Jump to content

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?


Recommended Posts

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேரறிவாளன்
 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். பேரறிவாளனின் தந்தை ஞானசேகரனுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு அளிக்க தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டது. பரோல் விடுப்பு மட்டுமல்லாது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர். 

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி, அவரது தாயார் அற்புதம்மாள், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தைச் சந்தித்து மனு அளித்திருந்தார். இந்நிலையில் பேரறிவாளனின் பரோலை தமிழக அரசு மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளையுடன் பேரறிவாளனின் பரோல் முடிவடையும் நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/103089-perarivalan-parole-extended-on-one-more-month.html

Link to comment
Share on other sites

பேரறிவாளனின் பரோல் நீட்டிப்புகுறித்து அரசாணை வெளியிடப்படவில்லை..! அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்

 

'பேரறிவாளனின் பரோல் நீட்டிப்புகுறித்து தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை' என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

CV_Shanmugam_long_14354_13598.jpg


ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு அளிக்க, கடந்த 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோல் விடுப்பு மட்டுமல்லாது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைத்துவருகின்றனர். நாளையுடன் ஒரு மாத கால பரோல் முடிவடைகிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு மாத காலத்துக்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என்று சட்டஅமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. தற்போது, அந்தத் தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறுத்துள்ளார். 'பேரறிவாளனின் பரோல் நீட்டிப்புகுறித்து இதுவரை தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/103095-tn-government-did-not-release-go-any-for-extension-of-perarivalan-parole.html

Link to comment
Share on other sites

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு: அரசாணை வெளியீடு!

 

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

பேரறிவாளன்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, பேரறிவாளன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார். இதையடுத்து, 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த மாதம் 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனது தந்தை மற்றும் தாயாருடன் நேரத்தை கழித்து வரும் பேரறிவாளனை, ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.

இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக, அவரது பரோலை நீட்டிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார். இதனால், பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இன்று காலையே தகவல் வெளியானது.  தற்போது, இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

இந்த அரசாணை சிறைத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மேலும் ஒரு மாதத்துக்கு பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/103128-perarivalans-parole-extended-for-one-more-month---government-order-released.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?

என்ன திட்டத்தை தீட்டி வைத்திருக்கிறார்களோ யாருக்குத்தெரியும்! :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.