Jump to content

'அப்படிப் போய் இப்படிப் போய் எப்படியோ போனானாம்!' - 'பிச்சுவாகத்தி' விமர்சனம்


Recommended Posts

'அப்படிப் போய் இப்படிப் போய் எப்படியோ போனானாம்!' - 'பிச்சுவாகத்தி' விமர்சனம்

 

சிறுதவறுகூட செய்யத்தெரியாமல் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் சிலர், திரும்பத் திரும்ப தவறு ஒன்றையே செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவதையும், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதையும் சொல்கிறது, ‘பிச்சுவாகத்தி’.

கிரிக்கெட், சரக்கு என ஜாலியாக சுற்றித்திரியும் நண்பர்கள் இனிகோபிரபாகரன், ரமேஷ்திலக், யோகிபாபு. நாயகி ஶ்ரீபிரியங்கா, இனிகோவிடம் காதலைச் சொன்ன சந்தோஷத்தில் நண்பர்களான மூவரும் குடிக்கிறார்கள். எக்ஸ்ட்ரா சரக்குக்கு ஆசைப்பட்டு, ஆடு திருடி மாட்டிக்கொள்கிறார்கள். அருகே இருக்கும் கும்பகோணம் காவல் நிலையத்தில் முப்பது நாட்கள் கையெழுத்து போட வேண்டிய சூழல். இது ஒரு கதை. இரண்டாவது ஹீரோ செங்குட்டுவன் – அனிஷாவின் காதலும், அவர்கள் காதலுக்கு உதவும் பாலசரவணன், அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கை… இது தனிக்கதை.

 

பிச்சுவாகத்தி

ஆடு திருடி மாட்டிக்கொண்ட நண்பர்கள் இனிகோ, ரமேஷ்திலக், யோகிபாபு மூவரிடம் ’30,000 ரூபாய் பணம் கொடுக்கவேண்டும்’ என மிரட்டுகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ். பணம் திரட்ட முடியாத சூழலில், செங்குட்டுவனின் காதலி அனிஷாவின் செயினை அறுக்கப் பிளான் போட்டு அதிலும் மாட்டிக்கொள்கிறார்கள். பிறகு, போலீஸின் கட்டாயத்தால், தவறுமேல் தவறு செய்யவேண்டிய சூழல் வருகிறது. வேறு வழியே இல்லாமல், வில்லன் மனோகரிடம் அடைக்கல் ஆகவேண்டிய கட்டாயம் வருகிறது. தங்களுடைய இந்த நிலைமைக்குக் காரணமான அனிஷாவைப் பழிவாங்கவேண்டும், ஊருக்குத் திரும்பி காதலியைக் கரம்பிடிக்கவேண்டும் என்று திரியும் இனிகோ மற்றும் அவரது நண்பர்களின் நிலை என்ன ஆனது?  ஊருக்குத் திரும்பினார்களா… இல்லையா? என்பதைச் சொல்கிறது, திரைக்கதை.

சிங்கிள் ஹீரோவாகப் பயணிக்க விரும்பும் இனிகோவுக்கு இந்தப்படம் பாஸ்மார்க். இரண்டாவது நாயகன் செங்குட்டுவனிடம் இருக்கும் எதார்த்த நடிப்பு இனிகோவிடம் இல்லையென்றாலும், காதலிக்காக உருகுவது, டான்ஸ் ஆடுவது, தவறு செய்யமாட்டேன் எனப் போலீஸிடம் லத்தி சார்ஜ் வாங்குவது, வில்லனுடைய திட்டங்களுக்கு உதவுவது… எனப் பல ஏரியாக்களில் ஸ்கோர் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.  

நாயகி ஶ்ரீபிரியங்கா அமைதியாக, அழகாகக் கடந்துபோகிறார். செயின் பறிக்கும் இனிகோவைத் துணிச்சலாப் பிடிப்பது, காதலன் செங்குட்டுவனிடம் முறைப்பது, பிறகு காதலில் உருகுவது…. என வெரைட்டியாக நடித்திருக்கிறார் மற்றொரு நாயகி அனிஷா. யோகிபாபு – ரமேஷ்திலக் கூட்டணியின் காமெடி ஓகே ரகம். ‘மன்னார் & கம்பெனி’ பெயரில் எம்.எல்.எம் நடத்தும் நபராக காளிவெங்கட், அங்கு வேலைக்குச் சேரும் செங்குட்டுவன், பாலசரவணன், அனிஷா, சீதா ஆகியோரின் நட்பு, காதல், காமெடி படத்திற்குக் கொஞ்சம் கலகலப்பு சேர்க்கிறது. சில காட்சிகள் வந்தாலும் மொட்டை ராஜேந்திரனை ரசிக்கலாம்.  மந்திரியாக வரும் அவரது காட்சிகளை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், திரைக்கதையில் அதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை இயக்குநர் ஐயப்பன்.

பிச்சுவாகத்தி

யுகபாரதி வரிகளில், ரகுநந்தன் இசையமைத்திருக்கும் ‘யே சிறுக்கி…’, ‘அடியே அடியே…’ என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். ஆனால், சம்பந்தம் இல்லாத இடங்களில் பாடல்கள் ஒலிப்பதால், ரசிக்கமுடியவில்லை. தவிர, பின்னணி இசையில் சீரியல்தனம். கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்துகொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.  எடிட்டரின் கத்திரி இன்னும் பல இடங்களைப் பதம் பார்த்திருக்கலாம். கோர்வை இல்லாமல் கடக்கும் காட்சிகள், திடீரென வரும் தேவையற்ற பாடல், கதைக்குக் கொஞ்சமும் கை கொடுக்காத காட்சிகள்… என எடிட்டர் ராஜாசேதுபது வெட்டியிருக்கவேண்டியது ஏராளம்.

இருவேரு கதைகள், அவை ஒன்றிணையும் புள்ளியில் க்ளைமாக்ஸ். இந்த வகைப் படங்களுக்குத் திரைக்கதையில் மேஜிக் காட்டிய படங்கள் ஏராளம். ஆனால், எந்த லாஜிக்கும், சுவாரஸ்யமும் இல்லாமல் படம் முழுக்க வரும் கேரக்டர்கள் மாறி மாறி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு காட்சி யோசிக்கும்போது அதன் அடிப்படை விஷயங்கள் சரியாக இருக்கிறதா என்று யோசிப்பதுதான் ஒரு நல்ல இயக்குநருக்கான அடையாளம். படத்தில் வரும் ஒரு காட்சியில் 20 கிலோ எடையைத் தாங்காத லக்கேஜ் பேக் ஒன்றில், 60 கிலோ ஆள் ஒளிந்துகொண்டு வருகிறார். ஒளிந்துகொண்டு வருவது பிரச்னை எனில்… அந்த லக்கேஜ் பேக் கூரியரில் வருகிறது எனக் காட்டுவது அதைவிடப் பெரிய பிரச்னை.

கும்பகோணத்தையே தன் கையில் வைத்திருப்பதாகக் காட்டப்படும் வில்லன் மனோகர் கேரக்டருக்கு லோக்கல் ரவுடி இமேஜைக்கூட சரியாகக் கொடுக்கவில்லை இயக்குநர். போலீஸாக வரும் சேரன் ராஜ் பெட்டிக்கடை நடத்துவதுபோல போலீஸ் ஸ்டேஷன் நடத்துகிறார். அவருடைய ஸ்டேஷனிலேயே வில்லன் பொழுதொரு கொலை செய்கிறார். எதற்கும் ஒரு எதிர்வினையும் நடக்கமாட்டேன் என்கிறது. இப்படிப் படத்தில் பல பிரச்னைகள், லாஜிக் மீறல்கள்.   

பிச்சுவாகத்தி

 

இனிகோ பிரபாகரன், ரமேஷ்திலக், யோகிபாபு, காளிவெங்கட், மொட்டை ராஜேந்திரன், மனோகர், ‘கோலிசோடா’ சீதா… எனப் பல முகங்கள் இருந்தாலும், பலவீனமான கதையும், மிகப் பலவீனமான திரைக்கதையும் படத்தை மொத்தமாகப் பழுதாக்கியிருக்கிறது. ‘விதியை மீறுறதுதாண்டா என் பாலிஸி’ என படத்தின் வில்லன் தொடக்கத்தில் பன்ச் பேசுவார். அதுக்காக இத்தனை விதிமீறல்கள் தாங்காது ப்ரோ. பெட்டர் லக் நெக்ஸ் டைம்!

http://cinema.vikatan.com/movie-review/103100-pichuva-kaththi-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.