Jump to content

ஒன்றுபட்டால் கிழக்கு வாழும் -வ.ஐ.ச.ஜெயபாலன்.


Recommended Posts

ஒன்றுபட்டால் கிழக்கு வாழும்

-வ.ஐ.ச.ஜெயபாலன்.
.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தார் - வந்த செய்தி
.
வியாழேந்திரனுக்கு கிழக்கிலும் தமிழக தமிழர் மத்தியிலும் நல்ல பேர் இருக்கு. வேல்ஸ் பல்கலைகழகம் போன்ற தமிழக நிறுவனங்களை மட்டக்களப்புடன் இணைப்பதில் வெற்றி பெற்று வருகிறார். சிறீதரனும் கிழிநொச்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்தார். திடீரென அவருக்கு என்ன நடந்த்தது.? மலையக மக்கள் கிழக்கு மக்கள் பகையை அவர் ஏன் வலிந்து தேடுகிறார்?
.
20 வது திருத்தச் சட்ட வாக்களிப்புத் தொடர்பாக கூட்டமைப்பின் கொறடாவான சிறீதரனுக்கு இருக்கும் கவலை தப்பு என சொல்லவில்லை. ஆனால் கூட்டமைப்புக் கட்ச்சி மட்டத்தில் தீர்மானிக்கப் படவேண்டிய விடயங்களை சபைக்கு வெளியே சண்டைபோட்டு தீர்க்க முயன்றதை ஏற்றுக்கொள்ள முடியாது.
.
யாழ்பாண மேட்டுக்குடி முன்னோர்கள் மலையக மக்களுக்கும் கிழக்கு மக்களுக்கும் செய்த அநீதிகளில் இருந்து வெளியே வரும் முயற்ச்சியை செல்வநாயகம் தலைமையில் ஆரம்பித்து வைத்த ஒரு கட்ச்சிக்கும் இது அவமானமாகும்
.
தமிழரசு மற்றும் கூட்டணிக் கட்ச்சி மட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க கூட்டமைப்பின் தலமை இருக்கு. தமிழரசுக் கட்ச்சி இதுபற்றி விசாரணைசெய்து வருத்தம் தெரிவிக்கவேண்டும்..
.
அதேசமயம் கிழக்கில் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையில் வியாழேந்திரன் உறுதியாக இருக்கிறார் என்பதில் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. வடகிழக்கில் குறிப்பாகக் கிழக்கில் கூட்டமையினரிடை ஜனநாயகமும் தொலை நோக்கும் ஒற்றுமையும் கிழக்கின் நலம்சார்ந்த நிலைப்படும் வரலாற்று தேவையாகும். 
.
எல்லா விமர்சனங்களுடனும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் இதனை உணர்ந்துள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. சமத்துவமும் நீதியும் நிலைப்பும் கொண்ட தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டி எழுப்புவது தொடர்பாகவும் கூட்டமைப்பின் ஒற்றுமையும் வகிபாகமும் பிரதியீடு செய்ய முடியாததாகும். 
.
வடக்குத் தலைமைகள் பிரச்சினைகளைப் பேசித் தீர்கிற ஜனநாயக அடிப்படைகளைக் கைவிட்டு 
தம்முள் முரண்பட்டபோதும் கிழக்கு மாகாண கூட்டமைப்பினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண நலன் சார்ந்த விடயங்களில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை என்பதை வடக்குத் தலைமைகளுக்கு உணர்த்த வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். அதேசமயம் மோதும் சிங்கள ஆழும் வர்க்க அணிகளின் பிரித்தாளும் சூட்சிகள் கிழக்கில் மையப்படுவதுபற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். 
.
ஒன்றுபட்டால் கிழக்கு வாழும்.

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, poet said:

தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டி எழுப்புவது தொடர்பாகவும் கூட்டமைப்பின் ஒற்றுமையும் வகிபாகமும் பிரதியீடு செய்ய முடியாததாகும். 
.

கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவை விட தமிழ் சிங்கள உறவு நன்றாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீயர் பள்ளிக்கூட வாத்தியாராய் இருந்தவர் பாருங்கோ.... கைய டப்பக்கெண்டு தூக்குவார்.

தம்பிக்காரர் வேற லங்காசிறி.கொம் ஓனர். காசு இருக்கு.

அண்ணயப் பிடிக்கேலுமே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.