Jump to content

ஒரு நிமிடக் கதை யாரோ


Recommended Posts

ஒரு நிமிடக் கதை யாரோ

 

 

அந்தப் பெண்... அழகான பெண்... உள்ளே வந்தமர்ந்தாள். ‘‘சொல்லும்மா. என்ன ப்ராப்ளம்?’’ டாக்டர் கேட்டார். ‘‘நான் எங்கே  போனாலும்... எங்கே வந்தாலும்... எங்கே நின்னாலும்... யாரோ பின்தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கு டாக்டர். யாரோ என் பின்னாடி  இருக்காங்க!’’ - அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள்.

‘‘இது ஒருவித இல்யூஷனோட ஆரம்பக் கட்டம். சரி பண்ணிடலாம். மருந்தெல்லாம் வேண்டாம்’’ என்றவர், சிறிது நேரம் கவுன்சலிங்  கொடுத்துவிட்டு, ‘‘அடுத்த வாரம் வாம்மா!’’ என்றார். அவள் வெளியில் சென்றாள். அடுத்த நோயாளியாக இன்னொருத்தி உள்ளே வந்தாள்.

2.jpg

‘‘டாக்டர்...’’ ‘‘சொல்லும்மா’’ ‘‘நான் எங்கே போனாலும், எங்கே வந்தாலும், எங்கே நின்னாலும்...’’ ‘‘என்னம்மா அதே மாதிரி பேசுறே...’’
அவள் அதை காதில் வாங்கவே இல்லை. ‘‘யாரோ எனக்கு முன்னாடி போற மாதிரி இருக்கு டாக்டர்... யாரோ முன்னாடி...’’ - டாக்டருக்குப்  பின்னே ஒரு உருவத்தை பயத்தோடு சுட்டிக் காட்டினாள் அவள்.

டோக்கன் தரும் பெண் செல்போனை எடுத்தாள். ‘‘சொன்னபடி பண்ணிட்டே இல்ல? பெண்டாட்டியைக் கூட கவனிக்காம எப்ப பார்த்தாலும்  கிளினிக்லயே கிடக்கற என் புருஷனை இப்படித்தான் குழப்பி விடணும். அடுத்த வாரம் வேற ரெண்டு பொண்ணுங்களை வேற ப்ளானோட  அனுப்பறேன். செத்தான் சேகரு!’’

kungumam.co.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூக்கு புடைப்பாய் இருந்தால் இப்படித்தான் கதை எழுத தோணும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.