Jump to content

நாகர்கோவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று


Recommended Posts

நாகர்கோவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று

 

யாழ்ப்பாணம் – நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது ஸ்ரீலங்கா விமானப்படை மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சில் பலியான 21 மாணவர்களது 22 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

அப்பாவி சிறுவர்கள் மீது கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாம் 22 ஆம் திகதி விமானக் குண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது.

நாகர்கோவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று

அன்றைய தினம் மதிய நேர இடைவேளையின்போது 12:30 அளவில் பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது பகல் 12.50 அளவில் ஸ்ரீலங்கா விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசின.

இன்போது எதுவும் அறியாது மரமொன்றின் கீழே பதுங்கிய 21 சிறுவர்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் 200 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது மாணவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்த தாக்குதலின்போது,

மயில்வாகனம் கணகநாதன்

இராமநாதன் கோபிதரன்

சுந்தரலிங்கம் பழனி

நாகமுத்து செந்தில்வேல்

கிருஷ்ணகுமார் தவசீலன்

இராசரத்தினம் உமாகாந்தன்

அல்போன்ஸ் அமலவிஜி

இரவிந்திரராசா அமிர்தா

இராசரத்தினம் கவிதா

இராமநாதன் மேதினி

மார்க்கண்டு நாகலோஜினி

பாலச்சந்திரன் ரஜிதா

தாமோதரம் சகுந்தலா

இராமச்சந்திரன் சங்கீதா

சிதம்பரப்பிள்ளை சசிருபி

செல்வகுலசிங்கம் செல்வதி

குகசரவணமலை தர்சினி

சுந்தரலிங்கம் தர்சினி

பூலோகராசா துஷாந்தினி

நவரத்தினசாமி உமாதேவி

தர்மலிங்கம் துஷந்தினி ஆகிய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Assassination-in-Nagerkovil

Link to comment
Share on other sites

விமானக் குண்டு வீச்சில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல்

 
 
விமானக் குண்டு வீச்சில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

நாகர்கோயில் மாக வித்தியாலயம் மீது நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நடைபெற்றது.

1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 21 மாணவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

viber-image4-2-750x400.jpgviber-image1-5-750x400.jpgviber-image-4-750x400.jpg

viber-image3-3-750x400.jpg

http://newuthayan.com/story/30997.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படுகொலையின் சூத்திரதாரி சந்திரிக்கா அம்மையார்.. நல்லாட்சியின் தேவ தூதுவராகி இருக்க.. அனுரத்த ரத்வத்த.. செய்த கொடுமை காணும் என்று.. இயற்கையே அழைச்சுப் போய் சேர்ந்திட்டார். 

நினைவு வணக்கங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.