Jump to content

இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை தொகுப்பு


Recommended Posts

இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை தொகுப்பு

 

'பாரபட்சம் காட்டக்கூடாது' என்ற விடயம் நிராகரிப்பு

 
rauff-hakeem_19092017_KAA_CMY.jpg

எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன. இது கவலைக்குரியது என்றார்.

அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டது. இதன்பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், முதற்தடவையாக பிரதமர் ஒருவர் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளுக்கு தலைமைத்துவம் வகிக்கின்றார். சகல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இதில் பங்களிப்புச் செலுத்துகின்றனர்.

அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் நாம் போதியளவு அவகாசத்தை வழங்கியுள்ளோம்.

பல தரப்பட்டவர்களின் கருத்துக்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. மாறுபட்ட கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் பாரிய அர்ப்பணிப்பொன்று தேவைப்படுகிறது என்றார்.

அதேநேரம், தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாக சமர்ப்பித்திருந்த யோசனைகள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் அரசியலமைப்பு சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20088

 

 

இனவாத கோணத்தில் அரசியலமைப்பை தயாரிக்க கூடாது

 

 

Anura-Kumara-Dissanayake-3.png

இனவாத கோணத்தில் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ள ஜே.வி.பி, சகல இன மக்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கும் வகையிலான அரசியலமைப்பின் ஊடாகவே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற பிரதான நோக்கத்தின் ஊடாகவே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும். பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றுவதாயின் அது அரசியலமைப்பின் ஊடாக மாத்திரமே முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவது மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவது என்ற இரண்டு விடயங்களும் ஒரே பாதையில் கொண்டுசெல்லக் கூடிய விடயங்கள் அல்ல. நிறைவேற்று ஜனாதிபதி முறையை பலப்படுத்துவது என்பது ஜனநாயகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும் என அவர் விமர்சித்தார்.

நேற்றையதினம் கூடிய அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அநுரகுமார திசாநாயக்க இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.

அரசியலமைப்பு தயாரி்க்கும் செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே கலந்துகொண்டுள்ளோம். இவ்வாறான நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் விடயம் கோட்பாடாக கொள்ளப்பட வேண்டும். அதனைவிடுத்து கலந்துரையாடல்கள் மூலம் சரிசெய்யலாம் என்ற நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றார்.

மாகாணசபைத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாயின் அது அரசியலமைப்பின் ஊடாகவே கொண்டுவரப்பட வேண்டும். அரசியலமைப்புக்கு வெளியே கொண்டுவரப்படும் எந்தவொரு பாராளுமன்ற திருத்த யோசனைகளுக்கும் ஜே.வி.பி ஆதரவு வழங்கப்போவதில்லையெனக் கூறினார்.

இலங்கை பல் இன சமூகத்தைக் கொண்ட நாடாகும். எனவே சகல இன, மத மக்களும் சமமான முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதனைவிடுத்து ஒரு சமூகத்துக்கு உயர்ந்த அங்கீகராமும், ஏனைய சமூகங்களுக்கு அல்லது இனங்களுக்கு இரண்டாம் பட்ச அங்கீகாரமும் வழங்கப்படக்கூடாது. சகல மக்களின் இன, மொழி, கலாசார உரிமைகள் மதிக்கப்படும் வகையிலான அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஜே.வி.பியின் தலைவர் மேலும் கூறினார்.

இறைமை, தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் உரிமைகள் என்பன அரசியலமைப்பின் முக்கிய காரணங்களாக இருக்க வேண்டும். அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் இனவாத கோணத்தில் நோக்கப்படக்கூடாது.

இனவாத கண்ணோட்டத்தினூடாக அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் எவரும் பங்கெடுக்கக் கூடாது என்பதுடன், அவ்வாறான எவரும் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20086

 

 

தமிழரின் சுயமரியாதையை உறுதிப்படுத்தும் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்

 
 
 
sambanthan_tna_10082017_KAA_CMY.jpg

தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்துக்குள் நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அரசியலமைப்பு அமையவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாம் தற்பொழுது ஈடுபட்டுள்ள அவசரமான மற்றும் அவசியமான செயற்பாடு குறித்து சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன். நாம் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் சார்பில் நாட்டின் உயர்ந்த சட்டமான அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்தினுள் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மாத்திரமன்றி தன்னார்வத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இது அமையவேண்டும்.

இந்த அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளின் வெற்றியானது, சகலராலும் நியாயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், நிலையான தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதிலேயே தங்கியுள்ளது. ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் சுதந்திரமாக ஒப்புதலுடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.

எமது நாடு பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடாகும். பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஜனநாயகம் காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இரண்டு பிரதான கட்சிகள் அரசாங்கத்தை அமைத்திருக்கும் அதேநேரம், ஏனைய கட்சிகள் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.

இரு கட்சி கருத்தொருமைப்பாட்டுடன் எந்தவொரு அரசியலமைப்பும் தயாரிக்கப்பட முடியாது. குறிப்பாக தமிழ் மக்களின் கருத்துக்களும் அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும். இரு கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படுவது அவசியமாகும். அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது இதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுக் கொள்ளக்கூடிய அபிப்பிராயங்கள் அரசியலமைப்புக்கான அடிப்படையை வழங்க வேண்டும்.

அரசியல் சூழல் நிறைந்த எல்லைக்கு அப்பாலிருந்து அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம், இலங்கை தேசம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய குணாம்சங்களைக் கொண்டதாக அரசியலமைப்பு அமையவேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களில் இதனை அடைய முடியாமல் போயுள்ளது.

1987-88 காலப் பகுதியில் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்வதற்காக முதன் முதலில் 13ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. எனினும், அதனுடன் தொடர்புபட்ட சில அரசியலமைப்பின் சரத்துக்களால் அது வலுவிழந்தது.

அன்றிலிருந்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கங்கள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண பல மேம்படுத்தப்பட்ட யோசனைகளை முன்வைத்திருந்தன. ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் மங்கள முனசிங்க தெரிவுக்குழு பரிந்துரைகள், சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் 2000 அரசியலமைப்பு முன்மொழிவுகள் அமைச்சரவை அனுமதியுடன் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டது, மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் பல்லின நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதுடன், திஸ்ஸ வித்தாரன தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு என்பன அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பல விடயங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அரசியலமைப்பில் இணைக்கப்படவில்லை. எனினும் அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது முற்று முழுதாக மாறுபட்ட சூழலில் முன்னெடுக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது.

தமது அடையாளம் மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தும் வகையில், நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஏற்பாடொன்றே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால இலக்காக உள்ளது. உலகில் இதற்காக பல ஏற்பாடுகள் இருக்கின்றன. தீர்மானம் இல்லாத விளைவுகளால் தமிழ் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டன. சிறந்த கல்வியறிவைப் பெற்றுள்ள தமிழ், சிங்களவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். சர்வதேச ரீதியில் நாடு தொடர்பில் காணப்பட்ட நன்மதிப்பு சிதைந்துள்ளது. பொருளாதார ரீதியில் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளோம். இதுபோன்ற காரணங்களால் பின்னடைவைச் சந்தித்துள்ள நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை ஏற்படுத்த, புதிய உயர் சட்டமொன்றைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20089

தொடரும்

Link to comment
Share on other sites

’13ஐவிட மேம்பட்டால் வரவேற்போம்’
 

"எம்மைப்பொறுத்தவரை, தேசிய இனப்பிரச்சினைக்கான புதிய அரசமைப்பானது, நாம் கடந்த 30 வருடங்களாக கோரிக்கைவிடுத்துவரும் 13ஆவது திருத்தச் சட்டத்தைவிடவும் மேம்பட்டதாக அமையுமாக இருந்தால் அதை வரவேற்போம்" என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று அரசமைப்பு பேரவையில் தெரிவித்தார்.

"தமிழ் மக்கள், தாம் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் இருப்பதற்காக உணர்வுகளுடன் இருந்ததை  முன்னாள் தமிழ்த் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவாகவே, எமது நாடு வெறுக்கத்தக்க வன்முறைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டது"  என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான வழி நடத்தல் குழுவினால் வரைவு செய்யப்பட்ட புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையை அரசமைப்புச் சபையில் பிரதமர் சமர்ப்பித்து உரையாற்றியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

அரசமைப்பு வரைபு மீதான தமது அபிப்பிராயங்களை முன் வைத்து கருத்துத் தெரிவித்த டக்ளஸ் எம்.பி மேலும் கூறியதாவது,

"இலங்கை இந்திய ஒப்பந்தத்தோடு நாம் தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு வந்தபோது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி முன்னேற முடியும் என்று நம்பினோம். அதையே எமது மக்களிடமும் கூறினோம்.

"ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு சாத்தியப்பட வேண்டும் என்றும், தமிழ் மக்கள் தாம் இலங்கையராக இருப்பதற்கு தமிழர் என்ற அடையாளத்தை இழக்க வேண்டும் என்றோ, தமிழராக இருப்பதற்கு இலங்கையர் என்பதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றோ விரும்பவில்லை.

"இலங்கையராகவும், தமிழராகவும் இந்த நாட்டில் சமத்துவத்துடனும், கௌரவத்துடனும் வாழவே விரும்புகின்றார்கள். எனவே பிரதமர், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணவேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்வதை நாம் வரவேற்கின்றோம்.

"முக்கியமாக புதிய அரசமைப்பானது, 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' ஏன்ற கோட்பாட்டுக்கு அமைவாக, இலங்கைத் தாய் நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமச்சீரற்ற அதிகாரங்களை வழங்குவதாக அமையவேண்டும்.

"மேல்சபை அமையப்பெற வேண்டும், அதில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் ஐம்பதுக்கு ஐம்பதாக இருக்க வேண்டும் என்றும்,  பொலிஸ் உட்பட முப்படைகளிலும் இனவிகிதாசாரம் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியலில் பெண்களுக்கு சமபங்கு வழங்கப்பட வேண்டும்" என்று டக்ளஸ் எம்.பி வலியுறுத்தினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/13ஐவிட-மேம்பட்டால்-வரவேற்போம்/175-204297

Link to comment
Share on other sites

பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதை நீக்க அனுமதியோம்

 
Untitled-23625.jpg
 
 

அரசியலமைப்பு தொடர்பில் கட்சிகளிடையே உடன்படாத பல விடயங்கள் காணப்படுகின்றன.பரந்த மக்கள் கருத்து இங்கு கவனிக்கப்படவில்லை.சிறு குழுவொன்றின் அறிக்கையை மனதில் வைத்துக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வழிபடுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இடம் பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர்,

அறிக்கையில் சகல கட்சிகளினதும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரதமர் முன்வைத்த விடயங்களுக்கிடையில் முரணான ஏற்கமுடியாத விடயங்களும் இருக்கின்றன.

இந்த அறிக்கையில் சகல மக்களினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.மக்கள் என்பது அரச சார்பற்ற நிறுவனங்களல்ல.

இங்கு நாம் 14 அம்சங்களை முன்வைத்திருந்தோம்.ஒற்றையாட்சி என்பது தொடர வேண்டும்.ஆனால் இதனை ஆங்கிலத்தில் ஒருவாரும் தமிழில் வேறு விதமாகவும் அர்த்தம் கற்பித்திருப்பது கநாடகமாகும்.ஒற்றையாட்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் பலப்படுத்த வேண்டும்.உப குழுக்களில் எமது எம்.பிகளின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.சர்வாதிகாரமாக யாப்பு உருவாக்க முடியாது.பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதை நீக்க இடமளிக்க மாட்டோம் என்றார்.

அவரின் கருத்திற்கு ஆளுந்தரப்பு எம்பிகள் எதிர்ப்பு வெ ளியிட்டதோடு அவர் சபையை தவறாக வழிநடத்துவதாக குறிப்பிட்டனர்.

அவரின் உரையினால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அடுத்து உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் நானும் வழிப்படுத்தல் குழுவில் அங்கம் வகிக்கிறேன். இந்த அறிக்கையினூடாக யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் அல்ல.புத்த மதத்திற்கு உள்ள முன்னுரிமை அணுவளவும் குறைக்கப்படவில்லை.

எனக்கு பேச இடமளிக்காதிருப்பது எனது இனத்திற்கு செய்யும் அநீதியாகும் என்றார்.

http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20087

Link to comment
Share on other sites

ஒற்றையாட்சியினை பாதுகாக்கவேண்டும்

Nimal-023-cf5c4ba94e73a54635199239740d7af860fba514.jpg

 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் நிலைக்க  வேண்டும் ; அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
அதி­கா­ரங்­களை பகிர்­வதை ஸ்ரீலங்கா சுதந்­
திரக் கட்சி ஒரு­போதும் எதிர்க்­க­வில்லை. எனினும், நாட்டை பாது­காக்க வேண்­டு­மா யின் ஒற்­றை­யாட்சி பாதுகாக்­கப்­பட வேண்டும். அத்­துடன் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நிலைக்க வேண்டும்.அப்­ப­டி­யா­னால்தான் அதி­கா­ரத்தை பகிர்ந்த பின்­னரும் 

 நல்­லி­ணக்கம் ஏற்­படும். இதுவே சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­ப­டாகும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழு தலை­வரும் அமைச்­ச­ரு­மான நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு சபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடி­யது. இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்பில் சுதந்­திரக் கட்சி சார்­பாக உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

தேசிய பாது­காப்பு மற்றும் ஒற்­றை­யாட்­சியை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு சகல மக்­களின் வாக்­கு­க­ளாலும் ஜனா­தி­பதி ஒருவர் தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­தற்­கான தேசிய பொறி­மு­றை­யொன்று கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வது அவ­சியம்.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஒருவர் இருப்­பதன் ஊடா­கவே நாட்டில் இன, மத ரீதி­யான முரண்­பா­டு­களை களைந்து நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும்.

சகல அர­சியல் கட்­சி­களும் தமது நிலைப்­பாட்டை தெரி­வித்து அது­பற்றி நீண்ட கலந்­து­ரை­யா­டல்கள் நடத்­து­வ­தற்கு வாய்ப்பு ஏற்­ப­டுத்திக் கொடுத்­தமை பாராட்­டத்­தக்­கது. தேர்­தல்­மு­றையை மாற்­று­வது உள்­ளிட்ட பல்­வேறு நோக்­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்தில் இணைந்­து­கொண்­டது.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­க­ளுக்கு வட்­டார முறையை உள்­ள­டக்­கிய கலப்­பு­முறை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. நேற்­றை­ய­தினம் (புதன்­கி­ழமை) மாகாண சபைத் தேர்­தல்­க­ளிலும் கலப்பு தேர்தல் முறை­மை­யொன்றை கொண்­டு­வர முடிந்­துள்­ளது. ஆகவே, பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளுக்கும் இவ்­வா­றான கலப்­பு­மு­றை­யொன்று உட­ன­டி­யாக கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.

ஒற்­றை­யாட்சி முறை, பௌத்த மதத்­துக்­கான முக்­கிய இடம் என்­ப­வற்றில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­ப­டக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டில் சுதந்­திரக் கட்சி உள்­ளது. ஏனைய எந்­த­வொரு கட்­சியும் முன்­வைக்­காத யோச­னை­களை நாம் முன்­வைத்­துள்ளோம்.

அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­ற­மொன்று உச்­ச­நீ­தி­மன்­றத்தால் அமைக்­கப்­பட வேண்டும், இரண்­டா­வது சபை அமைக்­கப்­பட வேண்டும். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை நடை­மு­றையில் இருக்க வேண்டும்

அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­வதை நாம் எதிர்க்­க­வில்லை. தேசிய பாது­காப்பு, ஒற்­றை­யாட்சி என்­ப­வற்றைப் பாது­காப்­ப­தற்கு சகல மக்களின் வாக்குகளால் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கான தேசிய பொறிமுறையொன்று அவசியம். இதற்காக ஜனாதிபதியின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளோம். இதனூடாகவே இன, மத ரீதியான வேறுபாடுகளிலிருந்து பிரிந்து நிற்காமல் சகலருக்கும் ஒரு ஜனாதிபதி என்ற நிலைப்பாட்டில் போட்டியிட முடியும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-1

 

Link to comment
Share on other sites

பௌத்த மத முன்னுரிமைக்கு அனைவரும் இணக்கம் : தினேஷுக்கு அமைச்சர் மனோ கணேசன் பதில்

 

புதிய அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமையை இல்­லாமல் செய்யும் திட்­டத்­திற்கு நாம் இட­ம­ளிக்க மாட்டோம் என்று கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்த

கருத்­துக்கு, பெளத்த மதத்திற்கான முன்னுரி மையை

 இல்­லாமல் செய்யும் நோக்­க­மில்லை.

 பெளத்த மத முன்­னு­ரிமை அனை­வ­ரி­னதும் இணக்­க­பாட்­டிற்கு வந்­துள்ள விட­ய­மாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் பதி­ல­ளித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு சபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடி­யது. இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை தொடர்பில் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி உரை­யாற்றி கொண்­டி­ருக்­கை­யி­லேயே இரு­வ­ருக்­கு­மி­டையில் வாதபிரதிவாதம் ஏற்­பட்­டது.

இதன்­போது தினேஷ் குண­வர்­தன தனது உரையில் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை இல்­லாமல் செய்­வ­தற்கு நாம் இட­ம­ளிக்க மாட்டோம் என கூறிய போது, தற்­போது உங்­களின் நேரம் நிறை­வ­டைந்து விட்­டது. அம­ருங்கள் என்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கூறினார்.

இத­னை­ய­டுத்து 54 உறுப்­பி­னர்­களின் சார்­பாக நான் கதைக்­கின்றேன். எனக்கு இடம் வழங்­குங்கள். எப்­போதும் எனக்கு நீங்கள் தடை­வி­திப்­பது நியா­ய­மில்லை. 54 உறுப்­பி­னர்­களை கொண்ட குழுவின் தலைவரான எனக்கு இறு­தி­யாக உரை­யாற்ற இடம் வழங்­கு­கின்­றீர்கள் என தினேஷ் குண­வர்­தன எம்.பி கார­சா­ர­மான வாதத்தை முன்­வைத்தார்.

இதன்­போது இடை­ந­டுவே எழுந்த ரவி கரு­ணா­நா­யக்க எம்.பி

நாமும் இலங்­கை­யர்­களே. பெரி­தாக 54 பேர் என்று மார்­தட்டி கொண்­டாலும் நேற்­றைய (நேற்று முன்­தினம்) மாகாண சபை தேர்­தல்கள் திருத்த சட்­ட­ மூ­லத்தின் மீதான வாக்­கெ­டுப்பில் 37 பேரே இருந்­தனர் என்றார்.

இத­னை­ய­டுத்து எழுந்த அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர,

தினேஷ் குண­வர்­தன எம்.பி சபை­யி­னதும் மக்­க­ளி­னதும் கவ­னத்தை திசை­தி­ருப்ப பார்­கின்றார்.

இதன்­போது தனக்கு பேச சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு அமைச்சர் மனோ கணேசன் கூறி­ய­தனை அடுத்து சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய சந்­தர்ப்பம் வழங்­கினார்.

இந்த சந்­தர்ப்­பத்தில் அமைச்சர் மனோ கணேசன் கூறு­கையில்,

நானும் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ராவேன். எனக்கு பேச சந்­தர்ப்பம் வழங்­கா­விடின் நான் பிர­தி­நி­தி­யாக இருப்­பதில் பய­னில்லை. இன்று (நேற்று) சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்கை இறுதி தீர்­மானம் அல்ல. அது தினேஷ் குண­வர்­தன எம்.பிக்கும் தெரியும். எனினும் தற்­போது இணக்­கப்­பாட்­டிற்கு வந்துள்ள விடயங்களில் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையும் ஒன்றாகும். நாம் பெளத்த மத முன்னுரிமையை நீக்கமாட்டோம் என்றார்.

இதன்போது ஆளும் கட்சி எம்.பிக்கள் மேசையில் தட்டி ஆரவாரமிட்டனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-1

Link to comment
Share on other sites

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­வோம்..இரா.சம்­பந்­தன்

 

“நாட்­டின் வளர்ச்­சியை கவ­னத்­தி­லெ­டுத்து அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் ஊடா­கப் புதிய எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்­டிய கட்­டா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­தப் புனி­த­மான பணியை வெற்­றி­க­ர­மா­க முழு­மைப்­ப­ டுத்­து­வ­தற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம்” என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் அறிக்கை நேற்று அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் (நாடா­ளு­மன்­றில்) முன்­வைக்­கப்­பட்­டது. அதில் உரை­யாற்­றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். இரா.சம்­பந்­தன் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அனை­வ­ரும் ஏற்­கும்
அர­ச­மைப்பு உரு­வா­கும்

இடைக்­கால அறிக்­கை­யி­லும் அத­னோடு சேர்த்து முன்­வைக்­கப்­பட்­டுள்ள இணைப்­புக்­க­ளி­லும் அடங்­கி­யுள்ள விட­யங்­கள் பற்­றிய கருத்­துக்­க­ளைத் தற்­பொ­ழுது கூறு­வது எனது எண்­ண­மல்ல. அத்­த­கைய நோக்­கத்­துக்­காக அர­ச­மைப்­புச் சபை­யின் எதிர்­கா­லத்­தில் நடை­பெ­ற­வுள்ள கூட்­டங்­க­ளில் அந்த விட­யங்­கள் ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.

நாங்­கள் ஈடு­பட்­டுள்ள செயன்மு­றை­யின் சில விட­யங்­க­ ளின் அவ­ச­ர­மான தொடர்பு மற்­றும் முக்­கி­யத்­து­வம் பற்­றியே குறிப்­பிட்­டுக் கூற விரும்­பு­கின்­றேன். எமது நாட்­டுக்­கான அர­ச­மைப்பை உரு­வாக்­கும் செயன்மு­றை­யி­லேயே நாம் அனை­வ­ரும் ஈடு­பட்­டுள்­ளோம். அடிப்­படை மீயு­யர் சட்­ட­மா­கிய இலங்­கை­யின் அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­யில் நாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மக்­க­ளின் சார்­பாக நாம் அனை­வ­ரும் ஈடு­பட்­டுள்­ளோம்.

பிள­வு­ப­டாத, பிரிக்­கப்­பட முடி­யாத ஐக்­கிய இலங்கை என்ற உறு­தி­யான கட்­ட­மைப்­புக்­க­மை­வாக இது மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இந்­தக் கட்­ட­மைப்­பின்­ப­டியே நாங்­கள் யாவ­ரும் சுய­மாக விரும்பி ஒப்­புக்­கொள்­ள­வும் ஏற்­றுக்­கொள்­ள­வும் கூடிய வகை­யில் அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டும்.

பிரிக்­கப்­ப­டாத
இலங்கை தொட­ரும்

நியா­ய­மான, ஏற்­பு­டை­ய­தான, போதி­ய­ள­வான தேசிய ஒருங்­கி­சை­வின் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­ப­டும் அர­ச­மைப்­புச் செயற்­பா­டு­கள் வெற்­றி­க­ர­மாக முடி­வு­றும்­போது அது இந்­தப் பிரச்­சி­னைக்­கான உறு­தி­யான முடி­வைக் கொண்­டு­வ­ரும். நாட்­டின் மீயு­யர் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யி­லும், அதன் மக்­க­ளு­டைய சுய­வி­ருப்­பத்­து­ட­னும், சம்­ம­தத்­து­ட­னும் இலங்கை ஐக்­கி­ய­மான, பிள­வு­ப­டாத, பிரிக்­கப்­பட முடி­யா­த­தா­கத் தொடர்ந்­தும் இருக்­கும்.

வித்­தி­யா­ச­மான அடை­யா­ளங்­க­ளைக் கொண்­டுள்ள வேறு­பட்ட மக்­க­ளான சிங்­க­ள­வர்­கள், தமி­ழர்­கள், முஸ்­லிம்­கள் மற்­றும் பறங்­கி­யர் போன்­றோர் வாழு­கின்ற நாடாக இலங்கை உள்­ளது. இலங்கை பல்­வேறு அர­சி­யற் கட்­சி­கள் செயற்­ப­டு­கின்ற சன­நா­ய­கம் தொழிற்­ப­டு­கின்ற நாடா­கும். முதன்மை அர­சி­யற் கட்­சி­கள் இரண்­டும் மாறி­மாறி இந்த நாட்­டின் அரசை அமைத்து ஆட்சி செய்­தி­ருக்­கும் அதே­வேளை, ஏனைய கட்­சி­க­ளும் தங்­க­ளு­டைய வகி­பா­கத்­தைக் கொண்­டி­ருந்­தன.

தமி­ழ­ரின் ஆத­ரவு
கிட்­ட­வில்லை

இலங்­கை­யில் இது­வரை கட்­ட­மைக்­கப்­பட்ட அர­ச­மைப்­புக்­கள் எது­வும் அதன் வேறு­பட்ட மக்­க­ளின், குறிப்­பா­கத் தமிழ் மக்­க­ளின் இரு­த­ரப்பு ஒருங்­கி­சை­வைப் பெற்­றி­ருக்­க­வில்லை. அல்­லது இரு முதன்­மைக் கட்­சி­க­ளின் மற்­றும் ஏனைய அர­சி­யற் கட்­சி­க­ளின் இரு­த­ரப்பு ஒருங்­கி­சை­வை­யும் பெற்­றி­ருக்­க­வில்லை.

அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தின் தற்­போ­தைய செயற்­பா­டு­கள் அதற்­கான ஒரு வாய்ப்பை முதல் தட­வை­யா­கத் தந்­துள்­ளன. அத்­த­கைய நியா­ய­மான ஒருங்­கி­சை­வின் அடிப்­ப­டை­யி­லான அர­ச­மைப்பே நாட்­டின் அடிப்­ப­டை­யான மீயு­யர் சட்­ட­மாக நாட்­டின் அர­ச­மைப்­புக்­குத் அவ­சி­ய­மா­கத் தேவை­யா­க­வுள்ள சட்­ட­ரீ­தி­யான தகு­தி­யை­யும் நம்­ப­கத்­தன்­மை­யை­யும் பெற்­றுத்­த­ரும்.

அர­ச­மைப்பை அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளின் பிடிக்­குள் இருந்து வெளியே கொண்டு வந்து, இலங்­கையை ஒரு தேச­மா­க­வும் இலங்­கை­யர் என்ற அடை­யா­ளத்­தை­யும் காட்­டும் பண்­பு­களை உரு­வாக்­கக்­கூ­டிய அர­ச­மைப்­பைப் பெற்­றுத் தரும். இலங்கை சுதந்­தி­ரம் அடைந்த எழு­பது ஆண்­டு­க­ளாக இந்த நில­மையை அடைய எம்­மால் முடி­ய­வில்லை.

கடந்த கால
தீர்வு முயற்­சி­கள்

1987 – 1988 ஆண்டு தொடக்­கம் அர­ச­மைப்பு உரு­வாக்­கச் செயற்­பா­டு­கள் தொடர்­கின்­றன. செயல்­வலு குறைந்­த­தாக இருந்­த­போ­தும், அர­ச­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தமே கொழும்­புக்­கும் மாகா­ணங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான அதி­கா­ரப் பங்­கீட்டை முதல் தட­வை­யாக அர­ச­மைப்­புக்­குள் உள்­ள­டக்­கி­யது. அப்­பொ­ழுது தொடக்­கம் பின்­வந்த அரச தலை­வர்­க­ளும், அர­சு­க­ளும் தேசி­யப் பிரச்­சி­ னைக்கு இறு­தித் தீர்­வைக் காண்­ப­தற்­குப் பங்­க­ளிப்­புச் செய்­யக்­கூ­டிய முன்­னேற்­ற­க­ர­ மான பிரே­ர­ணை­களை முன்­வைத்­த­னர்.

அரச தலை­வர் ஆர்.பிரே­ம­தாஸ ஆட்­சிக் காலத்­தில் மங்­கள முன­சிங்க தெரி­வுக்­கு­ழு­வின் பிரே­ர­ணை­கள் வந்­தன. முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­ வின் ஆட்­சிக் காலத்­தில் அமைச்­ச­ர­வை­யின் அனு­ம­தி­யு­டன் 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அர­ச­மைப்­புப் பிரே­ர­ணை­கள் நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் அவ­ரால் நிய­மிக்­கப்­பட்ட பல்­லின நிபு­ணர்­க­ளின் பிரே­ர­ணை­கள் உரு­வாக்­கப்­பட்­ட­தோடு, பேரா­சி­ரி­யர் திஸ்ஸ விதா­ர­ண­வைத் தலை­வ­ரா­கக் கொண்ட சகல கட்­சி­க­ளை­யும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் குழு அதன் அறிக்­கையை அரச தலை­வர் மகிந்­த­வி­டம் சமர்ப்­பித்­தி­ருந்­தது. இப்­போ­தைக்கு அவை பற்­றிய விவ­ரங்­க­ளுக்­குள் நான் போக­வில்லை.

வெற்­றிக்கு சாத­க­மான
நில­மை­கள் உள்­ளன

அத்­த­கைய பிரே­ர­ணை­கள் பல்­வேறு புறம்­பான கார­ணங்­க­ளுக்­காக அர­ச­மைப்­பு­டன் சேர்க்­கப்­ப­டா­விட்­டா­லும் அந்­தப் பிரே­ர­ணை­கள் தொடர்­பா­கக் கணி­ச­மான ஒருங்­கி­சைவு காணப்­பட்­ட­தென்­ப­தைத் தெரி­விப்­பது போது­மா­ன­தென எண்­ணு­கி­றேன்.

உண்­மை­யில் இது­முன்­னைய செயற்­பா­டு­க­ளின் தொடர்ச்­சி­யெ­னக் குறிப்­பிட்­டுக் கூறு­வ­தோடு, இந்­தச் செயற்­பாடு முழு­மை­யாக வித்­தி­யா­ச­மான ஒரு சூழ்­நி­லை­யில் இடம்­பெ­று­வ­த­னால், இந்­தச் சந்­தர்ப்­பத்­தைத் தவ­ற­வி­டக் கூடா­தென எல்­லோ­ரும் நியா­ய­மா­க­வும் உறு­தி­யு­ட­னும் இருந்­தால், இது வெற்­றி­ய­டை­யக் கூடிய எல்­லாச் சாத­க­மான நில­மை­க­ளும் உள்­ளன.

தமது அடை­யா­ள­மும், மதிப்­பும் ஒப்­பு­த­ல­ளிக்­கும் நியா­ய­மா­ன­தும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டக் கூடி­ய­து­மான அர­ச­மைப்பு ஏற்­பா­டு­களே தமிழ்­பே­சும் மக்­க­ளின் நீண்­ட­கால வேண­வாக இருந்து வரு­கின்­றது. உல­கத்­தில் பர­வ­லாக இத்­த­கைய ஒழுங்கு முறை­கள் இருக்­கின்­றன. தீர்வு காணப்­ப­டாத நில­மை­க­ளின் விளை­வாக முழு நாட்­டுக்­கும், தமிழ் மக்­க­ளுக்­கும் பல்­வேறு பக்க விளை­வு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

கல்­வி­ய­றி­வு­டைய தகு­தி­வாய்ந்த இந்த நாட்­டின் குடி­மக்­கள், குறிப்­பா­கத் தமி­ழர்­க­ளும் சிங்­க­ள­வர்­க­ளும் நாட்­டை­விட்டு வெளி­யேறி பிற நாடு­க­ளில் புக­லி­டம் பெற்­றுள்­ள­த­னால் இந்த நாடு திற­மை­யா­ன­வர்­களை இழந்­துள்­ளது. பல்­வேறு வழி­க­ளி­லும் இந்த நாட்­டின் எதிர்­கா­லத்­துக்­குப் பாதிப்பு ஏற்­ப­டும் வகை­யில் பன்­னாட்டு ரீதி­யில் நாட்­டின் நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் ஏற்­பட்­டுள்­ளது.

ஒன்­றி­ணைந்து
செயற்­ப­டு­வோம்

நாங்­கள் எமது நாட்­டின் நற்­பெ­யரை மீட்­டெ­டுத்து பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் மதிப்­பைப் பெற­வேண்­டி­யது தேவை உள்­ளது. எமது பொரு­ளா­தா­ரம் பெரி­ய­ள­வில் குறை­பா­டு­டை­ய­தாக உள்­ள­தோடு, முன்­னர் எமது வாழ்க்­கைத் தரத்தை விடப் பின்­தங்­கிய நிலை­யில் இருந்த இந்­தப் பிராந்­தி­யத்­தின் ஏனைய நாடு­கள் வேக­மாக முன்­னேற்­ற­ம­டைந்து இன்று நாம் வாழும் வாழ்க்­கைத் தரத்­தை­விட மிக உயர்ந்த வாழ்க்­கைத் தரத்­தைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றன. பொரு­ளா­தார ரீதி­யில் நாம் மிக­வும் பின்­ன­டைந்­துள்­ளோம். பாது­காப்­புச் செல­வி­னங்­க­ளுக்­காக பெரிய தொகை­யைச் செல­விட வேண்­டி­யுள்­ள­தால் முக்­கி­ய­மான துறை­க­ளில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ள வளப் பற்­றாக்­குறை தடை­யாக உள்­ளமை பின்­ன­டை­வுக்­குக் கார­ண­மா­கின்­றது.

இத்­த­கைய கார­ணி­களே புதிய மீயு­யர் அடிப்­ப­டைச் சட்­டத்­தின் மீது ஒரு புதிய எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்­டிய கட்­டா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­தப் புனி­த­மான பணியை வெற்­றி­க­ர­மா­கப் முழு­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம் – என்­றார்.

http://newuthayan.com/story/30948.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சித்தார்த்துவுக்கும்  அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
    • இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
    • கரும்புலி  மேஜர் மறைச்செல்வன்  செல்வராஜா ரஜினிகாந்தன்  தமிழீழம் (வவுனியா மாவட்டம்)  தாய் மடியில் :03-05-1981 தாயக மடியில்:10.05-2000 அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்த படி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன். அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்கு நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிக நேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கி விட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போக வேண்டியிருந்தது. வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்த போது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான். அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும். தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்தன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்து விட்டு தண்ணீர் எடுத்து வரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான். காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்கு காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்க வேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்ற போது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம் தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டி நிற்பது அதுவே. வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும் போது தான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * கண்டி வீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்ற போது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒரு புறம் அவர்கள் தேடி வந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்ற போது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன. வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன. இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச் துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவி வந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும் போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன. ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்து கொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூர நோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின. கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது. அந்தப் பெரிய சமர் அங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்தி விட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது. வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்து கொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான். ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்ற போது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.   " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "   தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.   தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
    • அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. கப்டன் மயூரன்  பாலசபாபதி தியாகராஜா  தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் :01.11.1970 தாயக மடியில்:11.11.1993 எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் – கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான். அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது….. தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில். என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன். அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான். இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை. என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 – காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள். என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள். ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம். அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் – அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது “நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?” என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது. நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள். இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை. அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் – அவன் போனதும் – அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன். என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது. “என்னப்பு..! என்ன விசயம்?” என்று கேட்டேன். “வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்.” என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது. அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள். “உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா.” என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே “பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க..” என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான். வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது. பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். “மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்.” என்று. வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை. பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான். 11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது. விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன். அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.   கப்டன் மயூரன் நினைவலைகள்…   கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலி போல் ஆகிவிட்டீர்.   அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.   பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.   15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.   அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.   இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.   மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.   திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.   அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.   கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன் ஓருக்கால் வந்தாய் நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய் தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க கையில் பெடியோடு உனது அண்ணி கண் கலங்கப் பார்த்திருக்க பார்த்தாயா…யா? புரியவில்லை நினைவில் தெரியவில்லை. தெருவோடு நீ ஓடி துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம் கனவாக மறைந்து போனாய் சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய் எம் கண்ணிலெல்லாம் காயாத நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய். இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ…? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்ற போது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான். மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது. மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்…   விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த கதைகள் பல இங்கு காதில் அடிபடுது ஆனாலும் மயூரா உன் உடலைக் காணவில்லையடா விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு விதி எமக்கு இல்லையடா-அதனால்தான் உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில் கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம் நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம் மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம் உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம் உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம் - தீட்சண்யன்.. மயூரனின் நண்பர்களின் நினைவில்…   களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையில் கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர் களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய் எரிமலையாகி வெடித்து விட்டாய் நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா! உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே……… ..நண்பர்கள்...   மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)   அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன். அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார். 1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.   https://maaveerarkal.blogspot.com/2003/11/blog-post_11.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.