் நேர்மாறு மனிசி பக்கத்தில இருக்கோணும்., நித்திரைச்சாமிக்கு வேறு தெரிவில்லை:grin:

இந்தாழுக்கு வேற பிரச்சினை  இருக்கு  ஆளை அனுப்புங்கய்யா அந்தப்பக்கம்  எப்ப பாரு:10_wink: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனின் பயணக் கட்டுரை அருமையாக உள்ளது. படங்களும் மிக அழகு. தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.9.2017 at 5:04 AM, புங்கையூரன் said:

தொடருங்கள்....ஆதவன்..!

வாசிக்க மிகவும் நன்றாக உள்ளது!

துணைவியாரை பின் சீட்டுக்கு அனுப்பி விட்டுக்...காரோட்டியது தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி!

அதனுள்....மிகப்பெரிய 'இராசதந்திரம்' புதைந்திருக்கின்றது என்பது இதை வாசிக்கும் பலருக்கும் ...உடனே புரியாது என்று நினைக்கிறேன்!

அதையேன் பேசுவான்!!!! இவையளை முன் சீற்றிலை இருந்தினமெண்டால் கிட்டத்தட்ட ஒரு பொலிஸ்காரனை பக்கத்திலை இருத்தினதுக்கு சமம்.

கையாலை ஸ்ரேறிங் பிடிக்கிறது மட்டும் நான்.....மற்றும்படி வாயாலை கிளச் அமத்துறது....கியர் போடுறது....பிரேக் பிடிக்கிறது எல்லாம் அவையள்தான்.......சில நேரத்திலை திடீரெண்டு தேவையில்லாமல் அப்பா எண்டு கத்துவினம்......அந்தநேரத்திலை நாங்கள் சடண் பிரேக் போடாமல் நிதானமாய் ஓடணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/09/2017 at 9:14 AM, புங்கையூரன் said:

அவுஸ் மிகவும் பெரிய தேசம், நந்தன்!

சிட்னியிலிருந்து மெல்பேனுக்கோ...அல்லது பிரிஸ்பனுக்கோ போறதெண்டால்...சராசரி...ஆயிரம் கிலோமீட்டர் வரையும் ஓட வேணும்! அனேகமாக குறைந்த அளவு..வேகம்...110 கிலோ மீற்றர் என்றாலும்...நூற்றி இருபது..அல்லது நூற்றி இருபத்தைந்தில் ஓடினால் தான் நேர காலத்துக்குப் போய்ச் சேரலாம்!

பக்கத்தில இருந்தால் ...ஸ்பீடோ மீட்டரைப் பாத்த படியே ...அப்பா...அப்பா...எண்டு ஒரே அலுப்பு!

அவை சொல்லுற வேகத்தில ஓடினால்...பின்னால வாறவன் எங்கட காருக்கு மேலால ...ஏறிப் போயிருவான்!

அது தான்...சனத்தைப் பின் சீற்றில விடுகிற ....இராச தந்திரம்!

நம்மிட்டக் கார் பழகினதுகள்...நமக்கே படிப்பிக்க வெளிக்கிட்டால்...பொல்லாத விசர் தா வரும்!

 

On 27/09/2017 at 10:34 AM, குமாரசாமி said:

அதையேன் பேசுவான்!!!! இவையளை முன் சீற்றிலை இருந்தினமெண்டால் கிட்டத்தட்ட ஒரு பொலிஸ்காரனை பக்கத்திலை இருத்தினதுக்கு சமம்.

கையாலை ஸ்ரேறிங் பிடிக்கிறது மட்டும் நான்.....மற்றும்படி வாயாலை கிளச் அமத்துறது....கியர் போடுறது....பிரேக் பிடிக்கிறது எல்லாம் அவையள்தான்.......சில நேரத்திலை திடீரெண்டு தேவையில்லாமல் அப்பா எண்டு கத்துவினம்......அந்தநேரத்திலை நாங்கள் சடண் பிரேக் போடாமல் நிதானமாய் ஓடணும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் உங:களுடன் சேர்ந்து பயணம் செய்த மாதிரியே இருக்கிறது.

அது சரி வாகனத்தை ஓட்டிக் கொண்டு எப்படி படங்கள் எடுத்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2017 at 2:10 AM, Athavan CH said:

55300225_588x368_web.jpg

கொட்டார்ட் குகை  17 km நீளமானது தரையிலுள்ள வாகனப்போக்குவரத்திற்கான குகைகளில் உலகிலேயே நான்காவது நீளமானது (முதலாவது நீளமான குகை(24.5 km) நோர்வேயிலுள்ளது) கொட்டார்ட் குகை யினுள் இரு வழிப் பாதை மாத்திரமே உள்ளது போக ஒன்று வர ஒன்று , ஹைவே யில் இரண்டு ட்ரெக்கில் வரும் வாகனங்கள் குகைக்கு வெளியே நிறுத்தப்பட்டு ஒரு ட்ரெக்கினூடகவே உள்ளே அனுமதிக்கப்படும் இதனால் குகைக்கு வெளியே ட்ரபிக் அதிகமாகும் விடுமுறை கால மென்றால் சொல்லத் தேவையில்லை

0.45534700_1464853261.jpg?itok=MGjJwuVl

கொட்டார்ட் குகை

 

இயற்கைக்கு சவாலான உயரமான மலைகளைக் குடைந்து, இந்தக் குகை அமைந்தவிதம் பற்றி சில தடவை யூ டுயூபில் பார்த்து ரசித்துள்ளேன்..

பல தொழிற்நுட்ப பணியாளர்களின் கடின உழைப்பால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.. அவர்களுக்கு பாராட்டுக்கள்.. !

you-did-it-congratulations.png?w=820&h=3

On 9/25/2017 at 2:10 AM, Athavan CH said:

 

Autobahn A2, Valle Leventina

 

1280px-Castelgrande_Bellinzona.JPG

 

01-006-lugano-inverno_crop01.jpg

மிக ரம்மியமான, மனதை கொள்ளை கொள்ளும் அழகு..! படங்களுக்கு நன்றி..!!

ஒரு திரைப்படத்தின் சுவாரசியத்தை முதல் பத்து நிமிடங்களிலேயே கணித்து விடலாம்.. நமது மனதிலும் முத்திரை பதித்துவிடும்..

படங்களின் அழகிற்கு இணையாக ஆதவனின் திறமையான எழுத்து நடையும் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க எதிர்பார்ப்பை தூண்டுகிறது..

 

Link to comment
Share on other sites

இத்தாலி ஹைவேகள் 3 ட்ரக்குகளைக் கொண்டது அதி கூடிய வேகம் 130 km/h, சுவிஸ் ஹைவேகளைப் போலவே இங்கும் பல நாட்டுக் கார்களைக் காண்கிறேன் ஜேர்மன், பிரான்ஸ், மெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து .... ஏன் டென்மார்க், நோர்வே கார்களையும் காணக்கூடியதாக உள்ளது, சுவிசை விடக் கொஞ்சம் வித்தியாசமாக அதிகளவில் GB கார்களைக் காண்கிறேன்

இத்தாலி ஒரு அழகான நாடு, அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்லும் நாடுகள் வரிசையில் ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்பயினுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் வரும் நாடு. உலகின் முன்னனி உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டது இத்தாலியின் மிலான், ரோம் போன்ற நகரங்கள் உலகின் ஆடை அலங்கார( fashion world) வரைபடத்தில் தவிர்க்க முடியாத நகரங்கள், சிறந்த இயந்திர தொழில் நுட்ப ஆற்றல் கொண்ட நாடு உலகப் புகழ் பெற்ற பராரி(ferrari), லம்போர்கினி (lamborghini) போன்ற கார்களினதும், டுகாட்டி (ducati) ,ஜிலேரா(gilera) போன்ற மோட்டார் சயிக்கிள்களினதும் தாயகம் மற்றும் பல தொழிற்சாலை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நாடு எனினும் ஊழல் ஆட்சிகளாலும், ஒழுங்கற்ற திட்டங்களினாலும் சரிவைச் சந்திக்கும் நாடு

800px-Autostrada_A7_Italia_01.jpg

இத்தாலி ஹைவே

சிறிது தூரம் ஹைவேயில் செல்ல கட்டணம் செலுத்துமிடம் வருகிறது....... எதிர்பார்த்த படியே கூட்டம் கும்மி யடிக்க சிறிது தாமதத்தின் பின்னர்  கட்டணம் கட்டி வெளியேறுகிறேன், மிலானோவை அண்மித்ததும் மீண்டும் ஒர்முறை கட்டணம் கட்டுகிறேன். இப்போது மிலானோபிரதேசத்தில் , மிலானோ இத்தாலியின் இரண்டாவது பெரிய நகரம் இத்தாலியின் வர்த்தக தலை நகரம். அழகிய மிலான் டொமோ பேராலயம் உள்ளது,  சொப்பிங் போகலாம் மற்றபடி பார்க்க பெரிதாக இடங்கள் இல்லை என நினைக்கிறேன்.

milan-6.jpg

மிலான் டொமோ பேராலயம் (Milan Cathedral , Mailänder Dom )

(படம்:cheapflightslab.com/direct-return-flights-from-new-york-to-milan-italy)

இத்தாலியில் கணிசமான இலங்கையர்கள் வசிக்கிறார்கள் பெரும் பாலும் சிங்களவர்கள்.  மிலானோ , ரோம், ஜெனோவா, நாப்போலி , பலோர்மோ என பரவலாக இலங்கையர் வாழ்கிறார்கள் பெரும் பாலும் சிங்களவர்கள் அதிலும் பலர் நீர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் , இதனால் தான் நீர்கொழும்பை குட்டி இத்தாலி  என அழைக்கின்றனர் போலும். இத்தாலியில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் அதிக தூரத்திலுள்ள சிசிலியா தீவினுள் (பலோர்மோ நகரை அண்டி) போய் அடைந்து விட்டார்கள் என்ன காரணம் எனத் தெரியவில்லை.

515000_Italien.jpg

இப்போது ஒரு சில  ஹைவே சந்திப்புக்கள் வர எனக்குரிய சரியான வெனேச்சியா நோக்கிய  ஹைவே யினை தேர்ந்தெடுக்க சற்று சிரமப்பட்டு , சில வளைவுகளில் கீழே போய் , பின்னர் மேலே வந்து ஒருவாறு மிலானோ ஹைவே நெரிசலில் இருந்து வெளியேறி வெனேச்சியாவுக்குரிய ஹைவேயினுள் வருகிறேன் இப்போது 3வது கட்டணத் தரிப்பிடத்தில் ரிக்கற் எடுக்கிறேன் . இனி ஒரு 250 க்குநொச்டொப் ஓட்டம் தான். ஜேசலோ exit எடுக்கும் போது ரிக்க்கெற்றை போட்டு காசு கட்டினால் போதும்.

இப்போது சூரியன் மெதுவாக தனது மென்நிலையிலிருந்து வன்நிலைக்கு மாறுகிறார், வெளிச்சம்  கூடிக்கொண்டு வர , வெப்பமும் மெதுவாகக் கூடுகிறது. இப்போது காரின் AC யும் வேலைசெய்யத் தொடங்க என் மூக்கின் மேல் குளிர் கண்ணாடியும் அமர்ந்து கொள்கிறது.  வீதியில் வாகனங்களும் அதிகரித்து காணப்படுகிறது பெருமளவில் wohnwagen (caravan)களும் காணப்படுகின்றன, இத்தாலி camping க்கும் ஒரு பெயர்போன இடம், ஜேசலோவில் மட்டும் 3000 பேருக்கு camping வசதியுள்ளதாக வாசித்தேன்.

இப்போது சற்றுத் தாகமெடுக்கவே

மனைவியிடம் orange juice கேட் கிறேன்,  மனைவி cool bag இலிருந்து பெட்டியெடுத்து அதில் ஒரு ஸ்ரோவினை வைத்து தருகிறா அமிர்தமாக இறங்குகிரது...., cool bag இனுள் வேறு என்ன இருக்கிறது என் கிறேன் , அப்பிளும், பியர்சும் வெட்டி box  இல் போட்டுள்ளேன் என்றார் அப்பிளைத் தாங்கோ என்றேன், cool bag இப்போது  free யாக இருந்த முன் சீட்டிற்கு இடம் மாறுகிறது, இதுக்குள்ள உங்களுக்கு தேவையானதெல்லாம் இருக்கிறது, சும்மா என்னை தொந்தரவு பண்ணாமல் எடுத்துச் சாப்பிடுங்கோ...., ok , good night என்று விட்டு duty க்கு போய் விட்டா , பாவம் அவர் இரவும் நித்திரை இல்லை, நித்திரை கொள்ளட்டும். மூத்த மகளும் நித்திரைக்கு போய்விட்டா அது தான் கொஞ்சம் கவலை , அவா விழித்திருந்தால் அப்பா, அப்பா என கனக்க கேள்விகள் கேட்டுக் கொண்டே வருவா எனக்கும் நேரம் போவது தெரியாது....., பாவம் பிள்ளை தூங்கட்டும் காலையில் வெளிக்கிட்டதிலிருந்து என்னுடன் கதைத்துக் கொண்டே வந்தவா......எல்லோரும் உறக்கதிற்கு செல்ல  இளையராஜாவை உதவிக்கு அழைக்கிறேன் இளையராஜா hits இசைத்தட்டு உள்ளே போக மீண்டும் உற்சாகம் பிறக்கிறது

இத்தாலி ஹைவே யில் உள்ள Autogrill ரெஸ்டுரண்ட்  பிரசித்தமானது , நல்ல இத்தாலி சாப்பாடுகளும், கபே களும் மிகவும் நல்லா இருக்கும் என நண்பன் சொல்லியிருந்தார் , எனக்கும் இந்த ஹைவே இல் stop எடுப்பது மிகவும் பிடிக்கும், விடுமுறைக் காலங்களில்  உள்ளே போனால்  பல்வேறு நாடுகளிலிருந்தும் உல்லாச பயணிகள் வருவார்கள்  சுறுசுறுப்பான ,மகிழ்ச்சியான மனிதர்களை காணலாம் அதுவே ஒரு புத்துணர்வைத் தரும் . இப்போது ஒரு பெரிய Autogrill ரெஸ்டுரண்ட் வந்தது உள்ளே போகும் ஐடியா இல்லை பின்னால் எல்லோரும் நித்திரை ,சிறிய மகளின் பால் நேரமும் இது இல்லை,  அவா எழும்பி அழும் போது பால் குடுக்க ஒருமுறை நிறுத்தினால் போதும் என மனதில் நினைத்துக் கொண்டே  வேகமெடுக்கிறேன்

italian-fast-food-autogrill-16.jpg

 

p01hvpfv.jpg

 

p01hvplc.jpg

 

p01hvp96.jpg

Autogrill ரெஸ்டுரண்டின் வெளிப்புற ,உட்புற தோற்றம் , (படம் : dalluva.com ,bbc.com/autos/story/20131001-road-food-italy)

சில ஹைவே சந்திப்புகளை கடந்து செல்கையில் சிறிய மகளின் முனகல் கேட்டு சிறிது நேரத்தில் அழுகையாக அது மாற்றங்காணவும் ஒரு சிறிய ஹைவே  ரெஸ்டுரண்ட் ஒன்று வரவும் சரியாக இருந்தது..... ஒரம் கட்டி உள்ளே போனால் கார் விட இடமில்லை ஒரு ஒரமாக காரை நிறுத்தி பாலைகரைத்து மகளுக்கு கொடுத்து விட்டு, மீண்டும் ஜேசலோ நோக்கி வேகமெடுத்தேன் ...... பின்னால் இருந்தவர்கள் மூவரும் மீண்டும் தமது கடமையைத் தொடர்ந்த்தார்கள்.

ஹைவேயின் இரு பக்கங்களும் பெரும்பாலும் சிறு நகரங்களும், குடியிருப்புக்களுமே காணப்பட்டன, டொஸ்கானா போல் ஒரு அழகிய இடம் வந்தால் எப்படியிருக்குமென மனம் எண்ணியது , டொஸ்கானா புளோரன்ஸை தலைநகராகக் கொண்ட இத்தாலியின் ஒரு பிராந்தியம் (Region)  மிகவும்  அழகான பிரதேசம் , இந்த பிரதேசத்திற்குள் தான் பிசா/பைசா சாய்ந்த கோபுரம் வருகிறது. உங்களுக்கு இயற்கை காட்சிகளை ரசிப்பதில் விருப்பம் இருந்தால் கூகிளில் Toskana (ஆங்கிலத்தில்Tuscany) எனக் கொடுத்து படங்களைப் பாருங்கள்.சிலிர்த்துப் போவீர்கள்.....!

Toskana

 

Tuscany-landscape.jpg

டொஸ்கானாவின் படங்கள் சில miriadna.com/preview/tuscany-landscape

குளிர் கண்ணாடியினூடாக இத்தாலியின் பெருந்தெரு கண்முன்னே விரிய .....இளையராஜாவின் இசயில்"தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும்......" பாடல் உயிரை வருட....,  cool bag box இலிருந்து அப்பிள் ஒன்றைக் கடிக்கிறேன் gala அப்பிளின் வாசனை நாசித்துவாரங்களை தென்றலாய் வருட , அதன் சுவை அமிர்தமாக உள்ளிறங்க தெய்வீக ராகம் பாடலின் இடையிசை முடிந்து தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு.... என இளசின் இசை செவிப்பறைகளில் அருவியாய் பாய ஆகா அற்புதம் ஆனந்தம், பேரானந்தம் ,பரமானந்தம் , பரம பேரானந்தம் ........... போங்கப்பா வர்ணிக்கத் தெரியவில்லை.....,
இந்தப்பயணத்தின் போது இளையராஜாவின் பாடல்கள் தன்னை ஒரு படி மேலே என்னுள் நிலை நிறுத்தியது என்றால் மிகையாகாது.... ஆரம்பத்தில் நான் பெரிதாக இளையராஜா பாடல்களைக் கேட்பதில்லை , ஆங்கில pop music , fast music தமிழ் பாடல்கள் தான் எனது தேர்வு...., பிதாமகன் படத்தின் இளங்காற்று வீசுதே பாடல் மூலம் இளையராஜா படிப்படியாக என்னுள் ஊடுருவி முழுமையாகக் கட்டிப் போட்டுவிட்டார் இப்போது அவர் கட்டவிழ்த்து விட்டாலும் எனக்குப் போக விருப்பமில்லை அதனுள் கட்டுண்டு கிடக்கவே மனம் விரும்புகிறது ..... , இப்போதும் pop music பிடிக்கும் ஆனால் இளையராஜாவை ரொம்பப் பிடிக்கும்.... (யோவ் பயணக் கட்டுரையில் இளசு வைப் பற்றி எழுத வைக்காதையுங்கோ..... அதுக்குத்தான் களத்தில் சசிவர்ணம், இசை,ரகுநாதன்..... என பல ஜாம்பவான்கள் இருக்கினம் )

இப்போது ஹைவே சந்தி ஒன்று வர (Padua என நினைக்கிறேன்) , பல வாகனங்கள் பிரிந்து வெளியேற எனது பாதை சற்று வாகனங்கள் குறைந்து வெளிக்கிறது, பாடல்கள் தரும் உற்சாகத்தில் கண் முன்னே சற்று வெறுமையான ஹைவே .... மனமோ ஒடு மச்சி ஒடு......,  130 , 140 ஆகி 145 ஆகி 150 km/h ஆக..... வேண்டாம் கடந்த மாதம் தான் சுவிஸ் பொலிசுக்கு 250 பிராங் அழுதது (அது நான் கட்டிய இரண்டாவது 250 தண்டம்) நினைவுக்கு வரவே காலை மெதுவாக வெளியில் எடுக்கவும் , மனைவி பின்னாலிருந்து ஏனப்பா வீட்டில ஏதும் காசு அடிக்கிற மெசின் வைச்சிருக்கிறீங்களோ என குரலெழுப்பவும் சரியாக இருந்தது....

cool box இலிருந்த பொருட் களும் தீர்ந்து கொண்டு வர  GPS (navi) இல் போகவேண்டிய தூரமும் நன்கு குறைந்திருந்தது. ஜேசலோ exit இட் வர பணம் கட்டி ஹைவே யிலிருந்து வெளியேறுகிறேன். இப்போது பின் சீட்டும் கலகல எல்லோரும் விழித்து விடடனர் , இன்னும் ஒரு 25km கள்,  கிராமங்கள் ஊடாகப் பயணிக்கிறேன்  சில பழைய கட்டிடங்களைக் கடந்து செல்கிறேன் இப்போது ஒரு பெரிய camping பிரதேசம் வருகிறது, மிகவும் அழகாக இருக்கிறது , தூரத்தில் இரண்டு கட்டிடங்களின் நடுவே நீல நிறத்தில் கடல் மினுமினுக்க உள்ளூர உற்சாகம் தொற்றிக் கொள்கிறது . சில அழகான கட்டிடங்கள் கடந்து செல்கின்றன அவற்றில் ristorante, pizzeria கள் என போர்டுகள் தெரிகின்றன, மிகவும் புதிய பிரதேசம் ஒன்றில் நன்கு பழகிய ஒருவரைக் காண்பது போல lidl கடையின் விளம்பரம் கண்ணில் படுகிறது   (இவர்கள் ஒரு இடத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் போல)

வீதியின் இரண்டு பக்கமும் பைன் மரங்கள் வரிசையாக வரவேற்க ஜேசலோவினுள் நுழைகிறோம்  அழகிய கடற்கரை நகரம் எமது வருகையைப் பதிவு செய்கிறது படிப் படியாக நெரிசல் கூடிக் கொண்டு போகும் வீதிகளினூடாகப் பயணித்து எமது Hotel  இருந்த தெருவை அடைகிறோம்.

கிடைக்கும் நேரத்தினைப் பொறுத்து மிகுதியை தொடர்கிறேன்.....

கருத்திட்ட கள உறவுகளுக்கும் , பச்சையிட்ட கள உறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி உங்கள் ஊக்கம் தான் இதை எழுதத் தூண்டுகிறது, ஆனால் இப்படி நீளும் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை எழுத்தனுபவம் புதிது என்பதால்  editing இல் கனக்க பிரச்சனை.

(இந்த கட்டுரை அணைத்திலும் வந்த வர இருக்கின்ற படங்கள் அணைத்துமே நானெடுத்தவை அல்ல , எல்லாம் இணையத்தில் பெறப்பட்டவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Athavan CH said:

----குளிர் கண்ணாடியினூடாக இத்தாலியின் பெருந்தெரு கண்முன்னே விரிய .....இளையராஜாவின் இசயில்"தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும்......" பாடல் உயிரை வருட....,  cool bag box இலிருந்து அப்பிள் ஒன்றைக் கடிக்கிறேன் gala அப்பிளின் வாசனை நாசித்துவாரங்களை தென்றலாய் வருட , அதன் சுவை அமிர்தமாக உள்ளிறங்க தெய்வீக ராகம் பாடலின் இடையிசை முடிந்து தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு.... என இளசின் இசை செவிப்பறைகளில் அருவியாய் பாய ஆகா அற்புதம் ஆனந்தம், பேரானந்தம் ,பரமானந்தம் , பரம பேரானந்தம் ........... போங்கப்பா வர்ணிக்கத் தெரியவில்லை.....

-----உங்கள் ஊக்கம் தான் இதை எழுதத் தூண்டுகிறது, ஆனால் இப்படி நீளும் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை எழுத்தனுபவம் புதிது என்பதால்  editing இல் கனக்க பிரச்சனை.

ஆதவன்... உங்களிடம்  நீண்ட கட்டுரையை, இவ்வளவு திறமையாக  எழுதும் ஆற்றலை கண்டு ஆச்சரியப்  பட்டு  போனேன்.:)
உங்கள் பயணக்  கட்டுரையில்... இடைச்செருகலாக,  போகும் போது நடந்த விடயங்களையும் நகைச் சுவையாக  குறிப்பிடுவது கட்டுரைக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றது.
அதிலும்... அந்த போங்கப்பா.. என்ற செல்லச்  சிணுங்கல்..ஓகோ.. ரகம். :grin:
யாழ். களத்தில்  புதிய எழுத்தாளர் உருவாக்கி விட்டார்  என்பதை... உங்கள் கட்டுரையின் மூலம் நிரூபித்து விட்டீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.....நல்ல நகைச்சுவையாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள் இயல்பு மாறாமல்.தொடருங்கள்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சற்று ஒடுக்கமான தெருவில் அருகே  ஒரு ஒரமாக காரை நிறுத்தி  இறங்குகின்றேன் தெரு கலகலக்கிறது, கும்பல் கும்பலாக மக்கள், கடற்கரை நோக்கிச் செல்பவர்களும், வருபவர்களும், நீச்சலுடையில் பெரிய பாக்() இனை தோளில் சுமந்த படி கன்னியரும், வித விதமான வடிவங்களில் காற்று மிதப்புகளுடன் ஒடித்திரியும் சிறுவர்களும், அவர்களைக் கட்டுப்படுத்தும் பெற்றோர்களின் குரலும் , குழந்தைகள் வண்டில்களுமாக தெருவே  உற்சாகமாக காட்சியளிக்க , எனது களைப்புகள் அணைத்தும் பறக்க என் மனமும் ஒரு  பொருத்தமான இடத்திற்குத் தான்  வந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறது....

இன் உள்ளே  செல்ல ரிசப்சனில் ஒரு உற்சாக வரவேற்பு தருகிறார்கள், அவர்களுக்குத் தெரியும் தமது விருந்தினர்கள் பெரும்பாலும் ஒரு நீண்ட கார் பயணத்தினூடே இங்கே வருவார்கள் என்று, எனது பெயரை உறுதிப்படுத்தி  உடனடியாக எனக்குரிய கார் பார்க் தருகிறார்கள் ,  தொடர்ந்து எமக்குரிய அறையில் எம்மைக் கூட்டிச் சென்று விட்டுகிறார்கள். பெரிய அறை எதிர்பார்த்ததைவிட மிகவும் நன்றாகவே இருந்தது ,  அணைவருக்கும் பசியெடுக்க ஒரு காக்கா குளியல் எடுத்துவிட்டு , கீழே வந்து தெருவிற்கு வருகிறோம் ,  அப்பகுதி மிகவும் அழகாக இருக்கிறது ,   சூரியன் தக தகக்க மிகவும் அழகான பல பெரிய பைன் மரங்கள் குடைபிடிக்க , என் மனம் சாப்பிட இடம் தேட இரண்டு பெரிய hotel  களின் நடுவே செல்லும் ஒரு சிறிய நடை பாதையூடாக சென்று கடற்கரையை அடைகிறோம் , பெரிய கடல் கண்முன்னே விரிய மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க ,உற்சாகம் கரை புரண்டோட,  கடற்கரை மணலிலேயே இருந்த ஒரு சிறிய imbiss (சாப்பாட்டுக்கடை) இல் மெனுவைப் பார்த்து அங்கேயே சாப்பிட முடிவெடுக்கிறோம் , அது ஒரு சிறிய கடையாக இருந்தாலும் உள்ளே 6 பேர் வேலை செய்தது ஆச்சரியமாக இருந்தது. இரண்டு பிட்சாவும் எனக்கு ஒரு பேர்கரும் வாங்கி பெரிய நிழற்குடையின் கீழ் கதிரையில் அமர்ந்து கடற்கரை மணல் கால்களில் தவழ , காற்று இதமாக வருட , பெரிய பேர்கர் உள்ளே போய் முடிய ,  எதிர்பார்த்த படியே மகளினதும் மனைவியினதும் மிகுதி பிட்சா துண்டுகள் என்னை நோக்கி வர  வயிறு அவற்றுக்கும் ஒரு welcome போடுகிறது.

இப்போது முழுமயாக உற்சாகம் தொற்றிக்கொள்ள.... கடலில் போய் காலை நனைத்து விட்டு வருகிறோம்  , கடும் வெய்யில் மதிய நேரம் வெளியில் நிற்க முடியாது,  நகரத் தெருக்களுக்குள் நுழைந்து கடைகளை பார்க்கின்றோம், மகள் தனக்குத் தேவையான மணல் விளையாட்டு சாமான் களை beach store ஒன்றில் வாங்கிக் கொள்கிறா,

(மகள்) அம்மா இந்தாங்கோ நீங்கள் தூக்குங்கோ,

(மனைவி ) அப்பாட்ட கொடுங்கோ ....

(நான்) நான் எப்படி தூக்கிறது  நான் ஏற்கனவே (சிறிய மகளுடன்) kinderwagen  (stroller) தள்ளுறன்

( மனைவி) யார் இப்ப உங்களைத் தூக்கச் சொன்னது தோளில் கொழுவுங்கோ ...

இப்போது எனது வலது தோளில் பெரிய beach bag தொங்குகிறது.....,

இப்போது மனைவியும் மகளும் கைவீசம்மா கைவீசு கடைக்குப் போகாலாம் கைவீசு........,

M8_ljesolo_record.jpg

ஜேசலோ நகரம்(metropolitano.tv/jesolo-dei-record/)

ஜேசலோ நகரம் மிக அழகாக இருக்கிறது , ஒரு வருடத்திற்கு 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் வரும் நகரம், 15 km நீளத்திற்கு கடற்கரை முழுவதும் பரவியிருக்கிறது,  நகரத்தில் பைன் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன , வீதியின் இரு மருங்கிலும் பைன் மரங்கள் அழகாக காட்சியளிக்கின்றன ..., இந்த பைன் மரங்கள் ஜேசலோவின் அடையாளங்களில் ஒன்று, சில சிறிய  hotel கள் பைன் மர தோப்புகளில் புதைந்து கிடக்கின்றன... , hotel களின் கார் தரிப்பிடங்கள் நிறைந்து வழிகின்றன பெரும்பாலும் ஜேர்மனிய கார்கள், தொடர்ந்து ஆஸ்திரிய, சுவிஸ் கார்கள் ஆங்காங்கே GB யும், உலகில் அமெரிக்கருக்கு அடுத்தபடியாக அதிகளவில் சுற்றுலா செல்பவர்கள் ஜேர்மனியர், பெரும்பாலான நாடுகளின் சுற்றுலாத் துறையே ஜேர்மனியரில் தான் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது ., ஐரோப்பிய சுற்றுலா தளங்கள் எல்லாம் இவர்களின் ஆதிக்கம் தான். ஜேசலோவும் விதிவிலக்கல்ல, இங்கே ஆஸ்திரிய, சுவிஸ் காரரும் அதிகளவில் காணப்பட்டதால் ஜேசலோ நகரமே டொச் மயம்தான், எங்குபார்த்தாலும் டொச் மொழி உரையாடல் தான் , hotel, கடைகளில் எல்லாம் டொச்சும், ஆங்கிலமும் தாராளமாக கதைக்கிறார்கள்.ஆஸ்திரியாவிற்கு மிகவும் அருகில் ஜேசலோ இருப்பதனால் அதிகளவிலான ஆஸ்திரியா சுற்றுலா பயணிகள் காணப்படுகிறார்கள்.

pineta-jesolo.jpg

சில சிறிய  hotel கள் பைன் மர தோப்புகளில் புதைந்து கிடக்கின்றன....

தெருக்கள் எங்கும் ரெஸ்டுரன்டுகள் அதிகளவில் காணப்படுகிண்றன  , தனியாக பார்களோ, டிஸ்கோக்களோ காணப்படவில்லை, இந்நகரம் முழுக்க முழுக்க பிள்ளைகளுடன் வரும் குடும்பங்களையே குறிவைக்கிறது (என வாசித்திருந்தேன்) .அது தான் நல்லது பார்ட்டி நகரங்கள் என்றால் இரவிரவாக விழித்து ,பகலில் தூங்கும் . பார்ட்டி பிரியர்களுக்கு என்றால் இத்தாலியில் ரிமினி (Rimini) கடற்கரை  நகரம் நல்ல தெரிவாக இருக்கும்.

27693317.jpg

வீதியின் இரு மருங்கிலும் பைன் மரங்கள் ....

hotel-jesolo-notte.jpg

அழகிய மாலைநேரக் கடற்கரை

கடைத்தெருக்களைச் சுற்றிவிட்டு  வந்து

சிறிது ஒய்வெடுத்துவிட்டு மாலை நேரம் மீண்டும் கடற்கரைக்குச் செல்கிறோம் மிகவும் இதமாக இருக்கிறது , கடற்கரைக்கும்  hotel களுக்கும் இடையில் அழகிய நடைபாதை அமைத்துள்ளார்கள் நான் நினைக்கிறேன் இந்த நடைபாதை 10 km  க்கு மேலாகா கடற்கரை முழுவதும் நீண்டு செல்கிறது என ...., மிகவும் இனிமையான சூழலில் மனைவி , பிள்ளைகளுடன் கதைத்துக் கொண்டே நீண்ட தூரம் மெதுவாக நடந்து செல்கிறோம். நேரம் , தூரம் எதுவுமே தெரியவில்லை. பசியெடுக்கவே அருகிலுள்ள கடைத்தெருவுக்குள் நுழைந்து பெரிய பிட்சேரியா ஒன்றினுள் நுழைகிறோம், மிகவும் பரபரப்பாக இருக்கிறது ,ஒரு இருபத்தைந்து பணியாளர்கள் இருப்பார்கள் பாருக்கு அருகில் அமர்ந்து இருந்த படியால் பார் பணியாளருடன் ஏனைய பணியாளர்கள் அடிக்கடி ஓடர் செய்து கொண்டே இருந்தார்கள் ,  இத்தாலிக்கு வந்த பின்னர் முதன்முதலாக இத்தாலிமொழி உரையாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்கிறேன் ...., இத்தாலி மொழி மிகவும் இனிமையாக இருக்கிறது, ஒவ்வொரு சொற்களும் துண்டு துண்டாக விழுகிறது , டொச் மொழியில் உள்ள "ஸ்" உச்சரிப்புகள் இத்தாலியில் இல்லை, ஐரோப்பிய மொழிகளிலே கற்பதற்கு மிகவும் இலகுவான  மொழி  இத்தாலிமொழியெனக் கேள்விப்பட்டுள்ளேன். இத்தாலிகாரர் கதைக்கும் போது கண், கை எல்லாவற்றாலும் கதைப்பார்கள் இது அவர்களின் இயல்பு அவர்களுடன் பழகியவர்களுக்கு இது நன்கு தெரியும். நல்லதோர் இரவுணவின் பின் அறைக்குத் திரும்புகின்றோம்.

Immagine-014.jpg

கடற்கரைக்கும்  hotel களுக்கும் இடையில் உள்ள அழகிய நடைபாதை (campingparkdeidogi.com/?lang=de)

 

Jesolo01.jpg

நாமிருந்த கடற்கரைப்பகுதி

ஒவ்வொரு நாள் காலையும் 6 மணிக்கு கடற்கரை நடைபாதைக்குச் சென்று சிறிது நேரம் ஓடிவிட்டு அறைக்கு வர மனைவி பிள்ளைகளும் தயாராக இருப்பார்கள் , அவர்களுடன் சென்று காலையுணவை முடித்து ஒரு 8.30 மணியளவில் எல்லோரும் ( பெட்டி ,படுக்கைகளுடன்)கடற்கரைக்குச் செல்வோம். மனைவியும் , சிறிய மகளும் எமக்குரிய நிழற் குடையில் தரிக்க , நானும் பெரிய மகளும் கடற்கரையில் நடக்கும் உடற்பயிற்சி நிகழ்ச்சிக்கு செல்வோம்.  கையைச் சுற்றி கழுத்தைச் சுற்றி சிறிது சிறிதாக ஆரம்பிக்கும் உடற்பயிற்சி நிகழ்வு  படிப்படியாகக் கூடி லத்தினோ மியூசிக் போட்டு சும்பாவில் (zumpa) முடியும். உடற்பயிற்சி செய்யும் போது இடையிடையே கடல் அலைகள் காலை தழுவிச் செல்லும் . பயிற்சி முடிய கடலுக்குள் சிறிது நேரம் விழுந்து எழும்பி வந்து, நான் சிறிய மகளைப் பொறுப்பெடுக்க மனைவியும் , மகளும் கடலுக்கு போவார்கள், நானும் சிறிய மகளும்  ஒரு 2 மணித்தியாலம்  நிழற் குடையின் கீழ் அடிப்போம் பாருங்கள் ஒரு நித்திரை ஆகா , ஆகா ...., இறுதியில் மனைவி முகத்தில் ஊற்றும் கடல் நீருடன்  நித்திரை முடிவுக்கு வரும் . மதியம் 11.30 மணியளவில் hotel திரும்பி மதிய உணவை முடித்து, hotel lobby யில் அமர்ந்து சிறு ஓய்வு , பின்னர் அறைக்குச் சென்று சிறு ஓய்வு, மாலை மீண்டும் எல்லோரும்  கடற்கரை  நடைபாதையில் நடை , மாலை உணவு......, இப்படியே அந்த 5 நாட்களும் மிகவும்  ஓய்வாகவும் இனிமையாகவும், மகிழ்சியாகவும் அமைந்தது.

Link to comment
Share on other sites

map-italy-illustration-vector-21798356.j

இந்த பயணத்தின்போது நாம்  வீடு , வேலை, மனச்சுமை என்பவற்றிலிருந்து விடுபட்டு எங்காவது ஒரு வாரம் போய் ஓய்வாக இருந்துவிட்டு வருவோம் எனத் தான் திட்டமிட்டோம், இடங்கள் சுற்றி பார்ப்பதனை (sightseeing ) பிரதானமாகக் கொள்ளவில்லை, எனினும் இரு திட்டங்கள் மனதளவில் இருந்தன , சிறிய மகளுடன் கஷ்ட்டம் என்ற படியால் அவற்றைத் தவிர்த்துவிட்டோம்.  எனது வேலைத்தள நண்பர்கள் ஜேசலோ வுடன் சேர்த்து வேறு சில சிறு பயணங்களையும் மேற்கொண்டிருந்தனர் அவர்களின் அனுபவங்களையும் சேர்த்து சில தகவல்களை இங்கு தருகின்றேன்.

வெனிஸ் நகரம் (Venice / Venedig)

venezia-5-motivi-incanto-isole-01-boscol

அழகிய வெனிஸ் நகரம்

ஜேசலோ செல்பவர்கள் தவிர்க்க கூடாத ஒரு இடம் உலகப் புகழ் பெற்ற அழகிய வெனிஸ் நகரம் . ஜேசலோவிலிருந்து 42 km தொலைவிலேயே உள்ளது, காரில் செல்வதை விட  ஜேசலோ துறைமுகதிலிருந்து இயக்கப்படும் சிறிய கப்பல்களில் செல்வதே சிறந்தது. காலையில் சென்று மாலை / இரவில் திரும்பலாம் இருவழிப் பயணக்கட்டணம் 17 uro தான் பயணச்சீட்டினை நகரம் முழுவதும் காணப்படும் Tabacchi எனப்படும் சிறிய கடைகளில் வாங்கலாம். இந்தப் பயணச்சீட்டு நீங்கள் hotel இலிருந்து துறைமுகம் செல்லவும் பாவிக்கலாம்.

வெனிஸ் நகரத்தில் பொருட்கள் அதிக விலை , எனவே நீங்கள் போகும் போதே சாண்ட்விச்சுகள், குடிநீர் ஆகியவற்றை வாங்கிச் செல்லுங்கள், வெனிஸில் வாங்க வேண்டியேற்பட்டால் முற்பகுதியில் வாங்காமல் சற்று உள்ளே சென்று வாங்குங்கள்.

எமது hotel இல் ஒரு படத்தில் " மனிதனுடன் கலந்துவிட்ட கடல்"என வெனிஸ் நகரை வர்ணித்திருந்தனர் , உண்மையும் அது தான் மிகவும் அழகானது, எப்படியும் எமது கள உறவுகளில் ஒரு சிலராவது வெனிஸ் நகருக்குச் சென்றிருப்பார்கள் என நினைக்கிறேன். (வெனிஸ் செல்வதும் எமது பயணத்திட்டதிலிருந்தது)

venezia-5-motivi-percorsi-acqua-01-bosco

அழகிய வெனிஸ் நகரம்

 

ஸ்லோவேனியா போஸ்டோயானா குகை (Postojna Cave) மற்றும் தலைநகர் லுபியானா(Ljubljana)

7-day-trips.jpg

லுபியானா நகரம்

கிழக்கு ஐரோப்பாவின் அழகான நாடுகளில் ஒன்று ஸ்லோவேனியா, இது ஜேசலோவின் அருகிலேயே உள்ளது மேலே படத்தினைக் கவனிக்கவும் , படத்தில் ஜேசலோ குறிக்கப்படவில்லை வெனிசை (Venice) கருத்திலெடுக்கவும் அமெரிக்காவின் முதற் பெண்மணி( திருமதி ட்ரம்ப்) ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதனால் இந்நாடு இப்போது வெகு பிரபலம்.  தலைநகர் லுபியானா ஜேசலோவிலிருந்து 220 தொலைவிலேயே உள்ளது ,  புகழ் பெற்ற நிலக்கீழ் குகையான " போஸ்டோயானா" குகையும் ஜேசலோவிலிருந்து லுபியானா செல்லும் வழியிலேயே உள்ளது . போஸ்டோயானா குகை மிகவும் அழகானது, குகையினுள் சிறிய ரயிலில் அழைத்துச் செல்வார்கள்  கீழே சமர் காலங்களிலும் வெப்பனிலை 9 பாகையாக இருப்பதனால் , போகிறவர்கள் ஜக்கற் கொண்டு போக வேண்டும், குகையினுள் செல்ல ஒருவருக்கு அனுமதிக் கட்டணம் 40 uro கள் அழகிய குகை அனுபவத்தினை முடித்துக் கொண்டு மீண்டும் திரும்பலாம் அல்லது தலைநகர் லுபியானா சென்று ஒரு இரவு அங்கு தங்கி அச்சிறிய நகரைத் கண்டுகளித்துத் திரும்பலாம். எனது நண்பர் City Hotel Ljubljana  இல் தங்கியிருந்தார் மிகச் சிறந்த Hotel என எனக்குச் சிபாரிசு செய்தார் விலையும் அதிகமில்லை என்றார்.

 

postojna-cave-002-slovenia.jpg

போஸ்டோயானா குகை (Postojna Cave)

Attractions-postojnska-jama.jpg?14793936

போஸ்டோயானா குகை (Postojna Cave)இணையத்தளம்:  https://www.postojnska-jama.eu/en/

காணொளி youtube.com/watch?v=CW6XmnLG3_0&t=2s//

 

Lubiana-Slovenia.jpg

லுபியானா நகரம்


குறிப்பு: ஸ்லோவேனியாவுக்கு காரில் செல்பவர்கள் ஹைவேக்கு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் , இல்லாவிடில் அபராதம் கட்டவேண்டும், ஸ்லோவேனியா எல்லையில் அதனை வாங்க முடியாது, எல்லைக்கு முதலில் வரும் இத்தாலிய ஹைவே எரிபொருள் நிரப்பு நிலயங்களில் அதனை வாங்கி ஒட்டிக்கொள்ளவும்

Gardaland

1a09d43a9a39442fb1121efe8ff7b46d.jpg?aut

Gardaland உம் "Europa-Park" , "disneyland " போல் ஒரு மிகச்சிறந்த விளையாட்டுப் பூங்கா, மிலானோ(milan) விலிருந்து ஜேசலோ செல்லும் வழியில் 137km தூரத்திலுள்ளது, பிள்ளைகளுடன் செல்பவர்களுக்கு மிகச் சிறந்த இடம். எனது வேலைத்தள நண்பர்கள் இருவர் Europa-Park க்கும் Gardaland க்கும் சென்றவர்கள் அவர்களிடம் கேட்டேன் எது சிறந்தது என்று , இருவரும் சொன்னார்கள் "Gardaland" என்று.

Gardalandஐ அனுபவிப்பதற்கு ஒரு நாள் போதாது இரு நாள் தேவை எனச் சொன்னார்கள்,  Europa-Park ஐ விட பெரிதாக இருக்கலாம் என்றும் சொன்னார்கள். Gardaland இத்தாலியின் சுற்றுலா மையங்களில் ஒன்றான gardasee ( Lake Garda) பிரதேசத்திலிருப்பதால் தாராளாமாக குறைந்த விலையில் Hotel கள் எடுக்கலாம். Gardaland park இன் உள்ளும் Hotel உள்ளது.(இதுவும்   எமது பயணத்திட்டதிலிருந்தது)

Gardaland இன் இணையத்தளம்

https://www.gardaland.it/en/

NOVENTA DI PIAVE DESIGNER OUTLET

Chic-Outlet-Shopping.jpg

"NOVENTA DI PIAVE DESIGNER OUTLET" எனப்படும் outlet  கடடைத்தொகுதி ஜேசலோவிலிருந்து 22 km தூரத்திலுள்ளது .ஜேர்மனியிலுள்ள "Outlet Metzingen" போல் பெரிதாக இல்லாவிடிலும் , நல்ல மார்க் உடுப்புகள் குறைந்த விலையில் வாங்கலாம் என நண்பர்களால் கூறப்பட்டது.

இணையத்தளம்

https://www.mcarthurglen.com/it/noventa-di-piave-designer-outlet/en/

மிலானோ(Milan) விலும் "IL CENTRO"எனும் shopping center உள்ளது , சுவிசுடன் ஒப்பிடும் போது உடுப்புகள் மிகவும் மலிவானது , எனது நண்பர் சுவிசிலிருந்து இந்த shopping center க்கென வருடத்தில் ஒரு நாள் என்றாலும் போவார்

இணையத்தளம்

https://www.centroilcentro.it/?lang=eng

 

 

                                                                                                                                    முற்றும்.

(மேலும் தகவல்கள் ஏதும் நினைவுக்கு வரின் பதிவிடுகின்றேன்)

Link to comment
Share on other sites

நான் ஒவ்வொரு தடவையும் இந்த திரியின் தலைப்பை வாசித்து வீட்டு இது இன்னொரு தளத்தில் இருந்து வெட்டி எடுத்த கட்டுரை என நினைத்து வாசிக்காமல் கடந்து சென்று இருந்தேன். இப்ப தான் ஆதவன் எழுதும் பயண கட்டுரை என கண்டு கொண்டேன்

புதிதாக எழுதும் ஒருவரின் கட்டுரை மாதிரி தெரியவில்லை. தொடருங்கள் ஆதவன்

மற்றது, போன வருசம் சிங்கன் தனக்கு ஒரு தேவதை பிறந்தது பற்றி மூச்சே காட்டாமல் இருந்து இருக்கின்றார். பெண் பிள்ளைகள் இயற்கை அப்பாக்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள். வாழ்த்துக்கள்  ஆதவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Athavan CH said:

கிழக்கு ஐரோப்பாவின் அழகான நாடுகளில் ஒன்று ஸ்லோவேனியா, இது ஜேசலோவின் அருகிலேயே உள்ளது மேலே படத்தினைக் கவனிக்கவும் , படத்தில் ஜேசலோ குறிக்கப்படவில்லை வெனிசை (Venice) கருத்திலெடுக்கவும் அமெரிக்காவின் முதற் பெண்மணி( திருமதி ட்ரம்ப்) ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதனால் இந்நாடு இப்போது வெகு பிரபலம். 

US president Donald Trump with ex-wife Ivana trump

Who are the Trump family? A guide to Tiffany, Eric, Ivanka, Donald Jr and Barron

அமெரிக்காவில்  இப்போது... இரண்டு முதல் பெண்மணிகள் உள்ளார்கள். :)
அதில் (கருணாநிதி சொல்லுற மாதிரி)   மனைவியா... துணைவியா....  ஸ்லோவேனியா நாட்டை  சேர்ந்தவர்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24.10.2017 at 2:37 AM, நிழலி said:

நான் ஒவ்வொரு தடவையும் இந்த திரியின் தலைப்பை வாசித்து வீட்டு இது இன்னொரு தளத்தில் இருந்து வெட்டி எடுத்த கட்டுரை என நினைத்து வாசிக்காமல் கடந்து சென்று இருந்தேன். இப்ப தான் ஆதவன் எழுதும் பயண கட்டுரை என கண்டு கொண்டேன்

புதிதாக எழுதும் ஒருவரின் கட்டுரை மாதிரி தெரியவில்லை. தொடருங்கள் ஆதவன்

மற்றது, போன வருசம் சிங்கன் தனக்கு ஒரு தேவதை பிறந்தது பற்றி மூச்சே காட்டாமல் இருந்து இருக்கின்றார். பெண் பிள்ளைகள் இயற்கை அப்பாக்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள். வாழ்த்துக்கள்  ஆதவன்

ஆதவனின்...  பயணக்  கட்டுரையின் தலைப்பு பலரை குழப்பி விட்டது என நினைக்கின்றேன் நிழலி.
அதிலும்...  "லிடோ டி ஜேசலோ"  என்ற நகரத்தின் பெயரை,     பலர் ஒரு மனிதர் என நினைத்து, அவரின் கட்டுரையாக இருக்கலாம் என ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். 

"எனது சிறு பயணமொன்று.....  ஆதவன் CH"  என்று தலைப்பை போட்டிருந்தால்  பலரும்  வாசித்திருப்பார்கள்.
இனியும்... காலம் கடந்து விடவில்லை. ஆதவன் விரும்பினால், நிர்வாகத்திடம் சொல்லி மாற்றலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பயண அனுபவங்களுடன் மேலும் சிலரின் குறிப்புகளையும் சேர்த்து தந்தது பயனுள்ளதாக இருந்தது, பகிர்வுக்கு நன்றி ஆதவன்......!  tw_blush:

Link to comment
Share on other sites

On 9/25/2017 at 5:04 AM, புங்கையூரன் said:

தொடருங்கள்....ஆதவன்..!

வாசிக்க மிகவும் நன்றாக உள்ளது!

துணைவியாரை பின் சீட்டுக்கு அனுப்பி விட்டுக்...காரோட்டியது தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி!

அதனுள்....மிகப்பெரிய 'இராசதந்திரம்' புதைந்திருக்கின்றது என்பது இதை வாசிக்கும் பலருக்கும் ...உடனே புரியாது என்று நினைக்கிறேன்!

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி புங்கையூரன். அந்த "மிகப்பெரிய இராசதந்திரம்"  புத்தனின் வீடியோவால் பரகசியமாகிவிட்டது tw_blush:.

மனைவி மாரை மட்டும் ஒரேயடியாக குறை சொல்லமுடியாது புங்கை , நாங்களும் கொஞ்சம் லொள்ளு தான் .......

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சித்தார்த்துவுக்கும்  அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
    • இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
    • கரும்புலி  மேஜர் மறைச்செல்வன்  செல்வராஜா ரஜினிகாந்தன்  தமிழீழம் (வவுனியா மாவட்டம்)  தாய் மடியில் :03-05-1981 தாயக மடியில்:10.05-2000 அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்த படி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன். அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்கு நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிக நேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கி விட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போக வேண்டியிருந்தது. வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்த போது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான். அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும். தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்தன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்து விட்டு தண்ணீர் எடுத்து வரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான். காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்கு காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்க வேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்ற போது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம் தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டி நிற்பது அதுவே. வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும் போது தான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * கண்டி வீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்ற போது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒரு புறம் அவர்கள் தேடி வந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்ற போது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன. வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன. இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச் துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவி வந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும் போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன. ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்து கொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூர நோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின. கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது. அந்தப் பெரிய சமர் அங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்தி விட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது. வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்து கொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான். ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்ற போது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.   " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "   தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.   தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
    • அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. கப்டன் மயூரன்  பாலசபாபதி தியாகராஜா  தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் :01.11.1970 தாயக மடியில்:11.11.1993 எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் – கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான். அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது….. தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில். என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன். அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான். இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை. என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 – காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள். என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள். ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம். அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் – அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது “நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?” என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது. நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள். இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை. அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் – அவன் போனதும் – அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன். என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது. “என்னப்பு..! என்ன விசயம்?” என்று கேட்டேன். “வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்.” என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது. அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள். “உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா.” என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே “பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க..” என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான். வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது. பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். “மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்.” என்று. வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை. பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான். 11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது. விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன். அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.   கப்டன் மயூரன் நினைவலைகள்…   கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலி போல் ஆகிவிட்டீர்.   அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.   பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.   15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.   அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.   இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.   மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.   திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.   அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.   கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன் ஓருக்கால் வந்தாய் நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய் தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க கையில் பெடியோடு உனது அண்ணி கண் கலங்கப் பார்த்திருக்க பார்த்தாயா…யா? புரியவில்லை நினைவில் தெரியவில்லை. தெருவோடு நீ ஓடி துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம் கனவாக மறைந்து போனாய் சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய் எம் கண்ணிலெல்லாம் காயாத நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய். இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ…? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்ற போது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான். மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது. மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்…   விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த கதைகள் பல இங்கு காதில் அடிபடுது ஆனாலும் மயூரா உன் உடலைக் காணவில்லையடா விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு விதி எமக்கு இல்லையடா-அதனால்தான் உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில் கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம் நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம் மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம் உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம் உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம் - தீட்சண்யன்.. மயூரனின் நண்பர்களின் நினைவில்…   களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையில் கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர் களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய் எரிமலையாகி வெடித்து விட்டாய் நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா! உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே……… ..நண்பர்கள்...   மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)   அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன். அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார். 1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.   https://maaveerarkal.blogspot.com/2003/11/blog-post_11.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.