Jump to content

வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்ைக முற்போக்கானது


Recommended Posts

வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்ைக முற்போக்கானது

 
16938891_10154287104276016_5988386001121

புதிய அரசியலமைப்பொன்றின் உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கையை முற்போக்கானதாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பார்க்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கியதேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அவ்வறிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது இணக்கத்தை வழங்குவது குறித்து பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கை குறித்து தினகரனுக்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பொன்றின் உருவாக்கத்துக்கான, வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கையானது,

சகலரதும் இணக்கப்பாட்டோடும் கடந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படுவதற்காகத் தயார் படுத்தப்பட்டது. அப்போதிருந்த சில அரசியல் சூழ்நிலைகளால் சமர்ப்பிக்கப்பட முடியாமல், சுமார் ஒன்பது மாதங்களின் பின்னர் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்போதைய அரசியில் சூழ்நிலைகளால் அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட முடியாமற் போனாலும் பிரதான அறிக்கையின் உள்ளடக்கத்தை மாற்ற வழிநடத்தல் குழுவினர் அனுமதிக்கவில்ல, மாறாக பிரதான அறிக்கை தொடர்பில் கட்சிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க இடமளிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியினதும் அவதானங்கள் பிரதான அறிக்கையுடன் இணைக்கப்பட்டுமுள்ளன.

முதலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் பல கட்சிகள் பின்னர் மாறுபாடான கருத்துக்களை முன்வைத்துமுள்ளன. அனேக கட்சிகள் தாம் முன்னர் இணங்கியவற்றில் இருந்த மாறுபட்டதாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது கொள்கை சார்ந்த விடயங்களில் சில கரிசனைகளை முன்வைத்தது.

இரண்டு பிரதான கட்சிகளும் பிரதான அறிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் கூட்டமைப்பும் தனது இணக்கத்தை வழங்குவது குறித்து பரிசீலிக்கும் என நாங்கள் எங்கள் அவதானத்தில் கூறியிருக்கின்றோம். ஐக்கியதேசியக் கட்சியானது பிரதான அறிக்கையை ஏற்றுக்கொள்வதால் வேறெந்த அவதானத்தையும் மேற்கொள்ள வில்லை. லங்கா சுதந்திரக் கட்சி, தான் ஆரம்பத்தில் இணங்கியவற்றில் இருந்து மாறுபட்டமை இந்த இடைக்கால அறிக்கை வெளிவருவதில் தாமதத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

புதிய அரசியலமப்பு உருவக்கத்தில் பிரதான அறிக்கையே கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமென்பது பேச்சு வார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. எனவே பிரதான அறிக்கை முன்னேற்றகரமானதாகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் பார்க்கப்படுகின்றது. ஆனால் பிரதான அறிக்கைக்கு இணக்கம் தெரிவித்த கட்சிகள் பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதைப்போன்ற கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அது நிச்சயமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கரிசனைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது, என்று கூறினார்

http://www.thinakaran.lk/2017/09/23/உள்நாடு/20110

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுக்கு இருப்பது.. பெளத்த மதத்திற்கு தலை வணங்குவது.. பொலிஸ் அதிகாரங்களை கைவிட்டு விடுவது.. காணி அதிகாரங்களை அரையப்பம்.. காலப்பம் என்றாக்குவது.. வடக்கு கிழக்கு இணைப்பை.. கத்தி முனையில் மீண்டும் தொங்கவிடுவது..

அதுவும் தீர்வில்ல.. ஆலோசனை மட்டத்தில் தான் கிடக்குது. 

இப்படி நிறைய முன்னேற்றங்கள் தெரியும்.. சும் என்றா சும்மா வெட்டி சட்டாம்பிக்கு. சட்டாம்பி சட்டாம்பி வேலையை மட்டும் தான் பார்க்கனும்..  அதைவிட்டிட்டு.. அரைகுறையள்.. அரசியலுக்கு வந்தால்.. எல்லாம் முற்போக்காத்தான் தெரியும். :rolleyes:tw_angry:

ஒன்றும்.. மாவாட்ட சபைகளுக்கு மேலால போகாது. இருக்கிற மாகாண சபையும் இல்லாமல் போகும். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டமேசை மாநாடு என்ற ஒன்று 1977 களில் உருவானது அதுபோலத்தான் இந்த வழிநடத்தல் குழு....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.