Jump to content

தமிழிசை பின்னால் பிணம் கூடப்போகாது நரகல் நடையில் தரங்கெட்ட தமிழில் பேசிய ந(ா)ஞ்சில் சம்பத்


Recommended Posts

தமிழிசை பின்னால் பிணம் கூடப்போகாது

 

நரகல் நடையில் தரங்கெட்ட தமிழில் பேசிய ந(ா)ஞ்சில் சம்பத்

அனல் தெறிக்கும் பேச்சால் எதி­ரா­ளியைத் துவம்சம் செய்­ப­வர்தான் அ.தி.மு.க. துணைக் கொள்கை பரப்புச் செய­லாளர் நாஞ்சில் சம்பத். தன் வழக்­க­மான பாணியில் தமி­ழக பா.ஜ.க. தலைவர் தமி­ழி­சையை அர்ச்­சனை செய்ய, பா.ஜ.க. தொண்­டர்கள் வெகுண்­டெ­ழுந்து நாஞ்­சி­லாரைச் சில மணி நேரத்­திற்கு வியர்க்க வைத்­து­விட்­டார்கள். இந்த கல­வ­ரங்­க­ளுக்கு மத்­தியில், பல­ரது புரு­வத்­தையும் உயரச் செய்­தது நாஞ்­சிலார் பய­ணித்த ‘ஆடி’ கார்தான்!

டி.டி.வி. தின­கரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், தனது ஒவ்­வொரு பேட்­டி­யிலும் பா.ஜ.க. மீதும் எடப்­பாடி பழ­னிச்­சாமி, ஓ. பன்­னீர்­செல்வம் மீதும் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கிறார். அடுக்­கு­மொழி கடந்து வரும் இந்த விமர்­ச­னங்கள், பல நேரங்­களில் தனி நபர் தாக்­கு­த­லாக உரு­வெ­டுத்து விடு­வதும் உண்டு.

சமீ­பத்­திய பேட்டி ஒன்றில் தமி­ழிசை சவுந்­த­ர­ராஜன் பற்றி நாஞ்சில் சம்பத் குறிப்­பிட்டுப் பேசிய சில வார்த்­தைகள், பா.ஜ.க. வட்­டா­ரத்தில் கடும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இதை­ய­டுத்து பா.ஜ.க. சார்பில் சென்னை, பல்­லா­வரம், பம்மல், அம்­பத்தூர் எஸ்டேட், பட்­டி­னப்­பாக்கம் காவல் நிலை­யங்­களில் நாஞ்சில் சம்பத் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கக்­கோரி புகார் அளித்­தனர். இந்­நி­லையில் பட்­டினப்பாக்­கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டை தென் சென்னை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் தலை­மையில் பா.ஜ.க. வினர் முற்­று­கை­யிட்டுப் போராட்டம் நடத்­தினர். அச் சம­யத்தில் நாஞ்சில் சம்பத் வீட்டில் இல்லை. டி.டி.வி. தின­க­ரனின் அடை­யாறு இல்­லத்­திற்கு சென்­று­விட்டு பட்­டினப் பாக்­கத்­தி­லுள்ள சங்­கீதா உண­வ­கத்தில் உண­வ­ருந்திக் கொண்­டி­ருந்தார். அவர் அங்கே இருப்­பதை அறிந்து கொண்ட பா.ஜ.க. வினர் ஹோட்­ட­லுக்குச் சென்று முற்­று­கை­யிட்­டனர்.

தொண்டைக் குழிக்குள் சூடான இட்லி இறங் கும் போதே பா.ஜ.க. வினர் சூழ்ந்து கொண்­டதால் நாஞ்சில் சம்­பத்தால் இட்­லியை விழுங்­கவும் முடி­ய­வில்லை. ஹோட்­டலை விட்டு வெளியே வரவும் முடி­ய­வில்லை. கார­சா­ர­மாக பேசு­ப­வரின் இன்­னோவா காரைத் தேடினர். ஹோட்டல் வாசலில் அவர் வந்து இறங்­கி­யது ஆடி காரில். அதில்தான் வந்தார் என்று ஹோட்டல் காவ­லாளி போட்டுக் கொடுக்க, ஆடி கார் டயரில் இருந்த காற்றைப் பிடுங்­கி­விட்­டார்கள்.

இரண்டு மணி­நேர முற்­று­கைக்குப் பிறகு சில அ.தி.மு.க. வினர் வந்து நாஞ்சில் சம்­பத்தை மீட்ட பின்­னர்தான் போராட்டம் முடி­வுக்கு வந்­தது. ஹோட்­டலை விட்டு சம்பத் தனி­யாக வெளி­யே­றி­யி­ருந்தால் அடி உதை அள­வுக்கு நிலைமை மாறி­யி­ருக்கும். நல்ல வேளை­யாக சம்பத் பா.ஜ.க. வின­ரிடம் இருந்து தப்­பித்­து­விட்டார்.

பெண்­களை அவ­தூ­றாகப் பேசி­ய­தாக நாஞ்சில் சம்பத் மீது பா.ஜ.க. வும் கொலை முயற்சி செய்­த­தாக பா.ஜ.க. வின் மீது நாஞ்சில் சம்­பத்தும் பரஸ்­பரம் காவல்­து­றையில் புகார் அளித்­துள்­ளனர்.

தென் சென்னை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் டால்பின் ஸ்ரீ தரிடம் பேசி­ய­போது, அர­சி­யலில் எதி­ரெதிர்க் கருத்­துகள் இருக்­கலாம். விமர்­சிக்­கலாம். தப்பே கிடை­யாது. ஒரு பெண் தலை­வரை நாயை விடக் கீழா­னவர், பிணம் கூட அவர் பின்னால் போகாது என்­றெல்லாம் தரங்­கெட்ட தமிழில் பேசு­வதை யாராலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஒரு இன்­னோவா காருக்­காக கொள்­கை­களை மாற்றிக் கொண்­டவர். ஆயிரம் இரண்­டா­யிரம் பணத்­துக்­காக தன் தலை­வ­ரையே மாற்­றிக்­கொள்­பவர். அவ­ருக்கு எந்த மொழியில் சொன்னால் புரி­யுமோ, அதில் சொன்­னால்தான் புரியும். அத­னால்தான் முற்­று­கை­யிட்டோம். இதற்கு மேலும் அவர் தொடர்ந்து இவ்­வாறே பேசிக்­கொண்­டி­ருந்தால் எங்கள் போராட்டம் தீவி­ர­ம­டையும் என்றார் உஷ்­ண­மாக.

இவ்­வ­ளவு கல­வ­ரங்­க­ளுக்கு மத்­தியில் பல­ரது கவ­னத்தையும் ஈர்த்­தது நாஞ்சில் சம்பத் பய­ணித்த ஆடி ரக கார். ம.தி.மு.க. வில் இருந்து விலகி 2012 இல் அ.தி.மு.க.வில் அவர் இணைந்த பொழுது, இன்­னோவா கார் ஒன்றை அவ­ருக்கு ஜெய­ல­லிதா வழங்­கினார். அதன் பிறகு டொயாட்டா நிறு­வனம் தனக்கு ராயல்டி தர வேண்டும் என்னும் அள­விற்கு இன்­னோவா காரை பட்டி தொட்டி எங்கும் பிர­ப­லப்­ப­டுத்­தி­யவர் நாஞ்சில் சம்பத். ஜெயாவின் மறை­விற்குப் பின்னர் காரை கட்சி அலு­வ­ல­கத்தில் ஒப்­ப­டைத்து, மீண்டும் பெற்றார்.

இன்­னோவா சம்பத் என்று தனக்­கென்று அடை­மொ­ழியைக் கொண்­டவர். தற்­பொ­ழுது ஆடி ஏ 6 ரக காரில் பய­ணிப்­பது தான் பல­ரது புருவம் உயரக் காரணம். இக்­காரின் விலை 62.55 லட்­சமாம். இன்­னோ­வா­விற்கு டீசல் போடவே முடி­ய­வில்லை என்­ற­வ­ருக்கு அரைக் கோடியில் கார் வாங்கப் பணம் எப்­படி வந்­தது என்று பா.ஜ.க. வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

நாஞ்சிலாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் பேசுகையில்; அந்தக்கார் நாஞ்சில் சம்பத்தின் நண்பர் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமானது. அதில் பயணித்தாரே தவிர, கார் அவருடையதல்ல என்றும் அவர் யாரிடமும் அடியும் வாங்கவில்லை. ஆடிக் காரையும் வாங்கவில்லை என்றனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-23#page-8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.