Jump to content

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை தூசுதட்டப்பட்டு விசாரணை நடக்கிறது


Recommended Posts

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை தூசுதட்டப்பட்டு விசாரணை நடக்கிறது

 

வெலிக்­க­டைச் சிறைச்­சா­லைக்­குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வ­ரம் அதன் போது கொலை செய்­யப்­பட்ட 27 கைதி­கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில், கடந்த இரு­தி­னங்­க­ளில் 12 சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் சிறப்­புக் குழு­வி­னால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

வெலிக்­கடைச் சிறைச்­சா­லைக்­குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வ­ரத்­தி­னால் 27 கைதி­கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வத்­தில் சிறைச்­சா­லைக்­குள் துப்­பாக்­கிச் சூடு நடத்­திய இரா­ணுவக் கொமாண்டோப் படைப் பிரி­வின் ஆயு­தங்­கள் தொடர்­பில் குற்­றப் புல­ன­ாய்வுப் பிரிவு சிறப்பு விசா­ர­ணையை ஏற்­க­னவே தனி­யாக ஆரம்­பித்­துள்­ளது.

சிறைச்­சாலைக் கல­வ­ரத்தை முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி நுழைந்த பிரி­கே­டி­யர் ஒரு­வ­ரின் கீழான சிறப்­புக் கொமாண்டோப் படை­யணி உள்­ளிட்ட 175 இரா­ணுவ வீரர்­கள் கொண்டு சென்ற ஆயு­தங்­கள், கொல்­லப்­பட்ட 27 கைதி­க­ளி­ன­தும் உயி­ரி­ழப்­புக்கு ஏது­ வான கார­ணம், அதற்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள துப்­பாக்கி ஆகி­ய­வற்­றைக் கண்­ட­றிய விசா­ர­ ணை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. அதற்கு மேல­ தி­க­மாகச் சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்த விசா­ர­ணை­க­ளின் போது 2 ஆயி­ரம் பேரி­டம் வாக்­கு­மூ­லம் பெற­வேண்டி ஏற்­ப­டும் என்று குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் குறிப்­பி­டு­ கின்­ற­னர்.

வெலிக்­கடைச் சம்­ப­வம் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்குச் சட்ட மா அதி­ப­ரின் ஆலோ­ச­னை­க­ளும் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட நிலை­யில், அடுத்த இரு வாரங்­க­ளுக்­குள் வெலிக்­க­டைச் சிறைக் கல­வ­ரத்­தின்போது இரா­ணுவக் கொமாண்டோப் படைப் பிரி­வுக்குத் தலைமை தாங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டும் பிரி­கே­டி­யர் தர அதி­கா­ரி­யை­யும், குறித்த விட­யம் தொடர்­பில் செயற்­பட்ட பிர­திப் பொலிஸ் மா அதி­ப­ரை­யும் விசா­ரணை செய்ய குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

அவர்­க­ளது விசா­ர­ணை­கள் ஊடாகக் கிடைக்­கும் தக­வல்­களை மற்­றும் சாட்­சி­யங்­களை ஆராய்ந்து, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச, முன்­னாள் இரா­ணுவத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய, அப்­போ­தைய உள­வுத் துறை தொடர்­பி­லான முன்­னாள் பிர­தானி கபில ஹெந்­த­வித்­தா­ரன உள்­ளிட்­டோ­ரி­டம் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதே­வேளை, கோட்டை ரஜ­மஹா விகா­ரை­யில் இருந்த 6ஆம் புவ­னே­க­பாகு என்று அறி­யப்­ப­டும் செண்­ப­கப் பெரு­மாள் எனும் மன்­ன­னின் வாளினைத் திரு­டச் சென்று அங்­கி­ருந்த தேரர்­கள் இரு­வ­ரைக் கொலை செய்த சந்­தேக நபர்­க­ளும் வெலிக்­க­டைச் சிறைப் படு­கொ­லை­யில் உள்ளடங்­கு­வர்.

இந்த வெலிக்­கடைக் கல­வ­ரம் குறித்த சம்­ப­வத்­தின் சந்­தேக நபர்­கள் உண்­மையை வெளிப்­ப­டுத்­தா­மல் இருப்­ப­தற்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டது என்ற பர­வ­லான நிலைப்­பாடு நில­வும் நிலை­யி­லேயே தற்­போது குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு அதன் உண்­மைத் தன்­மையை வெளிப்­ப­டுத்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

வெலிக்­க­டைச் சிறைச்­சாலைக் கல­வ­ரத்­தின் பிர­தான சாட்­சி­யா­ள­ராகக் கரு­தப்­ப­டும் சுரேஷ் நந்­தி­மா­லின் மொறட்­டுவை வீட்­டின் மீது துப்­பாக்­கிப் பிர­யோ­கம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி ருந்­த­து­டன், அவர் சேவை­யாற்­றும் ரயில்வே திணைக்­க­ளத்­தின் உயர் அதி­காரி ஊடாக விடுக்­கப்­பட்ட உயிர் அச்­சு­றுத்­தல் தொடர்­பி­லும் அவ­ரால் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றா­ன­தொரு நிலை யி­லேயே பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரிவு விசா­ர­ணையை ஆரம்­பித்­துள்­ளது.

http://newuthayan.com/story/31598.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கு, றக்பி வீரர், தாஜூடீன் கொலை சகலமும், வேண்டுமென்றே இழுத்தடிக்கப் பட்டு, இப்போது புதிய அரசியலமைப்பு விவகாரம் சூடு பிடிக்கும் போது, வேகமெடுப்பதன் காரணம், ராஜபக்சே கூட்ட எதிர்ப்பினை மழுங்கடிக்கவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.