Jump to content

இலங்கை: கருக்கலைப்பு சட்டம் பெண்களுக்கு வரமா? சாபமா?


Recommended Posts

இலங்கை: கருக்கலைப்பு சட்டம் பெண்களுக்கு வரமா? சாபமா?

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

"ஒன்பது மாதங்கள் கஷ்டப்பட்டு குழந்தையை பிரசவித்தேன். அது கருவில் இருக்கும்போதே உயிர் பிழைக்க வைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். பிரசவித்தபின் குழந்தைக்கு பொருத்தியிருந்த கருவியை அகற்றப் போவதாகவும் கூறினார்கள். குழந்தையை என் கையில் ஏந்தக்கூட அவர்கள் தரவில்லை. தாய்பாலும் ஒரு குழாய் வழியாகத்தான் ஊட்டப்பட்டது. கடைசியில் அக்குழந்தை இறந்து விட்டது" என்று மனவேதனையை தெரிவிக்கிறார் குழந்தையைப் பிரசவித்த தாயொருவர்.

வயிற்றில் கருவாக இருந்தவேளை 3ம் மாதத்திலேயே அது இறந்துவிடும் என்பதை உறுதி செய்திருந்தாலும் கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டு வர அனுமதி கிடையாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத பெண் ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு வாரம் கூட உயிர் வாழப் போவதில்லை என்று கூறப்படும் குழந்தையை வைத்துக் கொண்டு படும் கஷ்டங்கள் அந்த தாய்க்கு மட்டுமேதான் புரியும், வேறு யாருக்கும் புரியப்போவதில்லை என்பதை அவர் வழங்கிய தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

வைத்திய விஞ்ஞானத்தின்படி கருவில் தீவிரக் குறைபாடு (serious foetal impairments) இருந்தால் 15 முதல் 20 வாரங்களில் இனம் காண முடியும். சிறப்பு மருத்துவர்களின் கூற்றுப்படி, அநேகமான குழந்தைகள் உயிருடன் பிறப்பது இல்லை. அதனை அறிந்தும் கர்ப்ப காலத்தைத் தொடர வேண்டிய நிலை அந்தப் பெண்களுக்கு ஏற்படுவதாக மருத்துவத் துறையினரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்தியாவில் பாலியல் வன்முறை காரணமாக கருவுற்ற 10 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவத்தை சுட்டிக் காட்டுகின்ற இலங்கையிலுள்ள மருத்துவ துறையினர் இவ்வாறு வயது குறைந்த பெண் பிள்ளைகள் கருவுற்றல் இலங்கையிலும் பதிவாகியுள்ளதாகக் கூறுகின்றனர்.

"அவ்வாறு கருவில் தீவிர குறைபாடுடைய குழந்தையை சுமக்கிற தாய்க்கு குழந்தை பிரசவமாகி உயிர் வாழும் காலம் வரை சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும்," என்று கூறுகிறார் சுகாதார அமைச்சகத்தின் குடும்ப சுகாதார பணியக சமூக மருத்துவ நிபுணரான டாக்டர் கபில ஜயரட்ன.

"பிறவிக் குறைபாடுடைய பிள்ளைகளின் பெற்றோர் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். அது போன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான இள வயது பெண் பிள்ளைகளும் உள ரீதியாக மன ரீதியாக அழுத்தங்கள் தொடர்பாக புதிதாகக் கூற எதுவும் இல்லை." என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதப்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் தான் கருக்கலைப்புக்கு அனுமதி கிடைக்கின்றது.

தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றினால் பாலியல் துஷ்பிரயோகம், இள வயது கர்ப்பம் (பாலியல் துஷ்பிரயோகம்), கருவில் தீவிர குறைபாடு போன்ற காரணங்களின் நிமித்தம் கருக்கலைப்புக்கு அனுமதியளிப்பது தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு ஏற்கனவே கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களிடமிருந்து அதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகள் காரணமாக அந்தப் பரிந்துரைகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன.

"கருக்கலைப்பு தொடர்பாக சமூகத்தில் மத ரீதியாக பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் குறித்த தரப்பு பெண்கள் முகம் கொடுக்கின்ற துன்பகரமான தலை விதியை கருதி அவர்களுடைய கர்ப்பததை முடிவுக்கு கொண்டு வர அவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். " என்கின்றார் வைத்திய நிபுணர் டாக்டர் கபில ஜயரட்ன.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

"இவ்வாறான தலைவிதிக்கு முகம் கொடுக்கும் பெண்களை மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டும்," என்ற கருத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

"கருக்கலைப்பு தொடர்பான சட்ட விதிகளில் குறித்த காரணங்களுக்காக தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும் அதனை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க முடியும் " என்றும் டாக்டர் கபில ஜயரட்ன குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் வருடாந்தம் சராசரி 6,000 பிறப்பு குறைபாடுடைய பிரசவங்கள் இடம் பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார வாரியத் தகவல்களின்படி அறியமுடிகிறது.

இவற்றில் 68 சதவீதமான குழந்தைகள் ஒரு வாரத்திற்குள் இறக்கின்றன. 500 - 600 வரையிலான குழந்தைகள் ஒரு வருடத்திற்குள் இறக்கின்றன. 1,700 குழந்தைகள் தாயின் கருவிலே உயிரிழக்கின்றன என்றும் அந்த தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

 

http://www.bbc.com/tamil/global-41358825

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.