Jump to content

இடைக்­கால அறிக்கை குறித்து வவு­னி­யா­வில் ஆய்­வுக் கூட்­டம்


Recommended Posts

இடைக்­கால அறிக்கை குறித்து வவு­னி­யா­வில் ஆய்­வுக் கூட்­டம்

 

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் தமிழ் மக்­க­ளுக்­குச் சாத­க­மான எத்­த­கைய விட­யங்­களை மேலும் சேர்ப்­பது என்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக அடுத்த மாதம் 8ஆம் திகதி வவு­னி­யா­வில் பொதுக் கூட்­டத்தை நடத்த ரெலோ­வின் தலை­மைக் குழு நேற்­றுத் தீர்­மா­னித்­துள் ளது.

வவு­னி­யா­வில் ரெலோ­வின் தலை­மைக் குழு நேற்­றுக் கூடி­யது. வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை தொடர்­பில் இதன்­போது ஆரா­யப்­பட்­டது.

இடைக்­கால அறிக்கை மற்­றும் உப­கு­ழுக்­க­ளின் அறிக்கை என்­ப­வற்­றில் உள்ள சாதக பாதக விட­யங்­களை நிபு­ணத்­து­வம் வாய்ந்­த­வர்­கள் ஊடாக ஆரா­யத் தீர்­மா­னிக்­கப்­பட் டுள்­ளது. வவு­னி­யா­வில் எதிர்­வ­ரும் 8ஆம் திகதி இ­தற்­கான பொதுக்­கு­ழுக் கூட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

அந்­தக் கூட்­டத்­தில், புதிய அர­ச­மைப்­பில் தமி­ழர் நலன்­சார்ந்து மேல­தி­க­மா­கச் சேர்க்­கப்­பட வேண்­டிய விட­யங்­களை அடை­யா­ளம் கண்டு அதனை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் ஊடாக நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிப்­பது என்று நேற்­றைய கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/31408.html

Link to comment
Share on other sites

ஒக்டோபர் 8 இல் டெலோ கூடுகிறது
 

image_c9574013af.jpgடெலோவின் தலைமைக்குழு, எதிர்வரும் 8ஆம் திகதியன்று,  வவுனியாவில் பொதுக் கூட்டத்தை நடத்த,  தீர்மானித்துள்ளது.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில்,  தமிழ் மக்களுக்குச் சாதகமான எத்தகைய விடயங்களை மேலும் சேர்ப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே  அடுத்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.

வவுனியாவில் ரெலோவின் தலைமைக் குழு,  அவசரமாக, சனிக்கிழ மை கூடியது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

இடைக்கால அறிக்கை, மற்றும் உப-குழுக்களின் அறிக்கை என்பவற்றில் உள்ள சாதக மற்றும் பாதக விடயங்களை நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஊடாக ஆராயத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில், புதிய அரசமைப்பில் தமிழர் நலன்சார்ந்து மேலதிகமாகச் சேர்க்கப்பட வேண்டிய விடயங்களை அடையாளம் கண்டு அதனை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒக்டோபர்-8-இல்-டெலோ-கூடுகிறது/175-204422

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.