Jump to content

கிழவனான டொனால்ட் டிரம்பை அடக்குவேன்: வடகொரியா ஜனாதிபதி சவால்..!


Recommended Posts

கிழவனான டொனால்ட் டிரம்பை அடக்குவேன்: வடகொரியா ஜனாதிபதி சவால்..!

 

கிழவனான டொனால்ட் டிரம்பை அடக்குவேன்: வடகொரியா ஜனாதிபதி சவால்..!

வட கொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்த டொனால்ட் டிரம்பை கடுமையான தாக்குதல்கள் மூலம் அடக்குவேன் என வட கொரியா ஜனாதிபதி கிம் யோங் உன் சவால் விடுத்துள்ளார்.

வட கொரியா 6வது முறையாக அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை நேற்று அறிவித்தது.

இத் தடை மூலம் வட கொரியா அணு ஆயுத பரிசோதனை செய்வது தாமதமாக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு வட கொரியா பதிலடி கொடுத்துள்ளது. வட கொரியா ஜனாதிபதி அறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்க ஊடகத்திற்கு அனுப்பியுள்ளார்.

அவ் அறிக்கையில், ‘அறிவில்லாத கிழவனான டொனால்ட் டிரம்பை கடுமையான தாக்குதல்கள் மூலம் அடக்கிக் காட்டுவேன்.

டொனால்ட் டிரம்ப் பின் விளைவுகளை சிந்திக்காமல் வட கொரியாவை சீண்டி வருகின்றார். டிரம்பின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அவர் கற்பனையிலும் எண்ண முடியாத முடிவுகளை சந்திப்பார்.

இது தொடர்பாக நாங்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றோம் ’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/world-affairs/North-korean-president-warns-donald-trump

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேருக்கும் பிரச்சனை என்றால்.. இரண்டு பேரும் அணு ஆயுதங்களையும் பொறுக்கிக்கிட்டு.. பூமியை விட்டு வெளில போய் நின்று மல்லுக்கட்டுங்க.. இல்ல.. 

ஆளையாள் மோதுங்க.

ஆனால்.. அப்பாவி மக்களையும்.. பூமியையும் நாசமாக்க.. இந்த இருவருக்கும் மனித இனம் அனுமதி அளிக்காது.. என்பதை இருவரும் நினைவில் நிலைநிறுத்திக் கொள்வது நல்லம்.

மனித இனம் மீது இன்னொரு அணு ஆயுதப் பிரயோகத்தை அமெரிக்காவும்.. எவரும் எனி செய்ய மனித இனம் அனுமதிக்கக் கூடாது. 

எல்லா மக்களும் திரண்டு.. அணு ஆயுதங்களையும்.. பேரழிவு ஆயுதங்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க போராடும் காலம் நெருங்கிவிட்டுள்ளது. 

அணு ஆயுத சக்திகள்.. இந்தப் பூமியில்.. இருக்க அனுமதிக்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

பசிபிக் மேலாக பாரிய ஹைட்ரஜன் குண்டு: கிம் வெளிப்படையாக எச்சரிக்கை

 

ஐ.நா.வில் வடகொரியாவை மிரட்டும் பாணியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதையடுத்து, அதற்குப் பரிசாக பசிபிக் பிராந்தியத்தின் மேலாக ஹைட்ரஜன் குண்டு ஒன்றைப் பரிசோதிக்கப் போவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

7_Un.jpg

இதுபற்றிக் கூறியிருக்கும் வடகொரிய வெளிநாட்டு அமைச்சர் ரி யோங் ஹோ, தாம் நடத்தவிருக்கும் ஹைட்ரஜன் தாக்குதல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரமாண்டமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கத்துக்கு மாறாக தாக்குதல் குறித்து கிம் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது சந்தேகத்தைக் கிளப்புவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

முன்னதாக, கிம் குறித்து ட்ரம்ப் பதிவு செய்திருந்த ட்வீட்டில், ‘வடகொரியாவின் கிம் ஜோங் உன் ஒரு பைத்தியக்காரர். வறுமையில் வாடும் தன் மக்களைக் கொன்று குவிக்கும் அவர், இதுவரை இல்லாத அளவுக்கு சோதினைக்கு உள்ளாக்கப்படுவார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றித் தெரிவித்த கிம், ‘ட்ரம்ப் ஒரு மனநிலை குழம்பிய கிழவர்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

http://www.virakesari.lk/article/24810

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.