Jump to content

நிம்மதியை தந்த நீதிமன்ற உத்தரவுகள்! சசி குடும்பம் மட்டும் கதிகலக்கம்


Recommended Posts

நிம்மதியை தந்த நீதிமன்ற உத்தரவுகள்!
சசி குடும்பம் மட்டும் கதிகலக்கம்
 
 
 

சென்னை உயர் நீதிமன்றமும், டில்லி சி.பி.ஐ., நீதிமன்றமும் வழங்கிய உத்தரவுகள், தமிழக அரசியல் கட்சிகளிடமும், பொது மக்களிடமும், நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.அக்., 4 வரை, ஆளும் கட்சியும், அடுத்த மாதம், 25ம் தேதி வரை, தி.மு.க.,வும் அமைதி காக்கும் என தெரிகிறது. அதேநேரத்தில், சசிகலா குடும்பத்தினருக்கு மட்டும், இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

 

நிம்மதியை,தந்த,நீதிமன்ற,உத்தரவுகள்!,சசி குடும்பம்,மட்டும் கதிகலக்கம்

அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, தமிழக அரசியல்களத்தை, நாடே உற்று நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கவிழ்க்க முயன்றதினகரன் ஆதரவாளர்கள்,18 பேரின் எம்.எல்.ஏ., பதவியை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், சபாநாயகர் தனபால் பறித்தார். அதை எதிர்த்து, அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.

அதேபோல், சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, தி.மு.க., சார்பில்வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த

வழக்குகளின் தீர்ப்பை பொறுத்து, தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்பதால், அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். பதவி பறிப்பைஎதிர்த்து, 18 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, விசாரணையை, அக்., 4க்குதள்ளிவைத்தார்.

அதேபோல், தி.மு.க., வழக்கை விசாரித்த நீதிபதி, மறுஉத்தரவு வரும் வரை, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். பின், இந்த வழக்கையும், அடுத்த மாதம், 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.இதனால், இந்த விவகாரத்தில், அக்., 4 வரையில், எந்த திருப்பமும் ஏற்படாது என்பதால், ஆளும் கட்சிநிம்மதி அடைந்துள்ளது.

அதுவரையில், ஆளும் கட்சியால், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியாது என்பதால், தி.மு.க.,வும் நிம்மதி அடைந்துள்ளது.ஆனால், பதவி பறிக்கப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்கள் குழுவும், அதை இந்த கதிக்கு ஆளாக்கிய சசிகலா குடும்பமும், பெரும் கவலை அடைந்துள்ளன.பதவி பறிப்பு நடவடிக்கைக்கு, உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டதால், தினகரன்ஆதரவு கூடாரமே கலகலத்துவிட்டது.

அடுத்த மாதம் மீண்டும் துவங்கும் விசாரணை, உடனடியாக முடிவுக்கு வரும் எனக் கூற முடியாத நிலை உள்ளது.தீர்ப்பு வரும் வரை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை, தினகரன் தரப்பு மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இது, முதல்வர் தரப்புக்கு, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில்,

 

தமிழக அரசியல்வட்டாரம் ஆவலுடன் எதிர்பார்த்த, '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில், அக்., 25ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆகியோர் மீதானஇந்த வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலை புரட்டி போடும் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம்உள்ளது. அதிலும், அடுத்த மாதம், 25ம் வரை அவகாசம் இருப்பதால், தி.மு.க., வட்டாரம், தற்போது நிம்மதியில் உள்ளது.அடுத்த வாரம், ஆயுத பூஜை விடுமுறை ஆரம்பமாகிறது. அப்போது, அரசியல் பதற்றம் காணப்பட்டால், விழா கொண்டாட்டம் பாதிக்கும்.அதற்கு வாய்ப்பு இல்லாமல், பூஜை விடுமுறைக்கு பின், இந்த வழக்குகளின் தீர்ப்பு வெளியாவது, பொது மக்களுக்கும்நிம்மதியை தந்துள்ளது.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1861471

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.