Jump to content

இந்திய அரசால் 150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில்


Recommended Posts

இந்திய அரசால் 150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில்

 

 

ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ‘மகாத்மா காந்தி புலமைப் பரிசில்’ இவ்வாண்டும் வழங்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு சற்று முன் நடைபெற்றது.

4_Scholarship.jpg

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட நூற்றைம்பது மாணவர்களுக்கு இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.

இதன் கீழ், க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கவிருக்கும் இந்த மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 2,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.60,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், மாகாண கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் கல்வித்துறையில் இந்தியா வழங்கிவரும் பங்களிப்பின் ஒரு அம்சமாக இந்தப் புலமைப் பரிசில் திட்டம் 2006ஆம் ஆண்டு இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாயிரம் ரூபாவாக இருந்த இந்தத் தொகை, கடந்த ஆண்டு முதல் 2,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

http://www.virakesari.lk/article/24804

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் பிள்ளை தானா வளரும் "என்று உவையளுக்குத்தான் சொல்லியிருக்கு போல....

இந்தியா,காந்தி.அனுமான்,இராமர்....கருத்து திணிப்பு
அட்டூழிய‌ படை அகிம்சை படையானது .....எமது காலத்தில்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் பிள்ளை தானா வளரும் "என்று உவையளுக்குத்தான் சொல்லியிருக்கு போல....

இந்தியா,காந்தி.அனுமான்,இராமர்....கருத்து திணிப்பு
அட்டூழிய‌ படை அகிம்சை படையானது .....எமது காலத்தில்தான் 

உலகத்துக்கே.... உண்ணா விரதம் என்றால்.... என்ன. என்று...
தண்ணீரும் குடிக்காமல்.... தான்நேசித்த, ஈழத்துக்காக சாவை தழுவிக் கொண்ட...
திலீபனின்... நினைவு  நாட்களில்.... 

இந்தியா...  காந்தி என்ற  பெயரில், செய்யும் அயோக்கியத்தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியா...  காந்தி என்ற  பெயரில், செய்யும் அயோக்கியத்தனம்.

தீலிபனின் தியாகத்தை மறைத்து காந்தியை முன்னிறுத்துவதில் இந்தியா வெற்றி பெறுகின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.