Jump to content

பயமா இருக்கு திரை விமர்சனம்


Recommended Posts

பயமா இருக்கு திரை விமர்சனம்
card-bg-img
 

தமிழ் சினிமாவை பேய் விட்டாலும், பேய் தமிழ் சினிமாவை விடாது போல. பேய் சீசன் முடிந்துவிட்டது என்று இருந்தால் மீண்டும் ஒரு ஹாரர், காமெடி டெம்ப்ளேட்டில் ஜவஹர் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் பயமா இருக்கு.

கதைக்களம்

படத்தின் நாயகன் சந்தோஷ் ப்ரதீப், தன் மனைவியின் அம்மாவை அழைத்து வர இலங்கை செல்கின்றார், அங்கு இரானுவ வீரர்கள் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இதில் மொட்டை ராஜேந்திரன், பரணி, ஜீவா, ஜெகனும் மாட்டிக்கொள்ள, இரானுவ வீரர்களிடம் சண்டைபோட்டு சந்தோஷ் அந்த 4 பேரையும் காப்பாற்றுகின்றார்.

அதன் பின் இவர்கள் 5 பேரும் நல்ல நண்பர்களாக சந்தோஷின் வீட்டிற்கு 4 பேரும் வர, அங்கு பல அமானுஷிய விஷயங்களை பார்க்கின்றனர், ஒருக்கட்டத்தில் நம்மை கூட்டி வந்த சந்தோஷே பேய் தானா என்று சந்தேகம் எழும் அளவிற்கு சில விஷயங்கள் நடக்க, இதை தொடர்ந்து யார் பேய்? இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

நாம் முன்பே கூறியது போல் பேய் சீசனே முடிந்தும் ஒரு சில கால தாமதத்தால் இப்படம் இன்று வெளிவந்துள்ளது, ஒருவேளை படம் எடுத்த போதே வந்திருந்தால் கொஞ்சம் சுவாரசியம் கூடியிருக்கும்.

இதே கதைக்களத்தில் தமிழ் சினிமா இதுவ்ரை 100 படங்களுக்கு மேல் பார்த்திருக்கும், ஆனால், அதையும் தாண்டி இவர்கள் கதைக்காக தேர்ந்தெடுத்த லொக்கேஷன் மிகவும் கவர்கின்றது.

உண்மையாகவே இங்கு பேய் இருக்கிறது என்று சொன்னார்கள் கூட நம்பலாம் போல, அந்த அளவிற்கு பயமுறுத்துகின்றது, அதற்கு உறுதுணையாக சத்யாவின் இசையும், மகேந்திரனின் ஒளிப்பதிவும் கைக்கோர்த்து பலம் சேர்க்கின்றது.

மொட்டை ராஜேந்திரன், பரணி, ஜீவா, ஜெகன் என காமெடிக்கு 4 பேர் இருந்தாலும் ஒன் மேன் ஷோவாக கலக்குவது மொட்டை ராஜேந்திரன் தான், அதிலும் பொருட்காட்சியில் பேய் வீட்டிற்குள் செல்லும் போது சந்தோஷை கடத்த இவர்கள் செய்யும் கலாட்டா சிரிப்பு சரவெடி

இப்படி படத்தில் அங்கங்கு சிரிப்பு, பயமும் வந்தாலும், பல முறை பார்த்த கதை, காட்சி என்பதால் படம் முழுவதும் ஒன்றி பார்க்க முடியவில்லை.

க்ளாப்ஸ்

சத்யாவின் பின்னணி இசை, மகேந்திரனின் ஒளிப்பதிவு.

மொட்டை ராஜேந்திரனின் காமெடி காட்சிகள்.

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன பேய் ட்ராமா. ரேஷ்மி மேனன், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு செட் ஆகவே இல்லை.

மொத்தத்தில் பயமா இருக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு பயமுறுத்தவில்லை.

 

 

http://www.cineulagam.com/films/05/100867?ref=review_section

Link to comment
Share on other sites

பயமா இருக்கு @ விமர்சனம்

bayama-44-690x400.jpg

வசந்தம் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி ஜவஹர் என்பவர் இயக்க, 

சந்தோஷ், ரேஷ்மி மேனன் , கோவை சரளா, ஜகன், பரணி, நான் கடவுள் ராஜேந்திரன் , லொள்ளு சபா ஜீவா, ஆகியோர் நடித்துள்ள படம் பயமா இருக்கு .
 
நல்லா இருக்கா ? பார்க்கலாம் 
 
நாகர்கோவில் மார்த்தாண்டம் பகுதியில் வாழும் இளம் தம்பதியில் , கர்ப்பமாக இருக்கும் மனைவி லேகாவின் (ரேஷ்மி மேனன்) ஆசைப்படி,bayama-2.jpg
 
யாழ்ப்பாணத்தில் உள்ள அவளது பெற்றோரை அழைத்து வரப் போகிறான் கணவன் ஜெய் (சந்தோஷ்)
 
அந்த சமயத்தில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் தமிழின அழிப்பு உச்சம் அடைந்து , அந்த அழிப்பில்,
 
 லேகாவின் பெற்றோர்கள் கொல்லப் பட  ஜெய்யும் சிங்கள ராணுவத்தான்களிடம் சிக்கிக் கொள்கிறான் . bayama-888.jpg
 
ஒரு இடத்தில் அவனையும் , தொழில் விசயமாக இலங்கை போயிருந்த  வேறு  சில தமிழ்நாட்டு தமிழர்களையும்  ( ராஜேந்திரன், ஜீவா , பரணி, ஜெகன்),  
 
கை கால்களை கட்டி மண்டியிட வைத்து சுட்டுக் கொல்ல முயல்கிறான்கள் சிங்கள ராணுவத்தான்கள் . 
 
”நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து  அண்மையில் வேலை விசயமாக வந்தவர்கள்; (உங்கள் சிங்கள இனம் உருவாவதற்கு முன்பிருந்தே), 
bayama-1.jpg
 
இந்த மண்ணில் வாழ்ந்து வரும்   பூர்வீக ஈழத் தமிழர்கள் அல்ல” என்று கூறியும் பயன் இல்லை . 
 
எதிர்பாராத சமயத்தில் ஜெய்  அவர்களோடு சண்டை போட்டு , நெருப்பில் சிலர் விழ , ஒரு வழியாக தோணி மூலம் ஐவரும் தமிழகம் வருகிறார்கள் . 
 
கடல்புறத்து தண்ணீர் பரப்பில் உள்ள சிறு நிலத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு நண்பர்களோடு வருகிறான் ஜெய் .bayama-66.jpg
 
மனைவியும் பிறந்த குழந்தையும் அங்கு  இருக்கிறார்கள் . ஆனால் லேகாவின் நடவடிக்கைகள் இயல்பாக இல்லை . 
 
இந்த நிலையில் ஜெய் நண்பர்களோடு கடை வீதிக்குப் போக , அங்கு ஜெய்யை பார்க்கும் ஒருவர் பேய் பேய் என்று அலறுகிறார் .  
 
சிங்கள ராணுவத்தான்களுடன் நடந்த சண்டையில் ஜெய்யும் இறந்ததாக வந்த பத்திரிகை செய்தி காட்டப்படுகிறது . 
 
வேறு சிலர் ”லேகா பிரசவத்தில் இறந்து  விட்டாள். அங்கே இருப்பது அவளது ஆவி” என்கின்றனர் . bayama-77.jpg
 
அதற்கேற்ப அங்கே புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்படும் ஒரு எலும்புக் கூட்டின் கையில் ஒரு மோதிரத்தை நண்பர்கள் பார்க்கின்றனர் .
 
அந்த மோதிரம் இப்பொது லேகாவின் விரலில் இருக்கிறது . லேகாதான் பேய் என்று நண்பர்கள் நம்ப , ஜெய் அதை மறுக்கிறான் . 
 
பேய் ஓட்டும் மந்திரவாதி (கோவை சரளா )  சொன்ன முறையைப் பயன்படுத்திப் பார்த்தால்  ஜெய் தான் பேய் என்று நண்பர்கள் நினைக்கின்றனர் . bayama-33.jpg
 
ஒரு நிலையில் நண்பர்களில் ஒருவரான பரணிதான் பேய் என்று மற்ற நண்பர்கள் நினைக்கின்றனர் .
 
சிங்கள ராணுவத்தான்களுடன் நடந்த சண்டையில் பரணியும் இறந்ததாக வந்த பத்திரிகை செய்தி காட்டப்படுகிறது . 
 
உண்மையில் யார் பேய் ? உண்மை தெளிவாக தெரிய வரும்போது நடந்தது என்ன  என்பதே,  இந்த பயமா இருக்கு .
bayama-777.jpg
 
ஒரு பேய்க் கதையில் ஈழத்து இன அழிப்பை ஓரிரு காட்சியே ஆனாலும் சிறப்பாக காட்டிய இயக்குனர் ஜவஹருக்கு பாராட்டுகள் . 
 
லேகாவின் வீடு …. ! வாவ் ! கேரளாவில் எங்கோ பிடித்துள்ளார்கள் அந்த அற்புதமான லொக்கேஷனை ! கடலுக்குள் இருக்கும் சிறு நிலம் .
 
படகில் மட்டுமே போகும் வசதி.. பின்பக்கம் அடர்ந்த காடு என்று,  அந்த லோக்கேஷன் மயக்குகிறது என்றால் ..bayama-5.jpg
 
அதில் நிறைய இரவு நேரக் காட்சிகளை அற்புதமாக ஒளியூட்டி சிறப்பாக ஷாட்கள் வைத்து படம் எடுத்து  வாய் பிளக்க வைக்கிறார்கள் .
 
இந்த பாராட்டில் இயக்குனருக்கு மட்டுமல்லாமல் மகேந்திரனின் ஒளிப்பதிவுக்கும்  முக்கியப் பங்கு உண்டு . சிறப்பு . 
 
சத்யாவின் பாடல் மற்றும் பின்னணி இசையில் செண்டிமெண்ட். திகில் இரண்டும் சிறப்பாக வெளிப்படுகிறது . 
 
காடுகளுக்குள் இரவில் சில காட்சிகளில் நிஜமாகவே மிரட்டுகிறார்கள் .bayama-55.jpg
 
பேய் மேஜிக் விளையாட்டு அரங்குக்குள்  நிஜ பேயும் போலி பேய்களுமான அந்த காட்சி நல்ல ஐடியா . ஆனால் அதை இன்னும் சிறப்பாக அமைத்து இருக்க வேண்டும் 
 
ரேஷ்மி மேனன், சந்தோஷ் , பரணி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் . ஜெகன் , ஜீவா கூட சேதாரம் இல்லை . 
 
ஆனால் கோவை சரளாவும் ராஜேந்திரனும்தான் காமெடி என்ற பெயரில் படுத்தி எடுக்கின்றனர் .
 
காஞ்சனா ஸ்டைல் கிளிஷே நடிப்பை விட்டுடுங்க சரளா … புண்ணியமா போகும் . bayama-22.jpg
 
ஈழப் பிரச்னை பற்றி காட்சி அமைத்தவர்கள் ஏதாவது ஒரு வகையில் கடைசியில் அந்த விசயத்தை மீண்டும் கொண்டு வந்து கனம் கூட்டி இருக்கலாம் .
 
இன்னும் கவனத்தை ஈர்த்து இருக்கலாம் . அநியாயமா மிஸ் பண்ணிட்டீங்களே !
 
எனினும் பேயானாலும் நிஜ காதல் போகாது என்று சொல்லும் அந்த கிளைமாக்ஸ் பாஸ் ஆகிறது . bayama-11.jpg
 
இன்னும்  உழைத்து  சிரத்தை  மற்றும் செய் நேர்த்தியோடு திரைக்கதை  அமைத்து, இருந்தால் பாக்ஸ் ஆபிசில் படம் இடம் பிடித்து இருக்கும் இந்தப் படம்.

http://nammatamilcinema.in/bayama-irukku-review/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.