Jump to content

தமிழர் தரப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் அரசின் அதிகார பகிர்வுத் திட்டம்


Recommended Posts

தமிழர் தரப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் அரசின் அதிகார பகிர்வுத் திட்டம்

 

 
தமிழர் தரப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் அரசின் அதிகார பகிர்வுத் திட்டம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தமது நீடித்த அர­சி­யல் பிரச்­சி­னைக்கு நிலை­யான அர­சி­யல் தீர்­வைப் பெற்­று­விட வேண்­டும் என்­பதே வடக்­கு,-­கி­ழக்கு தமி­ழர்­க­ளின் அர­சி­யல் பய­ணத்­தின் ஒரே நோக்­கம்.போர் சாத்­தி­யப்­ப­ட­வில்லை.போரால் அதன் இலக்கை அடைய முடி­ய­வில்லை.

தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் போர் என்­பது தீர்­வைப் பெறு­வ­தற்­கான போராட்­டத்­தின் ஒரு வடி­வம்­தான்.சாத்­தி­யப்­ப­டா­மல் போனது அந்த வடி­வமே அன்றி, போராட்­டம் அல்ல.அந்த வடி­வம் இப்­போது மாறி, போராட்­டம் தொடர்ந்த வண்­ணமே உள்­ளது.

rsampanthanhchchj-2.jpg

இப்­போ­தைய போராட்­டத்­தின் நோக்­கத்தை தமி­ழர், தரப்பு தெற்­குக்கு மீண்­டும் ஒரு தடவை மிகத் தெளி­வாக அறி­வித்­துள்­ளது.அந்த நோக்­கத்தை அடை­வ­தற்­கா­கவே இப்­போது அர­சு­டன் இணங்­கிச் செயற்­ப­டு­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு.

மகிந்த அர­சு­டன் முட்டி மோதிய கூட்­ட­மைப்பு இன்­றைய கூட்டு அர­சு­டன் ஒட்டி உற­வா­டு­கி­றது.முட்டி மோதி­யும் பெற இய­லா­ததை, ஒட்டி உற­வா­டி­யா­வது பெற்­றுக்­கொள்­ள­லாமா என்ற பரீச்­சார்த்த நகர்­வு­தான் இது.இருந்­தும்,ஆட்­சி­பீ­டம் ஏறு­வ­தற்­காக கூட்­ட­மைப்­பின் திட்­டத் துக்கு பச்­சைக் கொடி காட்­டிய கூட்டு அரசு, இப்­போது மெல்ல மெல்ல சிகப்­புக் கொடி காட்­டுவ­தையே அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

கூட்­ட­மைப்­புக் கேட்­பது ஒன்று; அரசு கொடுப்­ப­தற்கு எத்­த­னிப்­பது வேறொன்று.அந்த ஒன்­றைக்­கூட உருப்­ப­டி­யா­கக் கொடுக்­கும் நல்ல மன­சு­கூட கூட்டு அர­சுக்கு இல்லை என்­பது அர­சின் செயற்­பா­டு­க­ளில் இருந்து புரி­கி­றது.

மத்­திய அர­சால் மீளப் பெற முடி­யாத, கூட்­டாட்சி அடிப்­ப­டை­யி­லான அதி­கா­ரப் பகிர்வே இறு­தித் தீர்­வாக வழங்­கப்­பட வேண்­டும் என்­கி­றது கூட்­ட­மைப்பு.ஆனால், தாம் நினைத்த நேரத்­தில் மீளப் பெறக்­கூ­டிய ஒற்றை ஆட்­சி­யின் கீழான தீர்­வையே வழங்­கு­தல் என்ற நிலைப்­பாட் டில் உள்­ளது அரசு.

அவ்­வாறு வழங்­கப்­ப­டும் தீர்­வைக்­கூட முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­த­வி­டா­மல் ஒரு கட்­டுப்­பாட்டை விதிக்­கும் திட்­டத்­தில் இந்த அரசு இருப்­பது இப்­போது தெரிய வரு­கி­றது.அப்­ப­டி­யா­ன­தொரு கட்­டுப்­பாட்டை விதிப்­ப­ தற்­கா­கத்­தான் நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கா­மல், அப்­ப­டியே தக்­க­வைத்து வரு­கின்­றது என்ற உண்­மை­யை­யும் அரசே இப்­போது வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இப்­ப­டி­யான உருப்­ப­டி­யற்ற, -உப்­புச்­சப்­பற்ற தீர்­வைத் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஏற்­குமா? கொடுப்­ப­தைப் பெற்­றுக்­கொண்டு அடங்­கி­வி­டுமா? அல்­லது இணக்­கப்­பாட்டு அர­சி­ய­லின் பய­னாக கூட்­ட­மைப்பு நினைத்­த­தைச் சாதிக்­குமா என்­ப­து­தான் தற்போ­துள்ள கேள்வி.

நிறை­வேற்று அதி­கா­ரம்
தக்­க­வைப்பு

ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­ன­வால் உரு­வாக்­கப்­பட்­டது முதல், இப்­போது வரை நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அரச தலை­வர் முறை­மையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான போராட்­டம் இடம்­பெற்று வரு­கி­றது.ஜே.ஆரைத் தொடர்ந்து வந்த அத்­தனை அரச தலை­வர்­க­ளும் நிறை­வேற்று அதி­கா­ர­மு­றை­மைக்கு எதிர்ப்­புத் தெரி­வித்த நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அரச தலை­வர்­க­ளா­கவே இருந்­துள்­ள­னர்.

அந்த நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்­கப்­போ­வ­தா­கக் கூறிக் கொண்டே, அதை ஒழிக்­கா­மல் அதை அப்­ப­டியே அனு­ப­வித்­து­விட்­டுச் சென்­ற­னர். பத­வி­யி­லி­ருந்து வில­கிய பின்­னர் அதைத் தம்­மால் ஒழிக்க முடி­யாது போன­மைக்­குப் பல சாக்­குப் போக்­கு­க­ளைக் கூறி­னர்.

அந்த வரி­சை­யில்­தான் தற்­போ­தை­ய­அ­ரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் இணைந்­துள்­ளார்.நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழித்­தல் என்ற கோசத்­தைப் பல­மாக முன்­வைத்தே கடந்த அரச தலைவர் தேர்­த­லில் மைத்­தி­ரி­யின் பின்­னால் சிவில் அமைப்­பு­க­ளும் மக்­க­ளும் திரண்­ட­னர்.

சகல தேர்­தல்­களை விட­வும், கடை­சி­யாக இடம்­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில்­தான் இந்­தக் கோசம் பல­மாக ஒலித்­தது.மைத்­திரி வென்­றால் அத்­தோடு நிறை­வேற்று அதி­கா­ரத்­தின் கதை முடிந்­து­வி­டும் என்று நம்­பும் அள­வுக்கு நிலைமை இருந்­தது.மைத்­திரி போட்­டி­யி­டு­வதே இதை ஒழிக்­கின்ற ஒரே நோக்­கத்­துக்­கா­கத்­தான் என்­ப­து­போ­லவே கதை­ய­ளக்­கப்­பட்­டது.

அவர் வெற்றி பெற்ற வேகத்­தில் அர­ச­மைப்­புக்­கான 19ஆவது திருத்­தச் சட்­டம் கொண்டு வரப்­பட்டு நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்­குள் இருந்த சில பிரி­வு­கள் நீக்­கப்­பட்­ட­மை­யால், அந்த நம்­பிக்கை மேலும் வலுத்­தது.அடுத்த ஓரிரு மாதங்­க­ளில் நிறை­வேற்று அதி­கார முறை முற்­றாக நீக்­கப்­ப­டும் சாத்­தி­யமே தென்­பட்­டது.

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் செயற்­பா­டு­க­ளும் தொடங்­கப்­பட்­ட­தால், நிறை­வேற்று அதி­கா­ரத்தை முற்றாக -­வி­ரை­வில் ஒழிக்­கும் சாத்­தி­யம் அதி­க­மா­னது.ஆனால்,அதன் பின்னர் தான் சிறி­லங்கா சுதந்­திர கட்­சி­யின் கப­டத்­த­னம் வெளி­வ­ரத் தொடங்­கி­யது.
புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப் ப­டும் என்­றும் நிறை­வேற்று அதி­கார நடை­முறை ஒழிக்­கப்­ப­டும் என்­றும் அரச தலை­வர் தேர்­தல் மேடை­க­ளில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திக்கு முற்­றி­லும் மாறா­கச் செயற்­ப­டத் தொடங்­கி­யது சுதந்­தி­ரக் கட்சி .புதிய அர­ச­மைப்­புக்­குப் பதி­லாக இருக்­கின்ற அர­ச­மைப்பு திருத்­தப்­ப­டும் என்­றும், நிறை­வேற்று அதி­கார நடை­முறை நீக்­கப்­ப­ட­மாட்­டாது என்­றும் சுதந்­தி­ரக் கட்சி அறி­வித்­துள்­ளது.

இந்த மாற்­றத்­துக்­குக் கார­ணம்­தான் என்ன?

2015 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­குப் பின்­னர் ஐக்­கிய தேசிய கட்­சி­யும் சுதந்­தி­ரக் கட்­சி­யும் இணைந்து ஆட்சி அமைத்­தா­லும்­கூட, அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் இவ்­வாறு இணை­வ­தற்­கான திட்­டம் இரு கட்­சி­க­ளி­ட­மும் இல்லை.தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கே அந்­தக் கட்­சி­கள் முடி­வெ­டுத் துள்­ளன.

அவ்­வாறு தனித்து ஆட்சி அமைப்­ப­தாக இருந்­தால் இப்­போதே அந்­தக் கட்சி பல­மாக இருக்க வேண்­டும்.இப்­போது ஐக்­கிய தேசிய கட்­சி­யு­டன் ஒப்­பி­டு­கை­யில், சுதந்­தி­ரக் கட்சி பல­வீ­ன­மா­கவே உள்­ளது.அதற்­குக் கார­ணம் சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் ஏற்­பட்­டுள்ள உள்­ள­கப் பிள­வா­கும்.

அந்­தப் பிள­வால் உரு­வான மகிந்த அணி, சுதந்­தி­ரக் கட்­சி­யின் வெற்­றிக்கு இடை­யூ­றாக இருப்­ப­தா­லும், மறு­பு­றம்,ஐக்­கிய தேசிய கட்சி பல­மாக இருப்­ப­தா­லும், அந்த இரண்டு அணி­க­ளை­யும் வீழ்த்­தக்­கூ­டிய பலம் சுதந்­தி­ரக் கட்­சி­யி­டம் இருந்­தால் மாத்­தி­ரம்­தான் சுதந்­தி­ரக் கட்­சி­யால் அடுத்த தேர்­த­லில் தனித்து ஆட்சி அமைப்­பது சாத்­தி­ய­மா­கும்.

இந்­தச் சவால்­க­ளுக்கு மத்­தி­யில் சுதந்­திர கட்­சி­யின் கைக­ளில் ஒரே­யொரு அர­சி­யல் அதி­கா­ரம் உள்­ளது என்­றால், அது நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அரச தலை­வர் முறை­மை­தான்.அந்த அதி­கா­ரம் நீக்­கப்­பட்ட நிலை­யில், சுதந்­திர கட்சி தேர்­தல் ஒன்றை எதிர்­கொள்­ளு­மாக இருந்­தால், அது சுதந்­தி­ரக் கட்­சிக்­குச் சாத­க­மாக அமை­வது சாத்­தி­ய­மில்லை.ஒரு­வேளை அந்­தக் கட்சி மூன்­றாம் இடத்­துக்­கும் தள்­ளப்­ப­ட­லாம்.

ஆக­வே­தான், 2020ஆம் ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் சுதந்­திர கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்­டு­மாக இருந்­தால், -மகிந்த அணியை வீழ்த்த வேண்­டு­மாக இருந்­தால் நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அரச தலை­வர் முறைமை சுதந்­திர கட்­சி­யி­டம் இருந்தே ஆக வேண்­டும்.அத­னால்­தான் மக்­க­ளுக்­குக் கொடுத்த வாக்­கு­று­தியை மீறி நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அரச தலை­வர் முறை­மையை நீங்­கு­வ­ தில்லை என்ற முடி­வுக்கு வந்­துள்­ளது சுதந்­திரக் கட்சி.

அதி­கா­ரப் பகிர்­வுக்கு காற்­கட்டு

மேலே குறிப்­பி­டப்­பட்­டுள்ள நோக்­கத்­துக்கு அப்­பால் இன்­னு­மொரு நோக்­கத்­துக்­கா­க­வும் நிறை­வேற்று அதி­கார முறை­மை­யைத் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்கு சுதந்­தி­ரக் கட்சி திட்­ட­மி­டு­கி­றது.அது­தான் அதி­கா­ரப் பகிர்­வைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கம்.

தேசி­யப் பிரச்­சி­னைக்­கான தீர்­வாக அதி­கா­ரப் பகிர்வு வழங்­கப்­ப­டும் என்று இந்த அரசு வாய் கிழி­யப் பேசு­கின்­ற­போ­தி­லும்-­, அந்த வாக்­கு­று­தியை வழங்கி தமி­ழர்­க­ளின் வாக்­கு­களை அப­க­ரித்­துக்­கொண்ட போதி­லும், அதி­கா­ரப் பகிர்வு விட­யத்­தில் அரசு நேர்­மை­யாக இல்லை என்­பது பல சந்­தர்ப்­பங்­க­ளில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தமி­ழர் தரப்­பால் கோரப்­பட்டு வரும், மத்­திய அர­சால் மீளப் பெற முடி­யாத கூட்­டாட்சி முறை­யின் அடிப்­ப­டை­யி­லான அதி­கா­ரப் பகிர்வை நிராகரித்து ஒற்றை ஆட்சி அடிப்­ப­டை­யி­லான தீர்­வு­தான் வழங்­கப்­ப­டும் என்று கூறு­கின்ற அரசு, அந்­தத் தீர்­வைக்­கூட உருப்­ப­டி­யாக வழங்­காது எனத் தெரிய வரு­கி­றது.

அவ்­வாறு வழங்­கப்­ப­டும் அரை­கு­றைத் தீர்­வைக்­கூட சரி­யா­ன­மு­றை­யில் பயன்­ப­டுத்த அனு­ம­தி­யாது, அதற்­குக் கட்­டுப்­பாடு விதிப்­ப­தற்கு அரசு இப்­போதே திட்­டங்­கள் வகுக்­கத் தொடங்­கி­யுள்­ளது.அதி­கா­ரப் பகிர்­வைத் தயா­ரிக்­கும் முன் அதற்­கான காற்­கட்­டைத் தயா­ரிப்­ப­தில்­தான் அரசு கவ­னம் செலுத்­தி­யுள்­ளது என்று அறிய முடி­கி­றது.

அர­சின் வாயா­லேயே 
பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட 
கப­டத்­திட்­டம்

அந்த அதி­கா­ரப் பகிர்­வைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அரச தலை­வர் முறை­மை­யைத் தக்­க­வைப்­ப­தற்கு சுதந்­திர கட்சி முடி­வெ­டுத் துள்­ளது என்று அந்­தக் கட்­சி­யின் செய­லா­ளர் துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்­துள்­ளார்.இவ்­வா­றா­ன­தொரு கப­டத் திட்­டம் அர­சி­டம் இருப்­பது அதன் வாயா­லேயே இப்­போது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆகவே,மேற்­படி இந்த நோக்­கத்­துக்­கா­கத்­தான் சுதந்­தி­ரக் கட்சி நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க அர­ச­த­லை­வர் முறை­மையை தக்­க­வைப்­ப­தற்கு முயற்சி செய்­கி­றது என்று எம்­மால் உணர முடி­கி­றது.

அப்­ப­டி­யென்­றால் அவ்­வா­றான உப்­புச்­சப்­பற்ற அதி­கா­ரப் பகிர்­வால் தமி­ழர்­கள் அடை­யப் போகும் நன்­மை­தான் என்ன?அவ்­வா­றான தீர்­வைப் பெறு­வ­தற்­கா­கத்­தான் தமி­ழர்­கள் இத்­தனை காலம் போரா­டி­னார்­களா?

எந்த அர­சாக இருந்­தா­லும் தங்­க­ளின் அர­சி­யல் இலா­பத்­துக்­காக சிறு­பான்மை இன மக்­களை கறி­வேப்­பி­லை­யா­கப் பயன்­ப­டுத்­தி­விட்டு, தேவை முடிந்­த­தும் தூக்கி வீசி­வி­டும் என்­பது இதன் மூலம் மேலும் நிரூ­பிக்­கப்­ப­டு­கின்­றது.தமி­ழர்­கள் தீர்­வைத் தேடி இன்­னும் நீண்ட தூரம் பய­ணிக்க வேண்டி வரும் என்ற உண்­மை­யைத்­தான் இவை அனைத்­தும் எமக்கு உணர்த்­து­கின்­றன.

http://newuthayan.com/story/31517.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.